News Line Tamil

News Line Tamil News Line Tamil Live news Streaming for Latest News , all the current affairs of Srilanka and India and world.

Politics News in Tamil,National News Live,Headline News Live, Breaking News Live, Tamil news Live, and much more only on News Line Tamil.

24/01/2021

கல்முனை நீக்கப்படுகிறது!!!

இன்று மாலை ௦6 மணியிலிருந்து கல்முனையில் அமுல் படுத்தப்பட்ட தனிமை படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் சற்று முன் தெரிவிப்பு!

 #கல்முனை மாநகர சபையின் பொறியியலாளராக ஜெளசி அப்துல் ஜப்பார் இன்று(22) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அவரின் கடமைக...
22/01/2021

#கல்முனை மாநகர சபையின் பொறியியலாளராக ஜெளசி அப்துல் ஜப்பார் இன்று(22) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவரின் கடமைகள் சிறக்க வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்..!

இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை மட்டக்களப்பு ஊடாக  கொழும்பு போக்குவரத்து சேவை ஆரம்பம்!(கலாநிதி றியாத் ஏ.மஜீத்)நாட்டி...
22/01/2021

இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை மட்டக்களப்பு ஊடாக கொழும்பு போக்குவரத்து சேவை ஆரம்பம்!

(கலாநிதி றியாத் ஏ.மஜீத்)

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை மட்டக்களப்பு ஊடாக கொழும்பு போக்குவரத்து சேவை மீண்டும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) முதல் வழமை போன்று இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகின்றது.

இது தொடர்பில் பயணிகள் தங்கள் கவனத்தில் கொள்ளுமாறு இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனைச் சாலை முகாமையாளர் வி.ஜஃபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கான ஆசனப்பதிவுகள் நாளை சனிக்கிழமை (23) காலை 6.00 மணி முதல் கல்முனை இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் ஆரம்பமாகின்றது எனவும் கல்முனை சாலை முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

Assalamu alaikumThis is Mr. M.R.M. Rizlan (BSc) from Kotiyakumbura. He is 29 years old. Former teacher of Baduriya Colle...
21/01/2021

Assalamu alaikum
This is Mr. M.R.M. Rizlan (BSc) from Kotiyakumbura. He is 29 years old. Former teacher of Baduriya College Mawanella. Currently teaching at Al Akeel M.M.V Kotiyakubura He is affected by blood cancer.
Now he needed another transplantation done at the urgent as possible which cost another Rs 5 million rupees (Rs 5 000 000) which is too high for him and his relatives to bear alone please do some help. May allah bless you. Your small contribution can save a life.

Contact - Mr M.R.M Rifry (Father)
0762314704

Bank account details -
M.R.M Rizlan
People’s Bank
Kotiyakumbura
A/C No 355 2001 1000 5378

M.R.M Rizlan
Bank of Ceylon
Kotiyakumbura
A/C No - 82855082

பதவியேற்பைத் தொடர்ந்து மூன்று முக்கிய ஆவனங்களில் கையெழுத்திட்டார் ஜோ பைடன் 1) முஸ்லிம் நாடுகளின் பிரயாணத்தடை நீக்கம். 2)...
21/01/2021

பதவியேற்பைத் தொடர்ந்து மூன்று முக்கிய ஆவனங்களில் கையெழுத்திட்டார் ஜோ பைடன்

1) முஸ்லிம் நாடுகளின் பிரயாணத்தடை நீக்கம்.

2) அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ இடையே கட்டப்படும் சுவரின் கட்டுமானங்களை நிறுத்துதல்.

3) பாரிஸ் காலநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் மற்றும் உலக சுகாதார அமைப்புடன் மீள இணைதல்.

இவை மூன்றும் முன்னாள் ஜனாதிபதியின் தீர்மானங்களை இரத்து செய்வதாக இருந்தது.

🚨கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் ஓமான் விமானம்.  நீர் பீச்சியடித்து வரவேற்பு கொரோனா பரவல் காரணமாக  மூடப்...
21/01/2021

🚨கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் ஓமான் விமானம். நீர் பீச்சியடித்து வரவேற்பு

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட விமான நிலையம் 10 மாதங்களுக்கு பின் இன்று (21 ) மீள
சகல பயணிகளுக்குமாக கட்டுநாயக்க விமான நிலையம், மத்தள விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி இலங்கையர்களை ஏற்றிய முதலாவது விமானம் Oman Air WY – 371 ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து 50 இலங்கையர்கள் குறித்த விமானம் கடடுநாயக்க விமான நிலையத்தில் 7.30am இற்கு தரையிறங்கியது. விமானத்திற்கு நீர் பீச்சியடித்து Water salutes வரவேற்பளிக்கப்பட்டது.

விமானத்தில் வருகைதந்தவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் வணிக விமானம் மூலம் வருகை தந்தனர். இதுவரை காலமும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் விசேடமாக அழைத்துவரப்பட்டனர். இனி குறைந்த கட்டணங்களில் வரமுடியும்.

சுற்றுலா விசா, குடியுரிமை விசா மற்றும் முதலீட்டாளர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை விசாக்களை Tourist Visa, Resident Visa, Investors , Dual Citizens பயன்படுத்தி இலங்கைக்கு வரலாம்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தால் ஒன்லைனில் விசா வழங்கப்படும்

சுமார் 15 விமானங்கள் இன்றைய தினம் இலங்கைக்கு வரவுள்ளன.

21/01/2021

#கல்முனைப்_பிராந்திய_சுகாதார #அதிகாரிகளின்_நீதியான_சேவையை
#நிலை_நாட்ட_படுகிறதா?

நேற்றிலிருந்து மக்களால் பேசப்படுகின்ற முக்கிய ஒரு செய்தி கல்முனைப் பிராந்திய முக்கிய வைத்தியசாலை ஒன்றில் அங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கு கோபிட்-19 உறுதிப்படுத்தப் பட்ட பின்னர் அந்த வைத்தியசாலை முழுமையாக முடக்கப்படாமல் அங்கு இருக்கின்ற ஊழியர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விடயம்

அங்கு கடமையாற்றும் வைத்தியர்கள் PCR பரிசோதனை செய்வதற்கு முடியாது என்று மறுத்த விடயங்கள்

(இந்த செய்தியின் முழுமையான உண்மைத்தன்மையை கல்முனை பிராந்திய தொற்றுநோய் பொறுப்பு அதிகாரி வைத்தியர் Nagoor Ariff #தெளிவுபடுத்துவது மூலம் மக்களுக்கு சரியான உண்மையை புரிந்து கொள்வதற்கு உதவியாக அமையும் உண்மையை தெளிவுபடுத்துவரா வைத்தியர்?)

ஆனால் இதற்கு முதல் AMH வைத்தியசாலையில் இந்த சூழ்நிலையை ஏற்படுத்தப்பட்ட போது அங்கு வைத்தியசாலை முடக்கப்பட்டு அங்கு காணப்படுகின்ற வைத்தியர்கள், தாதிமார், ஊழியர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயம்

ஆகவே கல்முனைப் பிராந்திய சுகாதார பணிப்பாளர் ,தொற்றுநோய் பொறுப்பதிகாரி வைத்தியர் ,MOH,கல்முனை முதல்வர் சட்டத்தரணி றக்கீப் ஆகியோர் இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்தி அந்த வைத்தியசாலையில் கோபிட்-19 உறுதிப்படுத்தப்பட்டு இருந்தால் கல்முனை பிராந்திய மக்களின் நலன் கருதி அந்த வைத்தியசாலை உடனடியாக முடக்கப்பட்டு அங்கு இருக்கின்ற அனைத்து ஊழியர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும்

அதுமட்டுமில்லாமல் அந்தப் பிராந்தியத்தில் அதிகூடிய பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு அரசியல்,கட்சி ,இன ,மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் மூன்று உயர் அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி இந்த பிராந்தியத்தில் முழுமையாக கோபிட்-19 தொற்றுநோயை துரத்தி அடிப்பதற்கு ஒழிப்பதற்கு உதவியாக அமையும்.

மேலும் சுகாதார சேவை அதிகாரிகள் தமது நீதியான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு ஏதாவது சக்திகள் தடையாக இருந்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உயர் அதிகாரிகள் சரியான தீர்வை மக்களின் நலனுக்காக வழங்க வேண்டும்

மக்கள் அனைத்து விடயங்களையும் அவதானமாக இருக்கிறார்கள் அதிகாரிகள் இன ,மத ,பிரதேச ,வேறுபாடுகளுக்கு அப்பால் செய்யப்பட வேண்டியது உங்களின்
தார்மீகக் கடமையாகும்.

தொடர்ந்தும் அணியின் தலைவராக டோனியையே அறிவித்துள்ளது சென்னை அணி!சுரேஷ் ரய்னா அணியில் தொடர்வார் எனவும் அறிவி்ப்பு.சவ்லா,யா...
20/01/2021

தொடர்ந்தும் அணியின் தலைவராக டோனியையே அறிவித்துள்ளது சென்னை அணி!

சுரேஷ் ரய்னா அணியில் தொடர்வார் எனவும் அறிவி்ப்பு.

சவ்லா,
யாதவ்,
ஹர்பஜன்,
MK.சிங்,
வாட்சன்(ஓய்வு) ஆகிய
வீரர்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது.

இன்றைய(20) தினம் அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக பதவியேற்கும் ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வுக்காக நடப்பட்டுள்ள சுமார் 20...
20/01/2021

இன்றைய(20) தினம் அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக பதவியேற்கும் ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வுக்காக நடப்பட்டுள்ள சுமார் 200 ஆயிரம் கொடிகளையே இங்கு காண்கின்றீர்கள்.

மரக் கன்றுகள் விநியோகம்==========================மனைப் பொருளாதார மற்றும் போசாக்கினை மேலோங்கச் செய்து குடும்ப அலகுகளை வலு...
20/01/2021

மரக் கன்றுகள் விநியோகம்
==========================
மனைப் பொருளாதார மற்றும் போசாக்கினை மேலோங்கச் செய்து குடும்ப அலகுகளை வலுவூட்டம் செய்யும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மரக் கன்றுகளை விநியோகம் செய்யும் நிகழ்வு இன்று(20) கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் கல்முனைக்குடி-4 கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாசீன் பாவா அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.ஏ நபீல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

18/01/2021
பதவியேற்பு நாளிலேயே ட்ரம்பின் , முஸ்லிம் நாடுகளின் பயணத் தடை சட்டத்தை இரத்து செய்யும் ஜோ பைடன் .  அமெரிக்காவின் அடுத்த ஜ...
18/01/2021

பதவியேற்பு நாளிலேயே ட்ரம்பின் , முஸ்லிம் நாடுகளின் பயணத் தடை சட்டத்தை இரத்து செய்யும் ஜோ பைடன் .


அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதன் நாளிலேயே
ஜோ பைடன் பல நிறைவேற்று உத்தரவுகளை பிறப்பிக்க திட்டமிட்டுள்ளார்.

அதில் அவரது முன்னோடி (டெனால்ட் ட்ரம்ப்) பிறப்பித்த பல முஸ்லிம் நாடுகளின் பயணத் தடையை இரத்து செய்வது என்பது பிரதான விடயமாகும்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் 10 நாட்களில் அமல்படுத்திய கொள்கைகளை மாற்றியமைப்பதை புதிய அமெரிக்க நிர்வாகம் தொடங்கும் என்று ஜோ பைடனின் உள்வரும் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ரான் க்ளெய்ன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவற்றில் புதிய கொரோனா வைரஸ் தடுப்பு முயற்சிகள், பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் மீண்டும் இணைதல் மற்றும் மில்லியன் கணக்கானவர்களுக்கு குடியுரிமை பெற அனுமதிக்கும் குடியேற்ற சட்டம் ஆகியவை அடங்கும்.

2017 ஆம் ஆண்டில் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, ட்ரம்ப் ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார், ஏழு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தேசிய பாதுகாப்பு கவலைகளை சுட்டிக்காட்டி அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்தார்.

எவ்வாறாயினும் அந்த உத்தரவு சட்டரீதியான சவால்களுக்கு மத்தியில் பல முறை மறுவேலை செய்யப்பட்டது மற்றும் அதன் ஒரு பதிப்பை உச்ச நீதிமன்றம் 2018 இல் உறுதி செய்தது.

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஷர்ரப் முதுனபீன் மீது மாவட்ட கட்சி ஆதரவாளர்கள் கவலையில் .தன்னை உருவாக்கிய கட்சியையும், தலைமையையும், மாவட்ட கட்சி முக்க...
18/01/2021

முஷர்ரப் முதுனபீன் மீது மாவட்ட கட்சி ஆதரவாளர்கள் கவலையில் .

தன்னை உருவாக்கிய கட்சியையும், தலைமையையும், மாவட்ட கட்சி முக்கியஸ்தர்களையும் புறக்கனித்து தன்னிச்சையாக தனக்கு விரும்பியவர்களுக்கு மட்டும் தொழில் வழங்கியும், தனக்கு விரும்பியவர்களை மட்டும் பொது நிகழ்வுகளுக்கு அழைப்பு கொடுத்து செயற்படும் மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் முதுனபீனின் செயற்பாடு கட்சி ஆதரவாளர்களிடத்தே அதிர்ப்தியை ஏற்படுத்திவருகிறது.

அம்பாரை மாவட்ட கட்சிப்போராளிகள்

18/01/2021

சாய்ந்தமருது மாளிகைக்காட்டில் நடந்தது என்ன?

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல், சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கம் இணைந்து தமது பிரதேசங்களை தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாக அறிவிக்கிறார்கள். இரவு 08.00 மணிமுதல் காலை 04.00 வரை என நேரமும் அறிவிக்கப்படுகின்றது. இந்த நேரத்தில் குறித்த பிரதேசம் வியாபாரம் களைகட்டும் பண்டிகை காலங்களை தவிர ஏனைய நாட்களில் ஆள் நடமாட்டமே இல்லாமல் காய்ந்து கிடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். மழை, கொரோனா அச்சம் காரணமாக சில மாதங்களாக மக்கள் தாமாகவே 06.00 மணிக்கு பிறகு வீட்டில் இருக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதெல்லாம் வேறுகதை

மாளிகைக்காடு - சாய்ந்தமருதுக்கு நிர்வாக ரீதியாக எவ்வித சம்பந்தமில்லை. சாய்ந்தமருதுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலகம், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி, கல்முனை பொலிஸ், கல்முனை மாநகர சபை, சாய்ந்தமருது ஜும்மா பள்ளி, கல்முனை நீதிமன்றம், கல்முனை தேர்தல் தொகுதி. மாளிகைகாட்டுக்கு காரைதீவு பிரதேச செயலகம், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி, மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல், சம்மாந்துறை பொலிஸ், பொத்துவில் தேர்தல் தொகுதி, சம்மாந்துறை நீதிமன்றம். இப்படி நிர்வாகம் முற்றிலும் மாறுபட்டது. இரு ஊருக்கும் இருக்கும் ஒரே பந்தம் எல்லோரும் முஸ்லிங்கள் உறவுக்காரர்கள் என்பது மட்டுமே.

சாய்ந்தமருது வர்த்தக சங்கம், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் என்பன இணைந்து எடுத்த சுய தனிமைப்படுத்தல் தீர்மானத்தை மாளிகைக்காடு சார்ந்த நிர்வாகத்திடம் பேச வில்லை என்பதே இங்கிருக்கும் மிகப்பெரும் குற்றசாட்டு. சுய தனிமைப்படுத்தல் தீர்மானத்தை எடுக்க முன்னர் அந்த ஏற்பாட்டாளர்கள் காரைதீவின் ஆளுமை மிகு தவிசாளர், வினைத்திறன் கொண்ட சுகாதார வைத்திய அதிகாரி, மக்களின் குரலுக்கு எப்போதும் செவிசாய்க்கும் பிரதேச செயலாளர், உயிரைக்கூட மதிக்காமல் பணியாற்றும் சம்மாந்துறை பொலிஸ், 100 வீதம் மாளிகைக்காடு மக்களினால் வாக்களித்து தெரிவு செய்யப்பட்ட மூன்று மக்கள் பிரதிநிதிகள் அதில் ஒருவர் பிரதிதவிசாளர், தேசிய ரீதியில் புகழ்பெற்ற சமூக அமைப்புக்கள், வைத்தியர்கள் , கலாநிதிகள், திணைக்கள தலைவர்கள், சட்டத்தரணிகள், தேசிய பாடசாலை அதிபர்கள், அரச காரியாலய பிரதானிகள், வர்த்தக பெருந்தகைகள் என பலரும் இருக்கும் இந்த மாளிகைக்கட்டிலிருந்து அழைத்து கலந்து பேசி தீர்மானம் எடுத்திருந்தால் ஆதரவு மிகப்பலமாக அமைந்திருக்கும்.

மாளிகைக்காட்டு மக்களின் தலைமைகளின் அல்லது அந்த மக்களின் தீர்மானம் இல்லாமல் அடாத்தாக வந்து கடைகளை மூட செல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? மூன்று பள்ளிவாயல்கள் இருக்கும் அந்த ஊரில் இரண்டு ஜும்மா பள்ளிவாசல் இருக்கிறது. முடிவுகளை எடுத்துவிட்டு வந்து அமுல்படுத்த கேட்டால் எப்படி ஒத்துழைப்பு வழங்குவார்கள். நிர்வாக ரீதியாக வேறு பிரதேசமான மாளிகைக்காட்டில் ஏதாவது செய்வதாயின் அந்த ஊரின் நிர்வாகத்துடன் கலந்து பேச வேண்டும் என்பதை அறியாமலா இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது?

சனநடமாட்டம் குறைந்த இரவில் மட்டுமே உலாவித்திரியும் அந்த கொரோனாவை அழிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாளிகைக்காட்டு மக்கள் பிரதிநிதிகள் நிராகரிக்க காரணம் என்ன என்பதை சிந்திக்க வேண்டும். சாய்ந்தமருது மாளிகைக்காட்டில் சனநடமாட்டம் கூடிய நேரம் காலை 10.00 முதல் மாலை 07.00 வரை. கொரோனாவை கட்டுப்படுத்த உகந்த நேரம் அதுதான் அதை விட்டு விட்டு ஊரே உறங்கிய பின்னர் ஏன் இந்த தீர்மானம் என்கிறார்கள் சாய்ந்தமருது வர்த்தகர்களும். இந்த தீர்மானத்தில் உடன்பாடு இல்லாத வர்த்தகர்கள் இல்லாமலும் இல்லை. ஆதாரமாக நேற்றிரவு சாய்ந்தமருதில் ஒரு முக்கிய உணவகம் இரவு 11.15 க்கே மூடப்பட்டது. அவர் வர்த்தக சங்க நிர்வாகியும் கூட.

சாய்ந்தமருது - மாளிகைக்காடு என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒரு பக்கம் இல்லாது போனாலும் அது செல்லுபடி ஆகாது. ஒரு ஊருக்கு இன்னுமொரு ஊர் எப்போதும் பக்கபலம். மருதூர் போராட்டத்தில் உரிமையுடன் போராடிய மாளிகைக்காடு மக்கள் அதிகம். அப்படியான மக்கள் தமக்கான நியாயத்தை கேட்கும் போது தவறை உணர்ந்து பெரும் மனம் கொண்டு திருத்திக்கொள்ள முன்வர வேண்டும். கல்முனை மாநகரத்தில் இருந்து சாய்ந்தமருது பிரிய என்ன நியாயங்கள் சொல்லப்பட்டதோ அதே நியாயங்கள் தான் மாளிகைக்காட்டு மக்கள் கேட்பதும். சாய்ந்தமருதில் இருந்து மாளிகைக்காட்டை பிரி என யாரும் கோசம் எழுப்ப தேவையும் இல்லை. இப்போதும் மாளிகைக்காடு வேறு ஊர். சாய்ந்தமருது வேறு ஊர். ஆனால் நாங்கள் சதையாலும், உணர்வாலும் பின்னி பிணைந்தவர்கள்.

(இது சிந்தித்து விளங்கும் ஆற்றல் கொண்ட புத்திஜீவிகளும் மட்டுமே ஆன பதிவு. அரைகுறைகள் தள்ளி போகி விளையாடலாம்)

நூருல் ஹுதா உமர்

17/01/2021

# - காத்தான்குடியில் இன்று 102 பேருக்கு
Antigen Test. எல்லாமே Negative.

# - மினுவாங்கொடை பொலிஸ்
பிரிவிற்குட்பட்ட கிழக்கு கல்லொலுவ மற்றும் கல்லொலுவ மேற்கு கிராம சேவையாளர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் Lockdown

மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரக்காமுர (356), மீதெனிய (356 B) மற்றும் தெஹிப்பிட்டிய (356 A) (மாத்தாவ கிராமம்) ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் Lockdown

கொரோனாவால் உயிரிழந்த அனைவரையும் தகனம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எந்தச் சட்டத்திலும் இல்லை...!!!இலங்கையில் சிறுபான்மைய...
17/01/2021

கொரோனாவால் உயிரிழந்த அனைவரையும் தகனம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எந்தச் சட்டத்திலும் இல்லை...!!!

இலங்கையில் சிறுபான்மையின மக்கள் மீதான துன்புறுத்தல்கள் உடன் முடிவுக்கு வரவேண்டும். நினைவேந்தல் உரிமையை வேண்டுமென்றே தட்டிப் பறிப்பதும், இறந்த உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி மறுப்பதும் அடக்கு முறையின் உச்சக்கட்டத்தையே எடுத்துக்காட்டுகின்றது இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இறுதிப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களின் உறவுகள் நினைவாக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் தூபி இடித்தழிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறுகூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இறந்த உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த அனைவரையும் தகனம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எந்தச் சட்டத்திலும் இல்லை.

இலங்கையில் சிறுபான்மையின மக்கள் மீதான துன்புறுத்தல்கள் உடன் முடிவுக்கு வரவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் அழுத்திக்கூற விரும்புகின்றேன் என்றார்

16/01/2021

♥ தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடு வான்

♥ தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்

♥ தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்

♥ தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள் ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது

♥ தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்
அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்

♥ தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்
அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு பாடமாக எண்ணி பயன் அடைந்து கொள்ளுங்கள்

♥ தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக் கூடியவர்

♥ மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்

♥ முகம் தெரியாத யாருக்கோ மரியாதை செய்கிறோம் உன்னை கொஞ்சி வளர்த்த தந்தைக்கு முன்பு மரியாதை செய்.

♥ அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம்
தாய் தன் பிள்ளை பத்திரமாக இருக்கணும்னு மார்பில் அனைத்துக் கொள்வாள்.
ஆனால் தந்தைதான் பார்க்காத உலகத்தையும் என் பிள்ளை பார்க்க வேண்டும் என்று தன் தோழின் மேல் தூக்கி நான் பார்க்காத உலகத்தை நீ பார் என்பவனே தந்தை
அவர் உன்னுடைய அருகில்
இருக்கும்போது பயன் படுத்துக் கொள்.
தந்தையை போல் உண்மையான நண்பன் இந்த உலகத்தில் யாரும் இல்லை.
இது உண்மை...சத்தியம்.

☝தந்தையைமதித்தவன் கோபுரத்தின் மேல்.

👇தந்தையைமதிக்காதவன்
வாழ்கையில் எந்த உயரத்திற்கும் செல்வது கடினமே.

இப்படிக்கு
தந்தையின் அன்பை உணரும் உங்களில் ஒருவன்...!!

16/01/2021

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள்வெட்டு!!
ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி!!!
பொத்துவில் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பெருமாள் பார்த்தீபன், ஊறணியிலுள்ள அவரது விடுதியில் தங்கியிருந்த போது இனந்தெரியாத குழுவினரால் வாள்வெட்டுக்கிலக்காகியுள்ளார்.

இரவு 7 மணியளவில் பிரதி தவிசாளார் அவரது விடுதியில் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த போது மதில் மீதேறி வந்த இனந்தெரியாத குழுவினர் தாக்கியதில் அவர் சத்தமிட்டபோது அங்கிருந்த அவரது தந்தை ஓடிச்சென்றதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Address

Kalmunai

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+94720665450

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Line Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Line Tamil:

Videos

Share