Echo Tamil

Echo Tamil Welcome to Echo Tamil on Facebook. If you have a story, video or picture to share with us, get in touch using the message tab on this page.

24 மணி நேர தமிழ் செய்திகள்

முன்னாள் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களில் பாராளுமன்றம் செல்ல தகுதியுடைய இரண்டு பேர் ... முஜிபுர் ரஹ்மான் மற்றும் மரைக...
13/11/2024

முன்னாள் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களில் பாராளுமன்றம் செல்ல தகுதியுடைய இரண்டு பேர் ... முஜிபுர் ரஹ்மான் மற்றும் மரைக்கார் மாத்திரமே ! கொழும்பு மாவட்டம் ☎️x 15x 16x

மலேஷிய முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மத் வபாஃத் ஆனார், தான் கட்டிய ஜும்ஆ மஸ்ஜிதில் ஜும்ஆ  தொழுகையை நேற்று நிறைவேற்றிய பி...
28/09/2024

மலேஷிய முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மத் வபாஃத் ஆனார், தான் கட்டிய ஜும்ஆ மஸ்ஜிதில் ஜும்ஆ தொழுகையை நேற்று நிறைவேற்றிய பின் சுகவீனமுற்றுள்ளார்!

🧭 இது ஆங்கிலத்தில் Compass எனவும் தமிழில் திசைகாட்டி எனவும் , சிங்களத்தில் මාලිමාව (மாலிமாவ ) என்றும் அழைக்கப்படுகிறது. ...
21/09/2024

🧭 இது ஆங்கிலத்தில் Compass எனவும் தமிழில் திசைகாட்டி எனவும் , சிங்களத்தில் මාලිමාව (மாலிமாவ ) என்றும் அழைக்கப்படுகிறது.

மாலிமாவ என்ற இந்த சொல் முஅல்லிம் எனும் அறபுச் சொல்லில் இருந்து மருவியே மாலிமாவாக ஆகியிருப்பதாக மொழியில் வல்லுனர்கள் அபிப்பிராயம் கொள்கின்றனர்.

நாம் பேச்சு வழக்கில் குழந்தைகளுக்கு குர்ஆன் ஓதிக் கொடுக்கும் ஆசிரியரை முஅல்லிம் என்று அழைத்தாலும், உண்மையில் ஆதி‌காலததில் கடற்பயணத்தில் திக்குத் திசையற்ற நட்ட நடுக்கடலில், காரிருளில், கப்பலுக்கு வழிகாட்டும் தலைவனுக்கே வழிகாட்டி எனும் அடிப்படையில் முஅல்லிம் என்ற சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது.

கால ஓட்டத்தில் முஅல்லிம் என்ற அரபுச் சொல் பாளி, சமஸ்கிருதம், மராத்தி போன்ற இந்திய- ஆரிய குடும்ப மொழிகளில் மாலிமா ஆகவும், தமிழ் மலையாளம் போன்ற திராவிட மொழிகள் மாலுமியாகவும் மாற்றம் பெற்றிருக்கிறது. பின்னர் சிங்களத்தில் "மாலிமாவ" ஆகவும் திரிபடைந்திருக்கிறது. அதுவே பின்வந்த காலங்களில் திசை காட்டும் வழிகாட்டும் கருவியான 🧭 குறிப்பதற்கு பயன்படும் சொல்லாகவும் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. கடைசியில் தற்போதைய காலத்தில் இலங்கை அரசியலை தீர்மானிக்கும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிச் சின்னமாகவும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

காலம் எப்படி விசித்திரமானது என்பதற்கு இந்த மாலிமாவ நல்ல உதாரணம். அறபு பெயர்களை அழிப்போம் என்று புறப்பட்ட ஒரு சமூகம், அதே அறபு பெயரை அடையாளமாக கொண்ட கட்சியின் பின்னால், தலைவன் பின்னால், இன மத சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஒன்று சேர்ந்திருப்பது விதியின் விளையாட்டே அன்றி வேறில்லை.

பிற் குறிப்பு- மாலிமாவா என்பது அறபு பெயர் என்பதால் முஸ்லிம்கள் எல்லோரும் கட்டாயம் மாலிமாவைக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று யார் கிளம்ப போகிறார்களோ தெரியவில்லை... பார்ப்போம்.

-டாக்டர் அரசத் அகமட் -

17/09/2024

♦நான் ஏன் AKDயை ஆதரிக்கின்றேன்?
- என்.எம்.எம்.மிப்லி
Former Deputy Commissioner General-
Inland Revenue Department.

AKD க்கான எனது ஆதரவு நிச்சயமாக, சத்தியமாக தனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காகவோ அல்லது நான் சார்ந்துள்ள இனம், மதம் சார்ந்தாகவோ அல்ல என்பதை முதலில் குறிப்பிட விரும்புகின்றேன்.

நாடு சுதந்திரம் பெற்று 15 வருடங்களில் பிறந்த நான், பல பேரப்பிள்ளைகளைக் கண்டாலும் கூட இந்நாட்டின் சுபீட்சத்தை, இனங்களுக்கு, மக்களுக்கு மத்தியில் அன்னியோன்னியம், பரஸ்பர புரிந்துணர்வு, கண்ணியம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நடைமுறையயை பெரும்பாலும் என்னால் காண முடியவில்லை.

இலங்கையை சுவர்க்க பூமியாக்குவோம் என்ற வாக்குறுதியோடு கடந்த ஏழு தசாப்தங்களாக ஆட்சிபீடம் ஏறிய அரசியல்வாதிகள் தங்களுக்கும், தமது குடும்பங்களுக்குமான சொர்க்கபுரியை உலகில் அமைத்துக் கொண்டார்களே தவிர இதர மக்களுக்கு வங்குரோத்து அடைந்த, இனவாதமும், குரோதமும் நிறைந்த, காட்டு சட்டம் ஆட்சி செய்யும் ஒரு நாட்டையே வழங்கியுள்ளனர்.

இத்தொடர் ஏமாற்று ஜாலங்களால் ஏமாற்றப்பட்ட மக்கள் விரக்தியடைந்து விழிப்படைந்து விட்டனர்.

இவ்விழிப்பூட்டலுக்கு மிகச் சரியான, நிதானமான தலைமைத்துவத்தை NPP/AKD வழங்கிக் கொண்டிருக்கின்றது என நான் காண்கின்றேன்.

ஒருவரது நம்பகத் தன்மையை அவரது கடந்த, நிகழ் காலங்களைக் கொண்டு தீர்மானிக்கலாம்.

அந்தவகையில் AKD யின் கடந்த, நிகழ்கால வரலாற்றை அவதானிக்கும் போது ஏனைய வேட்பாளர்களை விட இவரிடம் நான் காணும் விசேட சிறப்பம்சங்களை பின்வருமாறு குறிப்பிடலாம்.

1. AKD ஒருபோதும் குறுகிய இனவாத சிந்தனையோடு செயற்பட்டதாக அவரது அரசியல் எதிரிகள் கூட இதுவரை குற்றம் சுமத்தியதில்லை.

2. ஊழல், மோசடி, பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக இதுவரை ஏத்தகைய குற்றச்சாட்டும் இல்லை.
(88/89 கலப்பிரிவுகளில் AKD பல்கலைக் கழக மாணவன் என்பதைக் கருத்திற் கொள்க).

3. சட்டத்தின் ஆட்சியை (The Rule of Law) நிலைநாட்டுவதாக AKD வாக்குறுதி அளித்துள்ளது மாத்திரமின்றி, அவர் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவோ அல்லது சட்டத்தை தனது கைக்கு எடுத்ததாகவோ இதுவரையில் எந்த ஒரு குற்றச்சாட்டும் AKD க்கு ஏதிராக இல்லை.

குறிப்பு: அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் சட்டம் கோலாச்சாமை. இது பற்றி நான் தனியான ஓர் ஆய்வை வெளியிடுவேன்.

4. AKD எப்போதுமே ஒரு கொள்கைவாதியாக, சாதாரண மக்களுள் ஒருவராக காணப்படுகிறார். அவர் ஒருபோதும் தன்னையோ தனது குடும்ப உறுப்பினர்களையோ முதன்மைப்படுத்துவதோ விளம்பரப் படுத்துவதோ இல்லை.

5. தனது பேச்சிலும் செயலிலும் ஒற்றுமையும் தெளிவும் உள்ளவராக நான் AKD யை காண்கின்றேன். ஒருபோதும் பத்திரிகையாளர்களின் பலதரப்பட்ட குறுக்கு நேர் எதிர் வினா அம்புகளுக்கு முன்னால், பல்லுடைந்து காயாப்பட்டதாக நான் இதுவரை கண்டதில்லை. தான் கொண்ட கொள்கையில் உள்ள தெளிவையும் உறுதிப்பாட்டையுமே இது பறைசாற்றுகின்றது.

AKD க்கு எதிராக முன்வைக்கப்படும் நியாயமான ஒரு குற்றச்சாட்டு 1994 முதல் 2019 வரை ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களுக்கு துணைபோதல் அல்லது ஒத்துழைத்தல் என்பதாகும்.

மேற்படி குற்றச்சாட்டு அரசியல் பற்றிய தெளிவின்மையின் வெளிப்பாடாகும்.

அரசியலில் தேர்தல் என்பது முன்வந்துள்ள வேட்பாளர்களில் அல்லது கட்சிகளுள் நாட்டுக்கு அதிகம் நன்மை அளிப்பதை அல்லது குறைந்த தீமை அளிப்பதைத் தேர்வதாகும்.

எனவே, அந்தந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளில் காணப்பட்ட நிலைமை, பின்னணி போன்றவற்றை கருத்திற் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்படும்.

அவ்வாறே இன்றைய அரசியல் சூழ்நிலையில் எடுக்கப்படும் தீர்மானம், சிலவேளை இன்னும் 5, 10 அல்லது 20 வருடங்களில் அப்போதைய நிலைமைகளின் மாற்றத்திற்கேற்ப மாறலாம். அதனை ஒருவர் சந்தர்ப்பவாதம் எனக்கூறின் அது யதார்த்தத்தின் அறியாமை என்றே குறிப்பிட வேண்டும்.

எனவே, இன்றைய அரசியல் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மிகச் சரியான அறிவுபூர்வமான தெரிவு AKD எனபதே ஆகும். அனைத்தையும் அவனே நன்கறிவான்

என். எம். எம். மிப்லி.
முன்னாள் பிரதிப் ஆணையாளர் நாயகம்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்.

17/09/2024

சம்மாந்துறை மக்களே சிந்தியுங்கள் !!

16/09/2024

🗳️
அதெப்படி ரூ1800 ஆகவும் தட்டுப்பாடாகவும் இருந்த 5கி கீரி சம்பா 1300 ஆகவும் தாராளமாகவும் சந்தைக்கு வந்தது? பயந்துட்டானுகளோ?

இலங்கையின் முன்னாள் சட்ட மா அதிபர் திரு Dappula de Livera ஈஸ்டர் 19,  தாக்குதல் ஒரு சதி என்பதை உறுதி செய்கின்றார்  திரு ...
12/09/2024

இலங்கையின் முன்னாள் சட்ட மா அதிபர் திரு Dappula de Livera ஈஸ்டர் 19, தாக்குதல் ஒரு சதி என்பதை உறுதி செய்கின்றார்

திரு ரவி செனவிரத்ன, திரு ஷானி அபேசேகர, திரு நிசாந்த சில்வா ஆகிய CID யின் முன்னாள் அதிகாரிகள் இந்த சதியில் புலனாய்வு பிரிவிற்கு தொடர்பு இருந்ததாக சொல்லுகின்றார்கள்

குறிப்பாக திரு ரவி செனவிரத்ன அவர்கள் இந்த விசாரணையில் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தலையீடு செய்து தடுத்த 5 விடயங்களை பட்டியல் படுத்தி இருக்கின்றார்

அதே போல் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அவர்களிடமிருந்து தாக்குதல் தொடர்பான எந்த தகவல்களையும் பெற முடியவில்லை என்பதையும் அம்பலப்படுத்தி இருக்கின்றார்

இவ் தாக்குதல்தாரிகளுடன் தொடர்பிலிருந்த புலனாய்வு அதிகாரியான ‘Sonic Sonic’ பண்டார பயன்படுத்திய SIM card, ‘Podi’ சஹரானோடு பண்டாரவிற்குமிடையே நடந்த உரையாடல்கள், இதில் IS*IS ஐ தொடர்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் போன்ற விடயங்களை விபரித்து உள்ளார்

இது தவிர Jameel Mohamed ஐ Taj Samudra hotel லிருந்து தாக்குதலுக்கு முன் வெளியேற்றிய கேணல் அன்சார் என்கிற அதிகாரி பற்றிய தகவல்களும் பொது வெளியில் பகிரப்படுத்தப்பட்டுள்ளது

விசேடமாக அவன் வீட்டிற்கும் அவன் தாய் வீட்டிற்கும் சென்ற புலனாய்வுப் பிரிவு (DMI) குறித்த தகவல்களும் அம்பலமாகியுள்ளது

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அவர்களும் Jameel Mohamed இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவருடன் தொடர்பில் இருந்தார் என பதிவு செய்துள்ளளார்

இது தவிர சஹரானோடு தொடர்பிலிருந்த இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவரின் Internet Protocol (IP) கண்டறியப்பட்டுள்ளது

குறிப்பாக இந் அதிகாரி பிள்ளையான் சகிதம் மட்டக்களப்பில் தடுத்துவைக்கட்டிருந்த பிள்ளையானின் சகா கலீல் எனப்படும் புலனாய்வு அதிகாரியின் மகன் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது

இவரை விசாரிக்க DMI பணிப்பாளர் Brigadier Chula Kodithuwakku மற்றும் SIS பிரதி பணிப்பாளர் Sampath Liyanage ஆகியோர் அனுமதி மறுத்தது தொடர்பான விபரங்களும் பகிரங்கமாகியுள்ளது

குற்ற புலனாய்வு அதிகாரிகள பகிர்ந்திருக்கும் இந்த சான்றுகள் அசாத் மௌலானாவின் சாட்சியங்களுடன் ஒத்துப்போகின்றன

ஆனால் விசாரணைகள் முழுமை பெறாமல் முடக்கப்பட்டுள்ளது

ஆசாத் மௌலானாவின் வாக்குமூலம் உட்பட்ட முக்கிய சாட்சியங்கள் மீது இதுவரை எந்த விசாரணைகளும் நடத்தப்படவில்லை.

குறிப்பாக சஹ்ரானுக்கும் புலனாய்வு பிரிவுக்கும் பிள்ளையான் தொடர்பாளராகவிருந்தது தொடர்பாக விசா ரிக்கப்படவில்லை

அதே போல சஹ்ரானுக்கு பிள்ளையான் ஊடக பணம் பரிமாற்றப்பட்டது தொடர்பாக விசாரிக்கப்படவில்லை

ஆசாத் மௌலானவை Taj Samudra hotel க்கு சென்று Jameel ஐ அழைத்து வர உத்தரவு பிறப்பித்தது தொடர்பாக விசாரிக்கப்படவில்லை

புத்தளம் வனாத்துமுல்லையில் நடந்த சந்திப்புகள் குறித்து விசாரணைகள் நடக்கவில்லை

அதே போல பதவியிழந்துள்ள தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் ஒன்றில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய லொறிஒன்றுவிடுவிக்கப்பட்டது தொடர்பாகவும் விசாரிக்கப்படவில்லை

இது மாத்திரமின்றி சஹரானோடு தொடர்பிலிருந்த அபுஹிந்த் தொடர்பாக விசாரிக்க பட வில்லை

மறுபுறம் கிறிஸ்தவ திருச்சபைக்கு கையளிக்கபட்ட 70,000 பக்க Presidential Commission of Inquiry (PCoI) Report இல் 1,500 பக்கங்களை காணவில்லை

இதற்கு மத்தியில் Channel 4 ஆவணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசாரணை குழுவும் முன்னாள் சட்டமா அதிபரின் குற்றச்சாட்டை விசாரிக்க பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படும் என ரணில் விக்ரமசிங்கே அறிவித்து இருந்தார்

தற்போது இந்த குழுக்களுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை

இவை இருட்டுக்குள் கறுப்புப் பூனையைத் தேடியலைபவன் போல தீர்வு தேடி கொண்டு இருக்கின்றன

எப்படியிருந்தாலும் திரு ரணில் விக்ரமசிங்கே அதிகாரத்திலிருக்கும் வரை குற்றவாளிகளை பாதுகாப்பார்

விசாரணைகளை முன்னகர அனுமதிக்க மாட்டார்

குறைந்தபட்சம் குற்றவியல் சட்டக் கட்டமைப்பு ஊடக விசாரணைகளை முழுமைப்படுத்த திரு ரணில் விக்ரமசிங்கே அவர்கள் தோற்கடிக்க பட வேண்டும்

ஜனாதிபதி தேர்தலில் நாம் வாக்களிக்கவிருக்கும் வேட்பாளர் - AKD பற்றி… 2004 இல் விவசாய அமைச்சை பொறுப்பெடுத்து செய்தது என்ன?...
10/09/2024

ஜனாதிபதி தேர்தலில் நாம் வாக்களிக்கவிருக்கும் வேட்பாளர் - AKD பற்றி…

2004 இல் விவசாய அமைச்சை பொறுப்பெடுத்து செய்தது என்ன?

Written by Br Dilshan

🤗தமுத்தேகம என்ற கிராமத்தில் பிறந்து அங்கேயே படித்து வளர்ந்த எம்மைப்போன்ற ஒரு சாதாரண நபர்.

🤗 களணி பல்கலைக்கழகத்தில் படித்த விஞ்ஞான பட்டதாரி

🤗அவர் 2000 ஆம் ஆண்டு முதன்முதலாக பாராளுமன்றம் நுழைகிறார்

🤗 2001 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் வெற்றிபெருகிறார்

🤗2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் மக்கள் கூட்டமைப்பில் போட்டியிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான விருப்புவாக்குகளுடன் முதலாமிடம் பெறுகிறார்

🤗முப்பத்தைந்து வயதில் விவசாய, மிருகவளர்ப்பு, காணி மற்றும் வடிகாலமைப்பு என்ற மிகப்பெரும் அமைச்சை பொறுப்பேற்கிறார்.(அந்த அமைச்சு இன்று பத்துக்கும் மேற்பட்ட அமைச்சுகளாக பிரிக்கப்பட்டுள்ளன)

🤗 அமைச்சை பொறுப்பேற்றதும் அங்கு தனக்காக வழங்கப்பட்ட சொகுசு வாகனங்களை அவற்றின் பராமரிப்பு செலவு அதிகம் என்பதால் ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்தார்.

🤗அமைச்சில் வேலை செய்யும் ஊழியர்கள் உரிய நேரத்திற்கு வேலைக்கு சமூகம் அளிப்பதற்காக அமைச்சருக்காக வழங்கப்பட்ட பிரயாண செலவுக்காக தொகையை பயன்படுத்தி இரண்டு Staff Bus கள் கொள்வனவு செய்தார். (அந்த பஸ்களே இன்றுவரை விவசாய அமைச்சில் பாவனையில் இருக்கின்றன)

🤗 இவர் அமைச்சராக இருந்த காலப்பகுதியிலேயே அதிகூடிய நெல் விளைச்சலை இலங்கை பெற்றுகொண்டது. (வட மாகாணம் தவிர்த்து)

🤗 எஸ் பீ திசாநாயக்கா , ராஜித சேனரத்ன போன்றோர் அமைச்சர்களாக இருந்த காலப்பகுதியில் வெளிநாட்டு கம்பனிகளுக்கு டீல் மூலம் வரியின்றி வழங்கப்பட்ட அரச காணிகளுக்கு 100% வரியை அமுல்படுத்தி நாட்டுக்கு வருமானத்தை பெற்றுக்கொடுத்தார்.

🤗 தூர்வுறிருந்த 1000 குளங்களை புணரமைக்கும் வேளைத்திட்டத்தை ஆரம்பித்து எந்தவித கடன் உதவியும் இன்றி 800 குளங்களை புனரமைத்தார்.

🤗 வெஹெரகல குடிநீர் திட்டத்தின் மூலம் லுணுகம்வெஹர மக்களுக்கு குடிநீர் வழங்கினார்

🤗 பால் உற்பத்தி செய்யும் பல கிராமங்களை உருவாக்கினார்.

🤗நஷ்டத்தில் இயங்கியதால் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்படவிருந்த Milco நிறுவனத்தை குறுகிய காலத்தில் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றிக்காட்டினார்.

🤗 சுனாமி பேரனர்த்தத்தின் பின் சுனாமி அதிகாரசபை அமைக்கப்பட்டபோது அதன் ஊழல்களை இவர் வெளிக்கொண்டு வந்த போது அரசாங்கத்துடன் ஏற்பட்ட முறுகலின் காரணமாக அரசை விட்டு வெளியேறினார்

🤗 2010 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெருகிறார்

🤗மஹிந்தவின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்ததமையால், மஹிந்த இவரின் கட்சியை 2011 ஆம் ஆண்டு பிளவுபடுத்தினாலும், கட்சியை பாதுகாக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு அதன் ஒருமைப்பாட்டை பாதுகாத்தார்

🤗2014 ஆம் ஆண்டு கட்சியின் தலைமைப்பொறுப்பை ஏற்கிறார்

🤗2015 ஆம் ஆண்டு ரணில் அரசாங்கத்தின் மத்திய வங்கி ஊழலை உலகிற்கு முதன் முதலாக வெளிப்படுத்தினார்

🤗 2015 ஆம் ஆண்டு மீண்டும் பாராளுமன்றம் தெரிவாகிறார். தொடர்ந்தும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்களின் குரலாக செயல்படுகிறார்

இன்று வரை இவருக்கு எதிராக
🤗 எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் ஒரு முறைப்பாடும் இல்லை.
🤗எந்தவொரு நீதிமன்றத்திலும் ஒரு வழக்கும் இல்லை.
🤗ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை

இவர் வேறு யாருமல்ல, எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி நம் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவிருக்கும்....

*அனுரகுமார திஸானாயக்க* ❤

Vote for

மூ ஒக்கோம யாலுவா மல்லி!!!
09/09/2024

மூ ஒக்கோம யாலுவா மல்லி!!!

Electric Engraving Pen Rs 1400/=   மட்டும் … Free delivery island wide !!!
07/09/2024

Electric Engraving Pen
Rs 1400/= மட்டும் … Free delivery island wide !!!

07/09/2024
மனச்சாட்சியுள்ள முஸ்லிமாக உங்களை எப்படி ஆதரிப்பது??                  …………………சஹ்ரானின் பிரச்சனை வந்த போது நீங்கள் பிரதமர்...
04/09/2024

மனச்சாட்சியுள்ள முஸ்லிமாக உங்களை எப்படி ஆதரிப்பது??
…………………
சஹ்ரானின் பிரச்சனை வந்த போது நீங்கள் பிரதமர்.

அன்று முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என சித்தரிக்கப்பட்டு முத்திரை குத்தப்பட்ட போதும் நீங்கள் பிரதமர்.

வீதிகளில் வாகனங்களில் செல்லும் போது பொலிஸ் சோதிக்கும் போது அவர் முஸ்லிமாக இருந்தால் கேள்விகள் அதிகம் கேட்டு அதட்டும் போதும் நீங்கள் பிரதமர்.

வீடு வீடாக முஸ்லிம் நபர்களை அழைத்து விசாரிக்கும் போது நீங்கள் பிரதமர்

வீடுகளை சென்று சோதனை செய்து மக்களை அச்சத்தில் ஆழ்த்திய காலத்தின் போதும் நீங்கள் பிரதமர்.

அப்பாவிகள் பலரை கைது செய்து கொடுமைப்படுத்திய போதும் நீங்கள் பிரதமர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் திகன, அக்குரன, அம்பாறை, அழுத்கம என்று பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட கலவரங்களின் போதும் நீங்கள் பிரதமர்.

ஜனாஷா எரிப்பின் போது ஊடகங்களை அழைத்துக்கூட வாய் திறக்காத நீங்கள் இப்போது வாய் பேச காரணம் எங்களது வாக்குகள் வேண்டும்.

50 வருட கால அரசியல் பயணத்தில் நீங்கள் செய்தது என்ன? கடந்த இரண்டு வருடங்களாக பொருளாதாரம் பொருளாதரம் என்று அரசியல் செய்கின்றீர்கள்.

தற்போது நாட்டின் ஜனாதிபதி நீங்கள். ஆனால் பொருளாதாரம் அதலபாதாளத்தில் இருக்க உங்களுக்கு வேண்டிய MPக்கள், அமைச்சர்களுக்கு அதிக பட்ச பணத்தை லஞ்சமாக கொடுத்து உங்களுடன் சேர்த்து இருக்கின்றீர்கள்.

தேர்தல் நெருங்கும் வேளையில் அபிவிருத்தி செய்கிறோம் என்ற பெயரால் அப்பாவி மக்களை அடகு வைத்துப் பெற்ற கடன் பணத்தை எங்கள் பிரதிநிதிகளுக்கு அள்ளிச் சொரிந்து அதை அவர்கள் அறிந்த தெரிந்த கொந்தராத்துகார கள்வர்கள் கைகளுக்கு பகிர்ந்தளித்து வீண் செலவுகள் செய்யப்படுகிறதே....
இந்தப் பணம் உங்களது சொந்தப் பணமா???

மக்களின் கரன்ட் பில், தண்ணீர் பில், வரிப்பணம் இதை எல்லாம் அதி உச்ச கட்டம் உயர்த்தி விட்டு நான்தான் நாட்டை மீட்டு எடுத்தேன் என்பது எப்படி நியாயம்?

நாட்டின் தற்போது கடன் நிலை என்ன?? அதிக கடன் உங்கள் ஆட்சியில்தான் வாங்கப்பட்டது.

கடனில் இருந்து மீள நீங்கள் மேற்கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள்தான் என்ன??

வேலியே பயிரை மேய்ந்த கதையாக உங்கள் தலமையில் நடக்கும் பாரிய ஊழல்களை நாங்கள் அறியாதவர்களாக இல்லை!!!

அப்பாவி ஏழை மக்களின் சமூர்த்தி கொடுப்பனவை இல்லாமல் செய்து வாழ்வதாரத்தை கேள்விக்குறியாக்கினீர்கள்.

எல்லாவற்றையும் சகித்துக் கொண்டாலும்...
பச்சிளம் பலஸ்தீன பாலகர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாய் இலங்கையிலிருந்து படைகளை அனுப்பிய உங்களை ஒரு உண்மையான முஸ்லிமாக எப்படி ஆதரிப்பது???

எதிர்காலத்தை நோக்கி என்ற சொல் உங்கள் நாவில் இருந்து 50 வருடங்களாக ஒலிக்கின்றது. எப்போது அந்த எதிர்காலம் வந்து சேரும்?

தற்போது உங்களுக்கு சொந்த கட்சியே இல்லாமல் ஆக்கியது உங்களின் இயலாமை அரசியல்!!

கோத்தாவின் ஆட்சியில் கூட அநீதிக் கெதிராய் போராடும் சுதந்திரம் இருந்தது, ஆனால் உங்களது ஆட்சிக் காலத்தில் அதைக் கூட இழந்தோம்!!!
(மீறிப் போராடியவர்களின் நிலையை யாவரும் அறிவோம்)

உங்கள் பக்கம் இருக்கும் பல இனவாதிகள் மற்றும் ஊழல் வாதிகளால் மட்டுமே வெற்றி பெற முடியும் எனக் கனவு காணாதீர்கள். மக்களின் தீர்ப்பு என்று ஒன்றுள்ளது .

ஏமாறும் மக்கள் இருக்கும் வரை உங்களை போல் உங்கள் பின்னால் இருப்பவர்கள் ஆட்சிபீடம் ஏறி மக்களை மேலும் ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழத்தான் போகின்றார்கள்

"உங்கள் கைகளாலே நாசத்தை தேடிக் கொள்ளாதீர்கள்"
(அல் குர்ஆன் 2:195)

அனுர முன்னிலையில் ....அமெரிக்காவில் இருந்துகொண்டே ஆய்வு செய்த பசில் ..................................... அமெரிக்காவில் ...
28/08/2024

அனுர முன்னிலையில் ....
அமெரிக்காவில் இருந்துகொண்டே
ஆய்வு செய்த பசில் .....................................
அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் இரண்டு மாதங்கள் ஒய்வைக் கழித்தார் பசில் ராஜபக்ச.

உண்மையில்,அவர் ஓய்வில் இருக்கவில்லை.நாட்டின் அரசியல் நிலைமையை அங்கிருந்தவாறே கவனமாக ஆய்வு செய்யத் தொடங்கினார்.

கிராம மட்டத்தில் உள்ள மொட்டு கட்சி நிர்வாகிகளின் உதவியுடன் அந்த ஆய்வை மேற்கொண்டார்.

எல்லா ஆய்வுகளிலும் கிடைத்த பெறுபேறு என்னவென்றால் அனுர முன்னிலையில் இருக்கின்றார் என்பதுதான்.

ஒட்டுமொத்தமாக வெறும் ஐந்து வீத வாக்குகள்தான் மொட்டு கட்சி இருப்பதையும் அதைவிடக் குறைவான அளவே ஐக்கிய தேசிய கட்சிக்கு இருப்பதையும் அந்த ஆய்வின் ஊடாக உணர்ந்தார் பசில்.

அப்படியென்றால்,வெல்வதற்கு என்ன வழி..????

நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதுதான் ஒரே வழி .அதுவும் வெற்றிக்கான வழியல்ல.ஒரு முயற்சிதான்.

நாடாளுமன்றத் தேர்தலில் மொட்டு மற்றும் ஐ.தே .கவுக்குக் கிடைக்கின்ற ஆசனங்களை வைத்துக்கொண்டு ஏனைய கட்சிகளின் ஆசனங்களையும் விலைக்கு வாங்கி நாடாளுமன்ற ஆட்சியைப் பிடித்துக்கொள்ள முடியும்.

நாடாளுமன்ற ஆட்சி கைக்கு வந்துவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தமக்கே வாக்களிப்பர்.அதாவது,வெற்றி பெற்ற கட்சிக்கே மக்கள் வாக்களிப்பர் என்ற அடிப்படையில்...

உடனே இந்தத் திட்டத்தை எடுத்துக்கொண்டு நாட்டுக்கு ஓடி வந்த பசில் ரணிலைச் சந்தித்து இந்த அறிக்கையைக் காட்டி நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துமாறு கூறினார்.

ஆனால்,மொட்டு கட்சி எம்பிக்கள் யாரும் இதை விரும்பவில்லை.

காரணம் அதில் உள்ள அதிகமான எம்பிக்கள் அடுத்த தேர்தலில் வெல்லமாட்டார்கள் என்று அவர்களுக்குத் தெரியும்.

உரிய காலத்துக்கு முன் தேர்தலை நடத்தி அவர்கள் தோற்றுப் போனால் அவர்களுக்கு பென்ஷனும் இல்லாமல் போகும் என்பதால் ரணிலைச் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டாம்..முதலில் ஜனாதிபதி தேர்தலையே நடத்துங்கள்.நாங்கள் அனைவரும் உங்களுடன் வந்து இணைகிறோம் .உங்களை வெல்ல வைப்பதற்கு பாடுபடுவோம் என்றனர்.

அதன் அடிப்படையில்தான் ஜனாதிபதி பசிலின் வார்த்தையை உதாசீனம் செய்துவிட்டு ஜனாதிபதி தேர்தலுக்குச் சென்றார்.வாக்குறுதியளித்ததுபோல் அந்த மொட்டு எம்பிக்கள் ரணிலுடன் போய்ச் சேர்த்துக்கொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பசில் வருவது வரட்டும் என்று நாமலை மொட்டு வேட்பாளராக நிறுத்தும் மஹிந்தவின் முடிவோடு இணைந்து போனார்.

பசில் அமெரிக்காவில் இருந்து வந்த புதிதில் ரணிலுக்கு ஆதரவாக அதிகம் அதிகமாகப் பேசினார்.

எல்லோரது பார்வையிலும் மொட்டின் வேட்பாளர் ரணில்தான் என்றே பட்டது.

அப்படி இருக்கும்போது பசில் திடீரென பல்டி அடித்தது ஏன் என்று பலரும் கேற்கிறார்கள்.

நான் மேலே கூறியுள்ள சம்பவம்தான் அதற்குக் காரணம்.

ஆனால்,அனுரதான் ,வெல்வார் என்றும் தான் சொல்வதைக் கேட்டிருந்தால் நாடாளுமன்ற ஆட்சியையாவது பிடித்திருக்கலாம் என்றும் பசில் இப்போது புலம்பித் திரிகிறார்.

ரணிலை விட நான் மூளைக்காரன் என்பதை தேர்தல் முடிந்ததும் ரணில் புரிந்துகொள்வார் என்று பசில் அவருக்கு நெருக்கமானவர்களுடன் கூறியுள்ளார்.

[ ஊடகவியலாளர் எம்.ஐ.முபாறக் ]

Address

Sangaraja Mawatha
Colombo
0094

Alerts

Be the first to know and let us send you an email when Echo Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category