28/05/2020
ஊரடங்குச் சட்டம் பற்றிய இன்றைய அறிவித்தல்:
ஜுன் 06ஆம் திகதி சனிக்கிழமை வரையிலும், மற்றும் அதன் பின்னரும் - நாட்டில் ஊரடங்கு சட்டம் பின்வருமாறு அமுல்படுத்தப்படும்:
—> மே 31, ஞாயிறு, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் - முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.
—> ஜுன் 01, திங்கள், முதல் ஜுன் 03, புதன், வரை அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று - இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.
—> ஜுன் 04, வியாழன், மற்றும் ஜுன் 05, வெள்ளி, ஆகிய இரு தினங்களும் - நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.
—> ஜுன் 06, சனி, முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று - இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.
—> கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும்.