People news

People news உங்களோடு நாங்கள் எங்களோடு இணைந்திருங்கள்?
(1)

ஊடகவியலாளர் சித்தீக் மீது போதைப் பாவணையாளர்களால் தாக்கப்பட்டார் தாய்மடி ஓய்வில்லமும் சேதம்இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாப...
06/08/2023

ஊடகவியலாளர் சித்தீக் மீது போதைப் பாவணையாளர்களால் தாக்கப்பட்டார் தாய்மடி ஓய்வில்லமும் சேதம்

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் அம்பாறை பிராந்திய செய்தியாளரும் "டுடே சிலோன்" ஊடக வலையமைப்பின் பிரதம செய்தியாசிரியருமான எஸ்.எம்.இஸட். சித்தீக் நேற்றிரவு 07.15 மணிய்ளவில் இனந்தெரியாத சிலரினால் தாக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வரும் விடயமானது,

குறித்த செய்தியாளருக்குச் சொந்தமான இறக்காமத்தில் காணப்படும் "தாய்மடி" எனும் ஓய்வகத்திற்கு முன்பாக மறைந்திருந்து இனந்தெரியாதோர் தாக்கிய போதும் தலைக்கவசம் அணிந்திருந்ததனால் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் சித்திக்,

குறித்த "தாய்மடி" எனும் எனது ஓய்வகத்திற்கு அருகாமையிலும் அதனை அண்டியுள்ள இருள் நிறைந்த பகுதிகளில் இரவு வேளைகளில் மறைந்திருந்து மதுபானம் மற்றும் ஏனைய போதைவஸ்துக்களைப் பயன்படுத்தி வருவதனால் இவற்றைத்தடுக்க வேண்டுமென்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டேன்.

குறித்த இடத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக சிலர் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது அவர்களுக்கு முன் எச்சரிக்கையாக இவற்றை நிறுத்தாவிட்டால் பொலிசாரிடம் தங்களை முறைப்பாடு செய்வேன் எனக்கூறியிருந்தேன்.

அதன் பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஓய்வகத்தின் வளாகத்தில் காணப்பட்ட மேசைகள் உடைக்கப்பட்டு விடுதியின் கூரைகளும் உடைக்கப்பட்டிருந்ததோடு, வானொலிப்பெட்டியும் களவாடப்பட்டிருந்தது. அதன் பின்னரே நேற்றிரவு குழுவாக வந்த மூவர் என் மீது தாக்குதல் நடத்தினர்.

எனக்கு கொலை அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் இவ்வாறு ஊடகவியலாளர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்க விடயமாகும்.

குறித்த நபர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது பொலிசாரின் பொறுப்பு வாய்ந்த கடமையாகும். இது தொடர்பில் இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என்றார்.

அட்டாளச்சேனை  சோபர் விளையாட்டுக் கழகம் தொடர்ச்சியாக  7ஆவது வெற்றியைப் பதிவு செய்தனர்...!!!eஅட்டாளைச்சேனை அல் - நஜா விளைய...
04/08/2023

அட்டாளச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் தொடர்ச்சியாக 7ஆவது வெற்றியைப் பதிவு செய்தனர்...!!!e

அட்டாளைச்சேனை அல் - நஜா விளையாட்டுக் கழகத்தின் 20ஆவது வருட நிறைவில் முன்னிட்டு நடைபெற்ற மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

அணிக்கு 8 பேர் 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட இச்சுற்றுப் போட்டியில் 60 கழகங்கள் பங்கு கொண்டன.

இதன் இறுதிப் போட்டி அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மைதானத்தில் நடு நிசினியில் (02) கழகத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய கழத்தின் உப தலைவருமான எஸ். இத்ரீஸ் தலைமையில் நடைபெற்றது.

இதன் இறுதிப் போட்டியில் சோபர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 6 விக்கட்டுக்களை இழந்து 49 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டுக் கழக அணி 3 விக்கட்டுக்களை இழந்து 42 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 07 ஓட்டத்தால் தோல்வியை தழுவினர்.

இவ் வெற்றியின் மூலம் இவ்வாண்டு மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் தொடர்ச்சியாக சோபர் அணி 7 தடவை சம்பியன் கிண்ணத்தை அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மைதானத்தில் சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இறுதி பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன், பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹானீபா, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஏ.எம்.றியாஸ்.BBA, பிரதான அனுசரணை வழங்கிய ACR Fowdation தலைவரும் Marksman விளையாட்டு கழகத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான ஏ.சீ.றிசாட்.JP, அகில இலங்கை YMMA Conference அம்பாறை மாவட்டப் பணிப்பாளரும், ஹைலண்ட் விளையாட்டு கழகத்தின் தலைவருமான அதிபர் சிரேஷ்ட ஊடகவியலாளர் MIM.றியாஸ்.JP, கிழக்கு கோட்டத்தின் தலைவர் SM.சபீஸ், அட்டாளைச்சேனை அல் - நஜா விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஊடகவியலாளர் கே.ஏ.ஹமீட் .JP, அனுசரணையாளர்கள் எனப் பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டு கிண்ணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இச் சுற்றுப் போட்டியில் மூன்றாவது இடத்தை பாலமுனை ரை ஸ்டார் விளையாட்டு கழகம் மற்றும் நான்காவது இடம் அக்கரைப்பற்று Chocamote அணியினரும் தெரிவு செய்யப்பட்டனர்.

சோபர் அணியின் றப்சான்(SO) மற்றும் ஜெசீல்(Tr) சிறப்பான பந்து வீச்சு துடுப்பாட்டம் காரணமாக சோபர் அணி சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

கிழக்குப் பல்கலைக்கழக தாடி விவகாரம்: மாணவன் நுஸைபை தாடியுடன் பரீட்சை எழுத அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டள...
04/08/2023

கிழக்குப் பல்கலைக்கழக தாடி விவகாரம்: மாணவன் நுஸைபை தாடியுடன் பரீட்சை எழுத அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை – (04.08.2023)
****************************
தாடி வைத்திருந்தமைக்காக பரீட்சை எழுத அனுமதிக்கப்படாமல் அடாத்தாக தடுக்கப்பட்டமைக்கு எதிராக கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட மாணவன் நுஸைப் மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடுத்த வழக்கு இன்று (4) ஆதரவுக்காக (Support) எடுக்கப்பட்ட போது குரல்கள் இயக்க ( Voices Movement ) சட்டத்தரணி றுடானி சாஹிர் ( Rudane Zahir ) அவர்களின் அறிவுறுத்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அவர்கள் மாணவன் நுஸைப் தரப்பிற்காக ஆஜராகியிருந்தார்.

கடந்த தவணைகளில் வேறு காரணமொன்றின் அடிப்படையில் பரீட்சையினை தாம் ஒத்தி வைத்திருப்பதாகவும் அடுத்த வழக்குத் தவணை வரை பரீட்சையை தாம் நடாத்தப் போவதில்லை என்ற ஏற்பினை (Undertaking) நீதிமன்றின் முன் கொடுத்திருந்த பல்கலைக்கழக நிர்வாகம் எதிர்வரும் ஆகஸ்ட் 09 ஆம் திகதி பரீட்சையினை நடாத்தப் தாயாராகவுள்ளதாக நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தது.

மாணவனது உரிமைகளான மாணவன் தாடியோடு பரீட்சை எழுத அனுமதிக்கப்பட வேண்டும், விரிவுரைகளுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் மற்றும் மாணவன் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதற்கு தடையாக தாடி வைத்திருக்கும் காரணத்தைக் காட்டி படிப்பு சார் செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கக் கூடாது போன்ற நிவாரணங்களைக் கேட்டு மாணவர் தரப்பு சட்டத்தரணிகள் தமது வாதங்களை முன்வைத்திருந்தனர். எதிர் தரப்பினரான பிரதிவாதிகள் மேற்சொன்ன விடயங்களுக்கு தமது எதிர்ப்பினை நீதிமன்றில் வெளிப்படுத்தியிருந்தனர்.

இரு தரப்பு வாதங்கள் மற்றும் ஆவணங்களை பரசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மாணவன் நுஸைப் அவர்கள் எதிர்வரும் 09 ஆம் திகதி தாடியுடன் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்ற (இடைக்கால) கட்டளையிட்டதுடன் அதனை பல்கலைக்கழகத்திற்கு உடனே அறிவிக்கவும் உத்தரவும் பிறப்பித்திருக்கிறது.

இவ்விவகாரத்தில் ஆரம்பம் முதலே குரல்கள் இயக்கமானது (Voices Movement) அதன் தவிசாளர் சட்டத்தரணி றாசி முகம்மட் (Raazi Mohamed ) அவர்களின் பாரிய பங்களிப்புடன் மாணவன் நுஸைபின் கலாச்சார உரிமைக்காக குரல் கொடுத்து வருவதுடன் இதில் இன்று (ஆரம்ப கட்ட) வெற்றியும் கண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பௌத்த துறைவித்  தம்பியாரே!முதலில் உங்கள் தமிழ் பற்றுக்கு ஒரு வணக்கம்!எதற்கு உங்களுக்கு தூக்கம் வரவில்லை??அதுதான் இவ்வளவு...
10/07/2023

பௌத்த துறைவித் தம்பியாரே!

முதலில் உங்கள் தமிழ் பற்றுக்கு ஒரு வணக்கம்!

எதற்கு உங்களுக்கு தூக்கம் வரவில்லை??

அதுதான் இவ்வளவும் உள்ளுக்குள் கிடந்து கொதிக்கிறதே! எப்படி தூங்க முடியும் இல்லையா??

காவியுடுத்தி முற்றும் துறந்தவனுக்கே காமத்தை அடக்கியாளத் தெரியாதது முதல் குற்றம்!

அடக்கியாளத் தெரியாமல் காவியுடுத்தியது அதைவிடக் குற்றம்!

விபச்சாரத்தில் நாட்டம் காட்டியது மகா பெரியகுற்றம்!

அப்படியானால் காவி கட்டிக்கொண்டு காமம் யாருக்கில்லை என்று கூறிக்கொண்டு, உலகில் தவறு செய்யாதவன் யாரில்லை என்று நியாயப் படுத்திக் கொண்டு தான் எல்லாச் சிங்கள பௌத்த காவிகளும் உலாவிக் கொண்டு வாழ்கின்றீர்கள் அப்படித்தானே??

இப்போது உங்கள் பிரச்சனைக்கு வருவோம்.....

துகில் உரியப்பட்டு காணொளிப் பதிவு செய்தது மற்றும் அதைப் பரப்பியதுதான் உங்கள் குற்றச்சாட்டுக்கள்.

சரி அதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்!

இப்போது உங்களிடம் சில கேள்விகள்......

இரண்டு சிங்களப் பெண் விபச்சாரிகளின் துகில் உரியப்பட்டு காணொளி செய்யப்பட்டது என்றவுடன் உங்கள் இரத்தம் கொதிக்கிறது. தூக்கம் வர மறுக்கிறது. குமுறிக்
கொதித்து எழுகின்றீர்கள்.

சரி! அப்படியானால்.......,

2009 ல் தமிழீழக் கற்புக்கரசிகள், குலமகள்கள் வலுக்கட்டாயமாக துகில் உரியப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு காணொளியாக்கப்பட்டு உலக சந்தையில் விற்றார்களே உங்கள் சிங்களக் காட்டுமிராண்டிக் காடையர்கள்.

கல் நெஞ்சம் கொண்ட சிங்கள தேசத்தின் துறவியே!

உங்களுக்கு ஒன்றென்றால் உங்கள் இரத்தம் கொதிக்கிறதா??

இப்போதுதான் உங்களுக்குப் புத்தனின் போதனைகள் நினைவுக்கு வருகிறதா???

உங்களை விட புத்தனின் போதனைகளை நாங்கள் நன்கு அறிவோம்.

உங்கள் இன, மத, கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்கள், வழிபாட்டு முறைகள், போரியல் எல்லாம் உங்களை விட நாங்கள் நன்கு கரைத்துக் குடித்துள்ளோம்.

எங்கள் தமிழீழக் கண்ணகிகளை வீர மங்கையரை துகில் உரித்து வன்பணர்வு செய்யும் போது எங்கே போனது உங்கள் புத்தன் போதனைகள்???

அப்போது கற்புக்கரசிகளுக்காக ஓங்கி ஒலிக்காத உங்கள் குரல் ஏன் இப்போது விபச்சாரிகளுக்காக இப்படி முழங்குகிறது?

மூன்று தசாப்தமாக நடந்த போரியல் வரலாற்றில் ஒரு சிங்களப் பெண்ணை தமிழன் வன்புணர்வு செய்திருக்கின்றானா???

வீரம் கெட்ட சிங்களம் எதிர்த்துப் போராட சக்தியற்று துணைக்கு படைதிரட்டி வந்தது போதாமல் எங்கள் பெண்களை வன்புணர்வு செய்த கேடு கெட்ட இராணுவத்தைக் கொண்ட இழிநாடு சிங்கள தேசமடா!

நல்லொழுக்கம் எப்படி உங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும், துறவிகளுக்கும் இருக்கப் போகிறது???

உங்கள் காணொளிகள் எங்கு போனால் என்ன?? யார் பார்த்தால் என்ன??

உலகமே உங்கள் கேவலம் அறியும்!

பௌத்த துறவியின் விபச்சாரத்திற்கு இனியும் உடந்தையாக இருக்காதீர் அமைதியாக அடங்கும் துறவியே!

புத்தம் சரணம் கச்சாமி.....!

(நன்றி உணர்வுள்ள தமிழன் )

ஸ்தாபகர்களின் செயல்களை விற்று எதிர்காலத்தில் பிரகாசிக்க முயலும் வங்கரோத்து நட்சத்திரங்களுக்கு எமது MLAC Muslimah'வின் எச...
06/07/2023

ஸ்தாபகர்களின் செயல்களை விற்று எதிர்காலத்தில் பிரகாசிக்க முயலும் வங்கரோத்து நட்சத்திரங்களுக்கு எமது MLAC Muslimah'வின் எச்சரிக்கை...

(புகைப்படம்;- சமூக வளையத்தளத்தில் பகிரப்பட்டு வரும் காணொளிகளில் இருந்து பெறப்பட்டமையாகும்.)

கல்லூரி ஸ்தாபகர் மர்ஹூம் அல்ஹாஜ் AHLM Saleem அவர்களின் பேத்தி எனக் கூறிக் கொண்டு ஊளையிட்டு ஊழியர்களுக்கு ஆடம்பரம் காட்டித் திரியும் Zanfara விற்கும் அப்பா நிறுவிய கல்லூரியை தினமும் கனவில் காண்பதாக கூறிக் கொண்டு நாடு முழுவதும் மேடை போட்டு உரை நிகழ்த்தித் திரியும் மர்ஹூம் அல்ஹாஜ் Abhul Hassan அவர்களின் பேத்திக்குமான எமது அறிவித்தல்...

எமது கல்லூரியை ஆரம்பித்து வைத்த ஸ்தாபகர்களான மர்ஹூம்களான அல்ஹாஜ் AHLM Saleem மற்றும் அல்ஹாஜ் Abhul Hassan ஆகியவர்களின் மகத்தான சேவைகளுக்கு நாம் மதிப்பளிக்கின்றது மட்டுமன்றி அவர்களது சேவைகள் தொடர்பில் எமது மனதில் அவர்களுக்கு ஒரு அலாதியான இடமுன்று.

ஆனால் அவரின் பின் தொடர்ந்தும் அவர்களது வாரிசுகள் ஒரு சிலரின் செயற்பாடுகளை நாம் ஒரு போதும் அங்கீகரிப்பதில்லை என்பதை நாம் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

கடந்த சில நாட்களுக்கு முன் எமது கல்லூரியை சீரழிக்கும் வகையில் Thihariya Laphson Reciption Hall இல் இடம்பெற்ற கூட்டத்திற்கு மேடை ஏறி ஆதரவளித்த Abhul Hassan ஹாஜியாரின் பேத்தியொன்று எனக் கூறிக்கொள்ளும் பெண்ணாக இருந்தாலும் சரி, கல்லூரியில் கல்வி புகட்டும் Saleem ஹாஜியாரின் உறவுமுறை பேத்தியொன்றான Zanfarah'வாக இருந்தாலும் சரி எல்லோருக்கும் நாங்கள் கட்டம் கட்டமாக பாடம் புகட்டத் தயார்.

நாங்கள் களத்தில் இறங்கி இருப்பது கல்லூரியை பாதுகாப்பதற்காகவே தவிர உங்களது மமதைக்கு உறமிடுவதற்கு அல்ல. நீங்கள் இருவரும் இரவில் காணும் கனவுகளை நனவாக்க வேறு இடமொன்றை பார்த்தால் நன்றாக இருக்கும் என நாங்கள் நினைக்கின்றோம்.

- MLAC Muslima'h

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் ஒழுக்காற்றுக் குழு செயலாளராக SM.ஜெஸீல் ஆசிரியர் மீண்டும் இணைந்தார்(NM.முஹமட் ஸாலிஹ் )எமத...
06/07/2023

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் ஒழுக்காற்றுக் குழு செயலாளராக SM.ஜெஸீல் ஆசிரியர் மீண்டும் இணைந்தார்

(NM.முஹமட் ஸாலிஹ் )

எமது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்த விடயங்களில் பல சவால்களை எதிர் கொண்டு வெற்றி கண்டவர்.

தனது ஊர் பாடசாலை என்ற மிகுந்த கரிசனையில் பாடசாலையை திறம்பட நடாத்திச்செல்ல நிர்வாகத்திற்கு தோளோடு தோள் நின்றவர்.

இறக்காமம் அல்-அஷ்ரப் தேசிய பாடசாலையில் இருந்து இதுவரை காலமும் தற்காலிக இணைப்பில் எமது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கடமையாற்றி வந்த சோபர் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் உடற்கல்வி ஆசிரியர் SM.ஜெஸீல் அவரகள் அடடாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு நிரந்தர இடமாற்றம் பெற்று இன்று 06/07/2023 அதிபர் ACM.ஹரிஸ் சேர் அவர்கள் முன்னிலையில் முறைப்படி கையொப்பமிட்டார்.

இவரது வருகை எமது பாடசாலையை திறம்பட கொண்டு செல்ல மேலும் பலம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை என்பதுடன் தொடர்ந்தும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் ஒழுக்காற்றுக் குழு செயலாளராக SM.ஜெஸீல் சேர் அவர்களே கடமையாற்றவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காவத்தமுனை அல் அமீனில் பிரியாவிடையும் ஆசிரியர் கௌரவிப்பும்(செய்னுதீன் மீராசாகிப்) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்...
22/12/2022

காவத்தமுனை அல் அமீனில் பிரியாவிடையும் ஆசிரியர் கௌரவிப்பும்

(செய்னுதீன் மீராசாகிப்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் இம்முறை (2022) உயர்தரப்பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு கடந்த 21.12.2022ம் திகதி புதன்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் முதல்வர் ABM.அலியார் அஷ்ஹரி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் MTM.றிஸ்வி (மஜீதி) (Head of the Department - Islamic Studies, EUSL) கலந்து சிறப்பித்தார்.

இதன் போது க.பொ.த உயர் தரம் கற்கும் மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியதுடன், இம்முறை உயர்தரப்பரீட்சை எழுதும் மாணவர்களும், பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான அல் அமீன் வித்தியாலய மாணவன் MI.சல்மான் பாரீஸ் அவர்களும் அதிதிகளால் கெளரவிக்கப்பட்டனர்.

அதே போல் அம்மாணவர்களுக்கு அர்ப்பணிப்புடன் கற்பித்த, மேலதிக வகுப்புக்களை நடாத்திய ஆசிரியர்களுக்கும் மாணவர்களினால் நினைவுச்சின்னங்களும், பரிசில்களும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டன.

நிகழ்வில் சிறப்பதிதிகளாக பாடசாலையின் பகுதித்தலைவர்கள் உட்பட ஏனைய ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

உயர்தரப்பரீட்சையை எதிர்நோக்கியுள்ள மாணவர்களாகிய நீங்கள் நல்ல முறையில் பரீட்சையை எதிர்கொண்டு சிறந்த பெறுபேறுகளைப்பெற்று கற்ற பாடசாலை, கற்பித்த ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பிரதேசத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்துவதோடு, உங்கள் அனைவரதும் எதிர்காலம் சிறக்க பிரார்த்திக்கிறோம்.

சாய்ந்தமருது சற்குரு இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் மௌலித் மஜ்லிஸ் தமாமும், கந்தூரி நிகழ்வும்.நூருல் ஹுதா உமர் கண்மணி நாய...
11/10/2022

சாய்ந்தமருது சற்குரு இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் மௌலித் மஜ்லிஸ் தமாமும், கந்தூரி நிகழ்வும்.

நூருல் ஹுதா உமர்

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு வருடா வருடம் , சாய்ந்தமருது சற்குரு மகாம் ஷாவியதுல் வாஹிதிய்யா வ ஹல்லாஜியாவில் நடைபெறும் மௌலித் மஜ்லிஸ் தாமும், கந்தூரி நிகழ்வும் இம்முறையும் 2022/10/09 ஆம் திகதி அன்று சாய்ந்தமருது சற்குரு இளைஞர் பேரவை தலைவர் எம்.எச்.எம்.றஸான் தலைமையில் சாய்ந்தமருதில் நடைபெற்றது.

இன் நிகழ்வுகள் அனைத்தும் அஸ்ஷேஹ், அஸ்ஸெய்யித் கலீபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் இப்னு அப்துல் சமத் ஆலிம் மக்கத்தார் வாப்பா (காதிரி,ரிபாயி, நக்ஸபந்தி, ஜிஸ்தி, ஜதரூசி, ஸூபி) அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது சற்குரு இளைஞர் பேரவை செயலாளர் ஏ.எம்.அஸ்பான் (அல்-கெளஸி) பொருளாளர் எம்.எம். முஸ்ரிப், உறுப்பினர்கள், சற்குரு மகாமின் முக்கியஸ்தர்கள், நிர்வாகிகள், மற்றும் அறிஞர் சித்தி லெப்பை ஆய்வு மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி அஸ்ஸெய்யித் மர்சூம் மெளலானா, அஸ்ஸெய்யித் யஹ்யா மெளலானா (ஸபீதிய்), அல்-வகிதிய்யா அரபுக் கல்லுரி தலைவர் எம்.எம்.சப்ராஸ் மன்சூர், செலக்ஸஷன் கோல்ட் கவுஸ் உரிமையாளர் ஏ.எல்.அன்வர் சதாத், என பலரும் கலந்து கொண்டனர்.

கோவிட் அழிவை விட முந்தியடிக்கும் கோத்தாவின் அழிவுகள்  (எஸ் எம் சப்றீன்) இலங்கைக்கு இனி இரண்டாவது வாய்ப்பு கிடையாது என்று...
23/09/2022

கோவிட் அழிவை விட முந்தியடிக்கும் கோத்தாவின் அழிவுகள்

(எஸ் எம் சப்றீன்)

இலங்கைக்கு இனி இரண்டாவது வாய்ப்பு கிடையாது என்று மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார் இதற்கு பின்னால் புதைந்து கிடக்கும் காரணங்கள் தான் என்ன?

இலங்கை நாடு உயிர்வாழ
கடைசி வாய்ப்பு பலியலும்,கஞ்சா உற்பத்தியும் அதாவது மானம் ரோசம் சூடு சொரண எதுவுமில்லாத பிரஜைகளாக மாறப்போகும் மக்களே அவதானம்!

விபச்சாரம் போதை போன்ற உக்திகளை கையாளப்போகும் புதிய மடத்தனமான முயற்சிகள் அரங்கேரப்போகுது அதாவது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கடைசி வாய்ப்பாக பயன் படுத்த போவதாக திட்டங்களை வகுத்துக்கொண்டுருக்கும் ரகசிய ஒப்பந்தங்கள் நிறைவேற்ற பல முயற்சிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

இலங்கை நாட்டில் ஏன் பிறந்தோம் எனும் அருவருப்பான உணர்வுகளை மீண்டும்
மீண்டும் உணரப்போகும் மக்கள் விவசாயம் மற்றும் தேயிலை உற்பத்தி மற்றும் ஏனைய பொருளாதார உற்பத்தி முறைகள் அனைத்தும் படு தோல்வியில் முடிந்துள்ளது

இதன் காரணமாகவே IMF உதவியுடன்
நிபந்தனைக்குற்படுத்திய பல்வேறு
புதிய வகையான ரகசிய ஒப்பந்களில்
பரிந்துரைக்கப்படும் பாலியல் மற்றும் கஞ்சா உற்பத்திகளை முன்னெடுக்கும் திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

வெறுக்கப்பட்டதும் தடுக்கப்பட்டதும்
முகம் சுளிக்கப்பட்டதையும் நம்புவது கலாச்சார சீர்கேட்டையும் சட்ட-ஒழுங்கையுமே
பாதித்து எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையை கேள்விக் குறியாகும்
முறைகேடான திட்டங்களே உருவாக்கப்படவுள்ளது மக்களே அவதானம்❗

தாய்நாட்டுக்கு கிடைத்த இரண்டு முக்கிய வெற்றிகள்  வரலாற்றுப் பொக்கிஷமாகபுதிய சாதனைகள் பதியபடுகிறது... 😍😍😍வாழ்த்துகள் ❤️🇱🇰
11/09/2022

தாய்நாட்டுக்கு கிடைத்த
இரண்டு முக்கிய வெற்றிகள்
வரலாற்றுப் பொக்கிஷமாக
புதிய சாதனைகள் பதியபடுகிறது... 😍😍😍

வாழ்த்துகள் ❤️🇱🇰

2022 ஆசிய கிண்ணத்தை கைப்பற்றும் அணி எது? PEOPLE NEWS பக்கத்தை Like, Share, Comment செய்யவும்.சரியான விடையை Comment செய்த...
10/09/2022

2022 ஆசிய கிண்ணத்தை கைப்பற்றும் அணி எது?

PEOPLE NEWS பக்கத்தை Like, Share, Comment செய்யவும்.

சரியான விடையை Comment செய்து
1000/- ரூபா ரீலோட் பரிசை வெல்லுங்கள்.

குறிப்பு:நாளை மாலை 6மணி முதல் உங்கள் விடைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.


ஜனாதிபதியுடன் ஐ.நா. சபை பிரதிநிதிகள் சந்திப்பு!ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக...
19/08/2022

ஜனாதிபதியுடன் ஐ.நா. சபை பிரதிநிதிகள்
சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பெங்கொக் அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் கார் (David Mclachlan-Karr), ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ஹெனா சிங்கர் (Hanaa Singer) மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் பிரதானி ஆண்ட்ரியாஸ் கர்பாதி (Andreas Karpati) ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் தினுக் கொலம்பகே, ஜனாதிபதியின் இளைஞர் மற்றும் நிலையான அபிவிருத்தி விவகாரப் பணிப்பாளர் ரந்துல அபேதீர ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மிஸ்பாஹூல் ஹுதா அஹதிய்யாப் பாடசாலை பரிசளிப்பு நிகழ்வு..! சாய்ந்தமருது மிஸ்பாஹூல் ஹுதா அஹதிய்யாப் பாடசாலையினால் முஹர்ரம் ...
08/08/2022

மிஸ்பாஹூல் ஹுதா அஹதிய்யாப் பாடசாலை பரிசளிப்பு நிகழ்வு..!

சாய்ந்தமருது மிஸ்பாஹூல் ஹுதா அஹதிய்யாப் பாடசாலையினால் முஹர்ரம் புதுவருடத்தினை முன்னிட்டு மாணவர்களின் கலை நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் 2022.08.07 ஞாயிறு சாய்ந்தமருது கமு/அல்- ஜலால் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மிஸ்பாஹூல் ஹுதா அஹதிய்யாப் பாடசாலையின் அதிபர், கலாசார உத்தியோகத்தர் எ.எம்.தெளபீக் (நளீமி) யின் தலைமையில், இவ் அஹதிய்யாப் பாடசாலையின் ஆசிரியர் எம்.எச்.எம்.சியாமின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்களது கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றது.

கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்த மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்வில் அதிதிகளாக கமு/ அல்-ஜலால் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.எம்.சைபுதீன் மற்றும் அப்பாடசாலையின் இஸ்லாம் பாட ஆசிரியர் மௌலவி எம்.ஐ.எம்.இத்ரீஸ் அவர்களும் சாய்ந்தமருது சமூக அமைப்பின் தலைவர் எ.சி.அன்வர், அறிவிப்பாளர் எ.றொஸான் முஹம்மட் உள்ளிட்ட
சாய்ந்தமருது மிஸ்பாஹூல் ஹுதா அஹதிய்யாப் பாடசாலையின் ஆசிரிய ஆசிரியைகள் என பலரும் கலந்து கொண்டனர்.

08/08/2022

💔🚦🔴மிகக் கொடூரமாக தாக்கப்படும்
ஒரு மனிதனும் தாக்கும் மனிதக்கும்பலும் வைரலாக இச்சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன
நீங்களும் இப்படியான சூழல்களை சந்திக்கலாம் மிகவும் அவதானமாகவும் நிதானமாவும் செயற்படுதலே இன்றைய விழிப்புணர்வு மக்களே❗

இன்று அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் இரத்த தானம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.நான்கு அமைப்புகளின் உதவியுடன் ஏற்பாடு செய...
07/08/2022

இன்று அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் இரத்த தானம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

நான்கு அமைப்புகளின் உதவியுடன்
ஏற்பாடு செய்த இரத்த தான நிகழ்வானது
இளைஞராகிய நாங்கள் இன மத மொழி
வேறுபாடுகள் கடந்து உதிரம் கொடுத்து வன்முறைத் தீவிரவதத்தை தவிர்ப்போம்.

நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கழக வீரர்கள் என பலரும் கலந்து கொண்ட இன் நிகழ்வில் வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் தங்களது சேவையினை செப்பனே செய்தனர்.

22 வயது யுவதி காணாமல் போகும்போது சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தார்முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிர...
07/08/2022

22 வயது யுவதி காணாமல் போகும்போது சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

22 வயதுடைய குறித்த யுவதி வீட்டில் இருந்து காணாமல் போன போது சிவப்பு நிற சல்வார் அணிந்து சென்றிருக்கிறார்.

சிவகரன் ஜெயலக்சனா என்ற குறித்த யுவதி கடந்த 27.07.2022 முதல் காணாமல் போன நிலையில் பொலிஸ் முறைப்பாடு செய்தும் இதுவரை யுவதி கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே யுவதியை கண்டவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0760777615 , 0740961230

ஏறாவூர் பிரதேச செயலக உதைபந்தாட்ட அணியினர் (YSSC & LSSC) சம்பியனாக தெரிவுபிரதேச செயலகங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட உதைபந்த...
07/08/2022

ஏறாவூர் பிரதேச செயலக உதைபந்தாட்ட அணியினர் (YSSC & LSSC) சம்பியனாக தெரிவு

பிரதேச செயலகங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட உதைபந்தாட்ட போட்டியில் ஏறாவூர் பிரதேச செயலக உதைபந்தாட்ட அணியினர் (YSSC&LSSC) சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற மட்டக்களப்பு (Manmunai North) தெரிவு அணியுடனான இறுதிப்போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் (YSSC&LSSC) சம்பியனாக
வெற்றிபெற்று கழகத்திற்கும் ஊருக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Goal Scorers- Akeel 1 , Muksith Ahamed 1 , Ahtheer Mohamed 1

அனர்த்தங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்புவெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை  அனர்த்தங்கள் தொ...
06/08/2022

அனர்த்தங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விடுக்கப்படும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அனர்த்தங்கள் நிகழுமாயின் அதுபற்றி துரித தொலை பேசி இலக்கத்தின் ஊடாக நிலையத்திற்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

துரித தொலைபேசி இலக்கம் 117 என்பதாகும்.

10 மாவட்டங்களைச் சேரந்த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

04/08/2022

⭕சீனா இந்தியா ஆரம்பித்து வைக்கும்
இலங்கையை❌ஆக்கிரமிக்கும்
மூன்றாம் உலகப்போர்🚢

தாய்வானை சுற்றி ஏவுகணை வீச்சு நடத்தும் சீனா!

தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனைகாலி முகத்திடல் போராட்டத்தில் செயற்பாட்டாளராக பணியாற்றிய தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை விதிக்கப...
04/08/2022

தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை

காலி முகத்திடல் போராட்டத்தில் செயற்பாட்டாளராக பணியாற்றிய தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் இருக்கும் போது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி முன்னிலையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன்படி அவருக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளரின் (கட்டுப்பாடு, புனர்வாழ்வு) ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

நீதவான் நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி சூடுகல்கிஸ்ஸ  நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ...
04/08/2022

நீதவான் நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி சூடு

கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றவாளி கூட்டில் இருந்த ஒருவர் மீதே இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பங்குச் சந்தை - மொத்த புரள்வு 3.79 பில்லியன்!கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன...
04/08/2022

கொழும்பு பங்குச் சந்தை - மொத்த புரள்வு 3.79 பில்லியன்!

கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 8,229.14 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

அதனடிப்படையில் நாள் ஒன்றுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகபட்சமாக 149.00 ஆக இன்று பதிவாகியுள்ளது.

மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 3.79 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

✴உண்மைக்கு நிகரான
நிஜத்தின் நிழல்
நமது மக்கள் செய்திகளை
உடனுக்குடன் அறிந்து கொள்ள 👇🏻

♻️Join our PEOPLE NEWS TAMIL Updates WhatsApp Group❇️

https://chat.whatsapp.com/DCdNGP5QjnRJS7kXtZyJvu

✴உண்மைக்கு நிகரான நிஜத்தின் நிழல் நமது மக்கள் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள 👇🏻♻️Join our PEOPLE NEWS TAMIL Updates...
04/08/2022

✴உண்மைக்கு நிகரான
நிஜத்தின் நிழல்
நமது மக்கள் செய்திகளை
உடனுக்குடன் அறிந்து கொள்ள 👇🏻

♻️Join our PEOPLE NEWS TAMIL Updates WhatsApp Group❇️

https://chat.whatsapp.com/DCdNGP5QjnRJS7kXtZyJvu

WhatsApp Group Invite

ஷண்முகா கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி இரண்டரை லட்சம் பிணையில் விடுதலைதிருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து ச...
04/08/2022

ஷண்முகா கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி இரண்டரை லட்சம் பிணையில் விடுதலை

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றமைக்காக தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் அவர்கள் பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் அதிபர் லிங்கேஸ்வரி அவர்கள் இன்று இரண்டரை லட்சம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கல்வி அமைச்சின் எழுத்து மூலக் கட்டளைக்கிணங்க சென்ற பெப்ரவரி மாதம் 2ம் திகதி திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு கடமையேற்பதற்காக சென்றிருந்த பஹ்மிதா றமீஸ் அவர்கள் கடமையேற்க விடாது பல குழப்பங்களை ஏற்படுத்தி, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தனது சட்டரீதியான கடமையை செய்யத் தடுத்தமை என்ற குற்றச்சாட்டின் பெயரின் திருகோணமலை திரு ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதவன் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்றால் அனுப்பப்பட்ட அழைப்பாணையினைத் தொடர்ந்து வழக்கு இன்று (4) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதிபருக்கெதிராக குற்றச்சாட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்டது. இரு தரப்பு சட்டத்தரணிகளின் கடுமையான வாதப்பிரதி வாதங்களைத் தொடர்ந்து வழக்கு நீதிபதியினால் விசாரணைக்கு(Trial) எதிர்வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

ஆசிரியை பஹ்மிதாவுக்கு ஆதரவாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான் றதீப் அஹமட், ஹஸ்ஸான் றுஷ்தி, ஸாதிர் முகம்மட் மற்றும் எம்.எம்.ஏ.சுபாயிர் ஆகியோர் தெரிவாகி வருகின்றனர்.

குறிப்பிட்ட இவ்வழக்கில் அதிபர் லிங்கேஸ்வரி அவர்களை நீதிமன்று குற்றவாளியாகக் காணூமிடத்து இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவை பிரிவுகள் 183 மற்றும் 184 இன் கீழ் சிறைத்தண்டனை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷண்முஹா ஹபாயா விவகாரத்தில் ஆரம்பம் தொட்டு குரல்கள் இயக்கம் பாதிக்கப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றது.

✴உண்மைக்கு நிகரான
நிஜத்தின் நிழல்
நமது மக்கள் செய்திகளை
உடனுக்குடன் அறிந்து கொள்ள 👇🏻

♻️Join our PEOPLE NEWS TAMIL Updates WhatsApp Group❇️

https://chat.whatsapp.com/DCdNGP5QjnRJS7kXtZyJvu

04/08/2022

⭕ஜனாதிபதி ரணிலின் உரையும்
பழைய சோறும் பச்சை மிளகாயும்
சர்வகட்சியால் மீளுமா இலங்கை?

🇱🇰 ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதியினால் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வுக்கான அனைத்து ...
02/08/2022

🇱🇰 ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதியினால் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

⭕ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் நாளை (3) மு.ப 10.30 மணிக்கு முன்வைக்கப்படும்...

⭕மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல், வாகனத் தொடரணி இடம்பெறாது...

⭕முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு இடம்பெறும்...

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படும் நிகழ்வுக்கான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் இன்று (02) நடைபெற்றது. முப்படையினர் மற்றும் பொலிஸார், கொழும்பு தேவிபாலிகா வித்தியாலய மாணவியர் உள்ளிட்ட பலர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர்.

அத்துடன், அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாளை (03) மு.ப 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார். இதற்கு முன்னர் பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் கௌரவ ஜனாதிபதி தலைமையில் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படும்.

ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.

எனினும், ஜனாதிபதியை வரவேற்பதற்காக பாராளுமன்ற முன்றலில் முப்படையினரும் ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதையளிக்கவுள்ளனர். இதன்போது ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது என்பதுடன், தேசியக் கொடி மாத்திரம் ஏற்றிவைக்கப்படும்.

நாளை (03) மு.ப 09.30 மணிக்கு விசேட விருந்தினர்களின் வருகை இடம்பெறவிருப்பதுடன், இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலில் வருகை தருவர்.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் வருகையும், அதன் பின்னர் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் வருகையும், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் வருகையும் இடம்பெறும்.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்பார்கள்.

இங்கு முப்படையினர் ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல கௌரவ சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி பாராளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்.

பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே கொழும்பு தேவிபாலிகா வித்தியாலய மாணவியர் ஜயமங்கல கீதம் இசைக்கவுள்ளனர்.

இதன் பின்னர் உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள ஜனாதிபதி அவர்கள் மு.ப 10.25 மணிவரை அங்கிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து பாராம்பரியத்துக்கு அமையப் பிரதிப் படைக்கல சேவிதர், செங்கோலைக் கையில் தாங்கியவாறு படைக்கல சேவிதர், ஜனாதிபதி, சபாநாயகர், செயலாளர் குழு மற்றும் உதவிப் படைக்கல சேவிதர் என்ற வரிசைப்படி அணிவகுத்து சபா மண்டபத்துக்குள் செல்வர். சபைக்குள் நுழையும்போது உதவி படைக்கல சேவிதர் ‘கௌரவ ஜனாதிபதி’ எனத் தெரிவித்ததும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நிற்பது பாரம்பரியமாக இடம்பெறும்.

சபா மண்டபத்துக்கு அழைத்துவரப்படும் ஜனாதிபதி அங்கிராசனத்தில் அமர்ந்து சபைக்குத் தலைமை தாங்குவார். இம்முறை ஜனாதிபதியின் ஆசனத்தில் ஜனாதிபதியுடைய இலட்சினைக்குப் பதிலாக அரசாங்கத்தின் இலட்சினை பொருத்தப்பட்டிருப்பது விசேட அம்சமாகும். இதன்போது சபாநாயகர், பாராளுமன்ற குழுநிலையின்போது அமரும் கீழ் பகுதியிலுள்ள ஆசனத்தில் செயலாளர் குழுவுடன் அமர்ந்திருப்பார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்பட்டு, சபை ஒத்திவைக்கப்படும். சபை ஒத்திவைக்கப்பட்டதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முதற்பெண்மணி ஆகியோர் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறும்போதும் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றி நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

02/08/2022

🔴AUG 09யின் தொடர்பாக
CID இன் முக்கிய தகவல் வெள்ளை பேனில்
கடத்தபடும் ஆர்ப்பாட்டகாரர்கள்

01/08/2022

😍உங்க வாழ்கை எந்த நிமிசத்திலையும் மாறலாம் அந்த நிமிசம் இந்த நிமிசமாகவும் இருக்கலாம்.

மஹிந்தவுக்கு சாணக்கியனுக்கும் தொடர்பு - உண்மையை சொன்ன எம்.ஏ.சுமந்திரன் எம்.பி பாறுக் ஷிஹான்மஹிந்தவின் பக்கத்தில் இன்னும்...
01/08/2022

மஹிந்தவுக்கு சாணக்கியனுக்கும் தொடர்பு - உண்மையை சொன்ன எம்.ஏ.சுமந்திரன் எம்.பி

பாறுக் ஷிஹான்

மஹிந்தவின் பக்கத்தில் இன்னும் தொடர்புகளை சாணக்கியன் எம்.பி பேணி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

“பொருளாதார நெருக்கடியும் சமகால அரசியலும்” எனும் கருப்பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்கள் வட, கிழக்கு உட்பட பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன.

அதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை (31) அம்பாறை மாவட்டம் காரைதீவு கலாசார மண்டபத்தில் காரைதீவு பிரதேச சபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது,

நாட்டில் என்ன நடக்கிறதென்பது மக்களுக்கு தெரியும். நாட்டில் போராட்டம் ஆரம்பமாகிய போது ராஜபக்ச குடும்பத்தில் ஒருவர் கூறியதாக திரு சாணக்கியனுக்கும் எனக்கும் ஒரு செய்தி வந்தது.

அவர் என்ன கூறினார். அதாவது, இப்போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் எம்மிடம் ஒரு திட்டமுள்ளதாக எமக்குத் தெரிவித்தார்.

அத்திட்டமானது ரணில் விக்கிரமசிங்கவிடம் பதவியை வழங்குவோம். அவர் அதைப்பத்திரமாக வைத்திருந்து எம்மிடம் திருப்பித் தருவார்.

இவ்விடயம் மஹிந்த ராஜபக்ஸ இராஜிநாமா செய்வதற்கு 3 கிழமைக்குள் எமக்கு கிடைத்த தகவலாகும்.

சாணக்கியனுக்கு தான் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. சாணக்கியனே எனக்கு சொன்னார். அவருக்கு (சாணக்கியன்) அந்த பக்கத்தில் இன்னும் தொடர்புகள் இருக்கின்றது. அத்தொடர்பு நன்மைக்காகவே இருக்கின்றது. இவ்விடயங்கள் குறித்து எமது கட்சி கூட்டத்திலும் நான் தெரிவித்துள்ளேன் என்றார்.

இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், தவராசா கலையரசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியதுடன், சமகால அரசியல் போக்கு, 8வது ஜனாதிபதி தெரிவும் கூட்டமைப்பின் வாக்களிப்பு தீர்மானம் பற்றிய தெளிவுபடுத்தல்களை வழங்கினர்.

இறப்பையும் மிஞ்சிய பெரும் ஆசை நீ(பாலமுனை றிஸ்வான்)அன்புள்ள மகளுக்கு எம் பாசப்பிணைப்புகளின் உருவம் நீஎம் ஆசைக் கனவுகளின் ...
31/07/2022

இறப்பையும் மிஞ்சிய பெரும் ஆசை நீ

(பாலமுனை றிஸ்வான்)

அன்புள்ள மகளுக்கு

எம் பாசப்பிணைப்புகளின் உருவம் நீ
எம் ஆசைக் கனவுகளின் வடிவம் நீ

துல் ஹஜ்ஜின் பிறை ஒன்பதில் எங்களுக்கு இறைவன் கொடுத்த பெரும் பரிசு நீ..
உன்னை சுமந்த காலங்களில் உனது தாய் அளவற்ற வேதனையை அனுபவித்திருக்கிறாள்.
மகளே உனது வாழ் நாளில் ஒரு போதும் ஒரு சிறிய அளவிலான வேதனையையோ அல்லது வேதனை தரும் வலியையோ அவளுக்கு கொடுத்து விடாதே..
அவள் உன்னை அதிகமதிகம் நேசிக்கிறாள் உன்னை ஈன்றதன் பின் அந்த வலிகளையும் அவள் உடலில் ஏற்பட்ட மாறுதல்களையும் பற்றி ஒரு போதும் அவள் கவலைப்பட்டது கிடையாது..
மகளே உன்னை ஈன்றதன் பின் இறந்து விடுவோமோ என்ற பயம் கூட அவளுக்கு இருந்ததில்லை..
ஏனெனில் இறப்பையும் மிஞ்சிய பெரும் ஆசை நீ

மகளே தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கம் உண்டு என்பதை ஒரு போதும் மறவாதே..
இப்போது நீ பேசுவதையும் நடப்பதையும் உண்பதையும் உன் அசைவுகள் ஒவ்வொன்றையும் ரசித்துச் சிரித்துக் கொண்டிருப்பவள் அவள்தான்.
நீதான் அவளது ஆனந்தம்
ஒரு போதும் அவளை கடிந்து விடாதே..

உனது தாய் உன்னை நன்னெறிப்படுத்துவதில் பெரு விருப்பம் கொண்டவள். அவளது மகிழ்வுக் குட்டைக்குள் அடங்கிய பெரும் சமுத்திரம் நீ.. உன் எல்லை மீறுதலை கண்டுகொள்வாள் உன் மீது கண்டிப்புகளை வீசுவாள். அதுவொன்றும் மன வெறுப்பின் கசடுகள் கிடையாது.. அவை ஆழ்ந்த அன்பின் ஆணிவேர்..
மகளே மார்க்க விழுமியங்களை கடைப்பிடிக்க வேண்டும் இறை போதனைப்படி உன்னை வளர்க்க வேண்டும் என்பது அவளது பெரும் எதிர்பார்ப்பு எனக்கு நம்பிக்கை உண்டு உனது தாய் உன்னை நன்றாக நெறிப்படுத்துவாள் நீயும் அவளை நன்றாக கவனிப்பாய்..

மகளே மார்க்கப் புத்தகத்தை நன்றாக படிக்க வேண்டும் அதன் படி உனது வாழ்வை கழிக்க வேண்டும். நமது மார்க்கம் எமது வாழ்க்கைக்கான வாழ்வியல் புத்தகத்தை தந்திருக்கிறது. இறைவன் மீதான நம்பிக்கையை ஒருபோதும் இழந்து விடாதே

இப்படிக்கு
நேசமுள்ள அப்பா

இறைவன் போதுமானவன்

Address

Government Teaching College
Addalachenai

Website

Alerts

Be the first to know and let us send you an email when People news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Addalachenai

Show All