TMMK MEDIA

TMMK MEDIA this page was TMMK MMK page this page was trichy tmmk mmk .media page

மலைக்கோட்டை மாநகரில் மமக-வின் விழா.மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொடர்ந்து கிழக்கு மாவட்ட தலைவர் M....
27/01/2025

மலைக்கோட்டை மாநகரில்
மமக-வின் விழா.

மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொடர்ந்து கிழக்கு மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையில் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

மமக மாவட்ட செயலாளர் A. அஷ்ரப் அலி,தமுமுக மாவட்ட செயலாளர் A.இலியாஸ் மற்றும் மாவட்ட பொருளாளர் M.A. காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி-யின் 17ஆம் ஆண்டு தொடக்கத்தை தொடர்ந்து பிப்ரவரி 07 ஆம் தேதி முதல் திருச்சி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிளைகள் அனைத்திலும் இரத்த தானம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்,கட்சியின் சாதனைகளை கொண்டு பேனர்கள்,கல்வி உதவி,முதியோர் மற்றும் பார்வையற்றோர் இல்லங்களுக்கு உணவளித்தல்,பொதுக்கூட்டங்கள் என பலதரபட்ட நிகழ்வுகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் ஒருங்கிணைத்து நடத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை,அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றனர்.

சட்டமேதையை அவமதித்த அமித்ஷாவை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.மனிதநேய மக்கள் கட்சி  திருச்சி மாவட்டம் சார்பாக ...
20/12/2024

சட்டமேதையை அவமதித்த அமித்ஷாவை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவமதித்து பேசிய அமித்ஷாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்டம் தபால் நிலையம் அருகில்மேற்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமையில் கிழக்கு மாவட்ட தலைவர் M.A.முகமதுராஜா முன்னிலையில் நடைபெற்றது.

மாநில தலைமை கழக பேச்சாளர் கோவை சையது மாநில இஸ்லாமிய பிரச்சார பேரவை துணைச் செயலாளர் முஹம்மது ரபிக் மற்றும் மகளிர் அணி மாநில பொருளாளர் ஷான்ராணி ஆலிமா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளர்கள் அஷ்ரப் அலி,இலியாஸ் மேற்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் மேற்கு மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் சமூக நீதி மாணவர் இயக்க மாநில துணைச் செயலாளர் ஆபீஸ் கான் ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இப் போராட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட துணை அணி பகுதி கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

#அம்பேத்கர்

திருச்சி துவாக்குடி காவல் நிலையம் முற்றுகை..செப்டம்பர் 16 அன்று மக்களின் குரலாக மனிதநேய மக்கள் கட்சி நடத்திய சுங்கச்சாவட...
17/09/2024

திருச்சி துவாக்குடி காவல் நிலையம் முற்றுகை..

செப்டம்பர் 16 அன்று மக்களின் குரலாக மனிதநேய மக்கள் கட்சி நடத்திய சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் நிர்வாகிகள் மீது பல பொய் வழக்குகளுடன் சேர்த்து திருடியதாக வழக்கு பதிவு செய்த காவல் நிலைய அதிகாரிகளை கண்டித்து மாபெரும் முற்றுகை.

அனைத்து மாவட்ட,நகர,பேரூர்,கிளை கழக நிர்வாகிகள் தாயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்துகிறது.

திருச்சி கிழக்கு மாவட்டம்.

மலைக்கோட்டை மாநகரில் இளைஞர்களின் எழுச்சி...!!!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு ...
18/08/2024

மலைக்கோட்டை மாநகரில் இளைஞர்களின் எழுச்சி...!!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டத்தில் சமூகம் மற்றும் அரசியல் பணிகளால் கவரப்பட்டு சமஸ்பிரான் தெரு,காமராஜ் நகர்,காட்டூர் கிளையை சார்ந்த இளைஞர்கள் தன்னெழுச்சியாக மாவட்ட தலைவர் M.Aமுஹம்மது ராஜா தலைமையில்

மாநிலத் தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா MLA, பொதுச் செயலாளர் ப.அப்துல் சமத் MLA மற்றும் மாநில பொருளாளர் பொறியாளர் சபியுல்லாகான் மற்றும் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி முன்னிலையில் இளைஞர்கள் தமுமுக,மமகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மாநில து.பொதுச்செயலாளர் தஞ்சை பாதுஷா,மாநில அமைப்பு செயலாளர் புழல் ஷேக், மாவட்டத் துணைத் தலைவர் முஸ்தபா, மாவட்ட துணை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ்,மாவட்ட விளையாட்டு அணி செயலாளர் இப்ராஹிம், இளைஞர் அணி செயலாளர் முஜீப், மாவட்ட விழி அணி செயலாளர் ஜின்னா மற்றும் மாவட்ட துணை அணி பகுதி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பதிவு நாள் : 18.08.24

திருச்சியில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு..!!!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி கிழக்கு மாவட்டம் துறையூர் நகரம் சித...
17/01/2024

திருச்சியில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு..!!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி கிழக்கு மாவட்டம் துறையூர் நகரம் சித்திரைப்பட்டி கிளை சார்பாக மாவட்ட தலைவர் M.A.முஹம்மது ராஜா தலைமையில் 17.01.24) மாலை 7.00 மணிக்கு நடைபெற்றது.

தமுமுக மாவட்ட செயலாளர் A.இலியாஸ்,மமக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி,மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் மற்றும் துணை அணி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ உதவி, இரத்த தானம்,ஆம்புலன்ஸ்கள் சேவை மற்றும் கொரோனா நோய் தொற்று காலங்களிலும் பணிகள் செய்ததை அறிந்து துறையூரில் வசிக்கும் தருண்குமார் அவர்களின் தகப்பனார் T.மகாலிங்கம் Ex.Army அவர்களும் அவர்கள் குடும்பத்தார்களும் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறுவதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திடம் ஆம்புலன்சை வழங்கினார்கள்.அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துறையூர் சித்திரை பட்டி கிளையில்மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமத் MLA அவர்கள் அனைத்து சமுதாய மக்களும் பயன் பெறுவதற்காக ஆம்புலன்ஸை அர்ப்பணித்து சிறப்புரை ஆற்றினார்.

மேலும் மாநில துணை பொதுச் செயலாளர் தஞ்சை பாதுஷா,தலைமை கழக பேச்சாளர் முகமது ரபீக்,மாநில செயற்குழு உறுப்பினர் ஃபாருக் மஹாராஜா சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்வில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார்,ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகள் உட்பட துணை,அணி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மலைக்கோட்டை மாநகரின் செயல்வீரர்கள் கூட்டம்...!!!தமுமுக,மமக திருச்சி கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மா...
10/10/2023

மலைக்கோட்டை மாநகரின் செயல்வீரர்கள் கூட்டம்...!!!

தமுமுக,மமக திருச்சி கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தமுமுக மாவட்ட செயலாளர் இலியாஸ்,மமக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் N. சபியுல்லா கான்,மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் MC,திருச்சி மாவட்ட பொறுப்பாளரும்,மாநில து.பொதுச் செயலாளருமான தஞ்சை பாதுஷா,தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெய்னுளாபுதீன் தலைமை கழக பேச்சாளர் முகமது ரபீக் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.

மேலும் இந்நிகழ்வில் மாநில துணை நிர்வாகிகள்,மாவட்ட துணை, அணி நிர்வாகிகள்,கிளை கழக நிர்வாகிகள் உட்பட உறுப்பினர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.

TMMK MEDIA official group

இறைவன் நாடினால்...!!!திருச்சி (கி) மாவட்டம் சார்பாக இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இடம் ...
10/10/2023

இறைவன் நாடினால்...!!!

திருச்சி (கி) மாவட்டம் சார்பாக இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

இடம் : சுமங்கலி மஹால்,மதுரை ரோடு.நத்தர்ஷா பள்ளிவாசல் அருகில்,திருச்சி

மணிப்பூர் வன்கொடுமைக்காக மலைக்கோட்டை மாநகரில் ஆர்ப்பாட்டம்..!!!மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக மணிப்பூரில...
22/07/2023

மணிப்பூர் வன்கொடுமைக்காக மலைக்கோட்டை மாநகரில் ஆர்ப்பாட்டம்..!!!

மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக மணிப்பூரில் நடைபெற்ற பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு வன்கொடுமைக்கு எதிராக பிரதமர் மோடி வாய் திறக்காததை கண்டித்து திருச்சி பாலக்கரை பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை கிழக்கு மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா, மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அஹமது MC ஆகியோர் தலைமை தாங்கினார்.

மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது MLA, திராவிட இயக்க பேச்சாளர் வே.மதிமாறன், தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை மாநில பொருளாளர் ஷான்ரானி ஆலிமா, ஏ ஐ டி யூ சி பொதுச் செயலாளர் கே.சுரேஷ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் துணை அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

அநீதிக்கு எதிராய் ஆர்ப்பரித்த தமுமுக...!!!திருச்சி மேற்கு மாவட்டம் உறையூர் பகுதியில் மமக கொடி கம்பங்களை அகற்றிய காவல் து...
13/02/2023

அநீதிக்கு எதிராய் ஆர்ப்பரித்த தமுமுக...!!!

திருச்சி மேற்கு மாவட்டம் உறையூர் பகுதியில் மமக கொடி கம்பங்களை அகற்றிய காவல் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகிகளை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது.

கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தமுமுக,மமக நிர்வாகிகள் கலந்து கொண்டு அகற்றிய கொடி கம்பங்களை அகற்றிய இடத்திலேயே அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையின் பெயரில் கொடி கம்பங்களை அமைத்து தருவோம் என உறுதியாக கூறிய நிலையில் மறியல் முடித்து களைந்தனர்.

எல்லா புகழும் இறைவனுக்கே....!!!

தமுமுக சார்பாக காவல் துறைக்கு நன்றிகள்..!!!திருச்சி சுற்றுலாத்தலமான நத்தர்ஷா  பள்ளிவாசல்(தர்கா) பகுதியில் டீ கடை மற்றும்...
04/02/2023

தமுமுக சார்பாக காவல் துறைக்கு நன்றிகள்..!!!

திருச்சி சுற்றுலாத்தலமான நத்தர்ஷா பள்ளிவாசல்(தர்கா) பகுதியில் டீ கடை மற்றும் உணவகங்களை இரவு 10மணிக்கு அடைக்க கூறி ஒரு வாரமாக காவல் துறை அதிகாரிகள் கெடிபுடியாக நடந்துகொண்டார்.

இதை தொடர்ந்து தமுமுக, மமக கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி,மாவட்ட பொருளாளர் காஜா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இரவு நேரங்களில் கடைகளை நடத்த அனுமதி கோரினர்.

கோரிக்கையை ஏற்று இரவு 12மணி வரை கடைகளை திறந்து வைக்க அனுமதி அளித்த மாநகர காவல் ஆணையர்,உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் கோட்டை காவல் நிலைய காவளர்களுக்கும் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

 #காவல்துறை_அத்துமீறல்களத்தில் மாவட்ட நிர்வாகிகள்.திருச்சி சுற்றுலா தலமான நத்தர்ஷா பள்ளிவாசல் (தர்கா) பகுதியில் உள்ள இரவ...
03/02/2023

#காவல்துறை_அத்துமீறல்

களத்தில் மாவட்ட நிர்வாகிகள்.

திருச்சி சுற்றுலா தலமான நத்தர்ஷா பள்ளிவாசல் (தர்கா) பகுதியில் உள்ள இரவு நேர ஹோட்டல் மற்றும் மளிகை கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் இரவு 10:30 மணி அளவில் அடைக்க கூறி பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் காவல்துறை பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகிறார்கள்.

மேலும் அப்பகுதியை சார்ந்த மக்கள் நின்று கொண்டிருந்தால் தகாத வார்த்தைகளை கூறி வீட்டுக்கு செல்லும்படி கூறுகிறார்கள்
மேலும் நத்தர்ஷா தர்காவிற்கு கேரளா,கர்நாடகா,ஆந்திரா மாநிலத்தில் இருந்து வருகை தருபவர்களும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இந்நிகழ்வு குறித்து தமுமுக
மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையில் மாவட்ட நிர்வாகிகள்,பொதுமக்கள் இணைந்து காவல்துறை ஆய்வாளர் அவர்களை சந்தித்து பொதுமக்களும் தர்காவிற்கு வெளியூரில் இருந்து வருகை தரும் மக்கள்களும் பயன்பெறும் வகையில் உடனடியாக இரவு நேர கடையை அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!!!தமுமுக, மமக திருச்சி(கி)மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையிலும...
13/01/2023

கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!!!

தமுமுக, மமக திருச்சி(கி)மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையிலும்
தமுமுக மாவட்ட செயலாளர் இலியாஸ்,மாவட்ட பொருளாளர் காஜா மைதீன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு சாவடி உறுப்பினர்கள் பகுதி வாரியாக படிவம் கொடுத்து முகவர்கள் பதிவு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட,துணை,அணி மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

மாவட்ட ஆலோசனை கூட்டம்...!!!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி(கி)மாவட்டத்தின் மாவட்ட ஆலோ...
25/11/2022

மாவட்ட ஆலோசனை கூட்டம்...!!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி
திருச்சி(கி)மாவட்டத்தின் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையிலும் தமுமுக மாவட்ட செயலாளர் இலியாஸ், மமக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் டிசம்பர் 6 பணிகள் குறித்து ஆலோசிக்க பட்டது.

மேலும் மாவட்ட துணை,அணி நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாலக்கரை கிளை சார்பாக தெருமுனை கூட்டம்...!!!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சிதிருச்சி(கி)மாவட்டம் ...
25/11/2022

பாலக்கரை கிளை சார்பாக
தெருமுனை கூட்டம்...!!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி
திருச்சி(கி)மாவட்டம் பாலக்கரை கிளை சார்பாக தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழகப் பேச்சாளர்கள் முகமது ரபீக்,இம்ரான் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் முகமது ராஜா,மாவட்ட செயலாளர்கள்,துணை,அணி,பகுதி,கிளை நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

MTS புதிய கிளை திறப்பு...!!!மனிதநேய மக்கள் கட்சியின் தொழிலாளர் பிரிவான #மனிதநேய_தொழிலாளர்கள்_சங்கம் திருச்சி கிழக்கு மாவ...
23/11/2022

MTS புதிய கிளை திறப்பு...!!!

மனிதநேய மக்கள் கட்சியின் தொழிலாளர் பிரிவான
#மனிதநேய_தொழிலாளர்கள்_சங்கம்
திருச்சி கிழக்கு மாவட்டம் திருவரம்பூர் பகுதி காமராஜ் நகர் கிளையில் புதிய ஆட்டோ ஸ்டாண்டு
மமக மாவட்ட தலைவர் முகமது ராஜா மற்றும் மமக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி ஆகியோர் தலைமையிலும் MTS மாவட்ட செயலாளர் சபியுல்லா மற்றும் மாவட்ட பொருளாளர் ஜாவித் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மமக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமத் MLA அவர்கள் கலந்து கொண்டு புதிய ஆட்டோ ஸ்டாண்டை திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள்,அணி நிர்வாகிகள்,பகுதி,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சிதிருச்சி கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை ...
18/11/2022

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி
திருச்சி கிழக்கு மாவட்டத்தின்
மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுலகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள்,துணை,அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

நவம்பர் 23ஆம் தேதி செயல்வீரர்கள் கூட்டம் நடத்தவும்...
டிசம்பர் 6 சம்பந்தமான பேனர்கள், நோட்டீஸ்கள் சுவரொட்டிகள் என அதிகப்படியான விளம்பரங்களை செய்ய கிளைகளுக்கு வலியுறுத்தவும் தீர்மானம் செய்யப்பட்டது...

பதிவு நாள் (18/11/22)

திருச்சி கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்...!!!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்ட ...
25/09/2022

திருச்சி கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்...!!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் (25/9/2022) மாலை 6 மணி அளவில் ராசி மஹாலில் நடைபெற்றது.

மாவட்டத்தின் தேர்தல் பொறுப்பாளரான தமுமுக மாநில செயலாளர் மைதீன் சேட் கான் அவர்களால் தேர்தல் நடத்தப்பட்டு புதிய மாவட்ட தலைமை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் மமக பொதுச் செயலாளருமான
ப.அப்துல்சமது MLA அவர்கள், மாநில பொருளாளர் சபியுல்லாகான் அவர்களும்,திருச்சி மேற்கு மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் ஒன்றியம்,பேரூராட்சி,நகராட்சி,பகுதி,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

Address

PALAKKARAI
Villupuram
620008

Telephone

+919025300389

Website

Alerts

Be the first to know and let us send you an email when TMMK MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share