TMMK MEDIA

TMMK MEDIA this page was TMMK MMK page this page was trichy tmmk mmk .media page

திருச்சியில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு..!!!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி கிழக்கு மாவட்டம் துறையூர் நகரம் சித...
17/01/2024

திருச்சியில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு..!!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி கிழக்கு மாவட்டம் துறையூர் நகரம் சித்திரைப்பட்டி கிளை சார்பாக மாவட்ட தலைவர் M.A.முஹம்மது ராஜா தலைமையில் 17.01.24) மாலை 7.00 மணிக்கு நடைபெற்றது.

தமுமுக மாவட்ட செயலாளர் A.இலியாஸ்,மமக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி,மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் மற்றும் துணை அணி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ உதவி, இரத்த தானம்,ஆம்புலன்ஸ்கள் சேவை மற்றும் கொரோனா நோய் தொற்று காலங்களிலும் பணிகள் செய்ததை அறிந்து துறையூரில் வசிக்கும் தருண்குமார் அவர்களின் தகப்பனார் T.மகாலிங்கம் Ex.Army அவர்களும் அவர்கள் குடும்பத்தார்களும் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறுவதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திடம் ஆம்புலன்சை வழங்கினார்கள்.அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துறையூர் சித்திரை பட்டி கிளையில்மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமத் MLA அவர்கள் அனைத்து சமுதாய மக்களும் பயன் பெறுவதற்காக ஆம்புலன்ஸை அர்ப்பணித்து சிறப்புரை ஆற்றினார்.

மேலும் மாநில துணை பொதுச் செயலாளர் தஞ்சை பாதுஷா,தலைமை கழக பேச்சாளர் முகமது ரபீக்,மாநில செயற்குழு உறுப்பினர் ஃபாருக் மஹாராஜா சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்வில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார்,ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகள் உட்பட துணை,அணி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மலைக்கோட்டை மாநகரின் செயல்வீரர்கள் கூட்டம்...!!!தமுமுக,மமக திருச்சி கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மா...
10/10/2023

மலைக்கோட்டை மாநகரின் செயல்வீரர்கள் கூட்டம்...!!!

தமுமுக,மமக திருச்சி கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தமுமுக மாவட்ட செயலாளர் இலியாஸ்,மமக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் N. சபியுல்லா கான்,மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் MC,திருச்சி மாவட்ட பொறுப்பாளரும்,மாநில து.பொதுச் செயலாளருமான தஞ்சை பாதுஷா,தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெய்னுளாபுதீன் தலைமை கழக பேச்சாளர் முகமது ரபீக் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.

மேலும் இந்நிகழ்வில் மாநில துணை நிர்வாகிகள்,மாவட்ட துணை, அணி நிர்வாகிகள்,கிளை கழக நிர்வாகிகள் உட்பட உறுப்பினர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.

TMMK MEDIA official group

இறைவன் நாடினால்...!!!திருச்சி (கி) மாவட்டம் சார்பாக இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இடம் ...
10/10/2023

இறைவன் நாடினால்...!!!

திருச்சி (கி) மாவட்டம் சார்பாக இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

இடம் : சுமங்கலி மஹால்,மதுரை ரோடு.நத்தர்ஷா பள்ளிவாசல் அருகில்,திருச்சி

மணிப்பூர் வன்கொடுமைக்காக மலைக்கோட்டை மாநகரில் ஆர்ப்பாட்டம்..!!!மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக மணிப்பூரில...
22/07/2023

மணிப்பூர் வன்கொடுமைக்காக மலைக்கோட்டை மாநகரில் ஆர்ப்பாட்டம்..!!!

மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக மணிப்பூரில் நடைபெற்ற பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு வன்கொடுமைக்கு எதிராக பிரதமர் மோடி வாய் திறக்காததை கண்டித்து திருச்சி பாலக்கரை பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை கிழக்கு மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா, மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அஹமது MC ஆகியோர் தலைமை தாங்கினார்.

மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது MLA, திராவிட இயக்க பேச்சாளர் வே.மதிமாறன், தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை மாநில பொருளாளர் ஷான்ரானி ஆலிமா, ஏ ஐ டி யூ சி பொதுச் செயலாளர் கே.சுரேஷ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் துணை அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

அநீதிக்கு எதிராய் ஆர்ப்பரித்த தமுமுக...!!!திருச்சி மேற்கு மாவட்டம் உறையூர் பகுதியில் மமக கொடி கம்பங்களை அகற்றிய காவல் து...
13/02/2023

அநீதிக்கு எதிராய் ஆர்ப்பரித்த தமுமுக...!!!

திருச்சி மேற்கு மாவட்டம் உறையூர் பகுதியில் மமக கொடி கம்பங்களை அகற்றிய காவல் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகிகளை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது.

கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தமுமுக,மமக நிர்வாகிகள் கலந்து கொண்டு அகற்றிய கொடி கம்பங்களை அகற்றிய இடத்திலேயே அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையின் பெயரில் கொடி கம்பங்களை அமைத்து தருவோம் என உறுதியாக கூறிய நிலையில் மறியல் முடித்து களைந்தனர்.

எல்லா புகழும் இறைவனுக்கே....!!!

தமுமுக சார்பாக காவல் துறைக்கு நன்றிகள்..!!!திருச்சி சுற்றுலாத்தலமான நத்தர்ஷா  பள்ளிவாசல்(தர்கா) பகுதியில் டீ கடை மற்றும்...
04/02/2023

தமுமுக சார்பாக காவல் துறைக்கு நன்றிகள்..!!!

திருச்சி சுற்றுலாத்தலமான நத்தர்ஷா பள்ளிவாசல்(தர்கா) பகுதியில் டீ கடை மற்றும் உணவகங்களை இரவு 10மணிக்கு அடைக்க கூறி ஒரு வாரமாக காவல் துறை அதிகாரிகள் கெடிபுடியாக நடந்துகொண்டார்.

இதை தொடர்ந்து தமுமுக, மமக கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி,மாவட்ட பொருளாளர் காஜா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இரவு நேரங்களில் கடைகளை நடத்த அனுமதி கோரினர்.

கோரிக்கையை ஏற்று இரவு 12மணி வரை கடைகளை திறந்து வைக்க அனுமதி அளித்த மாநகர காவல் ஆணையர்,உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் கோட்டை காவல் நிலைய காவளர்களுக்கும் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

 #காவல்துறை_அத்துமீறல்களத்தில் மாவட்ட நிர்வாகிகள்.திருச்சி சுற்றுலா தலமான நத்தர்ஷா பள்ளிவாசல் (தர்கா) பகுதியில் உள்ள இரவ...
03/02/2023

#காவல்துறை_அத்துமீறல்

களத்தில் மாவட்ட நிர்வாகிகள்.

திருச்சி சுற்றுலா தலமான நத்தர்ஷா பள்ளிவாசல் (தர்கா) பகுதியில் உள்ள இரவு நேர ஹோட்டல் மற்றும் மளிகை கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் இரவு 10:30 மணி அளவில் அடைக்க கூறி பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் காவல்துறை பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகிறார்கள்.

மேலும் அப்பகுதியை சார்ந்த மக்கள் நின்று கொண்டிருந்தால் தகாத வார்த்தைகளை கூறி வீட்டுக்கு செல்லும்படி கூறுகிறார்கள்
மேலும் நத்தர்ஷா தர்காவிற்கு கேரளா,கர்நாடகா,ஆந்திரா மாநிலத்தில் இருந்து வருகை தருபவர்களும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இந்நிகழ்வு குறித்து தமுமுக
மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையில் மாவட்ட நிர்வாகிகள்,பொதுமக்கள் இணைந்து காவல்துறை ஆய்வாளர் அவர்களை சந்தித்து பொதுமக்களும் தர்காவிற்கு வெளியூரில் இருந்து வருகை தரும் மக்கள்களும் பயன்பெறும் வகையில் உடனடியாக இரவு நேர கடையை அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!!!தமுமுக, மமக திருச்சி(கி)மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையிலும...
13/01/2023

கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!!!

தமுமுக, மமக திருச்சி(கி)மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையிலும்
தமுமுக மாவட்ட செயலாளர் இலியாஸ்,மாவட்ட பொருளாளர் காஜா மைதீன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு சாவடி உறுப்பினர்கள் பகுதி வாரியாக படிவம் கொடுத்து முகவர்கள் பதிவு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட,துணை,அணி மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

மாவட்ட ஆலோசனை கூட்டம்...!!!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி(கி)மாவட்டத்தின் மாவட்ட ஆலோ...
25/11/2022

மாவட்ட ஆலோசனை கூட்டம்...!!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி
திருச்சி(கி)மாவட்டத்தின் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையிலும் தமுமுக மாவட்ட செயலாளர் இலியாஸ், மமக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் டிசம்பர் 6 பணிகள் குறித்து ஆலோசிக்க பட்டது.

மேலும் மாவட்ட துணை,அணி நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாலக்கரை கிளை சார்பாக தெருமுனை கூட்டம்...!!!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சிதிருச்சி(கி)மாவட்டம் ...
25/11/2022

பாலக்கரை கிளை சார்பாக
தெருமுனை கூட்டம்...!!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி
திருச்சி(கி)மாவட்டம் பாலக்கரை கிளை சார்பாக தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழகப் பேச்சாளர்கள் முகமது ரபீக்,இம்ரான் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் முகமது ராஜா,மாவட்ட செயலாளர்கள்,துணை,அணி,பகுதி,கிளை நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

MTS புதிய கிளை திறப்பு...!!!மனிதநேய மக்கள் கட்சியின் தொழிலாளர் பிரிவான #மனிதநேய_தொழிலாளர்கள்_சங்கம் திருச்சி கிழக்கு மாவ...
23/11/2022

MTS புதிய கிளை திறப்பு...!!!

மனிதநேய மக்கள் கட்சியின் தொழிலாளர் பிரிவான
#மனிதநேய_தொழிலாளர்கள்_சங்கம்
திருச்சி கிழக்கு மாவட்டம் திருவரம்பூர் பகுதி காமராஜ் நகர் கிளையில் புதிய ஆட்டோ ஸ்டாண்டு
மமக மாவட்ட தலைவர் முகமது ராஜா மற்றும் மமக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி ஆகியோர் தலைமையிலும் MTS மாவட்ட செயலாளர் சபியுல்லா மற்றும் மாவட்ட பொருளாளர் ஜாவித் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மமக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமத் MLA அவர்கள் கலந்து கொண்டு புதிய ஆட்டோ ஸ்டாண்டை திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள்,அணி நிர்வாகிகள்,பகுதி,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சிதிருச்சி கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை ...
18/11/2022

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி
திருச்சி கிழக்கு மாவட்டத்தின்
மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுலகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள்,துணை,அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

நவம்பர் 23ஆம் தேதி செயல்வீரர்கள் கூட்டம் நடத்தவும்...
டிசம்பர் 6 சம்பந்தமான பேனர்கள், நோட்டீஸ்கள் சுவரொட்டிகள் என அதிகப்படியான விளம்பரங்களை செய்ய கிளைகளுக்கு வலியுறுத்தவும் தீர்மானம் செய்யப்பட்டது...

பதிவு நாள் (18/11/22)

திருச்சி கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்...!!!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்ட ...
25/09/2022

திருச்சி கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்...!!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் (25/9/2022) மாலை 6 மணி அளவில் ராசி மஹாலில் நடைபெற்றது.

மாவட்டத்தின் தேர்தல் பொறுப்பாளரான தமுமுக மாநில செயலாளர் மைதீன் சேட் கான் அவர்களால் தேர்தல் நடத்தப்பட்டு புதிய மாவட்ட தலைமை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் மமக பொதுச் செயலாளருமான
ப.அப்துல்சமது MLA அவர்கள், மாநில பொருளாளர் சபியுல்லாகான் அவர்களும்,திருச்சி மேற்கு மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் ஒன்றியம்,பேரூராட்சி,நகராட்சி,பகுதி,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

திருவெறும்பூர் பகுதி நிர்வாக தேர்தல் ...!!!தமுமுக,மமக திருச்சி கிழக்கு மாவட்டம் திருவெறும்பூர் பகுதி புதிய நிர்வாகிகள் த...
24/09/2022

திருவெறும்பூர் பகுதி நிர்வாக தேர்தல் ...!!!

தமுமுக,மமக திருச்சி கிழக்கு மாவட்டம் திருவெறும்பூர் பகுதி புதிய நிர்வாகிகள் தேர்தல் பொதுகுழு கூட்டம் 24.09.2022 மாலை 6.30 மணியளவில் மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

தமுமுக மாநில செயலாளரும் தலைமை தேர்தல் அதிகாரியான சகோ.மைதீன் சேட்கான் அவர்கள் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தார்.

இக் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் மாலிக்,அஷ்ரஃப் அலி மற்றும் மாவட்ட துணை,அணி நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

TMMK MEDIA official group

கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சிதிருச்சி(கி)மாவட்டத்தின் ஆலோசன...
16/09/2022

கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி
திருச்சி(கி)மாவட்டத்தின் ஆலோசனை கூட்டம் (16.09.22) வெள்ளிக் கிழமை மாலை 6.30 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு மாவட்ட தலைவர்
M.A.முகமது ராஜா தலைமையிலும் பொறுப்பு குழு உறுப்பினர்கள் அஷ்ரப் அலி,மாலிக்,இலியாஸ் முன்னிலையிலும் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில் (25.09.22) அன்று மாவட்ட பொதுக்குழு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட துணை,அணி,பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு தீர்மானம் நிறைவேற்றபட்டது.

மேற்கு மாவட்டம் பாண்டமங்கலம் கிளை நிர்வாகிகள் நியமனம்...!!!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச...
13/09/2022

மேற்கு மாவட்டம் பாண்டமங்கலம் கிளை நிர்வாகிகள் நியமனம்...!!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மேற்கு மாவட்டத்தின் உறையூர் பாண்டமங்கலம் கிளை தலைமை நிர்வாகிகள் மாவட்ட தலைமை நிர்வாகிகளால் நியமிக்கப்பட்டனர்.

திமுக மாநகர செயலாளருக்கு வாழ்த்து தெரிவித்த திருச்சி தமுமுக..!!திராவிட முன்னேற்ற கழத்தின் திருச்சி தெற்கு மாநகர செயலாளரா...
02/09/2022

திமுக மாநகர செயலாளருக்கு வாழ்த்து தெரிவித்த திருச்சி தமுமுக..!!

திராவிட முன்னேற்ற கழத்தின் திருச்சி தெற்கு மாநகர செயலாளராக பொறுப்பேற்றுள்ள மண்டல தலைவர் மதிவாணன் அவர்களை தமுமுக மமக திருச்சி மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் உஸ்மான்,பிர்தௌஸ்,இம்ரான்,காசிம்,முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசினர் சையது முர்துஷா பள்ளி மைதானம் மீட்பு..!!! முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்காக மரக்கடை  அரசினர், சையது முர்துஷா ப...
30/07/2022

அரசினர் சையது முர்துஷா பள்ளி மைதானம் மீட்பு..!!!

முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்காக மரக்கடை அரசினர், சையது முர்துஷா பள்ளியில் பாழடைந்து கிடந்த கட்டிடத்தில் நாற்பது பள்ளி கூடம் குழந்தைகளுக்கு, காலை உணவு தயார் செய்வதற்காக, கட்டடம் கட்டப்பட்டு கொண்டிருந்தார்கள் .இடம் போதவில்லை என்பதற்காக பள்ளி விளையாட்டு மைதானத்தையும், ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்ட இருந்தார்கள் . அஸ்திவாரக் குளியும் நோண்டி விட்டார்கள் ,தகவல் அறிந்து உடனடியாக, திருச்சி தமுமுக கிழக்கு மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா, தலைமையில் மருத்துவ அணி செயலாளர் சையது முஸ்தபா, பொறுப்பு குழு உறுப்பினர் பிர்தெளஸ், ஆகியோர் நேரில் சென்று, மாநகராட்சி ஆணையர் அவர்களை சந்தித்து மனு அளித்ததின் பெயரில், உடனடியாக அதிகாரிகளை ஆணையர் அவர்கள் தொடர்பு கொண்டு, விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமிப்பு செய்து தோண்டிய குழிகளை மூடச் சொல்லி உத்தரவிட்டார்.
எல்லா புகழும் இறைவனுக்கே
பதிவு நாள் 30. 07.22

இறைவன் நாடினால்...!!!தமுமுக திருச்சி மாவட்டத்தில் முப்பெரும் நிகழ்ச்சி...!!!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி ...
23/06/2022

இறைவன் நாடினால்...!!!

தமுமுக திருச்சி மாவட்டத்தில் முப்பெரும் நிகழ்ச்சி...!!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பாக(26.06.22) ஞாயிற்றுக்கிழமை
மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையில் முப்பெரும் நிகழ்ச்சி அனைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு,ஜமாத்தார்கள் சந்திப்பு மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் மமக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமதுMLA மற்றும் மாநில பொருளாளர் Er. சபியுல்லா கான் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.சிறப்பு அழைப்பாளராக லால்குடி ஹாஜியார் சர்புதீன் அவர்களும் கலந்து கொள்ள உள்ளார்.

ஆகையால் கழக மாவட்ட,பகுதி,கிளை நிர்வாகிகள்,உறுப்பினர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இடம் - சீனிவாச மண்டபம்(No.1 டோல்கேட்)
நேரம் - மாலை 6.00 மணி

இலால்குடி நிர்வாகிகளுடன் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு...!!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,மனிதநேய மக்கள் கட்சி திரு...
20/06/2022

இலால்குடி நிர்வாகிகளுடன் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு...!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பாக (18/06/22) அன்று நடைபெற்ற மாவட்ட ஆலோசனை கூட்டத்தின் அடிப்படையில் இன்று மாவட்ட பொறுப்பு தலைவர் M.A.முகமது ராஜா தலைமையிலும் இலால்குடி சர்புதீன் அவர்களின் சிறப்பு உரையுடனும் இலால்குடி,மண்ணச்சநல்லூர், துறையூர் தொகுதி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலால்குடி,மண்ணச்சநல்லூர்,துறையூர் ஆகிய பகுதிகளில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது என தீர்மானிக்கப் பட்டது.

மேலும் இந்நிகழ்வில் சர்புதீன்,காஜா மொய்தீன்,காசிம், முஸ்தபா மற்றும் இலால்குடி தொகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருச்யில் நடைபெற்றது இஸ்லாமிய கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்...!!!இன்று(18/06/22) மாலை 7.30 மணி அளவில் திருச்சி அரபி கல்லூர...
18/06/2022

திருச்யில் நடைபெற்றது இஸ்லாமிய கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்...!!!

இன்று(18/06/22) மாலை 7.30 மணி அளவில் திருச்சி அரபி கல்லூரி வாளகத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக திருச்சி மாவட்ட இஸ்லாமிய இயக்கம் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜமாத்துல் உலமா மாநில தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் மன்சூர் காஷிபி அவர்கள், ஜமாத்துல் உலமா மாநில துணை தலைவர் ரூஹுல் ஹக் மவ்லானா, தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லாஹ் கான், ஜமாத்துல் உலமா மாநில பொருளாளர் மீரான் மிஸ்பாஹி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமுமுக மமக சார்பில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் முகமது ராஜா மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பைஸ் அகமது, , இப்ராஹிம், ஜாவித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய அரசியல் கட்சி மற்றும் இயக்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

எதிர் வரும் 25.06.2022 அன்று திருச்சியில் 'மக்களை பிளவுபடுத்தும் பாசிசத்தை முறியடிப்போம்' தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டது.

குழு நிர்வாகிகள் விரைவில் ஒன்று கூடி அடுத்த கட்ட பணியை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் சட்டபமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமத் அவர்கள் முய...
02/04/2022

திருச்சி மாவட்டம் மணப்பாறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் சட்டபமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமத் அவர்கள் முயற்சியால் மணப்பாறை அரசு மருத்துவ மனையிலும் எக்கோ (ECO) பரிசோதனை.

மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில்
கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் இருதயநோய் உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ள மணப்பாறை தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில்
09.08.2021 அன்று கடிதம் வாயிலாக மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து ப.அப்துல் சமது MLA அவர்கள் கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் எக்கோ பரிசோதனை கருவி அமைக்கப்பட்ட கருவியை மணப்பாறை அரசு மருத்துவமனையில் தொடங்கி வைத்த போது.

ஒவ்வொரு கர்ப்பிணி தாய்மார்களும் எக்கோ பரிசோதனை அவசியமானது . அத்தகைய எக்கோ பரிசோதனை செய்ய திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்தவமனைக்கு தான் செல்ல வேண்டும் என்கின்ற நிலை இருந்தது .இந்நிலையில் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் எக்கோ பரிசோதனை கருவி நிறுவப்பட்டு வாரம் ஒருமுறை சேவையின் அடிப்படையில் மருத்துவர்
வந்து பரிசோதனை செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது எக்கோ பரிசோதனை செய்ய அவசியம் உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

எனுடைய கோரிக்கையின் அடிப்படையில் உடனடியாக எக்கோ பரிசோதனை கருவி அமைத்து கொடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் M. K. Stalin அவர்களுக்கும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் Ma Subramanian அவர்களுக்கும் மணப்பாறை தொகுதி மக்களின் நன்றி நன்றி.

இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவல்லி, திமுக ஒன்றிய செயலாளர் ராமசாமி, நகர செயலாளர், கீதா மைக்கேல் ராஜ், மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன், மாவட்ட செயலாளர் பைஸ் அகமது MC , அரசு தலைமை மருத்துவர் மலைதுறை, அக்பர், சபுர்அலி, உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டார்கள்.

பதிவு நாள் 02.04.2022

இறை இல்லம் திறப்பு...!!!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அறக்கட்டளையின் சார்பாக இடம் வாங்கப்பட்டு கட்டுமான பணிகள் நி...
25/03/2022

இறை இல்லம் திறப்பு...!!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அறக்கட்டளையின் சார்பாக இடம் வாங்கப்பட்டு கட்டுமான பணிகள் நிறைவடைந்து இறைவனின் அருளால் பாலக்கரை மஸ்ஜிதே அர்-ரய்யான் பள்ளி திறக்கப்பட்டு முதல் ஜும்மா தொழுகை நடைபெற்றது.

இந்நிகழ்வை மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையில்
தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம்,மமக மாவட்ட செயலாளர் பைஸ் அஹமது மற்றும் மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி முன்னிலையிலும் நடைபெற்றது.

பள்ளிவாசலை மாநில பொருளாளர்
பொறியாளர் ஷபியுல்லா கான் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை,அணி,பகுதி,கிளை நிர்வாகிகள் மற்றும் மஹல்லா பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...!!!

திருச்சியில் 28 வது வார்டு மமக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார் நாஞ்சில் சம்பத்..!!மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மன...
12/02/2022

திருச்சியில் 28 வது வார்டு மமக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார் நாஞ்சில் சம்பத்..!!

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
மனிதநேய மக்கள் கட்சி 28வது வார்டு
வேட்பாளர் பைஸ் அஹமது அவர்களை ஆதரித்து திராவிட தலைவர்களில் ஒருவரான #நாஞ்சில்_சம்பத், SMI மாநில செயலாளர் வழக்கறிஞர் நூர்தீன் மாநில தலைமை கழக பேச்சாளர் ஷரீப் வார்டுக்கு உட்பட்ட குத்துபிசா நகர், இனாம்தார் தோப்பு, பாரதி நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

வேட்புமனு தாக்கல்...!!திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி ...
04/02/2022

வேட்புமனு தாக்கல்...!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இருபத்தி எட்டாவது வார்டு வேட்பாளர் பைஸ் அகமது அவர்கள் இன்று காலை அரசு மருத்துவமனை அருகில் உள்ள அபிஷேகபுரம் கோட்டம் அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள்,SMI மாநில செயலாளர் நூர்தீன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் படை சூழ வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்..!!!மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்டத்தின் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர்...
02/02/2022

திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்..!!!

மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்டத்தின் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் முகம்மது ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வை மமக மாவட்ட செயலாளர் பைஸ் அஹமது
தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம்
மாவட்ட பொருளாளர் அஸ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளருமான ப.அப்துல் சமத் அவர்கள் சிறப்புரை ஆற்றி வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.

மேலும் இந்நிகழ்வில் மாநில பொருளாளர் பொறியாளர் ஷபியுல்லா கான் அவர்களும்,மாநில அமைப்பு செயலாளர் மிட்டாய் காதர் அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.

இக்கூட்டத்தில் பெருவாரியான மாவட்ட,பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இனாம்குளத்தூர் தெருமுனை கூட்டம்...!!!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனித நேய மக்கள் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம்...
31/01/2022

இனாம்குளத்தூர் தெருமுனை கூட்டம்...!!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனித நேய மக்கள் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் இனாம் குளத்தூர் கிளை சார்பாக கிளை தலைவர் சாகுல் ஹமீத் தலைமையில் போராளி #ஷயித்_அல்ஹாஜ்_பழனிபாபா அவர்கள் விதைக்கப்பட்ட நினைவாக தெருமுனை கூட்டம்பநடைபெற்றது. இக்கூட்டத்தில் அர்சத் (IPP கிளை செயலாளர்) இறைவசனம் ஓதி ஆரம்பித்தார்.ஹம்ஜா (கிளை செயலாளர் தமுமுக) வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிககிழ்வில் மாநில தலைமை கழக பேச்சாளர் திருச்சி ஷரீப்,
மாவட்ட துணை செயலாளர் இம்ரான்
ஆகியோர் எழுச்சி உரையும்
மண்டல செயலாளர் அப்பிஸ் கான் மற்றும் பேச்சாளர் ஹுமாயின் ஆகியோர் சிறப்புரையும் ஆற்றினார்.

இறுதியாக ரியாஸ் கான் (தொண்டரணி கிளை செயலாளர் தமுமுக) நன்றியுரை ஆற்றினார்.

மேலும் இந்நிகழ்வில்
மாவட்ட,கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தாய் கழகம் திரும்பிய திருச்சி மாவட்ட செயல்வீரர்...தமுமுக முன்னாள் மாவட்ட நிர்வாகி சகோ இப்ராஹிம்ஷா அவர்கள் திருச்சி மாவட்...
30/01/2022

தாய் கழகம் திரும்பிய திருச்சி மாவட்ட செயல்வீரர்...

தமுமுக முன்னாள் மாவட்ட நிர்வாகி சகோ இப்ராஹிம்ஷா அவர்கள் திருச்சி மாவட்ட தமுமுக மமக தலைவர் சகோ முகமது ராஜா தலைமையில் மமக பொதுச்செயலாளர் அண்ணன் அப்துல் சமது MLA, மாநில பொருளாளர் அண்ணன் சபியுல்லாஹ் கான் ஆகியோர் முன்னிலை இன்று தன்னை மீண்டும் இணைத்து கொண்டார்.

இந்நிகழ்வில் மமக மாவட்ட செயலாளர் பைஸ் அஹமத் மற்றும் மாவட்ட துணை செயலாளர் அப்துல் சமத் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இனாம்குளத்தூர் கிளை நிர்வாகிகள் நியமனம்....!!!!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சிதிருச்சி தெற்கு ...
25/01/2022

இனாம்குளத்தூர் கிளை நிர்வாகிகள் நியமனம்....!!!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி
திருச்சி தெற்கு மாவட்டம்
இனாம்குளத்தூர் கிளையின்
தலைவராக சாகுல் ஹமீத் ,
தமுமுக செயலாளராக முகமது அம்ஜா ,
மமக செயலாளரக முகமது தாலீப் பொருளாளரக நெளவ்ஷாத் ஷேக் இஸ்மாயில் ஆகியோர் பொதுக்குழுவில் ஒருமனதாக மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நியமிக்கப்பட்டார்.

Address

PALAKKARAI
Villupuram
620008

Telephone

+919025300389

Website

Alerts

Be the first to know and let us send you an email when TMMK MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Villupuram

Show All