Kumari Anjal

Kumari Anjal Kumari Anchal is a growing powerful magazine,which features NEWS AND CURRENT AFFAIRS,CRIME,MEDICAL AND HEALTH,FILM AND ENTERTAINMENT

14/07/2023
14/07/2023

கன்னியாகுமரி மாவட்டம்

காலையில் பகீர் புகார்
மாலையில் திடீர் பல்டி
மணவாளக்குறிச்சி தொடக்க வேளான்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் மூன்று லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்கவில்லை தலைவரின் எதிரிகள் தூண்டுதலின் தான் சொன்னதாக சொல்லி கடிதம் எழுதி கொடுத்ததால் பணி நியமன ஆணை வழங்கிய தலைவர் ஐய்யப்பன்!!!!

மண்டைக்காடு புதூர் ஊரை சேர்ந்தவர் ஜெயா மணவாளக்குறிச்சி தொடக் வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன்கடையில் விற்பனையாளர் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தார். ஏற்கனவே இந்த வேலைவாய்பு பிரச்சனை வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் காலதாமதம் ஏற்ப்பட்டதை தொடர்ந்து தலைவர் ஐய்யப்பனுக்கு கட்சி விரோதிகள் தூண்டுதலின் பேரில் தலைவர் மற்றும் நிர்வாதிகள் பணி நியமன ஆணை வழங்க மூன்று லட்சம் ரூபாய் கேட்டதாக கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பிரச்சனையில் ஈடுப்பட்டார் அவரிடம் மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் பெருமாள், தாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர் பின்னர் அந்த பெண் தலைவரின் எதிரிகளின்
தூண்டுதலின்பேரில் தான் தவறாக கூறிவிட்டேன் இதனை எழுத்துமூலமாகவும் கொடுத்துவிட்டேன் எனக்கு தலைவர் பணி நியமன ஆணையை வழங்கினார்,
தலைவர் கூறும்போது
அரசியலில் எனது வளர்ச்சியை கண்டு என்னை அழிப்பதற்கு எதிரிகள் சூழ்ச்சிகளை தலைவர் ஸ்டாலின் ஆசியுடன் வெல்லுவேன் என தெரிவித்தார்.

08/07/2023

கோவை சரக டி.ஐ.ஜி திரு. விஜயகுமார் அவர்கள் நேற்று காலை, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி பேரதிர்ச்சியாக உள்ளது.

கடலூரில் அவர் பணியாற்றிய போது, நான் சட்டமன்ற‌ உறுப்பினராக இருந்தேன். கடலூர் மாவட்ட மக்களின் சார்பில் பல்வேறு வழக்குகளுக்காக அவரை சந்தித்துள்ளே‌ன். பழக இனியவர், மனித நேய பண்போடு நேர்மையுடன் இயங்கினார், காவல்துறை அதிகாரி என்ற இருமாப்பு எதுவும் இன்றி தான் தலையிட்ட வழக்குகளில் சிறப்பாக பணியாற்றினார்.

சாத்தான் குளம் தந்தை மகன் கொலை, சிவசங்கர் பாபா உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டவர். கடும் உழைப்பால் டிஐஜி அளவிற்கு உயர்ந்த அவருடைய‌ திடீர் இழப்பு காவல்துறைக்கும், மாநிலத்திற்கும் பெரும் இழப்பாகும்.‌ அவரது இழப்பால் வாடும் இணையர் கீதாவாணி, மகள் உள்ளிட்ட குடும்பத்தார், சுற்றத்தினர், நண்பர்கள் மற்றும் காவல்துறை நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

- கே.பாலகிருஷ்ணன்

02/07/2023

*கேரள மாநிலத்தில் ஒரே நாளில் காய்ச்சலுக்கு 8 பேர் உயிரிழந்தனர். கடந்த மாதம் முதல் கேரளாவில் டெங்கு, எலிகாய்ச்சல், சிக்குன்குனியா உள்ளிட்ட காய்ச்சலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்றைய தினம் உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் டெங்கு காய்ச்சலாலும், இருவர் எலிக் காய்ச்சலாலும், ஒருபர் H1N1- வைரஸ் பாதிப்பாலும் உயிரிழந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற மூன்று பேர் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சலால் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், 12 ஆயிரத்து 728 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் 4 வகையான டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பல்வேறு காய்ச்சலால் ஒரே மாதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.*

01/07/2023

*குமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியில் கடந்த 2 மாதமாக பிளாஸ்டிக் எரிக்கப்பட்டு வரும் நிலையில்,நேற்று பிளாஸ்டிக் எரித்த போது எழுந்த கடுமையான புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டதால் அருமனை பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் சொன்ன நபரை ஒருமையில் பேசி மிரட்டிய அருமனை பேரூராட்சி EO*

*வரும் இரண்டாம் தேதி குமரி மாவட்டம்  நாகர்கோயிலில்  அண்ணாமலை கலந்துகொள்ளும் குமரி சங்கமம்  பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெறு...
30/06/2023

*வரும் இரண்டாம் தேதி குமரி மாவட்டம் நாகர்கோயிலில் அண்ணாமலை கலந்துகொள்ளும் குமரி சங்கமம் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெறும் நாகராஜகோவில் திடலை பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் ,மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாவட்ட துணைத்தலைவர் தேவ் ,பொதுசெயலாளர் ஜெகநாதன் ,நகர தலைவர் ராஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.*

நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
30/06/2023

நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு.மத கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்ட க...
30/06/2023

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு.
மத கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்ட கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் ஆஸ்டின் பெனட் கோரியிருந்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் குற்ற எண்:16/23U/S:295(A),506(2)IPC என்ன வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Kumari Anjal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share