03/07/2022
Martin Luther The Bible Killer...!
https://youtu.be/Zth15ciE68Q
பைபிளுக்கு மார்ட்டின் லூத்தர் இழைத்த துரோகம்
Tamil Catholic FM - Online radio station for Tamil catholic christian's all around the world. Stay t
Martin Luther The Bible Killer...!
https://youtu.be/Zth15ciE68Q
பைபிளுக்கு மார்ட்டின் லூத்தர் இழைத்த துரோகம்
Happy Easter To All - Tamil Catholic FM...! :)
Is Mary The Mother Of God?...
https://youtu.be/45IrrGdmRqE
மரியாள் கடவுளை விட பெரியவரா?ஏன் கத்தோலிக்க திருச்சபை மரியாளை இப்படி உயர்த்துகிறது ?இது தப்பரை கொள்கையா?மரியாள....
Happy New Year To All...! :)
Merry Christmas To All...! May God Bless You...!
ஜெபமாலை மாதம் ஏன் கொண்டாடப்படுகிறது....
https://youtu.be/c3UgtayjN4A
கத்தோலிக்க திருச்சபை மரபில் வந்த ஜெபமாலை அன்னை பெருவிழா
Watch this Full video.... 😊
https://youtu.be/LlaeiFT3B_s
ேசுவின் மனித தன்மையை மறுக்கும் சபைகளே .. எச்சரிக்கை[email protected] what's app only : 811085...
73 or 66...
https://youtu.be/tljtMr1S2jA
கத்தோலிக்கம் பைபிளை மாற்றிவிட்டது என்பது சரியா? பைபிளை வைத்து நடந்த குழப்பங்கள் என்ன? பைபிளின் மாற்றத்திற்கு ....
Is Bible a historical book?...
https://youtu.be/3UKEKtMOXsY
உண்மையான பைபிள் எது?பைபிளில் இருந்து புத்தகங்களை நீக்கலாமா?முரண்பாடுகளை கொண்டதா பைபிள்?இவைகளுக்கான விளக்கமு....
கத்தோலிக்க பைபிள் தவறானதா?...
https://youtu.be/AA9ZUC1vjKQ
பாதியில் இனைக்கப்பட்ட புத்தகம், கிறிஸ்துவுக்கு எதிரான புத்தகம், யூதர்கள் நிராகரித்த புத்தகம், தேவ பிள்ளைகள் எ....
பிரிவினை சபைகள் ஏன் சாம்பிராணி பயன்படுத்துவது இல்லை?...
https://youtu.be/gqy0M1tASQk
சரியான பதில் தந்தது யார்? ... மீண்டும் ஒரு குட்டிக்கதை [email protected]
👑இயேசுவின் மீது ⚫⚫கல்லெரிய துடிக்கும் பிரிவினை சபைகள்உண்மையை போக்கிக்க மறுக்கும் இவர்கள் யார்?பரிசேய சதுசேய...
https://www.facebook.com/831483023729075/posts/1552565524954151/
பிரிவினைகளே உங்கள் இந்த நம்பிக்கையை வசன ஆதாரம் கொண்டு நிறுவுங்கள்...
*வேதம் மட்டுமே என்ற போதனையை இயேசு போதித்தாரா??
*அப்போஸ்தலர்கள் யாராவது இந்த நம்பிக்கையை கொண்டிருந்தார்களா?
ஆம் என்றால் நிருபியுங்கள் வசனத்தை கொண்டு..
இல்லை என்றால்: இயேசுவோ, அப்போஸ்தலர்களோ கூறவில்லை என்றால் எப்படி ஏற்றீர்கள்??
கத்தோலிக்கர் அல்லாதவர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய ... கத்தோலிக்கர்கள் புரிந்து கொள்ளவேண்டிய கானொளி[email protected]
https://www.facebook.com/831483023729075/posts/1536595553217815/
ஆசை வாரத்தைகளை காட்டி பல்வேறு எதிர்பார்ப்புகளோடு இருக்கும் உங்களை இழுப்பார்கள்..அவர்களின் வார்த்தைகள் பல்வேறு எதிர்பார்ப்புகள், வேதனைகளோடு இருக்கும் உங்களுக்கு ஒரு தற்காலிக ஆறுதலை கொடுக்கலாம், வெறும் தற்காலிகமான ஒரு ஆறுதல் வார்த்தைகளே அவை..
ஆனால் வாழ்க்கை இன்பம், துன்பங்கள் எல்லாம் நிறைந்தவைகளே என்ற உண்மையை நீங்கள் அறியும்போது, எல்லாவற்றிலும் இன்பத்தை அனுபவிப்பீர்கள்....
இவ்வுலக வாழ்வு குறித்த புரிதல் நம்மில் பலருக்கு இல்லை என்றே கூறலாம்..
இவ்வளவு ஏன் கெத்சமெனி தோட்டத்தில் இயேசு தந்தையை நோக்கி வேண்டினாரே...அவருக்கு கிடைத்த பதில் இல்லை என்பதே..அதுதான் தந்தையின் சித்தம்..
ஆனால் நாம் கடவுள் சித்தம் அறிந்து வேண்டுவேதே இல்லை..நம் எண்ணங்கள், சிந்தனைகளை வைத்து மட்டுமே வேண்டுகிறோம்.. அதனால் அவை நடக்காத போது ஏமாற்றமடைகிறோம்.. அவ்வாறான வேளையில் ஒருவன் பைபிளை வைத்துக்கொண்டு அதில் சில வாரத்தைகளை எடுத்து வருவான்,
உன் துக்கம் சந்தோஷமாக மாறும் என்பான்..
ஒளி தோன்றும் என்பான்..
ஸடிக்கர் ஒட்டுவீர்கள் வீட்டில்..
ஆனால் அந்த வசனத்துக்கு கீழே, மேல உள்ள வசனங்களை கூற மாட்டார்கள்.. உண்மையில் எப்போது நம் துக்கம் சந்தோஷமாக மாறும் என்ற வசனத்தையும் சேர்த்தே படிக்க வேண்டும்.. விவிலியம் வாசிக்கும் முறை அதுதான்..வெறுமனே உங்களுக்கு பிடித்த வசனத்தை வாசிப்பது அல்ல..
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட வசனங்களை கூறி உங்களை தங்கள் வலையில் விழ பயன்படுத்துவார்கள்.. இயேசுவை சோதித்தபோது சாத்தான் உபயோகித்ததும் இதே வார்த்தைகளைத்தான்..
அவர்கள் கூறும் ஆறுதல் வார்த்தைகள் அந்த நேரத்தில் உங்களுக்கு ஆறுதலை கொடுக்கும், உடனே இறை சமூகத்தில் இருந்து விலகிவிடுகிறீர்கள்..
அன்பின் கத்தோலிக்க திருச்சபை பிள்ளைகளே, உண்மைகளை அறியுங்கள்..ஆண்டவரின் சித்ததுக்கு அனைத்தையும் ஒப்புக்கொடுங்கள்...அவரை மீறி எதுவுமே இல்லை என்பதை உணர்ந்து வாழுங்கள்..
Merry Christmas To All...! 🎄🎄🎄
https://youtu.be/qvoAuy-LFns
உன் பிறப்பின் ரகசியம் என்ன? ..இயேசு உங்கள் மீட்பரா ? எப்படி?
பாம்பு ஏன் ஏவாளை சோதித்தது?
ஆதாமை சோதிக்காததன் நோக்கம் என்ன?
பெண்ணிற்கும் பாம்பிற்குமான தொடர்பு என்ன?
https://youtu.be/7MA2CBTmGSs
பாம்பு பெண்ணை சோதித்ததன் குறியீடு என்ன?பெண்ணுக்கும் பாம்புக்குமான தொடர்பு என்ன?ஆன் பலமானவனா? பெண் பலவீனமானவள.....
இயேசுவின் இரண்டாம் வருகை...
https://youtu.be/ugGFn1j2jRQ
மக்களை முட்டாளாக்கும் போதகர்கள்இயேசுவின் பெயரால் இயேசுவுக்கே கலங்கம் விளைவிக்கும் சபைகள்
https://www.facebook.com/831483023729075/posts/1513631538847550/
ஏன் கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்து பிறப்பை மார்கழி 25ல் கொண்டாடுகின்றது???
👉 தமிழாக்கம்; Voy Dilan...
கத்தோலிக்கர்கள் தமது ஆண்டவரும் இறைவனுமாகிய இயேசுக் கிறிஸ்துவின் உலக பிறப்பை பாரம்பரியமாக பெருவிழாவாக ஒவ்வொரு வருடமும் மார்கழி 25 அன்று கொண்டாடுகின்றனர்.
ஆனால் சில பிரிவினைவாத கிறிஸ்தவ குழுக்கள் (INC,SDA,JW,MCGI போன்ற பல பிரிவினை சபைகள்) கத்தோலிக்க திருஅவைக்கு நேர் எதிராக செயற்பட்டு கிறிஸ்து மார்கழி 25ல் பிறக்கவில்லை என்றும், அது கத்தோலிக்க திருஅவையின் கண்டுப்படிப்பு, விவிலிய ஆதாரம் இல்லை, உரோமை கடவுளான சூரியனின் பிறந்தநாளைதான் கத்தோலிக்கர்கள் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி கொண்டாடுகின்றனர் என்ற பிரிவினை போதகத்தை காலம்தோறும் பரப்பிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த பிரிவினைவாதிகள் கிறிஸ்து பிறந்தது மார்கழி 25ல் இடம்பெற்றது என்பதை விவிலியத்தில் இருந்து காட்டும்படி கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் விவிலியமென்பது அனைத்து திகதிகளையும் கொண்ட "நாட்காட்டி" அல்ல என்பதை அவர்கள் உணரத் தவறிவிட்டனர். ஆனால் கிறிஸ்து மார்கழி 25ல் பிறக்கவில்லை என்று கூறும் பிரிவினைவாதிகள் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடுகின்றனர்,
#கிறிஸ்துபிறப்பின்காலகணிப்பு #
கிறிஸ்து பிறப்பு நிகழ்வானது விவிலியத்திலிருந்தே கணிக்கப்பட்டது. இது திருமுழுக்கு யோவானின் தந்தையும் யூத குருவுமான, செக்கரியா கடவுளின் திருக்கோவிலில் தூபம் காட்ட சென்ற நிகழ்விலிருந்து இது கணிக்கப்படுகின்றது. இதை நாம் லூக்கா நற்செய்தி 1:9ல் காணலாம்.
காண்க;
"குருத்துவ பணி மரபுக்கு ஏற்ப,
ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்ட போது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது" (லூக்கா 1:9).
தூய சட்டப்படி திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டும் திருச்சடங்கு வருடத்திற்கு ஒரு முறை யூத மாதமான "Tishrei 15" திஷ்ரே ( கிரகோரியன் நாட்காட்டியின் படி புரட்டாசி 25[September 25th]) அன்று இடம்பெற்றது.
இதன்படி செக்கரியா திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டும் பொழுதே ஆண்டவரின் தூதர் திருமுழுக்கு யோவானின் பிறப்பை அறிவிக்கின்றார். யூத மாதமான திஸ்ரே மாதம் 15ம் திகதி அதாவது புரட்டாதி 25 அன்று. அந்த நாளில்தான் எலிசபேத் கற்பமடைகின்றாள். (லூக்கா 1:11-13)
"அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார். அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார். வானதூதர் அவரை நோக்கி, "செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர்"
(லூக்கா நற்செய்தி 1:13)
எலிசபேத் கருவுற்ற நாளில் (புரட்டாதி 25) இருந்து 6 மாதத்திற்கு பின் மரியா கருவுறுகின்றார்.
லூக்கா நற்செய்தியில் 1:24-27, 30-31 இதை தொடர்ந்து வாசிக்கும் போது எலிசபேத் கருவுற்றதிலிருந்து ஆறாம் மாதத்தில் இறைவன் மீண்டும் தனது தூதர் வழியே மரியா என்னும் கன்னிப்பெண்ணிடம் கிறிஸ்து பிறப்பை முன்னறிவித்தார்.
"அதற்குப்பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார். மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்" என்று தமக்குள் சொல்லிக்கொண்டார். ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.
(லூக்கா நற்செய்தி 1:24-27,30-31)
ஆகவே இதன்படி காலத்தை கணிப்பிட்டோமானால் இயேசுக்கிறிஸ்து மார்கழி 25ல் தான் பிறந்தார் என்பது புலப்படுகின்றது.
Tishrei 15 (புரட்டாசி 25) - (யோவானின் பிறப்பு பற்றி செக்கரியாவிற்கு அறிவிக்கப்படுதல், எலிசபேத் கருவுறுதல்)
+
6 மாதம் (எலிசபேத்தின் கற்பகாலம்)
= பங்குனி 25( இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு, மரியா கருவாதல்)
பங்குனி 25 + (மரியாவின் 9 மாத கர்ப்பகாலம்) = மார்கழி 25
இவ்வாறு விவிலியத்தின் வழியாகவே கிறிஸ்துவின் பிறப்புநாள் குறிக்கப்பட்டது. ஆரம்பகால திருச்சபை தந்தையர்களின் இயேசு பிறப்பு தொடர்பான கருதுக்கள் / கோட்பாடு / சிந்தனையுடன் ஒருபோதும் பிழையாகாது..
இது ஒரு சான்றாக வேத பகுப்பாய்வை ஆதரிக்கிறது, இது சில கத்தோலிக்க எதிர்ப்பு குற்றச்சாட்டுகளாக கண்டுபிடிக்கப்படவில்லை. பாரம்பரியமாக நினைவுகூரப்படும் ஒரு பெருவிழா..
கிறிஸ்து பிறந்த திகதியை விட கிறிஸ்து பிறப்பு நிகழ்வின் மறைபொருளும் அதன் கொண்டாட்டமுமே முக்கியமாகும்....
மார்கழி 25 இயேசு பிறந்தார் என்பது கத்தோலிக்க திருச்சபையின் கோட்பாடு( doctrine) அல்ல.. இவ் திகதி கத்தோலிக்க திருச்சபையின் திருமறைக்கல்வியில் கூட எழுதப்படவில்லை..( catechism of the Catholic Church )
ஆனால் இது கத்தோலிக்க திருச்சபையின் இறைபாரம்பரியம், விவிலிய மற்றும் ஆதி தந்தையர்களின் கருத்துக்கள் அடிப்படையில் இதை பின்பற்றுகிறது..
இதன் அர்த்தம் திருச்சபை உண்மையில் பிறந்ததாக கூறப்படும் நாளை நிராகரிக்கிறது என்பதல்ல...அது ஒருவேளை 23,24,26,ஏன் 27 ஆக கூட இருக்கலாம்..
ஆனால் கத்தோலிக்க திருச்சபை அதன் கொள்கை நம்பிக்கை கோட்பாடுகளை எழுத்தில் கொண்ட உத்தியோகபூர்வ ஆவணமான "கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி" யில் இவ் திகதியை எங்கும் சேர்க்கவில்லை...
ஆனாலும் இந்த மார்கழி 25 என்ற நாளை இறை பாரம்பரியம், ஆதி திருச்சபை நம்பிக்கை கருத்துக்கள் அடிப்படையில் பின்பற்றுகிறது..
இருந்தபோதும் இந்த திகதி விவிலியதில் இல்லை.. ஆனாலும் விவிலிய காலகணிப்பு அடிப்படையில் இவ் நாள் பொருத்தமானதாகவும் வருவதால் ஏற்கிறது...இங்கு திருச்சபை கொடுக்கும் முக்கியத்துவம் மனிதனாக நம்மை மீட்க இயேசு பிறந்தார் என்பதே தவிர அதன் திகதிக்கு அல்ல...
என் இயேசு பிறந்ததை கொண்டாட எங்களுக்கு திகதி முக்கியமில்லை..
ஒருவேளை நீங்கள் மாசி மாதம் 29(feb 29) பிறந்திருந்தால் ஒவ்வொரு வருடமும் உங்கள் பிறந்த தினத்தை (உங்கள் உண்மையான பிறந்த நாள் வராத வருடங்களில்) 28 அல்லது பங்குனி 01 கொண்டாடுவதுபோலத்தான் இதுவும்..
இயேசு பிறந்த திகதி மிகச்சரியாக தெரியாமல் இருக்கலாம்...அது எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல..ஆனால் மீட்பராக என் இயேசு வரலாற்றில் பிறந்தார் என்பதை நாங்கள் இவ் நாளில் அறிவிக்கிறோம்..அறிவிப்போம்..
ஒரு கூட்டம் இந்த நாள் சாத்தானிய வழிபாடு செய்தநாள் அதனால் கிறிஸ்து பிறப்பும் அவ்வாறே என அடிப்படையில் உத்தரவாதமற்ற வரலாற்று பதிவுகளின் அடிப்படையில் கூறுகிறது...
ஒரு வேளை சாத்தாணிய நாளில் என் ஆண்டவர் பிறந்ததை கொண்டாடுவது சாத்தன்கள் உங்களுக்கு கோபம் வருகிறது என்றால், எங்கள் மீட்டரான இயேசு பிறந்தார் என்பதை இன்னும் சத்தமாகவே சொல்லுவோம்...
ஆதி தந்தையர்கள் மார்கழி 25 குறித்து சொன்ன சில கருத்துக்கள் இங்கே⏬
டிசம்பர் 25 இயேசு பிறந்தார் என்ற முதல் குறிப்பு ஆதி தந்தையாரான புனித தியோபிலுஸின் எழுத்துக்களில் காணலாம்..
St. Theophilus (circa 171-183 A.D)
"டிசம்பர் 25 எந்த சூழ்நிலையையும், என்ன நடந்தாலும் ஆண்டவரின் பிறப்பை நாம் கொண்டாட வேண்டும்"
(Magdeburgenses, Cent. 2. c. 6. Hospinian, de origin Festorum Christianorum)
St. Iranaeus (circa A.D 202) ⏬
“ In his work Adversus Haereses, Irenaeus (c. 130–202) identified the conception of Jesus as March 25 and linked it to the crucifixion at the time of the equinox, with the birth of Jesus nine months after on December 25 at the time of the solstice." (Link: Source: Wikipedia – Christmas – Choice of December 25)
St. Hippolytus (circa. 170-236 A.D)
due Speculation as to the time of Jesus’ birth dates back to the 3rd century, Hyppolytus believed that Jesus was born on December 25. He explains in his Commentary on the book of Daniel (c. A.D. 204) that the Lord’s birth was believed to have occurred on that day, he said... ⏬
" For the first advent of our Lord in the flesh, when he was born in Bethlehem, was December 25th, Wednesday, while Augustus was in his forty-second year, but from Adam, five thousand and five hundred years. He suffered in the thirty-third year, March 25th, Friday, the eighteenth year of Tiberius Caesar, while Rufus and Roubellion were Consuls."
Apostolic Constitutions (circa A.D. 70-250)
The Apostolic Constitutions are a compilation, whose material is derived from early sources differing in age AND different early writers during apostolic age. he said..⏬
" Brethren, observe the festival days; and first of all the birthday which you are to celebrate on the twenty-fifth of the ninth month; after which let the Epiphany be to you the most honoured, in which the Lord made to you a display of His own Godhead,." (Apostolic Constitutions , Book V, Section 3, Chapter XIII)
Take Note: This ninth month counting from Nisan (April) is Casleu in the Jewish calendar. Transferred to our Roman calendar, this ninth month answers to December.
Now, let us compare and see the contradicting year interval between the two (Nativity of Jesus VS. Sol Invictus), in which didn't even meet nor coincided: ⏬
- Dec.25 "Jesus nativity" was first used (70–250 A.D) by early Christians
ஏதேன் தோட்டத்தில் மரம் யாருக்கு?
https://youtu.be/c4fwGbDq8NE
this video gives a clear depiction of the tree of life and tree of deathwhat is fruit of knowledge..?what is life and what is deathwhat does the tree represent?
ஏதேன் தோட்டத்தில் நடந்து என்ன?
https://youtu.be/MlSIOAd4hkw
பிரிவினை சபைகள் தவறாக பயண்படுத்தும் எசாயாவின் புரிதலை உடைக்கும் புதிய புரிதல்.. பைபிள் ஆதாரத்துடன் only for selected people
பைபிள் தமிழில் விவிலியம் இவ் சொல்லின் தோற்றமும் பொருளும்...
#01..பிப்ளோஸ் என்பது லெபனான் நாட்டிலுள்ள ஒரு துறைமுகப் பட்டிணம். புத்தகம் செய்யப்பயன்படும் #பாப்பிரஸ் என்ற நாணல் புல் ஓலை விற்கப்பட்ட இடம் இது. இந்த பாப்பிரஸ் என்றவார்த்தை பேப்பர் (Paper) ஆயிற்று. பாப்பிரஸ் விற்கப்பட்ட `பிப்ளோஸ்’ என்ற நகரத்தின் பெயரால் Biblion - Book - புத்தகம் ஆயிற்று. விவிலியம் என்ற சொல்லின் மூலம் “Biblion” என்ற கிரேக்க சொல்லாகும்.*இச்சொல்லிற்கு`புத்தகம்’ அல்லது `சுருள்’ என்று பொருள்.
ஒருமைச்சொல் - Biblion, பன்மைச்சொல் Biblia. இந்த பன்மைச்சொல் இலத்தீன் மொழியில் ஒருமைச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. Biblia =Book; இந்த இலத்தீன் வார்த்தையை வேறு ஐரோப்பிய மொழிகளில் தமக்கு சொந்தமாக்கிக் கொண்டன.
(உம்) Bible (English), Biblia (Italian), Bibel (German), Bible (French)..
#2. விவிலியத்தின் வேறு பெயர்களும் அவற்றின் தோற்றமும் பொருளும்
(i) Scripture- எழுதப்பட்டது (இலத்தீன் - - Scriptura).
(ii) Testament - - உடன்படிக்கை; (லத்தீன்Testamentum);
** பழைய ஏற்பாடு (உடன்படிக்கை):கடவுளுக்கும் பழைய இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே உள்ளது;
** புதிய ஏற்பாடு(உடன்படிக்கை): கடவுளுக்கும் புதிய இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நிலவுவது.
(iii) மேலும் தமிழில்: வேதாகமம், விவிலியம்,திருமறை நூல், திருநூல்.
#3. விவிலியம் எவ்வாறு ஒரே சமயத்தில் ஒரு புத்தகமாகவும், பல புத்தகங்களாகவும் அமைந்துள்ளது???
விவிலியம் ஒரு புத்தகம், ஏனென்றால்,
- அதன் மூல ஆசிரியர் - கடவுளே
- அதன் அடிப்படை நோக்கம் ஒன்றே -மனிதனின் ஞான வளர்ச்சி
- அதன் மையப்பொருள் - மீட்பின் வரலாறுமட்டுமே.
விவிலியம் பல புத்தகங்களின் தொகுப்பு. ஏனெனில்,
- இது 73 புத்தகங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது;
எனவே இதை ஒரு ``நூலகம்” எனலாம்.
- மனித எழுத்தாளர் பலர்.
- ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு தனிநோக்கமும், பொருளும் உண்டு
உதாரணத்திற்கு... யோசுவா நூல்
பொருள்: கானான் நாட்டைப் பெறுதல் (போராட்டம் - வெற்றி)
நோக்கம்: கடவுள் பிரமாணிக்கமுள்ளவர்; தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதைக்காட்டல்.
தொடரும்...
https://www.facebook.com/831483023729075/posts/1491689527708418/
the truth behind the creation
https://www.facebook.com/831483023729075/posts/1483519655192072/
பிரிவினை சபைகளை சேர்ந்த நீங்கள், கத்தோலிக்க திருச்சபையை முற்றுமழுதாக நிராகரிக்கும் அதேவேளை, நீங்கள் நிராகரிக்கும் அதே கத்தோலிக்க திருச்சபை முழுமையான அதிகாரத்தோடு, தனித்தனி நிருபங்களாக ஏடுகளாக பிரிந்து கிடந்தவற்றை பைபிள் என்று ஒற்றை புத்தகமாக தொகுத்ததை குறித்து எடுத்த முடிவை தெரிந்தோ தெரியாமலோ ஏற்கிறீர்கள்..ஏற்கவேண்டிய தேவையும் உள்ளது.
நீங்கள் திருச்சபையை இழிவுபடுத்தும் அதே வேளை, அதே கத்தோலிக்க திருச்சபை இதுதான் இறை வார்த்தை என அறிவித்ததையும், தெரிந்தோ தெரியாமலோ இவ்வாறான ஒரு நிலையிலேயே மதிப்பிடுகிறீர்கள்..
உங்கள் வாத அடிப்படையில் சில #அடிப்படை வாதங்களை உங்களுக்கு முன்வைக்கிறேன்..
*வாதம் #01
கத்தோலிக்க திருச்சபை உண்மையில்லை, நாங்கள்தான் உண்மையான ஆதி திருச்சபை என கூறிக்கொள்ளும் நீங்கள், கத்தோலிக்க திருச்சபையின் பைபிள் தொகுப்பு குறித்த முடிவை தள்ளி வைத்துவிட்டு, எந்த அடிப்படையில் தற்போது நீங்கள் வைத்திருக்கும் பைபிளில் உள்ள புத்தகங்கள், அதிலும் குறிப்பாக புதிய ஏற்பாடு புத்தகங்கள் ஒவ்வொருவொன்றும் உண்மையில் இறைவார்த்தை அல்லது ஈர்க்கப்பட்ட (inspired) வார்த்தை என்பதை எந்த அடிப்படையில் நீங்கள் ஏற்கிறீர்கள்!???
அவ்வாறு இவை உண்மையில் இறைவார்த்தைதான் என்பதை உங்களால் நிருபிக்க முடியுமா?? முடிந்தால் தன்னிச்சையாக இவை இறைவாரத்தைதான் என்பதை நிருபியுங்கள்...
அத்துடன் நீங்கள் வைத்திருக்கும் 27 புதிய ஏற்பாடு நூல்கள் எழுதப்பட்ட சம காலத்தில் எழுதப்பட்ட பல நூற்றுக்கணக்கான புத்தகங்கள் நிருபங்கள் உள்ள நிலையில் அவற்றை நீங்கள் ஏன் இறைவார்த்தை அல்லது ஈர்க்கப்பட்ட வார்த்தை என உங்கள் பைபிளில் இணைக்கவில்லை...
பயப்படுகிறீர்களா???
உதாரணத்திற்கு யூதாவின் நிருபம், ஏனோக்கின் புத்தகம், பர்னபா சவிஷேசம், தோமாவின் நற்செய்தி, பேதுரு நற்செய்தி, பவுல் பணிகள் என இன்னும் பல நீங்கள் தற்போது வைத்திருக்கும் புதிய ஏற்பாட்டில் உள்ளடக்கப்படாத நிருபங்கள் உள்ளன..அவற்றை எந்த அடிப்படையில் நிராகரிக்கிறீர்கள்??
கத்தோலிக்க திருச்சபை தொகுத்த ஒன்றை யாரால் உண்மையில் புரிந்துகொள்ள முடியும்.. ஒரு பிரிவினை போதகரினாலா அல்லது அதே கத்தோலிக்க திருச்சபையை சார்ந்த குருக்களினாலா??
வாதம் #02
புதிய ஏற்பாடு காலத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள் என்ற அடிப்படையில் நூற்றுக்கணக்கானவை இருக்க அவற்றில் இருப்பத்து ஏழு (27) புத்தகத்தை (அதில் நான்கு நற்செய்தி உட்பட) கத்தோலிக்க திருச்சபை தூய ஆவியானவர் துணையோடு இதுதான் இறைவார்த்தை என்று கூறி ஒற்றை புத்தகமாக (புதிய ஏற்பாடு) தொகுத்ததை ஏற்றுக்கொண்ட நீங்கள், #அதே #தூய #ஆவியானவர் துணையோடு அதே திருச்சபை பழைய ஏற்பாட்டுகால புத்தகங்கள் என்ற அடிப்படையில் நாற்பத்து ஆறு (46) புத்தகத்தை "பழைய ஏற்பாடு" என்று தொகுத்து அறிவித்ததை ஏன் மறுதலிக்கிறீர்கள் அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை..???
பிரிவினை சபைகளே!!
புதிய ஏற்பாட்டில் சரியான முடிவை திருச்சபை மூலமாக கொடுத்த தூய ஆவியானவர் முடிவை ஏற்ற உங்களால்,அதே தூய ஆவியானவரால் பழைய ஏற்பாட்டில் சரியான முடிவை கொடுக்கவில்லை என்கிறீர்களா???
உங்கள் பதில் "ஆம்" என்றால் நீங்கள் இயேசுவும் தூய ஆவியானவருக்கும் எதிராக நிற்பதாகிறது..
ஏனென்றால் உண்மையில் புதிய ஏற்பாட்டில் தொகுப்பை நம்பியது போல பழைய ஏற்பாட்டிலும் நம்பிக்கை கொண்டு ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்..
உங்கள் பதில "இல்லை" என்றால் ஏன் கத்தோலிக்க திருச்சபையின் பழைய ஏற்பாட்டில் உள்ள பைபிளில் உள்ள புத்தகங்களில் சிலவற்றை அகற்றினீர்..தூய ஆவியானவரின் முடிவில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா??
நீங்கள் அடிப்படையில் தூய ஆவியானவருக்கு எதிராக நிற்கிறீர்கள்..இயேசுவுக்கும் எதிராக நிற்கிறீர்கள்...
அடிப்படையில் இயேசுவுக்கு எதிராக நின்றுகொண்டு நான் இயேசுவுக்கானவன் என்பது வேடிக்கையானது மட்டுமல்ல தப்பறையும் கூட...
Knowing God...
https://youtu.be/yNSeAfs8l60
கத்தோலிக்க கிறிஸ்தவம் கடவுளை எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறது என்பதை விளக்கும் கானொளி குறிப்பு : "கடவுள்" ஒரு .....
https://www.facebook.com/831483023729075/posts/1455485714662133/?sfnsn=wiwspmo
தெரிந்துகொள்ளுங்கள்,...
"வில்லியம் டின்டேலின்" (William Tyndale) பல பிரிவினை சபையே சேர்ந்தோரின் ஒரு கருத்துக்கு பதிலை இங்கு எழுதுகிறேன்..அடிக்கடி அவர்கள் கூறுவது பைபிளையும் அதை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்த வில்லியம் டின்டேலினை எரித்தது கத்தோலிக்க திருச்சபை என்று..
உண்மையில் கொன்றது அவர்களின் சக புரட்டஸ்தாந்து மன்னனே..
அவர்களுக்கு இப் பதில்...
நற்செய்திகளின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு வரலாற்றாசிரியர் பேடேயினால் (bede) கி.பி 735 இல் முதலில் எழுதப்பட்டது.
முழு பைபிளின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு கி.பி 1380 இல் ஜான் வைக்லிஃப் (John Wycliffe) என்பவரால் எழுதப்பட்டது. கி.பி 1535 ஆம் ஆண்டில் வில்லியம் டின்டேலின் புதிய ஏற்பாடு ஆங்கில மொழிபெயர்ப்பு, அதில் உள்ள கடுமையான பிழைகள் (serious errors) காரணமாக அவர் ஒரு கிறிஸ்தவத்துக்கு எதிரானவராக (heretic) கருதப்பட்டார்.
பலர் இவ்வாறு எழுத முயற்சித்தார்கள்..வில்லியம் டின்டேல்தான் #முதலில் எழுதினார் என்பது #வரலாற்றுப் #பொய்...
**முதல் அதிகாரப்பூர்வ ஆங்கில கத்தோலிக்க மொழிபெயர்ப்பு பைபிள் கி.பி 1582 இல் ரைம்ஸில் (Rheims) இல் உள்ள டூவாய் ஆங்கிலக் கல்லூரி(Douai English College) உறுப்பினர்களால் வெளியிடப்பட்டது.
கி.பி 1521இல் கேம்பிரிட்ஜை விட்டு வெளியேறிய பிறகு, அவர் லிட்டில் சோட்பரியில் ஒரு சேப்ளினாக ஆனார், ஆனால் மிக குறுகிய காலத்தில் அவரது தீவிரமான கண்ணோட்டங்களுக்காக (radical viewpoints) சக தேவாலயத்தினரால் விமர்சிக்கப்பட்டார். கி.பி 1523ஆம் ஆண்டில், பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம் என்ற நம்பிக்கையில் லண்டனுக்குப் புறப்பட்டார். இருப்பினும், அங்கு எந்தவொரு ஆதரவையும் தேவையான உதவிகளையும் பெற அவர் மிக சிரமப்பட்டார், எனவே அவர் ஹம்பேர்க் புறப்பட்டார்.
அவர் அங்கு இருந்த காலத்தில், மார்ட்டின் லூதரைப் பார்வையிட்டார், மேலும் இறை வசனங்களைப் பற்றி விரிவாக எழுதியதோடு பைபிளின் மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்தார்.
"கடவுளின் வார்த்தையின் ஒரு எழுத்தையும் எனது மனசாட்சிக்கு எதிராக நான் ஒருபோதும் மாற்றவில்லை, இதற்காக பூமியில் உள்ள அனைத்து மரியாதை, இன்பம், அல்லது செல்வம் என்று எதுவாக இருந்தாலும் எனக்கு வழங்கப்படலாம்”
-வில்லியம் டின்டேலின்-
கி.பி 1525 ஆம் ஆண்டில், முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு வோர்ம்ஸில் (Worms) வெளியிடப்பட்டது. கி.பி 1526 ஆண்டளவில் அதன் பிரதிகள் இங்கிலாந்திற்கு கடத்தப்பட்டன, அங்கு அவை உடனடியாகவே பிழையான மொழிபெயர்பு, என்று கண்டிக்கப்பட்டு, பொதுவெளியில் அவ் பிரதிகள் எரிக்கப்பட்டன.
கார்டினல் வால்சி கி.பி 1529ஆம் ஆண்டில் டின்டேலை ஒரு விசுவாசத்துக்கு எதிரானவர் என்று கண்டித்தார்
*** the same year that he was arrested due to his failure to secure annulment of King Henry's marriage to Catherine of Aragon from the Pope
கி.பி 1530 ஆம் ஆண்டில், எட்டாம் ஹென்றி மன்னனின் விவாகரத்தை விமர்சிக்கும் ஒரு கட்டுரையை எழுதினார். மன்னன் அதைக் கண்டுபிடித்ததும், அவன் கோபமடைந்து அவரை கைதுசெய்ய முயன்றான்..
இவ் மன்னன் வேறுயாருமல்ல இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் எனற காரணத்துக்காக திருச்சபையை விட்டு விலகி புதிய சபையை தொடங்கியவன்...
பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தபின், கி.ப 1535 இல், டின்டேல் காட்டிக் கொடுக்கப்பட்டு பெல்ஜியத்தில் (Belgium) இங்கிலாந்து மன்னனின் அரசை சார்ந்த அரசிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பிரஸ்ஸல்ஸில் (Brussels) உள்ள ஒரு கோட்டையில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, அவர்களால் தீர்ப்பிடப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு எரிவூட்ப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அவரது கடைசி வார்த்தைகள் என்ன தெரியுமா??
"கடவுளே! இங்கிலாந்து மன்னனின் கண்களைத் திறந்தருளும்"
“Lord! Open the King of England’s eyes”
உண்மையில் தன் மத கொள்கைக்கு எதிரினவர் என்ற அடிப்படையில் இரண்டாவது திருமணம் செய்யவேண்டும் என்பதற்காகவே புதிய பிரிவினை சபைப்பிரிவை ஆரம்பித்த எட்டாவது ஹென்றி மன்னனும் அவன் சார்ந்த பேரரசு மே..
தற்போதைய பாஸ்டர்கள் சொல்வதுபோல கத்தோலிக்க திருச்சபை அல்ல...தற்போது இப் பாஸ்டர்கள் சொல்வது பச்சைப்பொய்.. பைபிளை எரித்து என்பதும் பிழையானது...உண்மையான பைபிளை எரிக்கவில்லை...பிழையாக தங்கள் விருப்பம்போல தவறாக மொழிபெயர்பு செய்யப்பட்ட, பிழையான பைபிள் மொழிபெயர்ப்பை எரித்தது..
தற்போதும் கூட ஒருவர் உண்மையான பைபிளை தங்களுக்கு தெரிந்ததுபோல, விரும்பிய வகையில் எழுதி இதுதான் சரி என உங்களிடம் கொடுத்தால் அதை பயன்படுத்துவீர்களா அல்லது அது போலி என தெரிந்து குப்பையில் போடுவீர்களா..அதைத்தான் அன்று திருச்சபை செய்தது...
பிரிவினை சபைகள் பாஸ்டர்கள் உண்மையில் வரலாறுகளை ஒழுங்காக பார்ப்பதில்லை..பார்த்தால் அவர்களுக்கும் வியாபாரம் இல்லை..
கேத்தரினை விவாகரத்து செய்ததற்காக, அவரை விமர்சித்ததற்காக வில்லியம் டின்டேலை, அவரின் சக புராட்டஸ்தாந்து பிரிவினை சபையை சேர்ந்த எட்டவது ஹென்றி மன்னனே கழுத்தை நெரித்து எரித்து கொன்றான்...
https://www.facebook.com/831483023729075/posts/1455384391338932/?sfnsn=wiwspmo
எச்சரிக்கை....
இயேசு கடவுள் அல்ல அவரை ஆராதனை செய்வது தவறு என கூறிக்கொண்டு "கிறிஸ்துவின் சபை" என்றும் "ஜெகோவா சாட்சிகள்" என்றும் இன்னும் பலர் கிளம்பிவிட்டனர்.. இவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை..கையில் குரான் இல்லை மாறாக பைபிளை வைத்திருப்பார்கள் அவ்வளவுதான்...
அன்பின் கத்தோலிக்க பிள்ளைகளே எச்சரிக்கையாக இருங்கள்...
இயேசுவே ஆண்டவர்...மரியே வாழ்க..
திருப்பூர் சாலமனின் பொய் குற்றச்சாட்டான சிலை வழிபாடு குறித்த முடிவுரை கத்தோலிக்கர்கள் என்றுமே சிலை வைப்பதில....
https://www.facebook.com/831483023729075/posts/1451448545065850/
reply to Salaman's questions Idol worship 2.1 திருப்பூர் சாலமனுக்கான பதில்கள்.. சிலை வழிபாடு 2.1
Be the first to know and let us send you an email when Tamil Catholic FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Tamil Catholic FM:
Thunba Nerathilum... God Bless You All... :) Song 1 - Thunba Nerathilum Iraiva, thunba nerathilum Enathu inbam neeyae Vittu piriyatha uravum neeyae - 2 Unthan pugal paaduvaen Unthan thunai naaduvaen Unthan irai vaarthaiyil Naalum kalipuruvaen Karam patri nadri kooruvaen Yesuvin anbinil naan vaaluvaen - Iraiva Paavi endru ennai arindhum Paavi enakkai siluvai sumanthu - 2 Enthan pavam pokkiya deivam Yesu deivam neer mattum pothum - Iraiva Kannil kanneer valikindra poluthu Thaangi pidikum karangal unathu - 2 Enthan thuyaram pokkiya deivam Yesu deivam neer mattum pothum - Iraiva Kollai noigal aatkollum ulagil Unathu uraiyae noitheerkum marunthu - 2 Enthan noigal pokkiya deivam Yesu deivam neer mattum pothum - Iraiva
Happy Labours Day to all. You are listening to Labours Day prayer. May god bless you all.
Mother Mary Novena & Rosary In Malayalam | Tamil Catholic FM. May God Bless You All...!
Want your business to be the top-listed Media Company?