Bheeman Media

Bheeman Media தேசமே தெய்வம்

ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்த் கார்ல்சன் மோதி கையிலிருந்து போன பட்டம்.. இன்று குகேஷ் மூலம் மீண்டும் நம் நாட்டிற்கு வருது.. இர...
13/12/2024

ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்த் கார்ல்சன் மோதி கையிலிருந்து போன பட்டம்.. இன்று குகேஷ் மூலம் மீண்டும் நம் நாட்டிற்கு வருது.. இரண்டரை மில்லியன் டாலர் பரிசுத்தொகையோடு.. கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் இருபது கோடி ரூபாய் இருக்கலாம்.. பணம் இரண்டாம்பட்சம்.. ஒரு இந்தியராக மொத்த நாடும் கொண்டாடித்தீர்க்க வேண்டிய விஷயம்...

அறிவு மற்றும் கணித்தலின் பெரும் அளவுகோலாக கருதப்படும் சதுரங்க விளையாட்டில் வெற்றிகளை குவிப்பதின் மூலம் ஆனந்த் மற்றும் குகேஷ் போன்ற வீரர்கள் தமிழர்களையும் இந்தியர்களையும் பிறர் தலைநிமிர்ந்து பார்க்க வைக்கின்றனர்..

இச்சாதனையை பெற்ற உலகின் 18 வயதே நிரம்பிய இளம் வீரர் என்கிற சாதனையையும் நிகழ்த்திய தம்பிக்கு இதயம் கனிந்த பாராட்டு.

நல்லவை பகிற்வோம் நால்வருக்கு..

ஹிந்துக்களுக்கான சிறைச் சாலை இன்னும் காலம் காலமாக நடைப் பெற்றுக் கொண்டேதான் இருக்கிறது.முகாலயர் + ஆங்கிலேயர் காலம் இன்னு...
01/12/2024

ஹிந்துக்களுக்கான சிறைச் சாலை இன்னும் காலம் காலமாக நடைப் பெற்றுக் கொண்டேதான் இருக்கிறது.முகாலயர் + ஆங்கிலேயர் காலம் இன்னும் முடியவில்லையா..?

தேசமே தெய்வம் இந்நாட்டு மக்கள் அனைவரும் நம் மக்கள் என்று பாரமல் இனவேறி தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் அனைவரும் வாரீர் ...
30/11/2024

தேசமே தெய்வம் இந்நாட்டு மக்கள் அனைவரும் நம் மக்கள் என்று பாரமல் இனவேறி தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் அனைவரும் வாரீர் ஹிந்து மக்களை காப்பீர்.

தேசமே தெய்வம்

30/11/2024
13/01/2024

ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏

26/08/2023

https://www.facebook.com/bheeman.media

நல்லவை பகிர்வோம் நால்வருக்கு

தமிழர் என்று தமிழினத்திற்கு மட்டும் பெருமை சேர்ப்பதற்காகவே இந்த செய்தியாளர் சந்திப்பு இருக்கிறது தமிழர் மட்டும் பாடுபடவில்லை பாரதியர்கள் ஒரு குழுவாக சேர்ந்துதான் வெற்றி பெற்றுள்ளோம்...

அதில் தமிழர் ஒருவரும் அடங்குவர்.

அவரே கேட்கின்ற கேள்விகளுக்கு
தெளிவாக புரிந்து கொண்டு பதில் அளித்திருக்கிறார் இதைவிட வேறென்ன வேண்டும்

வந்தே மாதரம்

நல்லவை பகிர்வோம் நால்வருக்கு...இப்படி ஒரு மையம் இருப்பதால் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் இந்த தகவலை அனைவரும் மற்றவர்களுக...
22/08/2023

நல்லவை பகிர்வோம் நால்வருக்கு...

இப்படி ஒரு மையம் இருப்பதால் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் இந்த தகவலை அனைவரும் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வோம் பெண்கள், குழந்தைகள் இரவில் ஒன் ஸ்டாப் சென்டர் மூலம் பயன்பெறுவர்

21/08/2023

வரும் காலங்களில் இப்படி ஒரு உதவி தேவைப்படும் என ஓர் விளம்பரம் என் மனதில் என்னவென்றால் அவசியம் இந்த வேலை வாய்ப்புக்கு அதிக நபர்கள் பிற்காலத்தில் தேவைப்படுவார்கள் இப்பொழுதே இதற்கான முன் தயாரிப்புகள் இளைஞருக்கு தேவை...

22/03/2023

அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள்....

யுகாதி விழா என்றாலே யுகம் ஆதி என்று பொருள்,

ஆதி காலத்தில் உருவ வழிபாட்டிற்கு முன்பு சந்திரனையும், சூரியனையும் மையமாக வைத்து வழிபட்டவர்கள் நம் முன்னோர்கள்.,

இவ்வழி பாட்டினை இன்று வரை நமக்கு யுகாதி விழா என்றும் பெயரிலும், தமிழ் புத்தாண்டு விழா என்றும் நமக்கு கொடுத்துள்ளார்.,

இழையுதிர் காலம் முடிந்து வசந்த காலம் ஆரம்பிக்க கூடிய நாலே யுகாதி விழா,

இந்த யுகாதி விழாவில் வசந்த காலத்தில் எப்படி அனைத்து மரம், செடி ,கொடிகள் துளிர் விடுகிறதோ, அதுபோல நமது மனதிலும் புதிய சிந்தனைகளும், நல்ல நெறிமுறையான வாழ்க்கை முறையும், துளிர் விட வேண்டும்.

அதுவே தொடர்ந்து நம் வாழ்வில் பின்பற்றக் கூடியதாக அமைய பெறுவதே இந்த யுகாதி விழாவின் சிறப்பு.

அனைவருக்கும் வாழ்வில் இன்ப, துன்பங்கள் கலந்து வரக்கூடிய வாழ்க்கையாக அமைகிறது, இன்பத்தையும் துன்பத்தையும் ஏற்றுக் கொண்டு குடும்ப நெறிமுறைகளையும்,சமுதாய நெறிமுறைகளையும் நல்லொழுக்கப்படுத்துவதற்காக நமது வாழ்க்கை முறை அமைய வேண்டும்,இந்த யுகாதி விழாவில்.

(இன்றைய உணவில் இனிப்பும் கசப்பும் கலந்த பிரசாதம் சாப்பிடுவது மிக சிறப்பு)

இந்த வழிமுறையை, நம் வாழ்வில் பின்பற்றி, அடுத்து வரக்கூடிய சந்ததிகளுக்கு கொடுக்க வேண்டும்.

அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள்

11/01/2023
கொடி காத்த குமரன் 28 வயதில்....இன்றய இளைஞர்களின் மனதில் பதிய வைக்க வேண்டியது குமரனின் வரலாறு..
11/01/2023

கொடி காத்த குமரன் 28 வயதில்....
இன்றய இளைஞர்களின் மனதில் பதிய வைக்க வேண்டியது குமரனின் வரலாறு..

https://www.facebook.com/bheeman.media யார் ஏழை...?ஒரு பணக்கார சிறுவனின் நண்பர்கள்,அவர்கள் ஏழைகள்...அவன் அப்பாவுக்கு இது...
29/05/2022

https://www.facebook.com/bheeman.media

யார் ஏழை...?

ஒரு பணக்கார சிறுவனின் நண்பர்கள்,அவர்கள் ஏழைகள்...

அவன் அப்பாவுக்கு இது பிடிக்கவில்லை, தன்னுடைய மகனுக்கு ஏழை நண்பர்கள் இருப்பதை வெறுக்க வேண்டும் என அதற்கு ஒரு வழி செய்தார்...

அவர்களின் வாழ்க்கையை உணர்த்துவதுதான் நல்ல முடிவு என்று எண்ணினார்..,

அப்பாவும் மகனும் ஒரு ஏழை குடியிருப்பில் ஒருநாள் தங்கினார்கள், மறுநாள் திரும்பும்போது அப்பா கேட்கிறார்...

நம் வாழ்க்கைக்கும் அவர்கள் வாழ்க்கைக்கும் எவ்வளவு வித்தியாசம் பார்த்தாயா என்று...

மகன் சொன்னான் ஆமாம் அப்பா, நம் வீட்டில் ஒரு நாய்தான் வளர்க்கிறோம் அவர்கள் வீட்டில் நான்கு நாய்கள் வளர்கிறார்கள், நம் வீட்டில் ஒரு நீச்சல் குளம் இருக்கிறது, அவர்கள் வீட்டுக்குப் பின்னால் பெரிய நதியே இருக்கிறது, நம் வீட்டில் விளக்குகள் மின்னுகின்றன, அவர்கள் வீட்டில் நிலாவும் நட்சத்திரங்களும் மின்னுகின்ற, நம்மை விட அவர்கள் பணக்காரர்கள் அப்பா....? என்று கேட்கிறான்...

எதுவும் பார்வையில்தான் இருக்கிறது...
குறைகளை நிறைகளாக பார்ப்பதில் தான் வாழ்க்கை இருக்கிறது...

https://www.facebook.com/bheeman.media தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்..!வானொலிப் பேட்டியொன்றில்...நியாயமாக உங்க...
17/05/2022

https://www.facebook.com/bheeman.media

தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்..!

வானொலிப் பேட்டியொன்றில்...

நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்...?

நான் கவலையே படமாட்டேன் சார்.

ஒரு கட்டடம் கட்டும் போது,

சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி,

குறுக்குப் பலகைகள் போட்டு,

அதன் மேல பல சித்தாள்கள் நின்னு,

கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு,

அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு,

கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து,

கிரஹப் பிரவேசத்தன்று

கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ,

அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால்,

எங்கயோ மறைத்து வைத்துவிட்டு,

வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.

இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா?

அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும்.

ஆடுமாடுகள் மேயும்.

குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள்.

பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.

எங்கோ மூலையில் மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.

அடுத்த கட்டடம் கட்டுவதற்கு ஏணியாக தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!

*நான் வாழை அல்ல...! சவுக்குமரம்.!

நகைச்சுவை நடிகர் நாகேஷ்...

நல்லவை பகிர்வோம் நால்வருக்கு...

https://www.facebook.com/bheeman.media சுயமுன்னேற்ற சிந்தனையாளர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவருடைய கைகளில் "ஆயி...
05/05/2022

https://www.facebook.com/bheeman.media

சுயமுன்னேற்ற சிந்தனையாளர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவருடைய கைகளில் "ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்று"... "இது யாருக்கு வேண்டும்?" கேட்டதும் அனைவரும் கை உயர்த்தினார்கள்...

கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்லிவிட்டு அதை நன்றாக கசக்கினார்.. இப்போது யாருக்கு வேண்டும் அனைவர் கைகளிலும் மீண்டும் உயர்ந்தன. காலில் போட்டு நன்றாக மிதித்தார் அழுக்கும், புழுதியும் அப்படிக் கொண்டன. "இன்னும் இது வேண்டுமா உங்களுக்கு..? ஆம் அனைவரும் கையை உயர்த்தினர்...

பேச்சாளர் சொன்னார் நண்பர்களே கசக்கினாலும், மிதித்தாலும் இதன் மதிப்பு குறையாது. சில நேரங்களில் வாழ்க்கை உங்களை இப்படித்தான் கசக்கிறது. காலில் போட்டு மிதிக்கிறது. உடனே நீங்கள் உங்கள் மதிப்பை குறைத்து விட்டதாகக் கவலைப்படுகிறீர்கள்.

உங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள்..! உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.

துணிவு நிரந்தரமானால்..! தோல்வி நிரந்தரமல்ல..!

நல்லவை பகிர்வோம் நால்வருக்கு

Address

Udayapatti
Salem
636140

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+918838733778

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bheeman Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bheeman Media:

Videos

Share