13/01/2024
ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏
தேசமே தெய்வம்
ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏
https://www.facebook.com/bheeman.media
நல்லவை பகிர்வோம் நால்வருக்கு
தமிழர் என்று தமிழினத்திற்கு மட்டும் பெருமை சேர்ப்பதற்காகவே இந்த செய்தியாளர் சந்திப்பு இருக்கிறது தமிழர் மட்டும் பாடுபடவில்லை பாரதியர்கள் ஒரு குழுவாக சேர்ந்துதான் வெற்றி பெற்றுள்ளோம்...
அதில் தமிழர் ஒருவரும் அடங்குவர்.
அவரே கேட்கின்ற கேள்விகளுக்கு
தெளிவாக புரிந்து கொண்டு பதில் அளித்திருக்கிறார் இதைவிட வேறென்ன வேண்டும்
வந்தே மாதரம்
நல்லவை பகிர்வோம் நால்வருக்கு...
இப்படி ஒரு மையம் இருப்பதால் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் இந்த தகவலை அனைவரும் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வோம் பெண்கள், குழந்தைகள் இரவில் ஒன் ஸ்டாப் சென்டர் மூலம் பயன்பெறுவர்
வரும் காலங்களில் இப்படி ஒரு உதவி தேவைப்படும் என ஓர் விளம்பரம் என் மனதில் என்னவென்றால் அவசியம் இந்த வேலை வாய்ப்புக்கு அதிக நபர்கள் பிற்காலத்தில் தேவைப்படுவார்கள் இப்பொழுதே இதற்கான முன் தயாரிப்புகள் இளைஞருக்கு தேவை...
அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள்....
யுகாதி விழா என்றாலே யுகம் ஆதி என்று பொருள்,
ஆதி காலத்தில் உருவ வழிபாட்டிற்கு முன்பு சந்திரனையும், சூரியனையும் மையமாக வைத்து வழிபட்டவர்கள் நம் முன்னோர்கள்.,
இவ்வழி பாட்டினை இன்று வரை நமக்கு யுகாதி விழா என்றும் பெயரிலும், தமிழ் புத்தாண்டு விழா என்றும் நமக்கு கொடுத்துள்ளார்.,
இழையுதிர் காலம் முடிந்து வசந்த காலம் ஆரம்பிக்க கூடிய நாலே யுகாதி விழா,
இந்த யுகாதி விழாவில் வசந்த காலத்தில் எப்படி அனைத்து மரம், செடி ,கொடிகள் துளிர் விடுகிறதோ, அதுபோல நமது மனதிலும் புதிய சிந்தனைகளும், நல்ல நெறிமுறையான வாழ்க்கை முறையும், துளிர் விட வேண்டும்.
அதுவே தொடர்ந்து நம் வாழ்வில் பின்பற்றக் கூடியதாக அமைய பெறுவதே இந்த யுகாதி விழாவின் சிறப்பு.
அனைவருக்கும் வாழ்வில் இன்ப, துன்பங்கள் கலந்து வரக்கூடிய வாழ்க்கையாக அமைகிறது, இன்பத்தையும் துன்பத்தையும் ஏற்றுக் கொண்டு குடும்ப நெறிமுறைகளையும்,சமுதாய நெறிமுறைகளையும் நல்லொழுக்கப்படுத்துவதற்காக நமது வாழ்க்கை முறை அமைய வேண்டும்,இந்த யுகாதி விழாவில்.
(இன்றைய உணவில் இனிப்பும் கசப்பும் கலந்த பிரசாதம் சாப்பிடுவது மிக சிறப்பு)
இந்த வழிமுறையை, நம் வாழ்வில் பின்பற்றி, அடுத்து வரக்கூடிய சந்ததிகளுக்கு கொடுக்க வேண்டும்.
அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள்
கொடி காத்த குமரன் 28 வயதில்....
இன்றய இளைஞர்களின் மனதில் பதிய வைக்க வேண்டியது குமரனின் வரலாறு..
https://www.facebook.com/bheeman.media
யார் ஏழை...?
ஒரு பணக்கார சிறுவனின் நண்பர்கள்,அவர்கள் ஏழைகள்...
அவன் அப்பாவுக்கு இது பிடிக்கவில்லை, தன்னுடைய மகனுக்கு ஏழை நண்பர்கள் இருப்பதை வெறுக்க வேண்டும் என அதற்கு ஒரு வழி செய்தார்...
அவர்களின் வாழ்க்கையை உணர்த்துவதுதான் நல்ல முடிவு என்று எண்ணினார்..,
அப்பாவும் மகனும் ஒரு ஏழை குடியிருப்பில் ஒருநாள் தங்கினார்கள், மறுநாள் திரும்பும்போது அப்பா கேட்கிறார்...
நம் வாழ்க்கைக்கும் அவர்கள் வாழ்க்கைக்கும் எவ்வளவு வித்தியாசம் பார்த்தாயா என்று...
மகன் சொன்னான் ஆமாம் அப்பா, நம் வீட்டில் ஒரு நாய்தான் வளர்க்கிறோம் அவர்கள் வீட்டில் நான்கு நாய்கள் வளர்கிறார்கள், நம் வீட்டில் ஒரு நீச்சல் குளம் இருக்கிறது, அவர்கள் வீட்டுக்குப் பின்னால் பெரிய நதியே இருக்கிறது, நம் வீட்டில் விளக்குகள் மின்னுகின்றன, அவர்கள் வீட்டில் நிலாவும் நட்சத்திரங்களும் மின்னுகின்ற, நம்மை விட அவர்கள் பணக்காரர்கள் அப்பா....? என்று கேட்கிறான்...
எதுவும் பார்வையில்தான் இருக்கிறது...
குறைகளை நிறைகளாக பார்ப்பதில் தான் வாழ்க்கை இருக்கிறது...
https://www.facebook.com/bheeman.media
தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்..!
வானொலிப் பேட்டியொன்றில்...
நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்...?
நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது,
சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி,
குறுக்குப் பலகைகள் போட்டு,
அதன் மேல பல சித்தாள்கள் நின்னு,
கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு,
அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு,
கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.
கட்டடம் முடிந்து,
கிரஹப் பிரவேசத்தன்று
கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ,
அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால்,
எங்கயோ மறைத்து வைத்துவிட்டு,
வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா?
அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும்.
ஆடுமாடுகள் மேயும்.
குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள்.
பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.
எங்கோ மூலையில் மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.
அடுத்த கட்டடம் கட்டுவதற்கு ஏணியாக தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!
*நான் வாழை அல்ல...! சவுக்குமரம்.!
நகைச்சுவை நடிகர் நாகேஷ்...
நல்லவை பகிர்வோம் நால்வருக்கு...
https://www.facebook.com/bheeman.media
சுயமுன்னேற்ற சிந்தனையாளர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவருடைய கைகளில் "ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்று"... "இது யாருக்கு வேண்டும்?" கேட்டதும் அனைவரும் கை உயர்த்தினார்கள்...
கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்லிவிட்டு அதை நன்றாக கசக்கினார்.. இப்போது யாருக்கு வேண்டும் அனைவர் கைகளிலும் மீண்டும் உயர்ந்தன. காலில் போட்டு நன்றாக மிதித்தார் அழுக்கும், புழுதியும் அப்படிக் கொண்டன. "இன்னும் இது வேண்டுமா உங்களுக்கு..? ஆம் அனைவரும் கையை உயர்த்தினர்...
பேச்சாளர் சொன்னார் நண்பர்களே கசக்கினாலும், மிதித்தாலும் இதன் மதிப்பு குறையாது. சில நேரங்களில் வாழ்க்கை உங்களை இப்படித்தான் கசக்கிறது. காலில் போட்டு மிதிக்கிறது. உடனே நீங்கள் உங்கள் மதிப்பை குறைத்து விட்டதாகக் கவலைப்படுகிறீர்கள்.
உங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள்..! உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.
துணிவு நிரந்தரமானால்..! தோல்வி நிரந்தரமல்ல..!
நல்லவை பகிர்வோம் நால்வருக்கு
https://www.facebook.com/bheeman.media
சில தவளைகள் கூட்டமாய் போய்க்கொண்டிருந்த..
நான்கு தவளைகள் ஒரு குழிக்குள் விழுந்து விட்டது.. விழுந்துவிட்ட
தவளைகள் எம்பி எம்பி வெளியே வர முயற்சி செய்தன..
மேலே இருந்த தவளைகள் அலறின வேண்டாம்..குதித்து குதித்து செத்து விடுவீர்கள் நிறுத்துங்கள்... இதைக் கேட்ட ஒரு தவளை அதிர்ச்சியில் இறந்து விட்டது...
இரண்டு தவளைகள் மயக்கம் அடைந்து விட்டன... ஒரே ஒரு தவளை தொடர்ந்து குதித்துக் கொண்டிருந்தது வேண்டாம் வேண்டாம் என்று மற்றவை அலறின.. குதித்து குதித்து மேலே வந்து விட்டது தவளை.. மற்ற தவளைகள் வியப்பாய் பார்த்தன, மேலே வந்த தவளை அவர்களுக்கு நன்றி சொன்னது...
உண்மையில் நடந்ததென்ன அந்தத் தவளைக்கு காது கேட்காது மற்ற தவளைகள் உரக்க் கத்தியதை பார்த்து தன்னை உற்சாகப்படுத்துவததாய் இந்த தவளை நினைத்து குதித்து குதித்து ஜெயித்தது..
உங்களை
தளர்ச்சியடையச் செய்யும் வார்த்தைகளுக்கு காது கொடுக்காமல்..
அதைப் பாராட்ட நினைத்தால் போதும் எந்த பள்ளத்திலிருந்து எழுந்து விடலாம்.
நல்லவை பகிர்வோம் நால்வருக்கு
https://www.facebook.com/bheeman.media
கடற்கரை ஒன்றில் சுற்றுலா பயணிகள் கூட்டம்...
அசட்டுத் துணிச்சலுடன் அலட்சியமாய் இளைஞன் ஒருவன் குதித்து கும்மாளம் போட்டுகொண்டு இருந்தான் ஒரு பெரிய அலை வந்து அடித்துக் கொண்டு போனது தண்ணீர் குடித்து தடுமாறினான் ஒருவர் நீந்தி வந்து அந்த இளைஞனை காப்பாற்றினார்....
மயக்கம் தெளிந்த இளைஞன் கண்ணீரோடு கேட்டான் ஐயா.. என் உயிரை காப்பாற்றிய உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன் அந்த மனிதர் சிரித்துக்கொண்டே சொன்னாள் "அடுத்த முறை நான் சந்திக்க நேர்ந்தால் உன்னை ஏன் காப்பாற்றினேன்" என்று வருத்தப் படாத வகையில் "அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து காட்டு" அது போதும்
இழக்க நேரும் போது புரிகிறது வாழ்க்கையின் அருமை
இருக்கும்போதே புரிந்து கொண்டால் மிகவும் நன்மை..
நல்லவை பகிர்வோம் நால்வருக்கு
https://www.facebook.com/bheeman.media
வியட்நாமில் போர் விமானியாக வேலை பார்த்தார் ஒருவர் அவரது விமானத்தை எதிரிப்படை சுட்டது வெளியேறி குதித்தார் விமானி...பாராசூட் விரிந்தது எதிரிகளிடம் சிறைப்பட்டார், ஆறு ஆண்டு காலம் சிறையில் இருந்தார்...தாயகம் திரும்பிய பிறகு குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் மாலை உணவகம் ஒன்றில் இருந்த போது ஒருவன் நெருங்கி வந்தான் நீங்கள் சார்லஸ்பிளம் தானே..! கிட்டி ஹாங்காங் விமானத்தின் விமானி தானே...? வியட்நாம் போரில் விமானம் ஓட்டிப்போனீர்களே..!
ஆமாம்..! உனக்கு எப்படி தெரியும்..?
ஆச்சரியப்பட்டார் சார்லஸ்பிளம் "அன்று விமானத்தில் உங்கள் பாராசூட்டைத் தயார் செய்து வைத்த பணியாளன் நான்தான்" அமைதியாக சொன்னான் அவன்.
துள்ளிக் குதித்தார் சார்லஸ்பிளம் "இவனை பலமுறை பார்த்திருக்கிறேன்! ஒரு புன்னகை கூட புரிந்ததில்லை. பணியாள்தானே என்று அலட்சியப்படுத்ததுவேன். நான் இன்று உயிருடன் வாழ இவன் அல்லவா காரணம் கண்ணீர் பெருக அவனை அணைத்துக் கொண்டார் எளிய பணியாளர்களிடம் இன்முகம் காட்டுங்கள் பெரிய உதவிகளை உங்களுக்கு அவர்கள் செய்யக்கூடும்.....
நல்லவை பகிர்வோம் நால்வருக்கு
https://www.facebook.com/bheeman.media
பீமன் மீடியாவின் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....
ஒரு மனிதன் கூட்டுப்புழு ஒன்றை பல நாட்களாக கவனித்துக்கொண்டு இருந்தான் ஒருநாள் கூட்டின் முனையில் சிறிய துவாரம் தோன்றியது அதன் வழியே வெளியேற பட்டாம்பூச்சி போராடிக் கொண்டிருந்தது முட்டி மோதி தவித்தது இந்த மனிதனுக்கு பொறுக்கவில்லை கத்தரிக்கோலால் துண்டித்தான்
மறுவினாடியே பட்டாம்பூச்சி வெளியே வந்தது வீங்கிய உடலும் சுருங்கிய சிறகுகளுடன் எந்த வினாடியும் அது சிறகடிக்கும் என்று இவன் காத்திருந்தான் ஆனால் கடைசிவரை அதன் சிறகுகள் விரியவே இல்லை ஒரு புழுவைப் போல் ஊர்ந்து கொண்டிருந்தது சிறு துவாரம் வழியே முட்டி மோதுகையில்.., பட்டாம்பூச்சியின் சிறகுகளுக்கு அதன் உடலில் இருக்கிற திரவம் பரவும் அப்போதுதான் வெளியேவந்த உடனே சிறகடிக்கும் ஆற்றல் கிடைக்கும்.
ஆனால் அதன் போராட்டம் பொறுக்காமல் உதவப் போன மனிதன் அதனை ஊனப்படுத்தி விட்டான்.
போராட்டங்கள் தான் நம்மை வலுப்படுத்தும், உதவியையே நம்பினால் உயர்வது எப்படி..?
நல்லவை பகிர்வோம் நால்வருக்கு....
https://www.facebook.com/bheeman.media
ஒரு கையை இழந்து சிறுவன் ஜப்பான் நாட்டின் தலை சிறந்த ஜூடோ நிபுணர் ஒருவரிடம் மாணவராகச் சேர்ந்தார் மூன்று மாத கால காத்திருப்பிற்குப் பிறகு ஜூடோவின் ஒரே ஒரு படிநிலையை அந்த நிபுணர் அவனுக்கு கற்றுக் கொடுத்தார். இது ஒன்று தெரிந்திருந்தாலே போதும் என்று சொல்லிவிட்டார்.
அந்தசிறுவனனும் விடாமல் பயிற்சி மேற்கொண்டு வந்தான் ஒரு போட்டியில் மோத சிறுவனை அழைத்துச் சென்றார் ஜூடோ மாஸ்டர் போட்டி தொடங்கியது... மூன்றாவது கட்டத்தில் இந்த சிறுவன் முன்னேறி தாக்கினான் எதிரி விழுந்துவிட்டது, எல்லோருக்கும் ஆச்சரியம் ஒரே ஒரு படி முறையை தெரிந்து கொண்டு வென்றது எப்படி...? குரு சொன்னார் உனக்கு நான் சொல்லி தந்த தாக்குதலை எதிர்கொள்ள ஒரே ஒரு வழி எதிரி உன் இடது கையை பற்றி திருகுவதுதான்.... உனக்குத்தான் இடது கையே கிடையாது அல்லவா...
ஒரு குறைபாடு கூடுதல் தகுதியானது இப்படித்தான்.
நம்முடைய பலவீனங்களை பலமாக மாற்றிக்கொண்டால் வாழ்வில் தோல்வி என்பதே இருக்காது..
நல்லவை பகிர்வோம் நால்வருக்கு...
https://www.facebook.com/bheeman.media
கிமு 333 புகழ்பெற்ற நகரமான கோர்டியமில் கால் வைத்தது அலெக்சாண்டரின் படை அந்த நகரை உருவாக்கிய மன்னர் ஒருவரின் பழங்காலத் தேர் ஒன்று மிக இறுக்கமான முடிச்சுகளுடன் மரமொன்றில் கட்டப்பட்டிருந்தது... யாரும் அவிழ்க முடியாதபடி....
அந்தத் தேரை அலெக்ஸாண்டரிடம் காட்டினார்கள். அந்த ஊரில் ஒரு நம்பிக்கை நிலவி வந்தது அந்த முடிச்சை யார் அவிழ்க்கிறார்களோ அவர்கள் தான் ஆசிய கண்டத்தை வெற்றி கொள்ள முடியும் என்பதே அது..
அலெக்சாண்டர் அந்த முடிச்சை அவிழ்க்க முயன்று பார்த்தார். முடியவில்லை. பளிச்சென்று தன் உடைவாளை உருவினான். அந்த முடிச்சை அறுத்தார். ஆரவாரத்துடன் அவருடைய படை நகருக்குள் நுழைந்தது..
முற்றிலும் புதிய கோணத்தில் இருந்து ஒரு தீர்வை யோசித்தார்...
முடிச்சு பிரச்சனை முடிந்து போனது...
இதுவே வெற்றிக்கு வழி.
நல்லதை பகிர்வோம் நால்வருக்கு.
https://www.facebook.com/bheeman.media
ஒப்பந்தக்காரர் ஒருவரிடம் ஒரு மேஸ்திரி முப்பது வருடங்கள் வேலை பார்த்தார் வயதாகிவிட்டது ஒப்பந்ததாரரிடம் போய் நான் ஓய்வு பெற விரும்புவதாக சொன்னார்..,
சிறிது யோசித்த ஒப்பந்ததாரர் இன்று புதிதாக ஒரு வீடு ஒப்பந்தமாகி இருக்கிறது, அதை கட்டிக் கொடுத்துவிட்டு போங்களேன்.... என்றார் தட்டமுடியாமல் ஒப்புக்கொண்டாலும்., மேஸ்திரியின் மனம் ஓய்வுபெற யோசித்துக் கொண்டுதான் இருந்தது... வேண்டாவெறுப்பாக தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தி அவசர அவசரமாக கட்டி முடித்தார்.
கிரகப்பிரவேசத்திற்கு நாள் குறிக்கப்பட்டது மேஸ்திரி அழைக்கப்பட்டிருந்தார் அவர் கழுத்தில் மாலையை போட்ட ஒப்பந்ததாரர் அந்த வீட்டு சாவியையும் மேஸ்திரி கையில் கொடுத்தார்... உங்களுக்காகத்தான் இந்த வீட்டை கட்ட சொன்னேன்... என்றார்...
30 வருட உழைப்புக்கு என் பரிசு...
ஒவ்வொரு செயலின் மூலமாகவும் நம்முடைய வாழ்வை நாமே கட்டமைத்துக் கொள்கிறோம், நம் வாழ்க்கையை உயர் தரமானதாக உருவாக்க ஒவ்வொரு செயலிலும் அக்கரை முக்கியம்.
நல்லவை பகிர்வோம் நால்வருக்கு
://www.facebook.com/bheeman.media
அது ஒரு மலை மாதம்..
https
நள்ளிரவு நேரத்தில் அமெரிக்காவின் ஃபிலெடெல்ஃபியாவில் இருந்த அந்த சிறிய தங்கும் விடுதிக்கு நடுங்கிக் கொண்டு நுழைந்தார்கள் அந்த முதிர்ந்த தம்பதிகள்....
வரவேற்பில் இருந்த இளைஞன் எல்லா அறைகளும் நிரம்பி விட்டன.. ஆனாலும்., இப்போது உங்கள் இருவரையும் எப்படி வெளியே அனுப்புவது...!
நீங்கள் விரும்பினால் என்னுடைய ஓய்வு அறையில் தங்கிக் கொள்ளலாம் என்றான்.. இரண்டு ஆண்டுகள் சென்றன அந்த இளைஞனுக்கு ஒரு கடிதம் வந்தது அந்த வாரம் நியூயார்க் வருமாறு விமான டிக்கெட் வைக்கப்பட்டிருந்தது விமான நிலையத்தில் அந்த தம்பதிகள் அந்த இளைஞனை அழைத்து சென்று இது நாங்கள் புதிதாக கட்டியுள்ள தங்கும் விடுதி இதை நீ தான் நிர்வகிக்கப் போகிறாய் என்றனர்.... ஆச்சரியத்தில் உறைந்து போனான் அந்த இளைஞன்....!!!
மனிதாபி மானத்துக்குக் கிடைத்த மகத்தான பரிசு....
அந்த தங்கும் விடுதி பின்னாளில் உலகப் புகழ்பெற்ற வால்டார்ஃப் அஸ்டோரியா ஹோட்டல் அந்த இளைஞன் ஜார்ஜ் சி பால்ட்...
சிரத்தையோடு செயல்படுங்கள்...
சிகரத்தை எட்டலாம்...
நல்லவை பகிர்வோம் நால்வருக்கு....
www.facebook.com/bheeman.media
https://www.facebook.com/bheeman.media
எல்லோருக்கும் தேவைதானே...
ஒரு பணக்கார இளைஞன் ரயில் நிலையத்தில் காத்திருந்தார் கந்தல் உடை கலைந்த தலையுடன் ஒரு கிழவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான் தன்னிடம் காசு கேட்டு தொலைக்கப் போகிறான் என்கிற எரிச்சலில் இளைஞன் காரை அழுத்தி அழுத்தி துடைக்கத் தொடங்கினான்
அந்தக் கிழவன் சொன்னான் காரை ரொம்ப அழகாக வைத்திருக்கிறீர்கள் என்று.. அந்த பரிவான குரலும் பண்பட்ட மொழியும் இளைஞனை என்னவோ செய்தது புன்னகையோடு நன்றி சொல்லிவிட்டு தயக்கத்தோடு கேட்டான் உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா மிக மெல்லிய குரலில் பதில் வந்தது நம் எல்லோருக்குமே தேவைதான் இல்லையா.. ? பொட்டில் அடித்தாற்போல் இருந்தது இளைஞனுக்கு உண்மைதானே ஒவ்வொருவருக்கும் அவரவர் நிலைக்கேற்ப விதவிதமான உதவிகள் தேவைப்படுகின்றன.
தன்னிடம் இருந்த பணத்தை மிகப் பணிவோடு அந்த கிழவனுக்கு தந்தான் இளைஞன் பரஸ்பரம் உதவி செய்து கொண்ட திருப்தியில் இறுதியில் இருவரும் நகர்ந்தனர்.
நல்லவை பகிர்வோம் நால்வருக்கு...
https://www.facebook.com/bheeman.media/
பற்பசை என்னும் தீமை
#டூத்பேஸ்ட்- அதிர்ச்சிரிபோர்ட்.
"ஆண்களுக்கு மட்டுமில்லாமல்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் என்றால் நம்புவீங்களா?
பெண் குழந்தைகளுக்கு
சிறு வயதிலேயே மார்பகங்கள் பெரிதாவதற்கும்
10 வயதிலேயே பூப்பெய்துவதற்குமான காரணிகளில் பற்பசையில் உள்ள வேதிபொருள்களும் ஒரு காரணம்
என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆய்வுகள் உருதிபடுத்துகின்றன.
கறி+ உமி+ உப்பு கலந்து பயன்படுத்திய காலங்களில் பல் சம்மந்தமான பிரச்சனைகள் இருந்தது எனவோ உண்மை தான்
நூற்றுக்கணக்கான மக்கள் வாழும் கிராமங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே பல் பிரச்சனைகளை......
இன்று 78% மக்களுக்கு அவசியமான நோயாக
மாற்றியது எது?
Toothpaste ஐ பயன்படுத்த வேண்டாம்,என்பதற்கான அறிவியல் காரணங்கள்
பல உண்டு
1.பற்பசையில் உள்ள புளோரைடின் அனவானது
17 ppm க்கும் மேல் இருக்ககூடாது என்பது மருத்துவ நியதி நாம் பயன்படுத்தும் Colgate, close up ல் 80>100 ppm என்ற அளவில் உள்ளது
2. பற்பசையில் உள்ள bleaching agent ஆனது பற்களுக்கும் ஈறுகளுக்குமான இறுக்கத்தை தளர்வாக்கி பல்ஆட்டம் சொத்தை உருவாக்கும் பற்பசையில் பல் துலக்கிய பிறகு உற்று,நோக்கினால் ஈறுகள் சிவப்பு நிறத்தில் காண்பதற்கு இதுவே காரணம்
3. Sodium lauryl sulfate (sls) இவை இல்லாத Toothpaste இல்லையென்றே கூறலாம் sis இந்த வேதி பொருள் பெட்ரோல் உற்பத்தி நிலையங்களில் எண்ணெய் பிசுபிசக்கை போக்க பயன்படும் உயர் வேதி பொருள் இந்த sls ஆனது வயிற்றில் உற்பத்தியாகும் Hcl உடன் வினைபுரிந்து வயிற்றின் உட்பகுதியில் புண்களை ஏற்படுத்துகிறது
இந்த புண் தான் ulcer ஆக உருமாறி நமது உடலின் திரிதோஷமான...
வாதம்+ பித்தம்+ கபம்
சீர் கேட்டை உருவாக்கி எல்லா நோய்களையும் அழையா விருந்தாளியாக வரவழைத்து வரவேற்கும்
Toothpaste அவசியமா...?
4. நமது பற்களுக்கும் மூளைக்கும் நேரடி தொடர்பு உள்ளது கை விரலால் பல் துலக்கும் போது பற்களில் மேல் பகுதியில் அமைந்துள்ள நரம்பணுக்கள் மூலம் தூண்டபட்டு அகோர பசி உருவாவதை உணரலாம் இதுவும் ஒரு சிறந்த தொடு சிகிச்சை தான் பாரம்பரிய முறையாக மூலிகை பொடிகளை கொண்டு பல் துலக்குவதால் ஏற்படும் அளப்பரிய நன்மைகளால் உடல் ஆரோகியம் பெரிதும் பாதுகாக்கபடுவது மட்டுமின்றி நோய் அணுகாமல் வாழலாம்..நமது உடலின் நுழைவாயிலான பற்களுக்கு நன்மை செய்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி... நம் உடல் நலத்தினை ஆட்டம் காணச்செய்யும் ஒரு உத்திதான் இந்த டூத்பேஸ்ட் கான்செப்ட்..
குடிசைதொழிலாக செய்யப்படும் தரமான பொருட்களை மக்களுக்கு கிடைக்கவிடாமல் தடுப்பது போலியான விளம்பரங்கள் தான்!!!
பிரஸ் பயன்படுத்துவோருக்கு பல் ஈறுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது!!! சாதரணமாக கையால் பல் துளக்குவது ஈறுகள் வலு பெறும்!!! என்பதை குழந்தைகளுக்கு புரியவைப்போம்!!!!
நம் முன்னோர்கள் கரி, சாம்பல், மற்றும் ஆலும் வேலும் பல்லுக்கு உறுதியென ஆரோக்கியமாக வாழ்ந்த கூட்டத்தினை, நாகரீகம் என்ற பெயரில் டூத்பேஸ்டை விளம்பரங்கள் வாயிலாக நம்மை மடைமாற்றி உடல்நலத்திற்கு வேட்டு வைத்துவிட்டான்...
யதார்த்தம்-- குழந்தைகளின் காவலன்.
நல்லவை பகிர்வோம் நால்வருக்கு...
Bheeman media
https://www.facebook.com/bheeman.media/
நல்லவை பகிர்வோம் நால்வருக்கு...
இன்று...
16 வயதில் அரியணை ஏறி 200 க்கும் மேற்பட்ட போர்களில் வெற்றி பெற்று தென் கோடி வரை தன் புகழை நாட்டி முகலாயர்களின் சக்கரவர்த்தியான கொடுக்கோள் ஆச்சி செய்த ஔரங்கசீப்பை., நடு நடுங்க வைத்து பயத்தை விதைத்த வீராதி வீரன் சூராதி சூரன்...
"சத்ரபதி சிவாஜி மாஹராஜ்" பிறந்த தினம்
இன்று....
Bheeman media
நல்லவை பகிர்வோம் நால்வருக்கு...
வரலாறு முக்கியமுங்க....
வரலாறு முக்கியமுங்க....
Bheeman media
நல்லவை பகிர்வோம் நால்வருக்கு...
சுதந்திரம் பெற்ற உடனே பறக்க வேண்டிய தேசிய கொடி ஐய்யா...
இப்போதாவது பறக்கட்டும்...
தேசியம் வளரட்டும்...
ஒரே நாடு என்பதை உணரட்டும்...
Bheeman media
நல்லவை பகிர்வோம் நால்வருக்கு....
https://m.facebook.com/story.php?story_fbid=451024970049576&id=100054262306682&sfnsn=wiwspwa
Salem
Monday | 9am - 5pm |
Tuesday | 9am - 5pm |
Wednesday | 9am - 5pm |
Thursday | 9am - 5pm |
Friday | 9am - 5pm |
Saturday | 9am - 5pm |
Sunday | 9am - 5pm |
Be the first to know and let us send you an email when Bheeman Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Bheeman Media:
https://www.facebook.com/bheeman.media நல்லவை பகிர்வோம் நால்வருக்கு தமிழர் என்று தமிழினத்திற்கு மட்டும் பெருமை சேர்ப்பதற்காகவே இந்த செய்தியாளர் சந்திப்பு இருக்கிறது தமிழர் மட்டும் பாடுபடவில்லை பாரதியர்கள் ஒரு குழுவாக சேர்ந்துதான் வெற்றி பெற்றுள்ளோம்... அதில் தமிழர் ஒருவரும் அடங்குவர். அவரே கேட்கின்ற கேள்விகளுக்கு தெளிவாக புரிந்து கொண்டு பதில் அளித்திருக்கிறார் இதைவிட வேறென்ன வேண்டும் வந்தே மாதரம்
https://www.facebook.com/bheeman.media நல்லவை பகிர்வோம் நால்வருக்கு தமிழர் என்று தமிழினத்திற்கு மட்டும் பெருமை சேர்ப்பதற்காகவே இந்த செய்தியாளர் சந்திப்பு இருக்கிறது தமிழர் மட்டும் பாடுபடவில்லை பாரதியர்கள் ஒரு குழுவாக சேர்ந்துதான் வெற்றி பெற்றுள்ளோம்... அதில் தமிழர் ஒருவரும் அடங்குவர். அவரே கேட்கின்ற கேள்விகளுக்கு தெளிவாக புரிந்து கொண்டு பதில் அளித்திருக்கிறார் இதைவிட வேறென்ன வேண்டும் வந்தே மாதரம்
வரும் காலங்களில் இப்படி ஒரு உதவி தேவைப்படும் என ஓர் விளம்பரம் என் மனதில் என்னவென்றால் அவசியம் இந்த வேலை வாய்ப்புக்கு அதிக நபர்கள் பிற்காலத்தில் தேவைப்படுவார்கள் இப்பொழுதே இதற்கான முன் தயாரிப்புகள் இளைஞருக்கு தேவை...
https://www.facebook.com/bheeman.media/ நல்லதை பகிர்வோம் நால்வருக்கு... மிசோரத்தை சேர்ந்த 5 வயது குழந்தை எஸ்தர். தேசிய கீதத்தை தனது மழலை குரலில் பாடி பரப்பியதை அறிந்த இந்திய ராணுவம் மழலையை தேடி கண்டுபிடித்து ராணுவ சீருடையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்போடு தேசிய கீதத்தை மீண்டும் பாட வைத்து பெரும் மரியாதை அளித்து இருக்கிறது இந்தியாவில் வாழும் உண்மையான தேசப்பற்று உள்ள இந்தியர்களுக்காக...
https://www.facebook.com/bheeman.media/ வைரல் வீடியோ.... திமுக...விற்கு எதிராக வேலை செய்ததற்கா...☹️ தேர்தல் வேலையாம்...!🤕 திருச்சியில் உள்ள ஆலம்பட்டிபுதூரில்...... திமுகவுக்கு எதிராக தேர்தலில் வேலை செய்த ஒருவரை திமுகவினர் கொலை வெறியுடன் தாக்குதல் நடத்திய காட்சி.... உண்மையானல்...? விடியலை நோக்கி.... ஸ்டாலின் தான் வாரரு.... நல்லாட்சி தர போரரு.... திமுகவின் சம்பவங்கள் மூன்று நாட்களிலேயே... இப்படி ஐயோ..!இன்னும் ஐந்து வருடமா... இருக்குதுதுது......! 😲😲😲
https://www.facebook.com/bheeman.media/ மெக்காலேயின் பல்லக்கு.. நிலத்தை இழந்தால் மீட்டுவிடலாம் மொழியை இழந்து விட்டால் மீட்கவே முடியாது என்பதை இந்திய வரலாறு திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது இந்தியாவை குப்தர்கள் ஆண்டார்கள் கில்ஜி வம்சம் ஆண்டது.,முகலாயர்கள் ஆண்டார்கள்.,இப்படி பேரரசுகளின் குடையின் கீழ் இந்தியா ஆட்சி செய்யப்பட்ட போது அவர்கள் எவரும் தங்களது மொழியை இந்திய மக்கள் அனைவரும் கட்டாயமாக பேச வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை நம் மீது திணிக்கவில்லை. உருதும் அரபும் ஆட்சி மொழியாக இருந்த காலத்தில் சமஸ்கிருதம் அங்கீகரிக்கப்பட்ட இருந்தது. பாலியும் பிராகிருதமும் வந்தபோது தமிழ் மொழி அழிந்து ஒழிக்கப்படவில்லை ஆனால் வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்ட 300 வருடங்களில் நம்முடைய தாய் மொழியை மெல்ல மறந்து அவர்களின் ஆங்கிலத்தை நாம் உருவாக்