21/01/2024
புதுச்சேரி - கடலில் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுவது வேதனையளிக்கிறது. ஒரு இடத்தில் எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்பட்டால் மீண்டும் அங்கு விபத்தே ஏற்படாமல் நிர்வகிக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் பொறுப்பாகும். சாலையில் தொடர் விபத்துகள் ஏற்பட்டால் அதுகுறித்து அலசி ஆராய்ந்து அவ்விடத்தில் விபத்து ஏற்படும் காரணிகளை ஆராய்ந்து தடுப்பு நடவடிக்கை எடுக்கக்கூட பலரிடம் மனு கொடுத்து போராடவேண்டியுளது. இதுதான் நிர்வாகமா.?! எத்தனை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் புதுவையில் உள்ளனர்?! அமைச்சர்கள், MLA, MP'க்கள் உள்ளனர்?! இவர்கள் அனைவரின் மாதச் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து, உயிரிழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாயை அரசு வழங்கவேண்டும். அரசு இயந்திரம் சுறுசுறுப்பாக, மக்களுக்காக, 24 மணிநேரமும் இயங்கவேண்டும். இல்லாவிடில் உரிய அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளின் சம்பளத்தில் முறையாக பிடித்தம் செய்யவேண்டும். இலவசங்களை மட்டும் கொடுத்துவிட்டு இங்கு நிர்வாகம் தூங்குகிறதா.?! இனி புதுவை கடலில் உயிரிழப்புகள் ஏற்படாவண்ணம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் தேவை. எல்லா அசம்பாவிதங்களையும் பார்த்துக்கொண்டு மிக்சர் தின்றுகொண்டிருக்க முடியாது.
- புதுச்சேரி வளர்ச்சிக் கட்சி தலைவர் PDP' பாஸ்கரன். *PDP_News*🚜