Kottakuppam News

கோட்டகுப்பதில் மீண்டும் மீண்டும் பேட்ச் ஒர்க் .. #விழுப்புரம் மாவட்டம்  #கோட்டக்குப்பம் நகராட்சியில்  பல  மின் மாற்றியின...
29/10/2023

கோட்டகுப்பதில்
மீண்டும் மீண்டும்
பேட்ச் ஒர்க் ..

#விழுப்புரம் மாவட்டம் #கோட்டக்குப்பம் நகராட்சியில் பல மின் மாற்றியின் கம்பங்கள் சேதமடைந்து, விழும் நிலையில் இருந்தது வருகிறது. குறிப்பாக பழைய பட்டின பாதையில் ஒரு மின்மாற்றி குறித்து காவல் ஆய்வாளர் மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என மின் வாரியத்தில் புகார் அளித்திருந்தர்.

வழக்கம் போல் மின்சார வாரியம் நிரந்தர தீர்வுக்கு வழி ஏற்படுத்தாமல் வெறும் தற்காலிக பேட்ச் ஒர்க் செய்து மின் மாற்றி விழும் நிலையை இன்னும் சில மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு முன்பு இதே போல் பெரிய பள்ளிவாசல் அருகே விழும் நிலையில் இருந்த மின்மாற்றி கம்பத்தை தகர டின்னில் சிமெண்ட் கொட்டி பேட்ச் ஒர்க் செய்திருந்தனர். மூன்று வருடம் கழித்தும் அதன் கம்பத்தை இன்னும் புதிதாக மாற்ற வில்லை.

கோட்டக்குப்பம் மக்களை இன்னும் எத்துணை காலம் தான் ஏமாற்றும் இந்த மின்சார வாரியம் .

#கோட்டக்குப்பம்_செய்திகள்

 #கோட்டக்குப்பம் நகராட்சியில் அறிவிக்கப்படாத மின்தடை….கோட்டக்குப்பம்  நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த ஒரு வாரமாக அறிவ...
18/09/2023

#கோட்டக்குப்பம் நகராட்சியில்
அறிவிக்கப்படாத மின்தடை….

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த ஒரு வாரமாக அறிவிக்கப்படாத மின்தடை நிலவுவதால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.

கோட்டக்குப்பம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை, மாலை இரவு நேரங்களில் 10 தடவைக்கு மேல் மின்தடை ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளது.

இதனால் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், முதியவர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். பல இடங்களில் குறைந்த மின்னழுத்தம் நிலவுகிறது.

இதை சீர்செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை விடுத்துள்ளனர். பலர் தொலைபேசி மூலமாகவும் நேரடியாக மின்சாரத்துறை அலுவலகத்திற்கு சென்று முறையிட்டு வருகின்றனர். இருப்பினும் மின்சாரத் துறை தரப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போதுமான அளவு இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

எனவே கோட்டக்குப்பம் மின்வாரியத்தினர் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

 #கோட்டக்குப்பம் சாலையில் மாடுகளை திரிய விட்டால் 5000 ஆயிரம் ரூபாய் அபராதம் கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையாளர்   எச்சரிக்க...
20/08/2023

#கோட்டக்குப்பம் சாலையில் மாடுகளை திரிய விட்டால் 5000 ஆயிரம் ரூபாய் அபராதம் கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை…

#கோட்டக்குப்பம்_செய்திகள்

மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பிஜேபி அரசை எதிர்த்து கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்ப...
27/07/2023

மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பிஜேபி அரசை எதிர்த்து கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

https://kottakuppam.wordpress.com/2023/07/27/agitation-by-kottakuppam-congress-party/

#கோட்டக்குப்பம்_செய்திகள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்களி ன் ஆணைக்கிணங்க விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் க....

புதுச்சேரி ராஜிவ்காந்தி மகளிர் மருத்துவமனையில்,  தமிழக பகுதிகளான  #கோட்டக்குப்பம், வானுார், மரக்காணம் உள்ளிட்ட ஊர்களை   ...
27/07/2023

புதுச்சேரி ராஜிவ்காந்தி மகளிர் மருத்துவமனையில், தமிழக பகுதிகளான #கோட்டக்குப்பம், வானுார், மரக்காணம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த கர்ப்பிணியருக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததைக் கண்டித்து, சாலை மறியல் …..

மேலதிக செய்திகளுக்கு ….

https://kottakuppam.wordpress.com/2023/07/27/refusal-to-provide-treatment-tamilnadu-pregnant-women/

#கோட்டக்குப்பம்_செய்திகள்

புதுச்சேரி ராஜிவ்காந்தி மகளிர் மருத்துவமனையில், தமிழகத்தைச் சேர்ந்த கர்ப்பிணியருக்கு சிகிச்சை அளிக்க மறுத்.....

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை சரியாக காலை 7:00 மணிக்கு ஈத்காவில் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்ட...
29/06/2023

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை சரியாக காலை 7:00 மணிக்கு ஈத்காவில் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டு, ஜமாத்தார்கள் அனைவரும் இன்று காலை 6:15 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அருகில் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி ஆயிரக்கணக்கான ஜமாத்தார்கள் ஈத்கா மைதானம் நோக்கி சென்றனர்.

தொழுகைக்குப் பின்னர் உலக அமைதிக்காகவும், அனைவரின் நல்வாழ்வுக்காகவும், நலனுக்காகவும், சமுதாய ஒற்றுமைக்காகவும் துஆ(பிரார்த்தனை) செய்யப்பட்டது. பிறகு, ஒருவருக்கொருவர் தங்களின் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

வெளிநாட்டு வாழ் சொந்தங்கள் அனைவருக்கும் இந்த தியாக திருநாளில் வேற்றுமை நீங்கி, ஒற்றுமை ஓங்கட்டும். ஈகையும் நட்பும் பெருக...
28/06/2023

வெளிநாட்டு வாழ் சொந்தங்கள் அனைவருக்கும் இந்த தியாக திருநாளில் வேற்றுமை நீங்கி, ஒற்றுமை ஓங்கட்டும். ஈகையும் நட்பும் பெருகட்டும். இனிய Eid Al Adha பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.

#கோட்டக்குப்பம்_செய்திகள் #கோட்டக்குப்பம்

27/06/2023

ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.!

தியாகத் திருநாளை, மகிழ்வுடன் வரவேற்கும் இந்த நன்னாளிலே, வெளிநாடு வாழ் நண்பர்களுக்கும், இணையதள வாசகர்களுக்கும், உள்ளூர் உறவினர்களுக்கும், கடல் கடந்து வாழும் சொந்தங்களுக்கும், அன்பின் தோழர்கள் அனைவருக்கும் கோட்டக்குப்பம் செய்திகள் வலை தளம் சார்பில் 'ஈதுல் அழ்ஹா' இனிய ஹஜ் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் அனைவருக்கும் பூரணமான ஹஜ்ஜாக இறைவன் ஆக்கவும், ஏனையவர்களுக்கு வரும் வருடங்களில் ஹஜ் கடமையை செய்யும் பெரும் பாக்கியத்தை தரவும் இந்த நன்னாளில் இறைவனிடம் கையேந்துவோம்.

 #விழுப்புரம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாளையோட்டி  #கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ள...
22/06/2023

#விழுப்புரம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாளையோட்டி #கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேஜை ஒலிபெருக்கி மேலும் சில உபகரணங்கள் வாங்கி கொடுத்தனர்.

மாணவ மாணவிகளுக்கு பேனா பென்சில் வழங்கினர் ... மேலும் பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பை பதக்கங்களை பள்ளி முதல்வருடன் சேர்ந்து வழங்கினர்.. மேலும் மாநில அளவிலான மாற்றுதிறனாளி போட்டியில் கலந்து கொள்ளும் கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்த நபருக்கு நிதி உதவி வழங்கினார்கள் .. கோட்டகுப்பம் 21வது வார்டு கவுன்சிலர் முஹம்மது கவுஸ் நகர செயலாளர் அவர்களின் ஏற்ப்பாட்டில் நடைபெற்றது இதில் கோட்டகுப்பம் நகர இளைஞரணி செயலாளர் முஹம்மது அன்சாரி மற்றும் நிர்வாகிகள் சகருதீன், ரியாஸ், ரிஸ்வான், ஆஷிக்,அமீர்,யாசின்,கார்வண்ணன் ,வெங்கடேஷ் ,ஹரீஷ் கலந்து கொண்டனர்.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

 #கோட்டக்குப்பம் நகராட்சி மூலம் கடந்த ஆண்டு நவம்பரில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்தினர். நகராட்சிய...
21/06/2023

#கோட்டக்குப்பம் நகராட்சி மூலம் கடந்த ஆண்டு நவம்பரில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்தினர். நகராட்சியில் இருந்து நடவடிக்கை எடுத்தும் கோட்டக்குப்பம் பகுதி முழுவதும் மீண்டும் நூற்றுக்கணக்கான நாய்கள் அதிகரித்துள்ளன.சில இடங்களில் கழிவுகளை தின்று வெறி பிடித்து சுற்றி திரிகின்றன.

மேலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துரத்தி பயமுறுத்து கின்றன. அதில் சில நாய்கள் அருவருப்பாக தெருவில் சுற்றி திரிவதால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் கோட்டக்குப்பம் நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களுக்கு முறையாக கருத்தடை செய்யாமல் நாய்களைப் பிடித்து வெளியூர்களில் கொண்டு போய் விடுவதால் நாளடைவில் அதே நாய்கள் திரும்பி ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குழந்தைகள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வெளியில் சுற்றி திரியும் நாய்களுக்கு முறையாக மருத்துவர்கள் அமைத்து கருத்தடை செய்து அதன் பின்னர் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://kottakuppam.org/2023/06/21/dogs-problem-back-in-kottakuppam/

#கோட்டக்குப்பம்_செய்திகள்

 #கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் இந்த வருடத்திற்கான தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 29/06/2023...
21/06/2023

#கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் இந்த வருடத்திற்கான தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 29/06/2023 வியாழக்கிழமை காலை சரியாக 7 மணிக்கு ஈத்காவில் தொழுகை நடைபெறும் எனவும், மேலும் ஜமாத்தார்கள் அனைவரும் அன்று காலை 6:15 மணிக்கு கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொக...
17/06/2023

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வு சென்னை - நீலாங்கரை பகுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் #கோட்டகுப்பம் சார்ந்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கதொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் நடிகர் விஜய் அவர்கள் வழங்கினார்..

#கோட்டக்குப்பம்_செய்திகள்

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு:மமக போராட்டம் வாபஸ் #கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டும்...
14/06/2023

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு:
மமக போராட்டம் வாபஸ்

#கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டும், குறைந்த தாழ்வழுத்த மின் விநியோகமும் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், கோட்டக்குப்பம் இளமின் பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தை தமிழ்நாடு மின் வாரிய கோட்டக்குப்பம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தமுமுக மாநிலச் செயலா் முஸ்தாக்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் கா.அஸ்கா் அலி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் பஷீா்அகமது மற்றும் மின் வாரிய அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு 2 நாள்களில் தீா்வு காணப்படும், கோட்டக்குப்பத்தை அடுத்த இரும்பை கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

கோட்டகுப்பதில் துணை மின் நிலையம்அமைக்க கோரி ஆர்ப்பாட்டம் #கோட்டக்குப்பம் , மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில்  குறைந்த ம...
10/06/2023

கோட்டகுப்பதில் துணை மின் நிலையம்
அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

#கோட்டக்குப்பம் , மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குறைந்த மின்அழுத்தத்தில் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. அடிக்கடி மின் தடை செய்வதால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எலக்ட்ரிக், எலக்டரானிக்ஸ் பொருட்கள் சேதமடைந்து வருகிறது.

இதனை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

 #விழுப்புரம் மாவட்ட புதிய எஸ்.பி.யாக  திரு.சசாங்சாய் IPS பொறுப்பேற்றுக் கொண்டார்....
25/05/2023

#விழுப்புரம் மாவட்ட புதிய எஸ்.பி.யாக திரு.சசாங்சாய் IPS பொறுப்பேற்றுக் கொண்டார்....

 #கோட்டக்குப்பம் பர்கத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சார்பில், ஐம்பெரும் விழா வருகின்ற மே 27, 28 சனி மற்றும் ஞாய...
25/05/2023

#கோட்டக்குப்பம் பர்கத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சார்பில், ஐம்பெரும் விழா வருகின்ற மே 27, 28 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, பர்கத் நகர் மதரஸா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

பிரத்தியேக போன் நம்பருடன் அறிவிப்பு பலகைஆரோவில், கிளியனூர்,  #கோட்டகுப்பம், மரக்காணம், வானூர் உள்ளிட்ட மாவட்ட முழுவதிலும...
21/05/2023

பிரத்தியேக போன் நம்பருடன்
அறிவிப்பு பலகை

ஆரோவில், கிளியனூர், #கோட்டகுப்பம், மரக்காணம், வானூர் உள்ளிட்ட மாவட்ட முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் வைக்கப்பட்ட அறிவிப்பு பல பலகையில் கள்ளச்சாராயம், விஷ சாராயம், வெளிமாநில மது பாட்டில்கள் நடமாட்டத்தை பொதுமக்கள் தெரிவிக்க பிரத்தியேக வாட்ஸ் அப் எண் வழங்கப்பட்டு, பொதுமக்கள் எந்நேரமும் தகவல் தெரிவிக்கலாம் அவர்களுடைய ரகசியம் பாதுகாக்கப்படும் என அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

 #கோட்டகுப்பம் நகராட்சியில் தற்காலிக RRR  மையம் - ஆணையாளர் தலைமையில் தொடங்கப்பட்டது. #கோட்டக்குப்பம்_செய்திகள்
21/05/2023

#கோட்டகுப்பம் நகராட்சியில் தற்காலிக RRR மையம் - ஆணையாளர் தலைமையில் தொடங்கப்பட்டது.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

21/05/2023
 #கோட்டக்குப்பம் பர்கத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சார்பில், ஐம்பெரும் விழா வருகின்ற 27 - 28/05/2023 சனி மற்று...
18/05/2023

#கோட்டக்குப்பம் பர்கத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சார்பில், ஐம்பெரும் விழா வருகின்ற 27 - 28/05/2023 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, பர்கத் நகர் மதரஸா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

அலெர்ட்...  #கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில்  நாளை மறுநாள் 11/05/2023 அன்று  மின்சாரம் இருக்காது என்று தெ...
09/05/2023

அலெர்ட்...

#கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நாளை மறுநாள் 11/05/2023 அன்று மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

 #கோட்டக்குப்பம் ஷாதி மஹால் தெருவில் இருக்கும்  அங்கன்வாடி மையத்தின் சுற்று சுவரை உடைத்து சேதப்படுத்தி இருக்கும் சமூக வி...
05/05/2023

#கோட்டக்குப்பம் ஷாதி மஹால் தெருவில் இருக்கும் அங்கன்வாடி மையத்தின் சுற்று சுவரை உடைத்து சேதப்படுத்தி இருக்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு 18வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஃபர்கத் சுல்தானா மனு.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

 #கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜிதில் ஜனாஸா பெட்டி மக்களின் பயன்பாட்டிற்காக, கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பில் வழக்கப்பட்ட...
04/05/2023

#கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜிதில் ஜனாஸா பெட்டி மக்களின் பயன்பாட்டிற்காக, கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பில் வழக்கப்பட்டுள்ளது. இதில், குவைத் ஜமாத் பிரதிநிதிகள், ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

 #கோட்டகுப்பம் இந்திரா நகர் பகுதியில் நடந்த விபத்தில் வீடியோ கட்சிhttps://youtu.be/8lEB0VTb1xY #கோட்டக்குப்பம்_செய்திகள்
01/05/2023

#கோட்டகுப்பம் இந்திரா நகர் பகுதியில் நடந்த விபத்தில் வீடியோ கட்சி

https://youtu.be/8lEB0VTb1xY

#கோட்டக்குப்பம்_செய்திகள்

கோட்டகுப்பம் இந்திரா நகர் பகுதியில் நடந்த விபத்தில் வீடியோ கட்சி

கனமழையால்  #கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் வெள்ளத்தில் மிதக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும்,  சுற்றிலும் சாக்கடை நீர்...
25/04/2023

கனமழையால் #கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் வெள்ளத்தில் மிதக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், சுற்றிலும் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் அவதிக்‍கு உள்ளாகியுள்ளனர். சாதாரணமாக மழை பெய்தாலே தெரு முழுவதும் சாக்கடை நீர் தேங்கிவிடும் இந்த பகுதி, தற்போதைய கனமழையால் மேலும் தண்ணீர் தேங்கி மக்களுக்கு வேதனை தருகிறது.

#கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகம் கருணை பார்வை இந்த பகுதியில் எப்போ தான் படுமோ…

#கோட்டக்குப்பம்_செய்திகள்

25/04/2023

#கோட்டக்குப்பம் பரக்கத் நகரில் ஆட்டோ திருடியவர் திண்டிவனத்தில் கைது

திண்டிவனம் சுற்று வட்டார பகுதிகளில் கோவில் உண்டியலை உடைத்து தொடர் திருட்டு நடைபெற்று வந்தது. இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார். இந்த தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு ஓங்கூர் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து சோதனை செய்ததில் அதில் ஆம்ப்ளிபையர், ஸ்பீக்கர், இன்வெட்டர், எல்.இ.டி. டி.வி. உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இதையடுத்து ஆட்டோவை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் புதுச்சேரி மாநிலம் சாரம், சக்தி நகரை சேர்ந்த முருகேசன் மகன் தமிழ்மணி (34) என்பதும், புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் கருமாதி கொட்டகை முன்பு நின்றிருந்த ஆட்டோ, கோட்டக்குப்பம் பர்கத் நகரில் வீட்டின் முன் நின்றிருந்த ஆட்டோ ஆகியவற்றை திருடி அதனை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் இதில் ஒரு ஆட்டோவில் ஒலக்கூர் அடுத்த சாரம் பகுதியில் உள்ள தேவாலயத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த ஆம்ப்ளிபையர், ஸ்பீக்கர், மைக் செட், லேப்டாப் ஆகியவற்றையும், ஜெயந்தி என்பவருடைய வீட்டை உடைத்து எல்.இ.டி. டிவி, சிலிண்டர், அடுப்பு, லேப்டாப், இன்வெட்டர் ஆகியவற்றை திருடி வந்ததும் தெரியவந்தது. இதேபோல் மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு ரெயில் நிலையம் அருகே உள்ள பிள்ளையார், ஜக்காம்பேட்டை பிள்ளையார், தென் பசார் முத்துமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து தமிழ்மணியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

 #கோட்டக்குப்பம் பகுதிக்கு   குறைந்த அழுத்த மின்சாரத்தை வழங்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை  கண்டித்து   கோட்டக்குப்பம்...
24/04/2023

#கோட்டக்குப்பம் பகுதிக்கு குறைந்த அழுத்த மின்சாரத்தை வழங்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை கண்டித்து கோட்டக்குப்பம் காயிதே மில்லத் நினைவு வளைவு அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பேனர் வைக்கப்பட்டுள்ளது..

#கோட்டக்குப்பம்_செய்திகள்

 #கோட்டக்குப்பம் ரம்ஜான் பஜார்…   #கோட்டக்குப்பம்_செய்திகள்
22/04/2023

#கோட்டக்குப்பம் ரம்ஜான் பஜார்…

#கோட்டக்குப்பம்_செய்திகள்

TNTJ  #கோட்டக்குப்பம் சார்பில் கலா திருமண மண்டபதில்  நடைபெற்ற  நோன்பு பெருநாள் தொழுகை!   #கோட்டக்குப்பம்_செய்திகள்
22/04/2023

TNTJ #கோட்டக்குப்பம் சார்பில் கலா திருமண மண்டபதில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகை!

#கோட்டக்குப்பம்_செய்திகள்

 #கோட்டக்குப்பம் ஈதுல் பித்ர் தொழுகை HD குவாலிட்டி புகைப்படங்கள்… தொழில்முறை புகைப்பட கலைஞரை வைத்து எடுக்கப்பட்ட கோட்டக்...
22/04/2023

#கோட்டக்குப்பம் ஈதுல் பித்ர் தொழுகை HD குவாலிட்டி புகைப்படங்கள்…

தொழில்முறை புகைப்பட கலைஞரை வைத்து எடுக்கப்பட்ட கோட்டக்குப்பம் ஈதுல் பித்ர் தொழுகை HD குவாலிட்டி புகைப்படங்கள்…

https://kottakuppam.org/2023/04/22/kottakuppam-eid-prayer-hd-quality-professional-photos/

#கோட்டக்குப்பம்_செய்திகள்

தொழில்முறை புகைப்பட கலைஞரை வைத்து எடுக்கப்பட்ட கோட்டக்குப்பம் ஈதுல் பித்ர் தொழுகை HD குவாலிட்டி புகைப்படங்கள.....

22/04/2023
21/04/2023
பிரான்சில்  #கோட்டக்குப்பம் சொந்தங்களின் ஈத் பெருநாள் புகைப்படங்கள்http://kottakuppam.org/2023/04/21/eid-in-france/
21/04/2023

பிரான்சில் #கோட்டக்குப்பம் சொந்தங்களின் ஈத் பெருநாள் புகைப்படங்கள்

http://kottakuppam.org/2023/04/21/eid-in-france/

Visit the post for more.

ஈத் பெருநாளுக்கு  #கோட்டக்குப்பம் ஈத்கா திடல் தயார்http://kottakuppam.org/2023/04/21/ithga-ready-for-eid-prayer/ #கோட்டக...
21/04/2023

ஈத் பெருநாளுக்கு #கோட்டக்குப்பம்
ஈத்கா திடல் தயார்

http://kottakuppam.org/2023/04/21/ithga-ready-for-eid-prayer/

#கோட்டக்குப்பம்_செய்திகள்

Visit the post for more.

துபாயில் நம்  #கோட்டக்குப்பம் நண்பர்களின் ஈகை திருநாள் புகைப்படங்கள்http://kottakuppam.org/2023/04/21/dubai-eid-photos/ ...
21/04/2023

துபாயில் நம் #கோட்டக்குப்பம் நண்பர்களின் ஈகை திருநாள் புகைப்படங்கள்

http://kottakuppam.org/2023/04/21/dubai-eid-photos/

Visit the post for more.

 #கோட்டக்குப்பம் நகரத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, நோன்பு திறப்பு இஃப்தார் நிகழ்ச்சியில் நோன்பு திறக்கப்பட்ட...
20/04/2023

#கோட்டக்குப்பம் நகரத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, நோன்பு திறப்பு இஃப்தார் நிகழ்ச்சியில் நோன்பு திறக்கப்பட்டு பெண்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், புடவை மற்றும் உணவு ஆகியவை வழங்கப்பட்டது.!

நிகழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த, கோட்டக்குப்பம் நகராட்சி தலைவர் S S ஜெயமூர்த்தி கலந்து கொண்டனர்.

#கோட்டக்குப்பம்_செய்திகள்

Address

Pondicherry
605104

Alerts

Be the first to know and let us send you an email when Kottakuppam News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kottakuppam News:

Videos

Share

Category


Other Newspapers in Pondicherry

Show All