ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.!
தியாகத் திருநாளை, மகிழ்வுடன் வரவேற்கும் இந்த நன்னாளிலே, வெளிநாடு வாழ் நண்பர்களுக்கும், இணையதள வாசகர்களுக்கும், உள்ளூர் உறவினர்களுக்கும், கடல் கடந்து வாழும் சொந்தங்களுக்கும், அன்பின் தோழர்கள் அனைவருக்கும் கோட்டக்குப்பம் செய்திகள் வலை தளம் சார்பில் 'ஈதுல் அழ்ஹா' இனிய ஹஜ் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் அனைவருக்கும் பூரணமான ஹஜ்ஜாக இறைவன் ஆக்கவும், ஏனையவர்களுக்கு வரும் வருடங்களில் ஹஜ் கடமையை செய்யும் பெரும் பாக்கியத்தை தரவும் இந்த நன்னாளில் இறைவனிடம் கையேந்துவோம்.
#eiduladha2023 #eidmubarak
நானும் ஜெயிலுக்கு போறேன்..’ காவல் நிலையத்தில் சரணடையும் வீடியோவை எடுத்து வெளியிட்ட #கோட்டக்குப்பம் ரவுடி..
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜமால். இவர் மீது புதுச்சேரி, கோட்டக்குப்பம் காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் செயல்படும் கடைகளில் ரவுடி ஜமால் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிப்படைந்த வணிகர்கள் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புதுச்சேரி ரவுடியான ஜமால் மீது புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜமாலை சரணடைய கூறிய நிலையில் இன்று ஜமால் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்நிலையில், சரணடைவதற்கு முன்பு தான் பிரபலமடைய வேண்டும்
கோட்டகுப்பதில் பெய்து வரும் தொடர் மழையால், இப்ராஹிம் கார்டனில் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தெருவில் மழைநீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சில இடங்களில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து, குடியிருப்புகளுக்குள் புகுந்துவிட்டது.
#கோட்டக்குப்பம் நகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து மழைநீர் விரைவாக செல்ல வழி ஏற்படுத்தவேண்டும்.
#கோட்டக்குப்பம்_செய்திகள்
கோட்டகுப்பதில் விடிய விடிய பெய்த கனமழை.
#கோட்டக்குப்பம்_செய்திகள்