politics
23/02/2023
மணிரத்னம்+வைரமுத்து+ரஹ்மான் - ராவணன் :: மனைவி மாதா மட்டுமில்ல மண்ணும் கூட மானம் தான்.
இயக்குனர் அமீரின் பருத்திவீரனில் "உனக்கு மட்டும் தான் உடம்பை காட்டணும்னு இருந்தேன். என்னை இப்படி பண்ணிட்டானுங்க, என்னை கொன்னுடு வீரா" உடனே ஹீரோயின் மானத்தை காக்க அவளை கண்டம் துண்டமாக வெட்டுகிறான்.
மிஷ்கின் இயக்கி சேரன் நடித்த யுத்தம் செய் படத்துல டாக்டர் மகளை கற்பழிச்சிடுவாங்க. அந்த புள்ள மானம் போச்சுன்னு தூக்கு போட்டு செத்து போயிடும்.
நான் மகான் அல்ல ரஜினி படத்துல அவர் தங்கச்சி இதே மாதிரி மாடியில இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்கும்.
ரஜினி நடித்து சங்கர் இயக்கிய எந்திரன் படத்தில் தீ விபத்தில் ஆடை இல்லாமல் மீட்கப்படும் பெண் நேராக லாரியில் ஓடி இறந்து போவார்.
பழைய விக்ரம் படத்தில் கமல் நாயகியை கேட்பார் "ரொம்ப புழுக்கமா இருந்தா சட்டைய கழட்டிட்டு மொட்டை மாடியில நிப்பேன், நீங்க அப்படி பண்ண முடியுமா" என்று.
நடிகர் சூர்யா - சில்லுனு ஒரு காதல் - தெரியாமல் நாயகி ஆடையை கிழித்துவிடுவார். அதற்கு அவள் கோவப்பட்டு "நீ மட்டும் பார்க்க வேண்டிய என் உடம்பை மத்தவங்க பாக்குற மாதிரி பண்ணிட்டியே" என்பாள்.
இன்னும் ஏகப்பட்ட படங்கள் இதே கருத்தை வைத்து வெளிவந்துள்ளன. உங்களுக்கு நினைவுக்கு வருவதை கீழே பதியுங்கள். அப்போல்லாம் பெண்ணின் மானத்தை காலுக்கு இடையில் வைக்காமல் ரப்பர் செருப்பு மாதிரி கழட்டி கக்கத்துல வச்சிட்டு போனானுங்க.
ஆனால் இந்த முற்போக்கு மனநிலை பாதித்த கும்பல்கள் ஏனோ மோகனிடம் மட்டுமே வாங்கி குடிப்பேன் என்று வாலை பிடித்துக் கொண்டு போகிறது. காரணம் மோகன் இவர்களின் விபச்சார தொழிலில் மண் அள்ளி போடுகிறார்.
தமிழ்நாட்டை மொத்தமாக Red light மாநிலமாக மாற்ற பார்க்கும் நாய்களை செருப்பால் அடிக்கிறார். நீங்கள் வெட்ட வெட்ட மேலும் வளர்வார் மோகன்.
இந்த நாய்கள் குறைக்கவில்லை என்றால் தான் நாம் கவலைப்பட வேண்டும்.
prakash
05/01/2023
I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
23/12/2022
கடலூரில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்க சென்ற குமாரக்குடியை சேர்ந்த ராஜதுரை என்ற விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. பட்டியலின சகோதரரான அவர் பாமகவின் நீண்ட நாள் தொண்டர். அவரது குடும்பத்திற்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
21/12/2022
21/11/2022
#
04/11/2022
இன்று பிறந்தநாள் விழா காணும்
பசுமைத்தாயகம் அமைப்பின் மாநில செயலாளர், பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் மாநில தலைவர் அண்ணன் Arul Rathinam அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...💛
--------------------------//
01/11/2022
இரட்டை ஊதிய முறை அநீதி: சர்க்கரை ஆலை
தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு
இணையான ஊதியம் வழங்க வேண்டும்!
தமிழ்நாட்டில் பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை 32 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கி சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு மாற்றாக, ஏற்றத்தாழ்வை ஊக்குவிக்கும் சர்க்கரைத் துறையின் சமூக அநீதி செயல்பாடுகளை சரி செய்ய தமிழக அரசு முன்வராதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
தமிழ்நாட்டில் சர்க்கரைத் துறையின் கட்டுப்பாட்டில் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் என மொத்தம் 18 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 8,446 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே நிர்வாகத்தின் கீழ் பணி செய்து வரும் நிலையில், அவர்களை இரு பிரிவாக பிரித்து ஒரு தரப்பினருக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கி வரும் சர்க்கரைத் துறை, இன்னொரு பிரிவு ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்கி வருகிறது. இந்த இரு தரப்புக்கும் இடையான ஊதிய இடைவெளி, ஏணி வைத்தாலும் எட்டாத அளவுக்கு மிக அதிகமாக இருக்கிறது. ஒரே துறையில், ஒரே இடத்தில் பணியாற்றுவோருக்கு இரு வகையான ஊதியம் வழங்குவது அநீதியாகும்.
சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கிடையே இத்தகைய ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியது தமிழக அரசின் சர்க்கரைத் துறை தான். 1985-ஆம் ஆண்டு வரை கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் பணியாளர்கள் அனைவருக்கும் மத்திய அரசால் அமைக்கப்படும் சர்க்கரை ஆலைகளுக்கான ஊதியக் குழு தான் ஊதியத்தை நிர்ணயித்து வந்தது. 1988 முதல் இத்தகைய ஊதியக் குழுக்கள் அமைக்கப்படாத நிலையில், மாநில அரசுகளே ஊதிய ஒப்பந்தத்தின் மூலம் சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கான ஊதியத்தை நிர்ணயிக்கத் தொடங்கின. தமிழ்நாட்டில் இதற்கு பொறுப்பேற்ற சர்க்கரைத் துறை, 11 வகையான பணிகளை தனியாக பிரித்து அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய விகிதத்தை நிர்ணயித்தது. அது மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், மற்ற பணியாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கப்படுகிறது. இது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. இது தான் சிக்கலுக்கு காரணமாகும்.
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களின் ஊதிய ஏற்றத்தாழ்வை போக்க கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, அவை அதிகார வட்டாரத்தால் முறியடிக்கப்பட்டு விட்டன. முதற்கட்டமாக, சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க 2010-ஆம் ஆண்டில் அப்போதைய தொழில்துறை அமைச்சராக இருந்த இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார். ஆனால், அப்பரிந்துரையை அப்போதைய நிதிச் செயலர் நிராகரித்துவிட்டார்.
அதன்பின் சர்க்கரை ஆலை பணியாளர்களின் ஊதிய முரண்பாட்டை களைவது குறித்தும், ஊதிய ஒப்பந்தத்தின்படி ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது குறித்தும் பரிந்துரைக்க இ.ஆ.ப. அதிகாரி ராஜிவ் ரஞ்சன் தலைமையில் 7 பேர் குழுவை 2011-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அமைத்தார். அக்குழுவின் அறிக்கை அதே ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தாக்கல் செய்யப்பட்டது. ராஜிவ் ரஞ்சன் குழுவின் அறிக்கையில் சர்க்கரை ஆலை பணியாளர்கள் அனைவருக்கும் ஒரே ஊதியம் வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அந்த பரிந்துரை செயல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா 2013-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தாலும் அது செயல்படுத்தப்படவில்லை.
‘‘கூட்டுறவு - பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியமும், இன்னொரு பிரிவினருக்கு குறைந்த ஊதியமும் வழங்கப்படுவது நியாயமல்ல... இந்த பாகுபாடு போக்கப்பட வேண்டும்’’ என்று சென்னை உயர்நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது. ஆனால், உயர்நீதிமன்றத் தீர்ப்பும் தமிழக அரசால் செயல்படுத்தப்படவில்லை. சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கான ஊதிய பாகுபாடு தவறு என்பதை தமிழக அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொள்கிறது. ஆனால், பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்பதைக் காரணம் காட்டி, தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அரசு மறுத்து வருகிறது. இது எவ்வகையிலும் நியாயமல்ல.
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதற்கு தொழிலாளர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. அரசின் கொள்கைகளும், சர்க்கரை ஆலைகளுக்கு அரசு வழங்க வேண்டிய பல்வேறு நிலுவைத் தொகைகள் வழங்கப்படாததும் தான் இழப்புக்கு காரணம் ஆகும். அரசின் தவறால் ஏற்படும் இழப்புக்கு, உழைக்கும் தொழிலாளர்கள் பலிகடா ஆக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கூட்டுறவு & பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் ஊதிய பாகுபாட்டை போக்க வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் பொறுப்பை கவனித்துக் கொண்டிருந்த போது ஆணையிட்டவர் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆனால், அதிகாரிகளின் சதியால் அது செயல்படுத்தப்படவில்லை. இப்போது அவரே முதலமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில், கூட்டுறவு - பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும் வகையில், அவர்களின் ஊதிய பாகுபாட்டை களைவதற்கான ராஜிவ் ரஞ்சன் குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்
31/10/2022
சோழர் பாசன திட்டம்
நடை பயணம் மேற்கொண்ட...🔥💛
இனமான இளவல்
Dr Anbumani Ramadoss அவர்களுக்கு
கடலூர் ஒருங்கிணைந்த வன்னியர் சங்கத்தின் சார்பில் காட்டுமன்னார்கோவில் வட்டம் "கண்டமங்கலம்" கிராமத்தில் வன்னியர் சங்கத்தின் மாநில தலைவர் பெரியவர் பு தா அருள்மொழி அய்யா அவர்கள் தலைமையில் வரவேற்பு அளித்தனர்...!
----------------------------------
அந்தப் பகுதியில் வன்னியர் சங்கம் கட்டமைப்பு மிகச் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்கள்...
நேற்று குறிப்பாக ராசு படையாட்சி பாடல் ஒலிக்கும் போது அந்த இடத்திலிருந்து சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரைந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் தனது சமுதாய பற்றி வெளிப்படுத்தும் நோக்கத்தின் தனது நடனத்தை வெளிப்படுத்தினார்கள் சாலையில் சென்றவர்கள் பேருந்தில் சென்றவர்கள் அனைவரும் அதை பார்த்து வியக்கும் வண்ணமாக நிகழ்ந்தது...
அங்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள இளைஞர்கள் முதியவர்கள் சிறியவர்கள் இனத்தின் அடையாளமான அக்னி கலசம் பதிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடி ஏந்தி நிற்கும் காட்சி அங்குள்ள அனைவரையும் பிரமிக்க வைத்தது...
நம் இதே போன்ற கட்டமைப்பை உருவாக்கினால் நிச்சயமாக வன்னியர் சங்கத்தின் மூலம் அதாவது குறிப்பாக நாம் சமுதாய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒற்றுமை நிலை நாட்ட வழிவகுக்கும்...
வாழ்க வன்னியர் சங்கம்!
வளர்க பாமக!!
31/10/2022
இலங்கையை ஆட்சி செய்ய சோழ நாட்டில் இருந்து ஈழ தேசம் அனுப்பட்ட வட தமிழ்நாட்டு வன்னியர் குல தளபதிகளின் வழி வந்த வம்சத்தவன், இலங்கையை ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னன்.
இலங்கை நாட்டுன் ஈழத்து வன்னி நாடு அடங்காபற்று மன்னன்
குலசேகரம் வைரமுத்து பாயும்புலி
பண்டார வன்னியன்
219 ஆம் ஆண்டு நினைவு தினம்
#பண்டார_வன்னியன்
#அக்டோபர்_31
Address
116b West Street Maligampattu
Panruti
607106
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when pmk manoj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to pmk manoj:
Videos
#vasan #silappannathe #jacob #tappustep #abyg #ramkthevar #vikadakavi #daveevad #alvinmartin #dhaarshiq #mayanakarupartappecrew #almightyrecords #monkeystudio #vanessacruez #navinho #vikadakaviproduction #mynorthernanthem #vimal #vmalson #kmgkidzseenu #instagram #rangpur #ttf #gujrat #ribda #rudrapur #mansa #rajputana #rajvadu #banna