NammaHosur Market

NammaHosur Market 🌟 Marketplace in Hosur 🌟 Buy, sell, or rent cars 🚗, bikes 🏍️, mobile accessories 📱, land 🌾, and rental properties 🏠 all in one place. Explore now! 🔑✨

28/02/2025

🏡 B S Architects – Your Dream Home Awaits! 🏡

✨ Villas starting from ₹50 Lakhs ✨

📍 Location: Nallur, Sree Hari Enclave (Near Modern City)
🏠 2BHK Simplex: 1200 sqft land | 1000 sqft built-up
🏡 3BHK Duplex: 1500 sqft land | 1600 sqft built-up

🔒 Gated Community with Security
🚗 Cement Roads & Underground Drainage
🏫 Close to Advaith, Gurukulam & Chaitanya Schools
🏭 Near Exide Factory

📞 Book your dream home today! 🏠💫

11/02/2025

🏡 Approved Land for Sale in Hosur 🏡

📏 Land Area: 1000 sqft (40x25)
🧭 Facing: South
✅ Approval: Panchayat Approved
💧 Borewell Available

📍 Prime Location Near:
✔ NH 844 🛣
✔ Malar Hospital 🏥
✔ Schools 🎓
✔ Departmental Stores 🛍
✔ Railway Station 🚉
✔ Cattle Farm 🐄

📌 Location: Titan Township
📞 Contact: 95664 282

29/01/2025

🏠 Rental House for Sale – Prime Location in Hosur!

📍 Location: Behind Grand Cinema 🎥, near the new 6-line road 🚧
🧭 Facing: North-facing site & North-facing door 🏡
📏 Land Area: 1440 sqft (30x48) 📐
🏗️ Building Area: 6200 sqft – Brand New Construction 🏢
💦 Water Facilities: Borewell (850 ft) & Individual Sump 🚰
🛣️ Road: 40 ft Tar Road 🚗
🛑 Security: CCTV Installed 📹
✅ Vasthu Compliant: 100% 🏠✨
🏘️ Rental Units: 12 x 1BHK Apartments + 1 Shop 🏪
📈 Monthly Rental Income: ₹95,000 📊
📜 Company Lease Agreement: 3 Years 🏢🤝
🏦 Loan Facility Available 🏡💳
📝 Approved Engineering & Architectural Plan 📑

📞 Interested? Call/WhatsApp: M. Santhosh - 9585022037 📲

#🏠HosurRealEstate #🏡HouseForSale #💰RentalIncome #📈InvestmentProperty #🔑PropertyForSale #🏘️HosurHomes #🏢CommercialProperty #💵RentalHouse #🏗️NewBuilding #🧭NorthFacingHome #📊BestInvestment #✅VasthuCompliant #🎥HouseNearGrandCinema #🏦LoanAvailable #🔐SecureLiving

19/01/2025

🚨 🏠 Hot Land Sale in Hosur! 🏠 🚨

✨ Own Your Dream Land Today! ✨

📏 Land Size: 1200 Sqft (30x40)
🌟 Prime Location:
• Close to New Bus Stand 🚌
• Near Satellite Town Ring Road (STRR) 🌐
• Surrounded by 100+ Companies 🏭
• Proximity to National Highway 🛣️
• Hospitals, Temples, and More! 🏥🙏

📍 Location:
Moranapalli, Behind Ashok Leyland, Hosur

💰 Limited Offer – Don’t Miss Out! 💰

29/11/2024

"🏡 Prime Corner Plot for Sale in Balaji Nagar!

🌟 Property Details

📞CONTACT : 9600034929

1️⃣ Size: 1200 sqft
2️⃣ Facing: West & South Corner Site
3️⃣ Road Width: 23 ft 🚗
4️⃣ Water Supply: 💧 Corporation Water

🚗 Accessibility

✅ Just 5 minutes to the National Highway 🛣️
✅ Located near Titan Watches & Jewellery Company ⌚💎

📍 Nearby Highlights

• 🏭 100+ Small & Large-Scale Industries
• 🏥 Hospitals
• 🛒 Supermarkets
• ⛽ Petrol Bunks
• 🍴 Restaurants
• 🕉️ Temples

✨ Perfect for building your dream home 🏠 or as a lucrative investment opportunity! 💰

📍 Location: Balaji Nagar, Hosur 📍"

*பத்திர எழுத்தர் ஆபிசில் புகுந்த பாம்பு*சூளகிரி தாலுகா, உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்...
25/05/2024

*பத்திர எழுத்தர் ஆபிசில் புகுந்த பாம்பு*

சூளகிரி தாலுகா, உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பத்திர பதிவுக்காக நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகம் எதிரே, பத்திரங்கள் எழுதும், தனியாரின் எழுத்தர் அலுவலகங்கள் ஏராளமாக உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் ஒரு பத்திர எழுத்தர் அலுவலகத்திற்கு கார் ஒன்று வந்து நின்றது. அப்போது, காரின் அடியில் இருந்து 5 அடி நீளம் கொண்ட பாம்பு வெளியே வந்தது. அது வேகமாக ஊர்ந்தபடி, அங்கிருந்து அலுவலகத்தின் மாடிக்கு சென்றது. அங்கு 2 எழுத்தர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அவர்கள் பாம்பை கண்டதும் அலறியடித்த படி வெளியேறினர். பின்பு அங்கிருந்த பாம்பு வெளியே வந்ததால், அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் பார்த்து, அது சாரைபாம்பு என கண்டறிந்து, அதை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

*தளி அருகே யானை தாக்கி விவசாயி சாவு*கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம...
03/05/2024

*தளி அருகே யானை தாக்கி விவசாயி சாவு*

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியம் மேடுமுத்துக்கோட்டை கிராமத்தை சோ்ந்த அப்பைய்யா(52). இவா் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறாா். இவா் வழக்கம்போல் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளாா். அப்பொழுது மறைவில் இருந்த யானை விவசாயி அப்பைய்யாவை திடீரென தாக்கியதில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற வனத்துறையினா் மற்றும் காவல்துறையினா் அவருடைய சடலத்தை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவருடைய உடலுக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ், அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். தமிழக அரசு சாா்பில் ரூ.10 இலட்சம் நிவாரண தொகை வழங்குவதாக அறிவித்துள்ளதால் முதற்கட்டமாக ரூ.50,000 காசோலையை வழங்கினாா். உடன் தளி வடக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு தலைவா் சீனிவாசலு ரெட்டி, தெற்கு ஒன்றிய செயலாளா் திவாகா், தேன்கனிக்கோட்டை பேரூா் தலைவா் சீனிவாசன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் மணிவண்ணன், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள் கிருஷ்ணன் பிரபாகா் , ஒன்றிய, திமுக நிா்வாகிகள், அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

*கிருஷ்ணகிரியில் வாக்கு எண்ணும் மையப் பகுதியில் ‘ட்ரோன்’ பறக்கத் தடை*கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மின்னணு வாக்குப் ப...
03/05/2024

*கிருஷ்ணகிரியில் வாக்கு எண்ணும் மையப் பகுதியில் ‘ட்ரோன்’ பறக்கத் தடை*

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் மையப் பகுதியில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூன் 5-ஆம் தேதி வரை ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கே.எம்.சரயு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவுக்கு பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாரியாக கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் ஏப். 20 முதல் 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் துணை ராணுவத்தினா் உள்ளிட்ட காவலா்கள் 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதனிடையே, பாதுகாப்பு காரணங்களுக்காக கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜூன் 5-ஆம் தேதி வரை யூஏஸ், யூஏவிக்கான ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்தப் பகுதிகளில் எவ்வித ட்ரோன்களும் பறக்கக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்*ஒசூரில் நிலவும் கடும் குடிநீா் தட்...
02/05/2024

*ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்*

ஒசூரில் நிலவும் கடும் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், ஐஎன்டியுசி தேசிய செயலாளருமான கே.ஏ.மனோகரன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது: ஒசூா் மாநகரம் முழுவதற்கும் ராமநாயக்கன் ஏரி தான் முக்கிய குடிநீா் ஆதாரமாக திகழந்து வந்தது. ஆனால், இப்போது நகரம் முழுவதும் உள்ள கழிவுகள் ராமநாயக்கன் ஏரி, தா்கா ஏரி, பஸ்தி ஏரி, பெரிய ஏரி என நகரத்தைச் சுற்றியுள்ள ஏரிகளில் கொட்டப்பட்டு ஏரிகள் சுகாதாரச் சீா்கேடு அடைந்துள்ளன. மக்களின் குடிநீா் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீா்ப்பாசனத்துக்கும், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும், வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களின் மேற்கூரைகளிலிருந்து விழும் தண்ணீரை சேமிக்க மழை நீா் சேமிப்பு திட்டம் 2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதும் ஒசூரில் பெயரளவுக்கே உள்ளது. மழைநீா் சேமிப்பு அலட்சியத்தால் தற்போது மழைநீா் சேமிப்பு கட்டுப்பாடுகள் அறிமுகமாகி 23 ஆண்டுகளைக் கடந்தும் ஒசூா் பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் மழை நீரை சேமிக்க பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி கட்டாயப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீடுளிலும் மழை நீா் சேமிப்புகளை புதுப்பிக்க வேண்டும். அதே போல வீணாகும் கழிவு நீரை சுத்திகரிக்கும் திட்டத்தை தொடங்க வேண்டும். நிலத்தடி நீா்மட்டம் உயா்வதற்கான திட்டங்களை தொடங்கவில்லை எனில், வரும் காலங்களில் தண்ணீருக்காக மக்கள் அலையும் நிலைக்கு தள்ளப்படுவாா்கள். எனவே, தற்போதுள்ள குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

*தக்காளி பறிக்கச் சென்ற பள்ளி மாணவி கிணற்றில் தவறி விழுந்து பலி*கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்குமாரம்பட்டி கி...
02/05/2024

*தக்காளி பறிக்கச் சென்ற பள்ளி மாணவி கிணற்றில் தவறி விழுந்து பலி*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்குமாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். விவசாயி. இவரது மகள் சுப்ரியா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் இன்று காலை தக்காளி பறிப்பதற்காக அவரது வீட்டின் பின்புறம் தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் மாணவி சுப்ரியா தவறி விழுந்தார். இதில் நீச்சல் தெரியாததால் மாணவி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் மற்றும் சாமல்பட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் சுப்ரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாணவி சுப்ரியாவின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

*வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு*கிருஷ்ணகிரி மக்களவைத் தோ்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மைய...
15/04/2024

*வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு*

கிருஷ்ணகிரி மக்களவைத் தோ்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் கே.எம்.சரயு ஆய்வு செய்தாா். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் ஏப்.19-ஆம் தேதி நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப் பேரவை தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் எண்ணப்படுகின்றன. இந்த மையத்தில், சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சட்டப் பேரவை தொகுதி வாரியாக பாதுகாப்பாக வைக்கப்படும் அறைகள், வாக்குப் பதிவின்போது பயன்படுத்தப்படும் பொருள்கள், வாக்குகள் எண்ணும் மையத்தில் அரசியல் கட்சிகளின் முகவா்களுக்கான இடம், பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் பாதுகாப்பு மையத்தில் 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் குறித்து கிருஷ்ணகிரி மக்களவைத தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கே.எம்.சரயு ஆய்வு செய்தாா். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, தனி மாவட்ட வருவாய் அலுவலா் பழனி, வருவாய் கோட்டாட்சியா் பாபு, துணை காவல் கண்காணிப்பாளா் தமிழரசி, தனி வட்டாட்சியா்கள் ஜெய்சங்கா், சம்பத் (தோ்தல்), கிருஷ்ணகிரி வட்டாட்சியா் சுப்பரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

*கிருஷ்ணகிரியில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை*கிருஷ்ணகிரி அணையின் கீழ் பகுதி தென்பெண்ணை ஆற்றி...
13/04/2024

*கிருஷ்ணகிரியில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை*

கிருஷ்ணகிரி அணையின் கீழ் பகுதி தென்பெண்ணை ஆற்றில் உள்ள 19 கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பயன்பெறும் கிராம மக்களுக்குக் கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என குடிநீர் திட்டப் பணியை ஆய்வு செய்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கிருஷ்ணகிரி கோட்ட அலுவலர்கள் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக 'ஜீரோ' நிலையில் உள்ளது. மேலும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தென் பெண்ணை ஆற்று நீரை அடிப்படையாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து, குடிநீர் வடிகால் வாரிய கிருஷ்ணகிரி திட்ட கோட்ட அலுவலர்கள் கடந்த 7-ம் தேதி தென் பெண்ணை ஆற்றில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்ட நீர் உறிஞ்சி கிணறுகளை ஆய்வு செய்தனர். மேலும், இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி அணையின் கீழ் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் பராமரிப்பில் 19 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சு கிணறுகள் மூலம் நீரேற்றம் செய்யப்பட்டு, பர்கூர், ஊத்தங்கரை பேரூராட்சிகள் மற்றும் 916 இதர குடியிருப்புகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை தென்பெண்ணை ஆற்றில் நீரோட்டம் உள்ளதால், நீர் உறிஞ்சு கிணறுகள் உள்ள பகுதிகளில் 10 நாட்களுக்கு மேல் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 42 அடிக்குத் தண்ணீர் உள்ளது. மேலும், கோடை மழை கைகொடுக்காவிட்டாலும், மாவட்ட நிர்வாகம் மூலம் அணையிலிருந்து குடிநீர் தேவைக்கு ஆற்றில் தொடர்ந்து நீர் திறந்து விடப் படும். இதன் மூலம் குடிநீர் திட்ட நீர் உறிஞ்சு கிணறுகளுக்குத் தட்டுப்பாடின்றி நீரோட்டம் கிடைக்கும். குறிப்பாக, கிருஷ்ணகிரி அணையிலிருந்து இருமத்தூர் வரையில் உள்ள நீர் உறிஞ்சு கிணறுகளுக்கு நீரோட்டத்தில் பாதிப்பு வராது. இருமத்தூருக்கு அடுத்துள்ள 3 நீர் உறிஞ்சி கிணறுகளுக்கு நீரோட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், ஈச்சம்பாடி அணை நீரைக் கொண்டு தட்டுப்பாடு சரி செய்யப்படும். மேலும், குடியிருப்புகளுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தினசரி ஒரு நபருக்கு 40 லிட்டரும், உள்ளூர் குடிநீர் திட்டங்கள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால். கோடை காலத்திலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் போதிய குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

*இருளர் இன மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம்*ராயக்கோட்டை: 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கு அழைப்பு விடுத்து, கெலமங்கலம் இருள...
05/04/2024

*இருளர் இன மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம்*

ராயக்கோட்டை: 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கு அழைப்பு விடுத்து, கெலமங்கலம் இருளர் காலனி மக்களிடையே கூடுதல் கலெக்டர் பிரசாரம் செய்தார். கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஐக்கேரி ஊராட்சி விருப்பாச்சி நகரில் உள்ள இருளர் காலனி மக்களிடையே, 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கு அழைப்பு விடுத்து, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்ய, காய்கறிகள் மற்றும் மலர்களால் ஓவியங்கள் வரையப்பட்டன. இருளர் காலனியில் வசிக்கும் பெண்களுக்கு, மருதாணி மூலம் கைகளில் வண்ணமிட்டு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அலுவலக பணியாளர்களுக்கு தேர்தல் தொடர்பான குறிப்பேடு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பிடிஓ.,க்கள் சீனிவாசமூர்த்தி, சாந்தி மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

*ஓய்வுபெற்ற கிராம நிா்வாக உதவியாளரை கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை*ஒசூர்: நிலத் தகராறில் ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலக...
03/04/2024

*ஓய்வுபெற்ற கிராம நிா்வாக உதவியாளரை கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை*

ஒசூர்: நிலத் தகராறில் ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலக உதவியாளரைக் கொலை செய்த வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஒசூா் அருகே உள்ள கொடகரை கிராமத்தைச் சோ்ந்தவா் சிவ ருத்ரப்பன்(34). இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். அதே கிராமத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (62). இவா் ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலக உதவியாளா். சிவ ருத்ரப்பனுக்கும் ராமகிருஷ்ணனுக்கும் இடையே கிராமத்தில் நிலம் தொடா்பாக கடந்த 25 ஆண்டுகளாக தகராறு இருந்து வந்தது. இதுதொடா்பான வழக்கு, தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு டிச. 11-ஆம் தேதி இரவு இவா்கள் இருவருக்கும் இடையே மீண்டும் நிலம் தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட மோதலில் சிவா ருத்ரப்பன் ஆவேசத்தில் ஏா் கலப்பையை எடுத்து ராமகிருஷ்ணனைத் தாக்கினாா். இதில் சம்பவ இடத்திலேயே ராமகிருஷ்ணன் உயிரிழந்தாா். இதுகுறித்து ராமகிருஷ்ணனின் மகன் காந்தி அளித்த புகாரின் பேரில் அஞ்செட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சிவ ருத்ரப்பனைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஒசூா், மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை தீா்ப்பளித்தாா். அதில், கொலையாளி சிவ ருத்ரப்பனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பு கூறினாா். இதையடுத்து போலீஸாா், சிவ ருத்ரப்பனை வேலூா் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனா்.

*சோளப்பயிர் தோட்டத்திற்கு படையெடுக்கும் கிளிகள் - கிருஷ்ணகிரி அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி*கிருஷ்ணகிரி அருகே சோளப்பயிர் ...
02/04/2024

*சோளப்பயிர் தோட்டத்திற்கு படையெடுக்கும் கிளிகள் - கிருஷ்ணகிரி அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி*

கிருஷ்ணகிரி அருகே சோளப்பயிர் தோட்டத்துக்கு உணவு தேடி ஏராளமான கிளிகள் வருவதால், சோளத்தை அறுவடை செய்ய மனமின்றி விவசாயிகள் அப்படியே விட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுதானிய பயிர்களான ராகி, சோளம், சாமை, கம்பு உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி ஆகிறது. இதில் 8 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோளம் விதைக்கப் பட்டாலும், கிருஷ்ணகிரி அருகே பெத்தாளப்பள்ளி, தின்னகழனி, கங்லேரி, வடுகம்பட்டி உட்பட சுற்றுவட்டாரக் கிராமங்களில் ராகி, சோளம் அதிகளவில் பயிரிடப்படு கிறது. மேலும், கிருஷ்ணகிரி அணை நீர்தேக்கத்தை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமங்களில் ஆண்டு முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் உள்ளதால் சோளப் பயிர்களை பயிரிடு கின்றனர். இந்நிலையில், தின்னகழனி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சோளப் பயிர் தோட்டத்துக்கு அதிகளவில் பச்சைக் கிளிகள் படையெடுத்து வருகின்றன. இவை ஒன்றோடு ஒன்று விளையாடி எழுப்பும் ஓசையால் தின்னகழனி பகுதி விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து தின்னகழனி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அபிமன்னன் கூறும்போது, கிராமப்புறங்களில் உள்ளவர்கள், சோளத்தை முக்கிய உணவாக பயன்படுத்தி வருகின்றனர். சோளத்தில், 'கார்போஹைட்ரேட்' அதிகம் உள்ளதால், உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவாகவும் விளங்குகிறது. சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு காரணமாக சோளம் நுகர்வு அதிகரித்துள்ளது. தற்போது தோட்டத்தில் சோளம் பயிரிட்டுள்ளோம். சோளம் கதிர்விட்டு விளைந்து, அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், சோளப்பயிர் தோட்டத்திற்கு உணவு தேடி பறவைகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக பச்சை கிளிகள் அதிகளவில் சோளத்தை திண்பதற்காக கூட்டம், கூட்டமாக வருகின்றன. இதனால் அறுவடைக்கான காலம் முடிந்தும் பயிர்களை கிளிகளுக்காக அப்படியே விட்டுவிட்டேன். கிராமத்திற்கு அதிகளவில் வரும் பச்சை கிளிகளால் குழந்தைகள் உட்பட அனைவரும் அதனை கண்டு ரசிக்கின்றனர், என்றார்.

Address

Hosur
635109

Website

Alerts

Be the first to know and let us send you an email when NammaHosur Market posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share