Town News - No 1 Neighbourhood Newspaper

  • Home
  • Town News - No 1 Neighbourhood Newspaper

Town News - No 1 Neighbourhood Newspaper Know Your Neighbourhood

 #வில்லிவாக்கத்தில் கோசாலை அமைக்க அடிக்கல்... #வில்லிவாக்கத்தில் ரூ.1.48 கோடியில் கோசாலை மையம் அமைப்பதற்கான பணியை அமைச்ச...
13/03/2025

#வில்லிவாக்கத்தில் கோசாலை அமைக்க அடிக்கல்...

#வில்லிவாக்கத்தில் ரூ.1.48 கோடியில் கோசாலை மையம் அமைப்பதற்கான பணியை அமைச்சர் பி.கே.சேகர் பாபு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினார். வில்லிவாக்கம் ஏரியில் அமைக்கப்படும் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மைய பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.
................................................................
முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள

*Follow the TownNews360° CHANNEL on WhatsApp:* *https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V*.................................................................
For...
NEWS Around YOU... BUSINESS Around YOU...

Town News...
*OFFICIAL Facebook PAGE👇*
*https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*

 #சென்னை போலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டு... #அரசு பஸ்களில் மாவட்டத்துக்குள் இலவசமாக பயணம் செய்ய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும...
13/03/2025

#சென்னை போலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டு...

#அரசு பஸ்களில் மாவட்டத்துக்குள் இலவசமாக பயணம் செய்ய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார்.
இதன்படி சென்னை பெருநகர காவல் துறையில் முதல்கட்டமாக 11,021 போலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டுகளை காவல் ஆணையர் சங்கர் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் மாநகர் பஸ்கள், புறநகர் பஸ்களில் பயணம் செய்யலாம். ஏசி பஸ்கள், அரசு விரைவு பஸ்களில் மட்டும் அனுமதி கிடையாது.

 #மாவட்டம்தோறும் புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையம்... #அடுத்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோயாளிகள் பராமரிப...
13/03/2025

#மாவட்டம்தோறும் புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையம்...

#அடுத்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி 2025-26-ம் ஆண்டில் நாடு முழுவதும் 200 புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையங்கள் திறக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

 #அம்பத்தூர், ஆவடி அஞ்சலகங்களில்இ-கேஒய்சி முறையில் சேமிப்பு கணக்கு... #அஞ்சலகங்களில் காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில்...
13/03/2025

#அம்பத்தூர், ஆவடி அஞ்சலகங்களில்
இ-கேஒய்சி முறையில் சேமிப்பு கணக்கு...

#அஞ்சலகங்களில் காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில் இ-கேஒய்சி முறையில் சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட 20 அஞ்சலகங்களில் இந்த வசதி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த மாத இறுதிக்குள் 557 அஞ்சலகங்களில் இ-கேஒய்சி வசதி விரிவுபடுத்தப்படும் என்று சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

 #வில்லிவாக்கம் ஏரி பூங்காவரும் ஜூலை மாதம் திறக்கப்படும்... #வில்லிவாக்கம் ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு வர...
13/03/2025

#வில்லிவாக்கம் ஏரி பூங்கா
வரும் ஜூலை மாதம் திறக்கப்படும்...

#வில்லிவாக்கம் ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. ஏரியின் நடுவே கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. பூங்கா பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஜூலை மாதம் வில்லிவாக்கம் ஏரி பூங்கா திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

 #புதிய கல்வி கொள்கை குறித்த உண்மைகளை விளக்கபுதிய இணையதளம் தொடக்கம்... #புதிய கல்வி கொள்கை, மும்மொழிக் கொள்கை குறித்த உண...
13/03/2025

#புதிய கல்வி கொள்கை குறித்த உண்மைகளை விளக்க
புதிய இணையதளம் தொடக்கம்...

#புதிய கல்வி கொள்கை, மும்மொழிக் கொள்கை குறித்த உண்மைகளை விளக்க www.thesamacheerkalvi.in என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு இணையதளத்தை அண்மையில் தொடங்கிவைத்தது.

 #கல்வி உதவித் தொகை பெறமார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்... #மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக பிற்படுத்தப்பட்டோர்...
13/03/2025

#கல்வி உதவித் தொகை பெற
மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்...

#மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியரிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த அவகாசம் மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் https://umis.tn.gov.in இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

13/03/2025

#தமிழகத்தில் வழக்கத்துக்கு மாறாக மார்ச் மாதத்தில் 93% இடங்களில் மழை...

#தமிழகத்தில் வழக்கத்துக்கு மாறாக மார்ச் மாதத்தில் 93 சதவீத இடங்களில் மழை பெய்துள்ளது. 26 இடங்களில் கனமழையும், 4 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது.

13/03/2025

- ரூ.2,000 மாத கட்டணத்தில் புதிய திட்டம்.

#சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.2,000 கட்டணத்தில் மாதம் முழுவதும் பயணிக்க புதிய திட்டம்.

#ஏசி உள்ளிட்ட அனைத்து வகையான பேருந்துகளிலும் பயணம் செய்யும் வகையில் விரைவில் அறிமுகம்.

#மே அல்லது ஜூன் மாதத்திற்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு.

#ரூ.1,000 மாத கட்டண திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று புதிய திட்டம் விரைவில் அறிமுகம்.

#ரூ.1,000 மாதாந்திர பயண திட்டமும் தொடர வேண்டும் என பயணிகள் கோரிக்கை.

13/03/2025

#தமிழக பட்ஜெட்டை சென்னையில் 100 இடங்களில் பொதுமக்கள் நேரலையில் காண ஏற்பாடு.

#2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.

#தமிழக பட்ஜெட்டை பொதுமக்கள் நேரலையில் காணும் வகையில் சென்னையில் 100 இடங்களில் ஏற்பாடு.

#சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம்.

#மெரினா கடற்கரை, பாண்டிபஜார் சாலை, கத்திப்பாரா பூங்கா உள்ளிட்ட இடங்களில் காலை 9.30 மணி முதல் ஒளிபரப்பப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு.

12/03/2025
12/03/2025

#தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு.

#ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்த கால அட்டவணைப்படி பொதுத் தேர்வினை எழுத வேண்டும்.

#தொடக்கக் கல்வித் துறையில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தேர்வு தொடங்குகிறது. ஒன்றாம் முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது. ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 21ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளது.

#ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் எட்டாம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படும்.

 #திருச்செந்தூர் மாசி திருவிழா தேரோட்டத்தில் காலை 7.50 மணிக்கு புறப்பட்ட முருகர் தேர் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வடம் ப...
12/03/2025

#திருச்செந்தூர் மாசி திருவிழா தேரோட்டத்தில் காலை 7.50 மணிக்கு புறப்பட்ட முருகர் தேர் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து காலை 10:50 மணிக்கு நிலைக்கு வந்தது.

12/03/2025

#சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.64,520க்கு விற்பனை..!!

#சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.64,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

#சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.8,065க்கு விற்பனையாகிறது.

#வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒருகிராம் ரூ.109க்கும், ஒருகிலோ ரூ.1,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 #உலக சிறுநீரக தினம் இன்று... #ஆண்டு தோறும் மார்ச் இரண்டாம் வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது. சிறுநீ...
12/03/2025

#உலக சிறுநீரக தினம் இன்று...

#ஆண்டு தோறும் மார்ச் இரண்டாம் வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது. சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

#உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கிய பணியைச் செய்கின்றன.

#உடலின் கழிவுத் தொழிற்சாலை என்று அழைக்கப்படுகிற சிறுநீரகங்கள், நம் வயிற்றின் பின்பக்கம், கீழ் முதுகுப் பகுதியில், முதுகுத்தண்டின் இருபுறமும், அவரை விதை வடிவத்தில் அமைந்துள்ளன. சிறுநீரகம் ஒவ்வொன்றும் சுமார் 10 செ.மீ. நீளமும், 5 செ.மீ. அகலமும், 150 கிராம் எடையும் உடையது.

#ஒவ்வொன்றிலும் பத்து லட்சம் நெப்ரான்கள் (Nephrons) உள்ளன. நெப்ரான்கள் என்பவை ரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுகின்ற நுண்ணிய முடிச்சுகள். அதாவது, சிறுநீரகத்தின் உயிர்மூச்சுகள்! வீட்டுக்குக் கழிவறை எப்படி அவசியமோ அதுமாதிரி நம் உடலுக்கு சிறுநீரகம் அவசியம். சிறுநீரகங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 190 - 200 லிட்டர் ரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன. இதில், கிட்டத்தட்ட 1.8 லிட்டர் சிறுநீராக வெளியேறுகிறது. மீதம் உள்ளவை மீண்டும் உடலுக்குள் செலுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இப்படிப் பிரிக்கப்படும் சிறுநீரானது சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்படுகிறது.சிறுநீரகத்தை பாதுகாப்பதற்கு தினமும் 8-10 கோப்பை தூய நீர் அருந்த வேண்டும். இதுவே வெயிலில் நின்று பணியாற்றும் போது குடிநீரை அதிகமாக பருக வேண்டும். கொதித்த நீர், வடிகட்டிய நீர் போன்றவற்றை பயன்படுத்துவது நன்மை பயக்கும். இயற்கையான பானங்களும் பருகுவதற்கு ஏற்றவை. ரீஃபைண்டு கார்போஹைட்ரேட் எனப்படும் மைதா, சர்க்கரை, போன்றவையும் சிறுநீரகத்தைப் பாதிக்கும். இவற்றின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்

 #இதே மார்ச் 12, 1930.  #மகாத்மா காந்தி வெள்ளையரின் உப்பு சட்டத்தை முறியடிக்கும் நோக்கோடு தண்டி யாத்திரையை துவக்கிய நாள்...
12/03/2025

#இதே மார்ச் 12, 1930.

#மகாத்மா காந்தி வெள்ளையரின் உப்பு சட்டத்தை முறியடிக்கும் நோக்கோடு தண்டி யாத்திரையை துவக்கிய நாள்.

#உப்பு சத்தியாகிரகம் அல்லது தண்டி யாத்திரை (Salt March) என்பதுகாலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும். மார்ச்சு 12, 1930 இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது. 1930 ஜனவரி 30 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்த முழு விடுதலை என்ற விடுதலைப் பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாகச் செய்யப்பட்ட முதல் நடவடிக்கையாகும்.

#காந்தி தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து 23 நாள்கள் 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு நடை பயணத்தை வழி நடத்தினார், உப்பை உற்பத்தி செய்வதற்கு விதித்த தடையை மீறி வழியில் அவருடன் இந்தியர்கள் பெருமளவு எண்ணிக்கையுடன் இணைந்தனர்'

#காந்தியின் தொலைநோக்குப் பார்வை எப்போதும் இந்தியாவின் சமூக வரலாற்றை உயிர்ப்பித்து, அதற்கு நிகழ் காலத்தில் செயல் வடிவம் கொடுப்பதாக இருந்தது.அவருடைய தண்டி யாத்திரையும் அத்தகையதுதான்.

 #மார்ச் 12, 1954 #சாகித்ய அகாடமி, இந்திய அரசினால் தொடங்கப்பட்டது. #சாகித்ய அகாடமி விருது (Sahitya Akademi Award)சிறந்த ...
12/03/2025

#மார்ச் 12, 1954

#சாகித்ய அகாடமி,
இந்திய அரசினால் தொடங்கப்பட்டது.

#சாகித்ய அகாடமி விருது
(Sahitya Akademi Award)
சிறந்த இந்திய இலக்கிய
படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும்,
ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன.

#இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை,
நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

12/03/2025

#3 மாவட்டத்தில் இன்று கனமழை; வானிலை மையம் தகவல்...

#சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் அறிக்கை:

#தமிழகத்தில் தென் மாவட்டங்களில், கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்கள், பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் நேற்று மழை துவங்கியது. கடலுார் முதல் கன்னியாகுமரி வரை, பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

#நேற்று காலை முதல் மாலை 5:30 மணி வரை, அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 9 செ.மீ., மழை பெய்துள்ளது.

#இதற்கு அடுத்தபடியாக, ராமநாதபுரத்தில் 7; நாகப்பட்டினம், திருவாரூர் 6; கள்ளக்குறிச்சி, கடலுார் பரங்கிப்பேட்டை, விருத்தாசலம் 4; நாகப்பட்டினம், மயிலாடுதுறை மணல்மேடு 3; துாத்துக்குடி ரயில் நிலையம், 2 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.

#தமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய, தென்மேற்கு வங்கக்கடலில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில், ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

#கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யலாம். தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

#இருப்பினும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும், பகல் நேரத்தில் வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாகலாம்.

#சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Address


Opening Hours

Monday 09:30 - 18:30
Tuesday 09:30 - 18:30
Wednesday 09:30 - 18:30
Thursday 09:30 - 18:30
Friday 09:30 - 18:30
Saturday 09:30 - 18:30

Telephone

+918012080120

Alerts

Be the first to know and let us send you an email when Town News - No 1 Neighbourhood Newspaper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Town News - No 1 Neighbourhood Newspaper:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share