Seidhi Idhazh - செய்தி இதழ்

Seidhi Idhazh - செய்தி இதழ் BREAKING NEWS | NEWS UPDATES | TAMIL

பச்சை பூமியின் 11 ஆம் விவசாயக் கண்காட்சி, விழுப்புரத்தில் உள்ள ஆனந்தா ஏ.சி. திருமண மஹாலில், அக்டோபர் 6, 7, 8, 9, வெள்ளி,...
15/09/2023

பச்சை பூமியின் 11 ஆம் விவசாயக் கண்காட்சி, விழுப்புரத்தில் உள்ள ஆனந்தா ஏ.சி. திருமண மஹாலில், அக்டோபர் 6, 7, 8, 9, வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. விவசாய வளர்ச்சி, விவசாயப் பெருமக்களின் முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பச்சை பூமி விவசாய மாத இதழ் 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பச்சை பூமி விவசாயக் கண்காட்சி 2021 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம், இராஜபாளையம், நாமக்கல், பொள்ளாச்சி, தேனி, ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி, பொள்ளாச்சி, கோபிசெட்டிப்பாளையம், நாமக்கல் என, பத்து இடங்களில் இதுவரை பச்சை பூமியின் விவசாயக் கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்ட நிலையில், விழுப்புரத்தில் 11 ஆவது கண்காட்சி, அடுத்த மாதம், அதாவது, அக்டோபர் 6, 7, 8, 9, வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நான்கு நாட்கள் நடக்க உள்ளது....

பச்சை பூமியின் 11 ஆம் விவசாயக் கண்காட்சி, விழுப்புரத்தில் உள்ள ஆனந்தா ஏ.சி. திருமண மஹாலில், அக்டோபர் 6, 7, 8, 9, வெள்ளி, ச...

திட்டமிட்டபடி அனைத்து இடங்களிலும் வாரிசு படம் வெளியாகும் என்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் ...
23/11/2022

திட்டமிட்டபடி அனைத்து இடங்களிலும் வாரிசு படம் வெளியாகும் என்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தெரிவித்துள்ளார் விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார். விஜய்க்கு தெலுங்கிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இதனால் வாரிசு படத்தை ஆந்திரா, தெலுங்கானாவிலும் கூடுதல் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர்....

வாரிசு படம் திட்டமிட்டபடி அனைத்து இடங்களிலும் வெளியாகும் என அறிவிப்பு! - திட்டமிட்டபடி அனைத்து இடங்களிலும் வா....

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் பறிகொடுத்தது. துபாய், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலி...
23/11/2022

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் பறிகொடுத்தது. துபாய், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை ஆஸ்திரேலிய அணி வென்றிருந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்கிய இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா 221 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முழுமையாக வென்றது. இந்த தொடரரை முழுமையாக இழந்ததன் மூலம் இங்கிலாந்து அணி ஐசிசி ஒருநாள் அணிகளின் தரவரிசையில் முதலிடத்தை பறிகொடுத்துள்ளது....

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி... தரவரிசையில் முதலிடத்தை இழந்த இங்கிலாந்து! - ஆஸ்திரேலியாவுக்...

ராணுவத்தில் 4 மாதங்களாக பணியாற்றிய பின் வேலையிலேயே தன்னை சேர்க்கவில்லை என அறிந்து நபர் ஒருவர் அதிர்ச்சியடைந்து உள்ளார். ...
23/11/2022

ராணுவத்தில் 4 மாதங்களாக பணியாற்றிய பின் வேலையிலேயே தன்னை சேர்க்கவில்லை என அறிந்து நபர் ஒருவர் அதிர்ச்சியடைந்து உள்ளார். உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 20). ராணுவத்தில் பதன்கோட் பகுதியில் பணியமர்த்தப்பட்ட இவர் முகாமில் தங்கி, 4 மாதங்களாக பணியாற்றி வந்து உள்ளார். இந்த நிலையில், அவர் போலீசில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், தன்னை வேலையிலேயே சேர்க்காமல், பணியில் சேர்ந்து விட்டது போல் மோசடி நடந்து உள்ளது என தெரிவித்து உள்ளார். மனோஜுக்கு அடையாள அட்டை மற்றும் சீருடை ஆகியவை கொடுக்கப்பட்டு உள்ளது....

ராணுவத்தில் பணி மோசடி; 4 மாதத்துக்குப் பிறகு பணியிலேயே இல்லை என அறிந்து அதிர்ச்சியடைந்த இளைஞர்! - ராணுவத்தில் 4 ம....

இன்று, ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் நாளை விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம்...
23/11/2022

இன்று, ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் நாளை விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இதனை விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் லூத்ரா, இந்த விவகாரத்தை ஜனவரி மாதத்துக்கு முன் விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். அதேபோல், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை எடுத்துரைத்தார்....

ஜல்லிக்கட்டு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை விசாரணை! - இன்று, ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு விசாரணைக்கு வர...

குஜராத் சட்டசபை தேர்தல் பரபரப்புக்கு இடையே 40 ஆண்டுகளாக கிராமம் ஒன்றில் அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு தடை விதிக்கும்...
23/11/2022

குஜராத் சட்டசபை தேர்தல் பரபரப்புக்கு இடையே 40 ஆண்டுகளாக கிராமம் ஒன்றில் அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு தடை விதிக்கும் அதிசயம் காணப்படுகிறது. குஜராத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் ராஜ் சமதியாலா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் எந்தவொரு அரசியல் கட்சியினரும் நுழைந்து விட முடியாது. அவர்கள் பிரசாரம் செய்வதற்கும் அனுமதி இல்லை. ஏனெனில், பிரசாரத்திற்கு வேட்பாளர்களை உள்ளே விட்டால், அந்த பகுதிக்கு அவர்கள் ஏதேனும் தீங்கு விளைவித்து விடுவார்கள் என கிராமத்தினர் நினைக்கின்றனர்....

40 ஆண்டுகளாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தையே எதிர்கொள்ளாத கிராமம்! - குஜராத் சட்டசபை தேர்தல் பரபரப்ப.....

டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே உள்ளார். சர்வதேச கிரி...
23/11/2022

டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே உள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆம் தேதி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்திற்கு முன்னேறி இருந்த சூர்யகுமார் யாதவ் (890 புள்ளிகள்) தற்போது அதை தக்கவைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அதிரடி சதம் விளாசி இருந்த சூர்யகுமார் 31 புள்ளிகள் கூடுதலாக பெற்று 890 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்....

ஐசிசி டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம்! பாபர் அசாம் பின்னடைவு! - டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவ....

அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா மாகாணம் செசப்ஹு நகரில் வால்மார்ட் நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்த சூப்பர் மார...
23/11/2022

அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா மாகாணம் செசப்ஹு நகரில் வால்மார்ட் நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) ஊழியர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த சூப்பர் மார்க்கெட் மேலாளர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். மேலாளர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை கண்டு அதிர்ச்சியடைந்த சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள தலைதெறிக்க ஓடினர். ஆனால், தொடர்ந்து மேலாளர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்....

6 ஊழியர்களை சுட்டுக்கொன்று சூப்பர் மார்க்கெட் மேலாளர் தற்கொலை! - அப்போது, அந்த சூப்பர் மார்க்கெட் மேலாளர் தான் வ...

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன் வீரசாவர்க்கர் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியத...
22/11/2022

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன் வீரசாவர்க்கர் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மகாத்மா காந்தியை கொலை செய்ய சக்தி வாய்ந்த துப்பாக்கியை கண்டறிய நாதுராம் கோட்சேவுக்கு வீரசாவர்க்கர் உதவி செய்ததாக அவரது பேரன் துஷார் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பது: சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு மட்டும் உதவி செய்யவில்லை. அவர் மகாத்மா காந்தியை கொல்ல சக்தி வாய்ந்த துப்பாக்கியை கண்டறியவும் நாதுராம் கோட்சேவுக்கு உதவி செய்தார். கொலை நடப்பதற்கு 2 நாட்கள் முன்பு வரை, காந்தியை கொல்ல நாதுராம் கோட்சேவிடம் சரியான ஆயுதங்கள் இல்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும், ராகுல் காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை நடைபயணம் இந்தியாவின் நலனுக்கானது. அதை தடுக்க சர்ச்சைகளை அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

காந்தியை கொல்ல கோட்சேவுக்கு சாவர்க்கர் உதவி செய்தார் -பேரன் குற்றச்சாட்டு! - இந்த நிலையில் மகாத்மா காந்தியை கொ.....

முதன்மை தேர்வில் தாங்கள் பங்கேற்க முடியுமா என சிக்கல் எழுந்துள்ளதாக குரூப் 2 தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம்...
22/11/2022

முதன்மை தேர்வில் தாங்கள் பங்கேற்க முடியுமா என சிக்கல் எழுந்துள்ளதாக குரூப் 2 தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 2 முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேர் தங்கள் ஹால் டிக்கெட்டை முதன்மை தேர்வுக்காக இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏராளமான தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டில் அறை கண்காணிப்பாளர்கள் கையெழுத்திடாதது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் முதன்மை தேர்வில் தாங்கள் பங்கேற்க முடியுமா என சிக்கல் எழுந்துள்ளதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேருக்கு வந்த புதிய சிக்கல்! - முதன்மை தேர்வில் தாங்கள் பங்கேற்க முடியு...

காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்....
22/11/2022

காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதாக பா.ஜ.க. நிர்வாகி காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகவும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதையடுத்து தமது நீக்கம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம், கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். வெளிநாடுகளில் சிக்கியவர்களை சொந்த செலவில் மீட்டுள்ளேன்....

காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கம் -அண்ணாமலை - காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புக.....

தமிழ்நாட்டில் 208 பேருக்கு மத்திய அரசின் பணி நியமன ஆணைகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார். மத்திய அரசில் ஓராண்டில...
22/11/2022

தமிழ்நாட்டில் 208 பேருக்கு மத்திய அரசின் பணி நியமன ஆணைகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார். மத்திய அரசில் ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, நாடு முழுவதும் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதன் 2-வது கட்டமாக இன்று நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமனங்களை பிரதமர் மோடி வழங்கினார். டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அதேநேரத்தில் இதர மாநிலங்களில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு வழங்கினர்....

தமிழகத்தில் 208 பேருக்கு பணி நியமன ஆணை -எல்.முருகன் வழங்கினார்! - தமிழ்நாட்டில் 208 பேருக்கு மத்திய அரசின் பணி நியமன ....

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை, ஆஸ்திரேலிய அணி 3-0 கணக்கில் முழுமையாக கைப்பற்றி உள்ளது. இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலி...
22/11/2022

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை, ஆஸ்திரேலிய அணி 3-0 கணக்கில் முழுமையாக கைப்பற்றி உள்ளது. இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ள நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் 48 ஓவர்களாக மாற்றப்பட்டது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, டிராவிஸ் ஹெட் மற்றும் வார்னரின் அபார சதத்தால் 48 ஓவர்களில் 355 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ஹெட் 152 ரன்களும், வார்னர் 106 ரன்களும் குவித்தனர்....

கடைசி ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை சுருட்டி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா! - இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொ...

சீனாவில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் சர்வதேச அளவில் தொழில் துறையில் பாதிப்பு ஏற்படலம் என்ற அச்சம் எழுந்த...
22/11/2022

சீனாவில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் சர்வதேச அளவில் தொழில் துறையில் பாதிப்பு ஏற்படலம் என்ற அச்சம் எழுந்துள்ளது. சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக ஜிரோ கோவிட் பாலிசியை பின்பற்றும் சீனா, மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை முடக்கி வருகிறது. இதனால், தொழில் நடவடிக்கைகளும் முடங்கியிருக்கின்றன. சீனாவில் தொழில் துறையில் ஏற்பட்டு இருக்கும் தொய்வு, ஏற்கனவே பலவீனமாக இருக்கும் சர்வதேச வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. சீனாவில் மக்களின் தேவைகள் குறைந்து இருப்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. நுகர்வோர் வாங்குவதில் தொய்வு, உற்பத்தி பாதிப்பு போன்றவை சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கவலை எழுந்துள்ளது.

சீனாவில் மீண்டும் கொரோனா; உலகளவில் தொழில்துறை பாதிக்கும் அபாயம்! - சீனாவில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப....

அசாம்-மேகாலயா எல்லை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் வன அதிகாரி உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் பதற்றம்...
22/11/2022

அசாம்-மேகாலயா எல்லை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் வன அதிகாரி உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிற்கு அடுத்துள்ள மேகாலயாவுக்கு இடையே மேற்கு ஜைந்தியா மலைப் பகுதியில் முக்ரோ என்ற இடம்தான் இரு மாநில எல்லையாக உள்ளது. இந்த பகுதியில், திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதனால், இரு மாநிலங்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதில், அசாம் வன அதிகாரி உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக மேகாலயாவின் 7 மாவட்டங்களில் இன்று காலை முதல் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது....

அசாம்-மேகாலயா எல்லையில் துப்பாக்கிச்சூடு; 6 பேர் பலி; இணையதள சேவை துண்டிப்பு! - அசாம்-மேகாலயா எல்லை பகுதியில் நடந....

சவுதி அரேபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி வலைக்குள் திணித்து முதல் கோலை ப...
22/11/2022

சவுதி அரேபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி வலைக்குள் திணித்து முதல் கோலை பதிவு செய்துள்ளார். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது....

உலகக் கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா அணிக்காக புதிய சாதனை படைத்த மெஸ்ஸி! - சவுதி அரேபியாவுக்கு எதிரான ஆட்டத்தில.....

பெரிய கோவில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி தரிசனம், கட்டண தரிசனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பா...
22/11/2022

பெரிய கோவில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி தரிசனம், கட்டண தரிசனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் குறித்த சீராய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. சீராய்வு கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தி.மு.க. பொறுப்பேற்ற பிறகு, மாதந்தோறும் இந்து சமய அறநிலைத் துறை செயலாளர் மற்றும் ஆணையர் தலைமையில் 15வது சீராய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது....

தமிழகக் கோயில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து -அமைச்சர் சேகர் பாபு தகவல் - பெரிய கோவில்களில் வருமானத்தை .....

லடாக்கில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் பகுதியில் இன்று காலை 10.05 மண...
22/11/2022

லடாக்கில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் பகுதியில் இன்று காலை 10.05 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற அளவில் பதிவாகியிருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம், கார்கிலுக்கு வடக்கே 191 கிமீ தொலைவில் அமைந்திருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதிகளில் உயிரிழப்பு போன்ற எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்! - லடாக்கில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மதுபான ஊழல் வழக்கில் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிடம் மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க முடிவு செய்துள்ளது. தெலுங்கானா ...
22/11/2022

மதுபான ஊழல் வழக்கில் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிடம் மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க முடிவு செய்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஆளுங்கட்சியான சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ். கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் நடந்த மதுபான ஊழல் வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அபிஷேக் போயின் பள்ளி என்பவரை மத்திய புலனாய்வு துறை கைது செய்தது. இதனை தொடர்ந்து கவிதாவுக்கு நெருக்கமானவர் என நம்பப்படும் அருண் ராமச்சந்திரன் மற்றும் ஆடிட்டர் புச்சி பாபு ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை அடிப்படையில் சந்திரசேகர ராவ் கட்சியின் எம்.எல்‌.சி.க்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது....

மதுபான ஊழல் வழக்கில் சந்திரசேகர ராவின் மகளிடம் விசாரிக்க மத்திய புலனாய்வுத்துறை முடிவு! - மதுபான ஊழல் வழக்கில்...

மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா...
22/11/2022

மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ் அறிஞர், சிந்தனையாளர் என பன்முக திறமை கொண்டவர் அவ்வை நடராஜன். இவர் உடல்நல குறைவால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை பட்டமும், 1958-ல் ஆராய்ச்சி பட்டமும், 1974-ல் முனைவர் பட்டமும் பெற்ற அவ்வை நடராஜன், தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியிலும், மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார். பின்னர், டெல்லி அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் இருந்தார்....

அவ்வை நடராசனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு! - மறைந்த தமிழறிஞர் அவ்வை நட...

கேரளாவில் திருமணத்துக்கு வருமாறு அழைத்த புதுமணத் தம்பதியை இந்திய ராணுவத்தினர் நேரில் வரவழைத்து வாழ்த்தி அனுப்பியுள்ளனர்....
22/11/2022

கேரளாவில் திருமணத்துக்கு வருமாறு அழைத்த புதுமணத் தம்பதியை இந்திய ராணுவத்தினர் நேரில் வரவழைத்து வாழ்த்தி அனுப்பியுள்ளனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ராகுலுக்கும் கார்த்திகாவுக்கும் நவம்பர் 10ம் தேதி திருமணம் நடந்தது. இருவரும் தங்கள் திருமணத்தில் கலந்து கொள்ள வருமாறு ராணுவத்திற்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தனர். எங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் உங்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று திருமண அழைப்பிதழில் எழுதப்பட்டிருந்தது. இதனுடன், கையால் எழுதப்பட்ட குறிப்பையும் அனுப்பியுள்ளனர். இதில், நாட்டின் மீது ராணுவம் கொண்டுள்ள அன்பு, உறுதியான உறுதிப்பாடு மற்றும் தேசபக்திக்கு நன்றி தெரிவித்தனர். இதையடுத்து புதுமணத் தம்பதிகள், பாங்கோடு ராணுவ நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர். தம்பதியருக்கு பாங்கோடு ராணுவ நிலையம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஸ்டேஷன் கமாண்டர் பிரிகேடியர் லலித் சர்மா அவர்களை கவுரவித்தார். அப்போது தம்பதிகளுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

திருமண அழைப்பு விடுத்த கேரள தம்பதியை நேரில் அழைத்து வாழ்த்திய ராணுவ அதிகாரிகள்! - கேரளாவில் திருமணத்துக்கு வரு...

பொருளாதார மந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொது மக்கள் ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும் என்று அமேசான் நிறுவனர் ஜெப் (Jeff)...
22/11/2022

பொருளாதார மந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொது மக்கள் ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும் என்று அமேசான் நிறுவனர் ஜெப் (Jeff) பெசோஸ் கூறியுள்ளார். உலகின் மிகப் பெரிய ஆன்லைன் விற்பனையகமான அமேசானை உருவாக்கி நடத்தி வரும் ஜெப் (Jeff) பெசோஸ், உலகப் பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் உள்ளார். அமெரிக்காவில் பொருளாதார மந்தம் ஏற்பட உள்ளதாக அமெரிக்க வாடிக்கையாளர்களை எச்சரித்த ஜெப் (Jeff) பெசோஸ், டி.வி, கார் போன்ற அதிக விலை கொண்ட பொருட்களை வாங்குவதை தவிர்க்குமாறு கூறியுள்ளார். ஆடம்பர பொருட்களை வாங்குவதை ஒத்திவைத்து விட்டு, பொதுமக்கள் தங்களின் பணத்தை சேமிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்....

செலவை குறையுங்கள்; பொருளாதார மந்தம் ஏற்பட வாய்ப்பு -அமேசான் நிறுவனர் எச்சரிக்கை! - பொருளாதார மந்தம் ஏற்பட வாய்ப....

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற நபர் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராம்கர்...
22/11/2022

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற நபர் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராம்கர் செக்டர் பகுதி சர்வதேச எல்லை வழியாக, இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்த அந்த நபர் சர்வதேச எல்லையை கடந்த பிறகு, இந்திய எல்லை வேலிகளை தாண்ட முயற்சித்தார். எச்சரிக்கையை மீறி நுழைந்த அவரை சுட்டுக்கொலை செய்த எல்லை பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியில் சோதனை நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற நபர் சுட்டுக் கொலை! - பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள.....

புளூ செக் சந்தா சேவையை மீண்டும் தொடங்குவதை டுவிட்டர் நிறுத்தி வைத்துள்ளது. உலகின் மிக மதிப்புமிக்க வாகன உற்பத்தி நிறுவனம...
22/11/2022

புளூ செக் சந்தா சேவையை மீண்டும் தொடங்குவதை டுவிட்டர் நிறுத்தி வைத்துள்ளது. உலகின் மிக மதிப்புமிக்க வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் எலான் மஸ்க். அவர் அண்மையில், சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார். டுவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில், புளூ டிக் சேவையை பயன்படுத்துகின்றனர். அதாவது தங்களது டுவிட்டர் கணக்கு தங்களுக்கான அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை குறிக்கும் சேவைதான் இந்த ப்ளு டிக். இதன்மூலம், குறிப்பிட்ட பயனர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்....

டுவிட்டரில் புளூ-செக் சேவை நிறுத்தம் -எலான் மஸ்க் அறிவிப்பு! - புளூ செக் சந்தா சேவையை மீண்டும் தொடங்குவதை டுவிட்...

மராட்டிய மாநிலத்தில் தான் மேற்கொண்ட நடைபயணம் குறித்த அனுபவத்தை, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி அறிக்கை மூலம...
22/11/2022

மராட்டிய மாநிலத்தில் தான் மேற்கொண்ட நடைபயணம் குறித்த அனுபவத்தை, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி அறிக்கை மூலம் பகிர்ந்துள்ளார். அவர், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருகட்டமாக, கடந்த 7-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அவர் மராட்டியத்தில் நடைபயணம் மேற்கொண்டார். இதையடுத்து தனது மராட்டிய நடைபயணம் குறித்த அனுபவத்தை ராகுல் காந்தி அறிக்கை மூலம் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக மோசமடைந்து வரும் விவசாயிகள் படும் இன்னல்கள், அதாவது நிச்சயமற்ற விலை நிர்ணயம் மற்றும் பயிர்காப்பீட்டு திட்டங்களின் தோல்விகள் எனது நடைபயணத்தில் எதிரொலித்தன....

மராட்டியத்தில் விவசாயிகளின் தோல்விகள், இளைஞர்களின் கவலைகள் எதிரொலித்தன -ராகுல் காந்தி - அவர், கன்னியாகுமரி முத...

மும்பையில் இருந்த ஆங்கிலேயர் காலத்து பாலம், ரயில்வே துறையால் அகற்றப்பட்டது. புறநகர் பாதையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்...
22/11/2022

மும்பையில் இருந்த ஆங்கிலேயர் காலத்து பாலம், ரயில்வே துறையால் அகற்றப்பட்டது. புறநகர் பாதையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் மஸ்ஜித் பண்டர் இடையே 150 ஆண்டுகள் பழமையான இரும்பினால் ஆன கர்னக் மேம்பாலம் இருந்தது. இந்த பாலம் 1866இல் கட்டப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டே பெருமளவு போக்குவரத்து குறைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தை ஆய்வு செய்த மும்பை ஐ.ஐ.டி. நிபுணர் குழு, கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த மேம்பாலம் பாதுகாப்பற்றது என்று சான்றளித்தது. …...

150 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் காலத்து இரும்புப் பாலம் அகற்றம்! - மும்பையில் இருந்த ஆங்கிலேயர் காலத்து பாலம், ரய....

சாலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசி...
22/11/2022

சாலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கம் என்பது வாடிக்கையான ஒன்று. பெரும்பாலும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும், சில நேரங்களில் பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரிய அளவில் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த நிலையில், சாலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவாகி உள்ளது....

சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை! - சாலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில.....

கராத்தே-1 சீரியஸ் ஏ பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் பிரனாய் சர்மா. இறுதிப் போட்டியில...
22/11/2022

கராத்தே-1 சீரியஸ் ஏ பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் பிரனாய் சர்மா. இறுதிப் போட்டியில் உக்ரைனின் டேவிட் யானோவ்ஸ்கியை அவர் தோற்கடித்தார். ஜகார்த்தாவில் இந்த போட்டி நடைபெற்றது. ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவு குமிடே இறுதிப் போட்டியில் உக்ரைனின் டேவிட் யானோவ்ஸ்கியை சர்மா எதிர்கொண்டு வென்றார். இதன்மூலம், கராத்தே-1 சீரியஸ் ஏ பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

கராத்தே-1 சீரியஸ் ஏ பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் பிரனாய் சர்மா! - கராத்தே-1 சீரியஸ் ஏ பிரிவில் தங்கப் பதக்.....

தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் முன்னாள் ...
22/11/2022

தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் வயது மூப்பின் காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 85. அவ்வை நடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை அண்ணா நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது கவிஞர் வைரமுத்து உடனிருந்தார். அவ்வை நடராஜன் 1936 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் (அன்றைய வட ஆற்காடு மாவட்டம்) உள்ள செய்யாறு எனும் ஊரில் பிறந்தார்....

தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி! - தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்.....

ஆந்திராவில் அம்மாநில சுற்றுலாத் துறை சார்பில் நடந்த கலை நிகழ்ச்சியில் மாணவிகளுடன் அமைச்சர் ரோஜா நடனமாடினார். ஆந்திராவில்...
22/11/2022

ஆந்திராவில் அம்மாநில சுற்றுலாத் துறை சார்பில் நடந்த கலை நிகழ்ச்சியில் மாணவிகளுடன் அமைச்சர் ரோஜா நடனமாடினார். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்து வருகிறார். ஆந்திர அமைச்சரவையில் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக நடிகை ரோஜா உள்ளார். இந்த நிலையில், திருப்பதியில் சுற்றுலாத் துறை சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரோஜா கலந்து கொண்டு கண்டு களித்தார். கலை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த மந்திரி ரோஜா திடீரென மேடை ஏறி மாணவிகளுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடி அசத்தினார். நடனம் ஆடி விட்டு இறுதியில், அமைச்சர் ரோஜா, கைகளால் மாணவிகளை நோக்கி முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மாணவிகளுடன் சேர்ந்து ரோஜா நடனமாடிய வீடியோ பரவி வருகிறது.

மேடை ஏறி மாணவிகளுடன் குத்தாட்டம் போட்ட ஆந்திர அமைச்சர் ரோஜா! - ஆந்திராவில் அம்மாநில சுற்றுலாத் துறை சார்பில் ந.....

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மக...
22/11/2022

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி அன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் மற்ற பூஜைகள் நடைபெறவில்லை. அதே சமயத்தில் புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பணியை தொடங்கினார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டதால் 17-ந் தேதி முதல் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது....

சபரிமலையில் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிப்பு - சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான .....

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் அர்ஜென்டினா அணிக்கு அந்த நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் ...
22/11/2022

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் அர்ஜென்டினா அணிக்கு அந்த நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் உண்டு. அப்படிப்பட்ட ஒரு தீவிர ரசிகர், தனது வீடு, டீ கடை முழுவதையும் அர்ஜென்டினா அணியின் தேசியக்கொடிக்கு உரிய நிறத்தில் வர்ணம் தீட்டி கவனத்தை ஈர்த்துள்ளார். மேற்கு வங்கம், இச்சாபுர் என்ற ஊரை சேர்ந்தவர் ஷிப் ஷங்கர் பத்ரா (வயது 54). கிளப் அளவிலான கால்பந்து போட்டிகளில் விளையாடியவர். 1986-ம் ஆண்டு அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்றதில் இருந்து அந்த அணியின் தீவிரமான ரசிகராக மாறி விட்டார்....

அர்ஜென்டினா அணிக்காக மேற்கு வங்கத்தில் நிறம் மாறிய டீக்கடை...! - உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் அர...

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் சிறுமி ஒருவரை பயன்படுத்தியதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்...
22/11/2022

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் சிறுமி ஒருவரை பயன்படுத்தியதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. அடுத்த மாதம் குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் பிரதமருக்கு அருகே சிறுமி ஒருவர் நின்று கொண்டு குஜராத்தில் மோடியின் ஆட்சியைப் பற்றி விவரிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோவை மத்திய அமைச்சர்களும், பாரதிய ஜனதா தலைவர்களும் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் சிறுமியை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது....

தேர்தல் பிரசாரத்தில் சிறுமியை பயன்படுத்துவதா? பிரதமர் மோடி மீது காங்கிரஸ் பாய்ச்சல்! - குஜராத்தில் சட்டமன்றத் ...

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று மட்டும் 4 போட்டிகள் நடைபெற உள்ளன. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்ற...
22/11/2022

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று மட்டும் 4 போட்டிகள் நடைபெற உள்ளன. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி, சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகின்றன....

உலகக் கோப்பை கால்பந்து: இன்று மட்டும் 4 போட்டிகள்! - உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று மட்டும் 4 போட்டிகள் நடைப...

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் களம் இறங்குகிறது...
22/11/2022

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் களம் இறங்குகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. வெலிங்டனில் நடக்க இருந்த தொடக்க ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மவுன்ட் மாங்கானுவில் நடந்த 2-வது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடிய இந்தியா, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேப்பியரில் இன்று (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது....

20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வெல்லுமா இந்திய அணி? கடைசி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் இன்று மோதல்! - நியூசிலாந்துக்கு எ....

டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆம் ஆத்மி கட்சியின் சீட்டுகள், பணத்துக்கு விற்கப்படுவதாக ரகசிய வீடியோவை வெ...
22/11/2022

டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆம் ஆத்மி கட்சியின் சீட்டுகள், பணத்துக்கு விற்கப்படுவதாக ரகசிய வீடியோவை வெளியிட்டு பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல், டிசம்பர் 4-ந் தேதி நடக்கிறது. ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், வடமேற்கு டெல்லியின் ரோகிணி டி-வார்டில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட அக்கட்சியைச் சேர்ந்த பிந்து என்பவரிடம் ரூ.80 லட்சம் லஞ்சம் கேட்பது போன்ற ரகசிய வீடியோவை பாரதிய ஜனதா நேற்று வெளியிட்டது. இந்த வீடியோவை பிந்துவே ரகசியமாக எடுத்துள்ளார்....

டெல்லி மாநகராட்சித் தேர்தலில் சீட்டைப் பணத்துக்கு விற்கும் ஆம் ஆத்மி -பா.ஜ.க. குற்றச்சாட்டு! - டெல்லி மாநகராட்சி...

ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு ச...
22/11/2022

ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் 1991 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக 41 பேரை சி.பி.ஐ. கைது செய்திருந்தது. இதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனையும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு இருந்தது. …...

ராஜீவ் கொலைக் கைதிகள் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு செய்ய காங்கிரஸ் முடிவு! - இந்த நிலை.....

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வடகிழக்...
22/11/2022

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வடகிழக்குப் பருவழைத் தொடங்கி பெய்து வரும் நிலையில், கடந்த 17-ந்தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதன் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. பின்னர் அந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தெற்கு ஆந்திரா, தமிழக-புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது....

வலுவிழக்கிறது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; வடமாவட்டங்களில் மழை பெய்யும்! - வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழு....

Address

Chennai
603202

Alerts

Be the first to know and let us send you an email when Seidhi Idhazh - செய்தி இதழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Chennai media companies

Show All