Seidhi Idhazh - செய்தி இதழ்

  • Home
  • Seidhi Idhazh - செய்தி இதழ்

Seidhi Idhazh - செய்தி இதழ் BREAKING NEWS | NEWS UPDATES | TAMIL

நாளை புதுச்சேரி தவெக மாநாட்டுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வர வேண்டாம்: கட்சித் தலைமை வலியுறுத்தல்புதுச்சேரியில் நாளை, ...
08/12/2025

நாளை புதுச்சேரி தவெக மாநாட்டுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வர வேண்டாம்: கட்சித் தலைமை வலியுறுத்தல்

புதுச்சேரியில் நாளை, விஜய் பங்கேற்க உள்ள தவெக மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு தமிழ்நாட்டில் இருந்து யாரும் வர வேண்டாம் என்று காவல்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் வலியுறுத்தி உள்ளார். ஒருவேளை தமிழ்நாட்டில் இருந்து யாரேனும் வந்தால் அவர்கள் கண்டிப்பாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பதும் காவல்துறையின் எச்சரிக்கை. மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் மட்டுமே மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். அதிலும், க்யூஆர் கோடுடன் கூடிய அனுமதிச் சீட்டு இருப்பவர்களுக்கே அனுமதி வழங்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

புதுச்சேரியில் நாளை தவெக மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு தமிழகத்தில் இருந்து யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக்கொ....

தங்கம் விலையில் இன்றைக்கு எந்த மாற்றமும் இல்லை: சவரன் ரூ.96,320தங்கம் விலை தினம்தினம் மக்களுக்கு போக்குக் காட்டி வருகிறத...
08/12/2025

தங்கம் விலையில் இன்றைக்கு எந்த மாற்றமும் இல்லை: சவரன் ரூ.96,320

தங்கம் விலை தினம்தினம் மக்களுக்கு போக்குக் காட்டி வருகிறது என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில், கடந்த ஒரு மாதமாக ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்து வருகிறது. கடந்த சனிக் கிழமை ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் ரூ.12,040 ஆக இருந்தது. சவரன் ரூ.96,320 ஆகும். நேற்றைக்கு விடுமுறை என்பதால் விலையில் எவ்வித மாற்றமுமின்றி அப்படியே தொடர்ந்தது. இன்றைக்கும் சந்தை நேரம் தொடங்கியதில் இருந்து அதே விலையே தொடர்கிறது. வெள்ளி விலையில் மட்டும் மாற்றம் நடந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 198 ரூபாய்க்கும், கட்டிவெள்ளி கிலோ 198000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தங்கம் விலை தினம்தினம் மக்களுக்கு போக்குக் காட்டி வருகிறது என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில், கடந்த ஒரு மாதமா.....

நீதிபதி தீர்ப்பை எதிர்த்து கோஷம் எழுப்பிய திமுக எம்.எல்.ஏ. மகன்! – எச்சரித்து அனுப்பிய போலீசார்திருப்பரங்குன்றம் மலை தீப...
07/12/2025

நீதிபதி தீர்ப்பை எதிர்த்து கோஷம் எழுப்பிய திமுக எம்.எல்.ஏ. மகன்! – எச்சரித்து அனுப்பிய போலீசார்

திருப்பரங்குன்றம் மலை தீபம் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கோஷம் எழுப்பிய திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மதுரை விமான நிலையத்தில் போலீசாரால் தடுத்து எச்சரிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட விமான நிலையம் வந்தபோது, வழக்கம்போல தொண்டர்கள் கோஷமிட்டனர். அப்போது, ஒருவர் தனியாக நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கோஷம் எழுப்பினார். உடனே போலீசார் அவரை தடுக்க முயற்சி செய்து, வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர் என்ன கோஷம் எழுப்பினார் என்று நிருபர்கள் கேட்டபோது, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத கலவரத்தை தூண்டும் வகையில் தீர்ப்பு உள்ளது” என்று கூறியதாக தெரிகிறது....

திருப்பரங்குன்றம் மலை தீபம் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கோஷம் எழுப்பிய திமுக எம்.எல்.ஏ.வின் மகன்,...

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை – தவெக மாநாட்டுக்கு புதுச்சேரி போலீசார் கடும் கட்டுப்பாடு!விஜய் தலைமையில் நடைபெ...
07/12/2025

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை – தவெக மாநாட்டுக்கு புதுச்சேரி போலீசார் கடும் கட்டுப்பாடு!

விஜய் தலைமையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று புதுச்சேரி போலீசார் அறிவித்துள்ளனர். மாநாட்டிற்கு புதுச்சேரியில் வசிக்கும் 5,000 பேருக்கே மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விஜய் புதுச்சேரியில் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி கோரி த.வெ.க. நிர்வாகிகள் டிஜிபி மற்றும் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்திருந்தனர். ஆனால், கரூர் உயிரிழப்பு சம்பவம், அதனை சார்ந்த உயர்நீதிமன்ற வழக்கு போன்றவற்றைக் காரணம் காட்டி ரோடு ஷோக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், திறந்த வெளியில் பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று போலீசார் தெரிவித்தனர்....

விஜய் தலைமையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க அனுமதி இல்...

இன்றைய செய்தித் துளிகள்!இன்றைய செய்தித் துளிகள் (07-12-2025) டிச.9ம் தேதி புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தவெக தலைவர் விஜ...
07/12/2025

இன்றைய செய்தித் துளிகள்!

இன்றைய செய்தித் துளிகள் (07-12-2025) டிச.9ம் தேதி புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தை நடத்திக்கொள்ள காவல்துறை அனுமதி கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். QR Code நுழைவுச் சீட்டு இல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிப்பு ஈரோட்டில் விஜய் பரப்புரை? வரும் 16 ஆம் தேதி ஈரோட்டில் சுற்றுப்பயணம் செய்ய தவெக தலைவர் விஜய் திட்டம் பரப்புரை பயணத்திற்கு அனுமதி கோரி ஈரோடு ஆட்சியர் கந்தசாமியை நேரில் சந்தித்து தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் மனு...

இன்றைய செய்தித் துளிகள் - வெளியீடு: செய்தி இதழ்

‘சூர்யா 47’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்… மிரட்டலான இயக்குநரின் செம்ம அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சூர்யா நடிப்பில் உருவாகி...
07/12/2025

‘சூர்யா 47’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்… மிரட்டலான இயக்குநரின் செம்ம அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் எக்கச்சக்கமாக காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு வெளியீடு என எதிர்பார்க்கப்பட்டாலும், அது நடைபெறாமல் விட்டது. தற்போது, படம் அடுத்த ஆண்டு சம்மரில் திரையரங்குகளை அடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, சூர்யா நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படம் ‘சூர்யா 46’. வெங்கி அட்லூரி இயக்கும் இப்படத்தில் மமிதா பைஜூ நாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. 2024-ல் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரபல இந்திய திரைப்படங்களில் ஒன்று ‘ஆவேசம்’....

2024-ல் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரபல இந்திய திரைப்படங்களில் ஒன்று ‘ஆவேசம்’. ஜித்து மாதவன் இயக்கிய அந்த படத்தை ர....

இந்தியாவில் 10வது முறையாக முதல்வராக பதவியேற்ற ஒரே நபர் நிதிஷ் குமார் – புதிய சாதனைசுதந்திர இந்திய வரலாற்றில், ஒரே மாநிலத...
07/12/2025

இந்தியாவில் 10வது முறையாக முதல்வராக பதவியேற்ற ஒரே நபர் நிதிஷ் குமார் – புதிய சாதனை

சுதந்திர இந்திய வரலாற்றில், ஒரே மாநிலத்தின் முதல்வராக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபராக பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை லண்டன் World Book of Records அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற பீஹார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வெற்றி பெற்றதை அடுத்து, ஐக்கிய ஜனதா தள (JDU) தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். உலக சாதனை அங்கீகாரம் நிதிஷ் குமார் உருவாக்கிய இந்த வரலாற்றுச் சாதனைக்காக, லண்டனில் உள்ள World Book of Records, “சுதந்திர இந்தியாவில் ஒரு மாநில முதல்வராக 10 முறை பதவியேற்ற ஒரே தலைவர்” என்று அவரை உலக சாதனைக் புத்தகத்தில் பதிவு செய்துள்ளது....

சுதந்திர இந்திய வரலாற்றில், ஒரே மாநிலத்தின் முதல்வராக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபராக பீஹார் முதல்வர் நிதிஷ் ....

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்கள்: அண்ணாமலை வன்மையான கண்டனம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவ...
07/12/2025

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்கள்: அண்ணாமலை வன்மையான கண்டனம்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள்கள் தரமற்றதாக இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், கண்டிக்கத்தக்கதாகவும் மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் 117 பேருக்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை எம்பி வழங்கிய சைக்கிள்கள் சரியாக பொருத்தப்படாமலும், சில உதிரிபாகங்கள் இல்லாமலும் இருந்ததாக கூறியுள்ளார். கடந்த ஆண்டுகளிலும் தரமற்ற சைக்கிள்கள் வழங்கப்பட்டதால், மாணவர்கள் அதனை நீண்ட காலம் பயன்படுத்த முடியாமல், தங்களின் செலவில் பழுது பார்த்ததும், பலர் அதை விற்கும் நிலை ஏற்பட்டதும், செய்திகள் மூலம் தெரியவந்ததாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்....

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள்கள் தரமற்றதாக இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், கண்டிக்....

Address


Alerts

Be the first to know and let us send you an email when Seidhi Idhazh - செய்தி இதழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share