Arunchol அருஞ்சொல்

  • Home
  • Arunchol அருஞ்சொல்

Arunchol அருஞ்சொல் உலகள்ளூர் தமிழ் ஊடகம் | Glocal Tamil Media

25/10/2024

ராமச்சந்திர குஹா கட்டுரையிலிருந்து...


குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம். டேராடூனில் வன ஆராய்ச்சிக் கழக வளாகத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். அந்த வளாகம் முடியும் வட கோடியில்தான் என் பெற்றோர் வசித்தார்கள். அந்த இடம் ஒரு மலைக்குன்றின் உச்சி, அங்கிருந்து பார்த்தால் ‘டன்ஸ்’ (அல்லது டோன்ஸ்) ஆறு நன்றாகத் தெரியும். உள்ளூர் மக்கள் அதை ‘டான்ஸ்’ என்று அழைப்பார்கள். மேற்கு உத்தராகண்டில் சில ஆறுகளுக்கு இந்தப் பெயர். (யமுனைக்கு துணை ஆறாக ஓடும் இதே பெயருள்ள பெரிய ‘டான்ஸ்’ ஆற்றுடன் இதைக் குழப்பிக்கொள்ளக் கூடாது). எங்கள் பகுதியில் ஓடும் சிற்றாரில், தண்ணீர் எப்போதாவதுதான் பெருவெள்ளமாகப் பாயும். மற்ற காலங்களில் நீர்ப்பெருக்கு இருக்காது. ஆனால், அதே பெயருள்ள துணை ஆறு, ஆண்டு முழுக்க நீர் நிரம்பி ஓடும்.

என்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஆறு, மேற்கில் உள்ள ஆசான் ஆறுடன் போய்க் கலக்கும். அங்கிருந்து அவை இரண்டும் கலந்த ஆறு, மேலும் சில கிலோ மீட்டர்கள் பாய்ந்த பிறகு யமுனையில் சேரும். எனவே, ‘ஜமுனா கினாரா மோரா காவோன்’ என்பது என்னுடைய ஊருக்கும் பொருந்தும் என்று அடக்கத்துடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதனால் அந்தப் பாடலுடன் உணர்வுபூர்வமான நெருக்கம். பொழுதுபோக்க குடும்பத்துடன் அந்த ஆற்றங்கரைக்குச் செல்வோம். அங்கே சீக்கியர்களின் ‘பவோந்தா சாஹிப்’ என்ற குருத்வாரா இருக்கிறது. அங்கிருந்து பார்த்தால் யமுனை மலையிலிருந்து சமவெளியில் பொங்கிப் பாயும் அழகை ரசிக்கலாம்.

மனதுக்குச் சுமையான பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியிருந்தால் அதற்கும் முன்னால் குமார் கந்தர்வா பாடல்களைக் கேட்டு மனதை அமைதிப்படுத்திக்கொள்வது வழக்கம். அவருடைய மகன் பாடிய பாடல்களையும் எப்போதாவது கேட்பேன். முகுல் சிவபுத்திரா பாடிய ‘ஜமுனா கினாரே’ வேறு விதமாக இருக்கும், அதுவும் உணர்ச்சிவசப்பட வைக்கும். அது நெடியதாகவும் நிதானமானதாகவும் ஆழ்நிலையில் தியானம் செய்ய வைப்பதாகவும் இருக்கும்.

முகுலின் பாடல்களும் யூட்யூபில் கிடைக்கின்றன. அவை அவருடைய வித்தியாசமான, ஆழங்காண முடியாத, அவ்வளவு எளிதில் யாருக்கும் கற்றுத்தந்துவிட முடியாத வகையில் இருக்கும். அவர் பாடிய ‘ஜெய்ஜெயவந்தி’, ‘கேதார்’ – ‘கமாஸ்’ ராகப் பாடல்கள் மிகவும் பிடிக்கும்.

மேலும் வாசிக்க சுட்டி கீழே!

ராமச்சந்திர குஹா கட்டுரை இன்று!அவசியம் வாசியுங்கள்!
25/10/2024

ராமச்சந்திர குஹா கட்டுரை இன்று!

அவசியம் வாசியுங்கள்!

குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ....

24/10/2024

பிராணேஷ் சர்க்கார் கட்டுரையிலிருந்து...


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், மேற்கு வங்க அரசுக்கு ஒன்றிய அரசு ரூ.6,911 கோடி நிலுவை வைத்திருக்கிறது. இதில் ரூ.3,732 கோடி ஊதிய வகையிலும் எஞ்சிய தொகை ஊதியம் அல்லாத வகையிலும் தரப்பட வேண்டும். இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களில் ஊழல் நடந்திருப்பதாலும், திட்டமிட்டபடி வேலைகளைச் செய்து முடிக்காததாலும் வேறு சில முறைகேடுகளுக்காகவும், ஒன்றிய அரசு தனது உயர் அதிகாரிகள் மூலமான தணிக்கைக்குப் பிறகு மேற்கு வங்கத்துக்குத் தர வேண்டிய தொகையை நிலுவையாக வைத்திருக்கிறது.

கணக்குகளை முறையாக வழங்குவதுடன் திட்டங்களைச் சரிவர நிறைவேற்றிய பிறகே தொகையை வழங்க முடியும் என்று ஒன்றிய அரசு கூறியிருக்கிறது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தையும் இதேபோல மாநில அரசு சரியாக நிறைவேற்றாமல் இருப்பதால் அதற்கான திட்ட உதவியும் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டங்களைச் சரிவர நிறைவேற்றிய மாநிலங்களுக்கு நிலுவை இல்லாமல் தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும் இந்தத் திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் எவ்வளவு வேண்டுமானாலும் வேலைவாய்ப்பு அளிக்கலாம், மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கிய தொகை மட்டுமே இதில் வரம்பு என்று இல்லை என்றும் தேவைப்பட்டால் கூடுதல் நிதி வழங்கவும் அரசு தயார் என்றும் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவிக்கிறார்.

இந்தத் திட்டத்தின் கீழ் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன, என்னென்ன வேலைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன, எவ்வளவு வேலை முடிக்கப்பட்டது, எந்தெந்த இனத்துக்கு எவ்வளவு செலவுசெய்யப்பட்டது, செய்யப்பட்ட வேலை முறையாக அளக்கப்பட்டதா, தரவுகள் பதிவேட்டில் உடனுக்குடன் பதிவுசெய்யப்பட்டனவா, ஊதியப் பட்டியல் தயாரிக்கப்பட்டதா, அது சரிபார்க்கப்பட்டதா, ஒன்றிய அரசு அளித்த நிதி பயனாளிகளுக்கு உரிய வகையில் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதா என்பதெல்லாம் வெளிப்படையாகவும் தெளிவாகவும் தெரிவிக்கப்படாததாலும், வேலைவாய்ப்பு உறுதி திட்டமாக எவையெல்லாம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறுகிறதோ அவையெல்லாம் மீறப்படும்போதும்தான் நிலுவை வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கும் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை.

மேலும் வாசிக்க சுட்டி கீழே!

24/10/2024

பிராணேஷ் சர்க்கார் கட்டுரையிலிருந்து...


மேற்கு வங்க மக்களின் நலனுக்கு எதிரானது பாஜக என்று காட்டவும், ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டு அணுகுமுறையால் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு கடுமையாக தண்டிக்கப்படுவதை உணர்த்தவும், மாநில அரசு இப்படி முடிவு எடுத்திருப்பதாக ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிராமப்புற மக்களின் துயரங்களுக்குப் பாஜகதான் காரணம் என்று நடந்து முடிந்த 2024 மக்களவை பொதுத் தேர்தலில் செய்த பிரச்சாரத்தின் விளைவாக, திரிணமூல் காங்கிரஸுக்கு 29 தொகுதிகள் கிடைத்ததால் (2019இல் 22), தொடர்ந்து அதை நிலைநிறுத்த இந்த முடிவை மாநில அரசு எடுத்திருக்கிறது என்று திரிணமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கிறார். ஒன்றிய அரசு பணம் தராவிட்டாலும், மாநில அரசு தனது கருவூலத்திலிருந்து 50 நாள் வேலைக்குப் பணம் வழங்கும் என்றும் அவர் கூறினார்.

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என்று தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும் முதல்வர் மம்தா இதை அமல்படுத்துவதாகத் தெரிகிறது. புதிதாக மாநிலச் சாலைகளை அமைக்கும் திட்டங்களுக்கும் புதிய கட்டிடம் கட்டும் திட்டங்களுக்கும் இந்த நிதியும் தொழிலாளர்களும் பயன்படுத்திக்கொள்ளப்படுவார்கள். ஒப்பந்ததாரர் மூலம் பணிகளை அமல்படுத்தினால் அவர்கள் நவீன இயந்திரங்களையும் குறைந்த எண்ணிக்கைத் தொழிலாளர்களையும் கொண்டு வேலைகளைச் செய்வார்கள். எந்த அளவுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் தொழிலாளர்கள் இந்த வேலைகளைச் செய்வார்கள் என்றும் பார்க்க வேண்டும்.

பொதுப்பணித் துறை, பாசனத் துறை, பொது சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை ஆகியவற்றில் ஏராளமானவர்களை வைத்து வேலைவாங்கவது இயலாது என்று மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர். அரசு இதை எப்படி எதிர்கொள்ளும் என்று தெரியவில்லை.

மேலும் வாசிக்க சுட்டி கீழே!

பிராணேஷ் சர்க்கார் கட்டுரை இன்று!அவசியம் வாசியுங்கள்!
24/10/2024

பிராணேஷ் சர்க்கார் கட்டுரை இன்று!

அவசியம் வாசியுங்கள்!

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என்று தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும் முத....

23/10/2024

சகீப் ஷெரானி கட்டுரையிலிருந்து...


அகுஸ் விஜோஹரோ என்ற ராணுவ அதிகாரி, அந்தச் சீர்திருத்த வரைவு அறிக்கைகளைத் தயாரித்தார். ராணுவத்துக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் அதுவரை இருந்த உறவுமுறையை மாற்றியதுடன், அது எப்படி இருப்பது ஜனநாயகத்துக்கு நல்லதோ அந்த வகையில் வழிகாட்டியிருந்தார். அதுவரையில் அரசியலிலும் அரசு நிர்வாகத்தின் பல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திவந்த ராணுவம் அவற்றிலிருந்தெல்லாம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

ஆளுங்கட்சியுடன் இருந்த தொடர்பை முதலில் துண்டித்துக்கொண்டது. நாடாளுமன்றத்தில் ராணுவத்துக்கு தரப்பட்ட பிரதிநிதித்துவம் குறைத்துக்கொள்ளப்பட்டது. மக்களாட்சியின் பல பகுதிகளில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த ராணுவ அதிகாரிகளை, பொறுப்பாளர்களை சிவிலியன் அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடும்படி ராணுவத் தலைமை கட்டளையிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ராணுவ அமைப்புகள் மீதும் ராணுவக் கொள்கை மீதும் கட்டுப்பாடு இருக்குமாறு சட்டங்களும் திருத்தப்பட்டன.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முடிவுகளுக்குப் பிறகு இந்தோனேசியாவின் பொருளாதாரம் பெருமளவுக்கு வளர்ச்சி கண்டது. அன்று முதல் இன்றுவரை அதில் மாற்றமே இல்லை. 1998 தொடங்கி 2023 வரையில், அமெரிக்க டாலர் மதிப்பில் நாட்டின் ஜிடிபி 14 மடங்கு (1400%) அதிகரித்தது. நபர்வாரி வருமானம் 11 மடங்கு (1100%) உயர்ந்தது. இந்தோனேசியாவில் 2022இல் மட்டும் 2500 கோடி அமெரிக்க டாலர்கள் அன்னிய நேரடி முதலீடாக பெற்றப்பட்டது, தென்கிழக்கு ஆசியாவில் இந்தோனேசியா பெரிய பொருளாதார நாடு.

இதோடு ஒப்பிட்டால் எகிப்தின் நபர்வாரி ஆண்டு சராசரி வருமானம் இதே காலத்தில் 2.8 மடங்கு மட்டுமே உயர்ந்தது, பாகிஸ்தானில் 3.3 மடங்கு.

மேலும் வாசிக்க சுட்டி கீழே!

23/10/2024

சகீப் ஷெரானி கட்டுரையிலிருந்து...


மத்திய கிழக்கில் உள்ள எகிப்து, அரபுக் குடியரசுகளில் முக்கியமான இடத்தில் இருக்கும் நாடு. மக்கள்தொகை 1,160 லட்சம் (11.6 கோடி). பெயரளவுக்கு அதை ஜனநாயக நாடு என்று அழைத்தாலும், விடுதலை பெற்ற 1922 முதல் மிகச் சிறிய காலமே அங்கு ஜனநாயகம் உண்மையாக நிலவியது. பெரும்பாலான காலத்தில் ராணுவத்தின் வழிகாட்டலில் ஒற்றைக் கட்சியின் ஆட்சியோ, ஒரே தனிநபரின் யதேச்சாதிகார ஆட்சியோதான் அங்கு வழக்கமாகிவிட்டது. சர்வசகஜமாகிவிட்ட மனித உரிமை மீறல்கள், நேர்மையான – சுதந்திரமான தேர்தல்களில் வாக்களிக்க மக்களுக்கு உரிமைகள் மறுப்பு, பேச்சுரிமை – அமைப்பாக சேர்ந்து செயல்படும் உரிமைகள் மறுப்பு என்பதே எகிப்தின் வரலாறாகத் தொடர்கிறது.

எகிப்து குடியரசு நாடு, சட்டப்படி அரைவாசி அதிபர் முறை ஆட்சியுள்ள நாடு என்றாலும் உண்மையில் ஒரேயொரு தலைவரின் விருப்பப்படியான யதேச்சாதிகார ஆட்சிதான் நிலவுகிறது. எகிப்தின் அனைத்துத் துறைகளிலும் ராணுவத்தின் தலையீடு அல்லது ஆதிக்கம்தான், அதன் பொருளாதார வளர்ச்சியிலும் எதிரொலிக்கிறது. பொருளாதாரமோ ஒட்டுண்ணி முதலாளியமாகிவிட்டது (சலுகைசார் முதலாளியம்). அரசுக்கு வரவேண்டிய வருமானத்தில் பெரும்பகுதியை அரசின் உயர்நிலையில் இருப்பவர்கள் சுரண்டுகின்றனர். ஆண்டுக்கு 3,500 டாலர்கள் நபர்வாரி வருமானம் என்பதால், நடுத்தர வருவாய் நாடுகளில், இது குறைந்த நடுத்தர வருவாயுள்ள நாடாக இருக்கிறது.

மக்களிடையே செல்வ வளம், வருமானம் ஆகியவற்றில் மிகப் பெரிய வேறுபாடு நிலவுகிறது, வறுமை எல்லாப் பகுதிகளிலும் பரந்து விரிந்திருக்கிறது. பாகிஸ்தானைப் போலவே கடுமையான நிதி நெருக்கடியிலிருந்து மீள, பன்னாட்டுச் செலாவணி நிதியத்தை (ஐஎம்எஃப்) எகிப்து தொடர்ந்து நாடிவருகிறது. அந்த அமைப்பிடம் அதிகக் கடன் வாங்கிய நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது எகிப்து. ஐஎம்எஃப் வழிகாட்டலில் 12 சீர்திருத்த நடவடிக்கைகளை அமல்செய்துவருகிறது.

ஐஎம்எஃப் உதவியோடு சவுதி அரேபியா உள்ளிட்ட பணக்கார வளைகுடா நாடுகளும் அவ்வப்போது கடன் தந்து எகிப்துக்கு உதவுகின்றன. எகிப்தை ஆளும் உயர்வர்க்கமோ அப்படி வாங்கும் கடன்களையும் வெளிநாட்டு மானியங்களையும் வீணான இனங்களில் செலவிட்டும், மக்களுக்குப் பயன்பட வேண்டிய திட்டங்களுக்குத் தரும் தொகைகளை மடைமாற்றி, தங்களுடைய கஜானாவில் சேர்த்துக்கொண்டும் நிதிநிலையை மேலும் மோசமாக்குகின்றன.

மேலும் வாசிக்க சுட்டி கீழே!

சகீப் ஷெரானி கட்டுரை இன்று!அவசியம் வாசியுங்கள்!
23/10/2024

சகீப் ஷெரானி கட்டுரை இன்று!

அவசியம் வாசியுங்கள்!

எகிப்தின் செயல்பாடுகளை முன்மாதிரியாகக்கொண்டு ஓர் அரசியல் கட்சியையே கொன்றுவிடும் அளவுக்கு, அடுத்த கட்டத்துக.....

22/10/2024

சேகர் குப்தா கட்டுரையிலிருந்து...


அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய இருபெரும் வல்லரசுகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்ட – பனிப்போருக்குப் பிந்தைய – காலத்தில் நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. எல்லா நாடுகளுமே தங்களுடைய நலன் சார்ந்து மட்டுமே செயல்படுகின்றன. 1981இல் ஈராக்கின் ஒசிராக் அணு உலையைத் தகர்க்க ஜோர்டானும் சவுதி அரேபியாவும் இஸ்ரேல் விமானப்படைக்கு உதவின.

சோவியத் ஆதரவு பெற்ற ஈராக்கின் அதிபர் சதாம் உசைன் குறித்து அரபு நாடுகளே அச்சத்தில் இருந்தன, ஈராக்கிலிருந்து ‘பாத்’ சித்தாந்தம் தங்களுடைய நாடுகளுக்குப் பரவிவிடும் அதனால் தங்களுக்கும் ஆபத்து என்று அஞ்சியதால் ஈராக்குக்கு எதிராகச் செயல்பட்டன. அதற்காக நாடுகள் மதம், அரசியல் கொள்கை, தார்மிக நெறிகள் ஆகியவற்றுக்கு எதிராகக்கூட செயல்படத் தயாராகின்றன.

பாலஸ்தீனர்களைக் கைவிட்டுவிட்டோமா என்று நாம் ஏன் விவாதித்துக்கொண்டிருக்கிறோம் என்றால் நம்முடைய மத்திய கிழக்கு – இஸ்ரேல் கொள்கையானது அனேக ஆண்டுகளாக பனிப்போர் கால உத்திகளின் அடிப்படையிலேயே தொடர்ந்தது. அரபு நாடுகளை நமக்குத் தொல்லை தரும் நாடுகளாக அப்போது கருதினோம், மேற்கத்திய நாடுகளின் கைக்கூலிகள் என்றும், பாகிஸ்தானின் புரவலர்கள் என்றும் சாடினோம். ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் ஏன் 34 ஆண்டுகளாகப் போகவில்லை என்பதற்கு என்ன காரணம் சொல்ல முடியும், மோடி தான் 2015இல் அந்த நாட்டுக்குச் சென்றார்.

மேலும் வாசிக்க சுட்டி கீழே!

22/10/2024

சேகர் குப்தா கட்டுரையிலிருந்து...


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப் பேரவைக் கூட்டத்தில் சில வாரங்களுக்கு முன் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பாலஸ்தீனர்கள் அனுபவிக்கும் தாக்குதல்கள் குறித்துப் பேசியபோது, “காஷ்மீரிலும் முஸ்லிம்கள் அதே அளவுக்கு கொடுந்தாக்குதல்களைச் சந்தித்துவருவதாக” சாடினார். “பாலஸ்தீனத்துக்கும் காஷ்மீரத்துக்கும் பிரிந்துபோகும் உரிமை தரப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ஷாபாஸ் ஷெரீஃப் மட்டுமல்ல பாகிஸ்தானின் நட்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது, துருக்கி அதிபர் ரெஷுப் தய்யீப் எர்துவான் ஆகியோரும் 2019லேயே, காஷ்மீரைத் தனி நாடாக பிரித்துத் தர வேண்டும் என்று வலியுறுத்திப் பேசியிருந்தனர். ‘இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பு’ (ஓஐசி) பாலஸ்தீனத்தையும் காஷ்மீரையும் ஒப்பிட்டே, ‘காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவிடமிருந்து விடுதலை வேண்டும்’ என்று தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப் பேரவைக் கூட்டத்தில் 2016இல் பேசியபோது, அன்றைய பிரதமர் நவாஸ் ஷெரீப், பாலஸ்தீனப் பிரச்சினையுடன் காஷ்மீர் பிரச்சினையையும் ஒப்பிட்டுப் பேசி, காஷ்மீரில் அரசுப் படைகள் மீது இளைஞர்களைவிட்டு தொடர்ந்து கல்வீசி தாக்குதல் நடத்த முக்கிய காரணமாக இருந்த புர்ஹான் வாணியைப் பெரும் புரட்சிக்காரராகப் புகழ்ந்தார்.

மேலும் வாசிக்க சுட்டி கீழே!

"ஒரு நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது மதம் அல்ல, பிற அம்சங்களே முக்கியத்துவம் பெறுகின்றன. இதை முஸ்லிம் நாடுகளின் செயல...
22/10/2024

"ஒரு நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது மதம் அல்ல, பிற அம்சங்களே முக்கியத்துவம் பெறுகின்றன. இதை முஸ்லிம் நாடுகளின் செயல்களிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்" என்கிறார் சேகர் குப்தா.

அவசியம் வாசியுங்கள்!

ஒரு நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது மதம் அல்ல, பிற அம்சங்களே முக்கியத்துவம் பெறுகின்றன. இதை முஸ்லிம் நாடுக...

21/10/2024

ப.சிதம்பரம் கட்டுரையிலிருந்து...


மக்களவை பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, 2024 ஜூன் மாதம் மோகன் பாகவத் பேசியது முக்கியத்துவம் வாய்ந்தது. ‘அகந்தையை உதறித்தள்ளுங்கள், அடக்கத்தைக் கடைப்பிடியுங்கள்’ என்ற அறிவுரை அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது. மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு அவர் பேசிய முதல் பொது உரை அது:

தேர்தல் பிரச்சாரத்தில் பேசப்படும் உண்மைக்கு மாறான தகவல்களும் அவதூறுகளும் அரசியல் கட்சிகள் கடைப்பிடித்தாக வேண்டிய கண்ணியத்தை மீறுகின்ற செயலாகும்.

தேர்தலில் உங்களுடன் போட்டி போடுகிறவர் எதிர்க் கருத்தை ஆதரிப்பவர் அவ்வளவுதான் – அவர் உங்களுடைய ‘எதிரி’ அல்ல; அவரைப் ‘போட்டியாளர்’ என்றுகூட அழைக்காமல், ‘மாற்றுக் கட்சி’ அல்லது ‘எதிர்க்கட்சி’ வேட்பாளர் என்றே அழையுங்கள்; மாற்றுக் கட்சிக்காரர்களின் கருத்துகளும் பரிசலீக்கப்பட வேண்டும்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் உண்மையான தொண்டர் எப்போதும் கண்ணியத்தைக் கடைப்பிடிப்பார். ‘இந்த வேலையை நான் செய்தேன்’ என்ற அகந்தை அவரிடம் எப்போதும் இருக்காது.

இந்தப் பேச்சு, பிரதமர் நரேந்திர மோடியை இலக்காக வைத்தே பேசப்பட்டது, அவருடைய தேர்தல் பிரச்சாரம் குறித்தே இப்படிப் பேசியிருக்கிறார் பாகவத் என்றார்கள்.

பாகவத்தின் அடுத்த முக்கியப் பேச்சு ஜூலை மாதம் நிகழ்த்தப்பட்டது. “ஒரு மனிதன், அபாரமான சக்தியுள்ள மாமனிதனாக ஆசைப்படுகிறான்; பிறகு அவனே தேவனாக விரும்புகிறான், கடைசியில் கடவுளாகவே மாறிவிட நினைக்கிறான்” என்றார். தன்னுடைய பிறப்பு மற்றவர்களைப் போல சாதாரணமானதல்ல என்பதாக மோடி குறிப்பிட்டார்; அவர் தாயாரின் கருவில் உருவானது, வளர்ந்தது, பிரசவித்தது எல்லாமே சாதாரணமானதல்ல – அவதாரம் என்று கூற விரும்புகிறாரா? இப்படிப் பேசியதன் மூலம் மோடி வரம்பை மீறிவிட்டார் என்று உணர்த்துகிறாரா பாகவத்?

மேலும் வாசிக்க சுட்டி கீழே!

Address


Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Friday 10:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Arunchol அருஞ்சொல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arunchol அருஞ்சொல்:

  • Want your business to be the top-listed Media Company?

Share