சூப்பர் முஸ்லிம் - நவீன வழிகேடர்கள்

  • Home
  • India
  • Chennai
  • சூப்பர் முஸ்லிம் - நவீன வழிகேடர்கள்

சூப்பர் முஸ்லிம் - நவீன வழிகேடர்கள் சூப்பர் முஸ்லிம் என்கிற இக்காலத்தின?

 #சூப்பர்_முஸ்லிம்_வழிகேடுஅன்பான சகோதரர்களே இந்த அயோக்கியர்கள் மக்களை வழிகெடுக்க யூடிப்பில் பணம் சம்பாதிக்க என்ன வேணாலும...
06/04/2023

#சூப்பர்_முஸ்லிம்_வழிகேடு

அன்பான சகோதரர்களே இந்த அயோக்கியர்கள் மக்களை வழிகெடுக்க யூடிப்பில் பணம் சம்பாதிக்க என்ன வேணாலும் செய்வார்கள் என்பதற்க்கு இதுவும் ஒரு ஆதாரம்

முதலில் நபி ஸல் அவர்களை போன்று நடிக்காமல் படம் எடுத்தார்கள் அதை தொடர்ந்து இப்போது ஒரு நபரை நடிக்க வைத்து அந்த நபர் வரும் இடத்தில் மட்டும் வெள்ளையாக மாற்றி முஹம்மத் நபியை போன்று எவனோ ஒருத்தனை நடிக்க வைத்துள்ளார்கள்

அதனை இந்த அயோக்கிய சூப்பர் முஸ்லிம் கூட்டம் தங்கள் சேனலில் பதிவு செய்து நோன்பு நேரத்தில் நம் மக்களை வழிகெடுத்து வருகிறார்கள்

சூப்பர் முஸ்லிம் கொள்கையில் இல்லாத சகோதரர்கள் கூட இந்த படத்தை பார்ப்பதை நம்மால் பார்க்க முடிகிறது

முதலில் நபியை போன்று நடிக்காமல் படம் எடுத்தார்கள்

இப்போது நடிக்க வைத்து அதை வெள்ளையாக மாற்றி எடுத்து இருக்கிறார்கள்

இன்னும் அடுத்தக்கட்டம் வெளிப்படையாக நடிக்க வைப்பார்கள்

அடுத்து பேசுவதை போன்று முழுவதுமாக நபியை போன்று எவனோ ஒருத்தனை நடிக்க வைப்பார்கள்

அதே போல இந்த படத்தில் முழுக்க முழுக்க Music பயன்படுத்தப்பட்டுள்ளது

நடிகர்கள் நடிக்கும் படம் எப்படி இருக்குமோ அதே வடிவில் தான் இந்த படும் எடுக்கப்பட்டுள்ளது

சஹாபாக்கள் போலவே நடிக்க கூடாது என்று நாம் சொல்லி வருகிறோம் ஆனால் இந்த அயோக்கியர்கள் நபியை போல நடிக்க வைக்கிறார்கள்

இந்த அய்யோக்கியர்களை பற்றி அறிந்துக்கொள்ளுங்கள்

இதுபோன்ற சேனலை புரக்கணியுங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்

புகாரி 5590

இசைக்கு எதிராக இன்னும் தெளிவான ஹதீஸ் வந்திருக்க இசையோடு கூடிய இந்த படத்தை இவர்கள் வெளியிட்டு ரமலான் நேரத்தில் மக்களை பாவத்தில் ஈடுபட வைப்பதை உணர்ந்து செயல்படுங்கள்

ஏன் கடுமையான விமர்சனம் என்று உங்களுக்கு கேள்வி வரலாம்

இந்த அயோக்கியர்கள் சஹாபாக்களை கடுமையாக விமர்சிப்பது , இமாம்களை விமர்சிப்பது , மார்க்க அறிஞர்களை விமர்சிப்பது போன்ற இவர்களுடைய செயல்பாடுகள் தான் நம்மை கடுமையாக விமர்சிக்க வைக்கிறது
நன்றி
-ஆஷிம்

02/04/2023

❌சூப்பர் முஸ்லிம் வழிகேடு ❌

அன்பான சகோதரர்களே சூப்பர் முஸ்லிம் குறித்து நாம் அதிகமாக பேசி இருக்கிறோம் அதை தொடர்ந்து

நோன்பு நேரத்தில் மக்களை வழிகெடுக்கும் கூட்டத்தில் ஒரு கூட்டமாக சூப்பர் முஸ்லிம் உலா வருகிறது

முஹம்மத் என்கிற திரைப்படத்தை வெளியிட்டு மக்களை வழிகெடுப்பது அதை தொடர்ந்து குர்ஆன் வகுப்பு என்று அடுத்த ஃபித்னாவை கையில் எடுத்துள்ளார் இந்த சூப்பர் முஸ்லிம் முஸ்தபா

இன்னும் குர்ஆன் உள்ள போகவே இல்ல பாகம் 1 தான் முன்னுரை மட்டும் தான் அதுலயே குர்ஆனுக்கு டோட்டலா எதிரான கருத்து

இன்னும் அடுத்தடுத்த பாகங்களில் என்ன ஃபித்னாக்களை செய்ய போகிறார் என்று தெரியவில்லை

குர்ஆன் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத ஒரு அடிமட்ட முட்டாள் தான் இந்த முஸ்தபா

நம்முடைய ஈமானுக்கு நிச்சயம் அல்லாஹ்விடம் சுவர்க்கம் கிடையாதாம்

அல்லாஹ்வின் அதிகாரத்தை கையில் எடுக்கும் முஸ்லதபா

நாம எல்லாம் முஸ்லிம்கள் கிடையாதாம்
இனி இந்த குர்ஆன் வகுப்புல இவர் எடுக்க போற பாடத்த கேட்டா தான் முஸ்லிமாக ஆக போறோமாம்

இவர் வகுப்புல போய் உக்காரும் போது எல்லோரும் தன்னை ஒரு காஃபிராக நினைத்து தான் உக்காரனுமாம்

எவ்வளவு ஒரு அடிமுட்டாள் தனமான பேச்சு பாருங்க

குர்ஆனை முழுமையா பின்பற்றினால் தான் உன்மையான முஸ்லிமாம் இல்லைனா அவன் காஃபிராம்

அப்போ 40 வயதுல அல்லாஹ் நபியை தூதராக வஹி செய்திகளை துவங்கும் போதும் அவங்க முஸ்லிம் இல்லை இந்த முஸ்தபாவ பொருத்தவரை

குர்ஆன் முழுமையாக இறங்கி அத எப்போ நபி முழுவதுமாக பின்பற்றினாங்களோ அப்போ தான் அவங்களும் முஸ்லிம் இந்த அறிவற்ற முஸ்தபாவை பொருத்தவரை

குர்ஆன் முழுவதாக இறங்கும் முன்பே சில சஹாபாக்கள் வஃபாத்தானார்கள்

அவர்களும் முஸ்லிம்கள் இல்லை இந்த முட்டாள் முஸ்தாபவை பொருத்தவரை

என்ன பேசுகிறோம் என்பதே விளங்காமல் குர்ஆனை சரியாக எடுத்து படிக்காமலே குர்ஆன் வகுப்பு எடுக்கிறார் இந்த அடி மட்டாள் முஸ்தபா

அல்லாஹ் சொல்லுவதை பாருங்கள்

قُلْ نَزَّلَهٗ رُوْحُ الْقُدُسِ مِنْ رَّبِّكَ بِالْحَـقِّ لِيُثَبِّتَ الَّذِيْنَ اٰمَنُوْا وَهُدًى وَّبُشْرٰى لِلْمُسْلِمِيْنَ‏

(நபியே!) “ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரீல்) இதை இறக்கி வைத்தார்” என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக.அல்குர்ஆன்: 16:102

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரயும் மறைவான விஷயங்களையும் சரியான முறையில் அல்லாஹ்வுக்கு எதையும் இனையாக்காமல் இருந்தாலே அவன் முஸ்லிம்

இந்த முஸ்லிம்களை உறுதிப்படுத்தவும் நேர்வழிகாட்டவும் தான் அல்லாஹ் குர்ஆனை அல்லாஹ் கொடுத்தேன் என்று சொல்கிறான்

இந்த முட்டாள் குர்ஆனுடைய கூற்றுக்கு அப்படியே எதிர் முறனாக பேசுகிறார்

சூப்பர் முஸ்லிம் தம்பிகளே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்

தொகுப்பு
-ஆஷிம்

12/02/2023

நிலநடுக்கம் செயற்கையாம்ல..நவீன வழிகேடர்களின் புதிய புரட்டு!

10/04/2022

சூப்பர் முஸ்லிம் கூட்டத்தாருக்கு மறுப்பு!!

முஆவியா (ரலி) அவர்களை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறோம். அவர் முஃமின்களின் ஒருவர். ஒரு முஃமின் இன்னொரு முஃமினை நேசிப்பான். நேசம் என்பது அவரைப்பற்றி வெறுப்பை வைத்துக்கொண்டு நேசிப்பதல்ல. உங்களின் பேச்சுக்கள் முஆவியா (ரலி) அவர்களை வெறுக்க வைக்கவே செய்கிறது. வெறுக்கும் கூட்டத்தையும் உருவாக்கி விட்டீர்கள்!! அவரை நக்கலடித்துப் பேசும் கூட்டத்தையும் உருவாக்கி விட்டீர்கள். அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்!!

சூப்பர் முஸ்லிம் !!உஷார்!!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்விபொது மக்களே உஷாராக இருங்கள்சூப்பர் முஸ்லிம...
09/04/2022

சூப்பர் முஸ்லிம் !!

உஷார்!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

பொது மக்களே உஷாராக இருங்கள்
சூப்பர் முஸ்லிம் என்று சொல்லக்கூடிய இந்த நபர் தனது அறிவு வாதத்தால் உங்களை மயக்கி உண்மையை உங்கள் பார்வையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைத்து விடுவார்.

இம்ரான் ஹீஸைன் புத்தகத்தை மட்டுமே படித்து ஆதாரமாக முன் வைக்கிறார் அரபு மொழியில் எந்த பாண்டித்துவமும் கிடையாது, முறையாக மார்க்கத்தை படித்த ஆலிமும் அல்ல,

ஓர் உதாரணம்

இவர் இந்த வீடியோவில் 👇

https://youtu.be/xfpuKhkrErc

ஸலஃப் உலமாக்கள் சஹாபாக்களை மதிப்பதில்லை என்ற உறத்த தோனியில் தனக்கே உண்டான கிண்டல் செய்யும் பாணியில் சிறுமை படுத்துகிறார் இது நமது முன்னோர்களான சஹாபாக்கள் இமாம்கள் வழி அல்ல , இது ஒருபுறமிருக்க.....

இவர் முன்வைக்கும் அனைத்து ஆதாரங்களும் பார்ப்பதற்கு சரியாக இருப்பதைப் போன்று நாம் உணர்கிறோம், ஆதாரங்கள் நபிமொழிகளின் எண்கள் இதுபோன்று தெளிவாக சொல்கிறார் என்ற ஒரு மாயையை இவர் ஏற்படுத்துகிறார் .

மர்வான் பின் ஹகம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் உமையாக்களின் நான்காவது கலிஃபா ஆவார், ஹதீஸ்கலை வல்லுனர்கள் இவரை தாபியீன்களின் (நபித்தோழர்களின் மாணவர்கள்)மூத்தவர் என்றும் சிலர் சஹாபாக்களில் சிறிய வயது உடையவர் என்றும் கூறுகிறார்கள்.

இறைத்தூதர் ﷺ அவர்கள் வஃபாதின் பொழுது இவர்களுக்கு 8 வயது,

இமாம் இப்னு கஸீர் அவர்களும் தங்களது புத்தகமான "பிதாயா வன் நிஹாயாவிலும்"மர்வான் பின் ஹகம் பற்றி விமர்சித்து எழுதி இருக்கிறார் என்ற கருத்தை மையப்படுத்தி கூடுதலாக ஷீஆக்களின் அடிப்படையான ஆதார புத்தகமான نهج البلاغة -நஹஜுல் பலாகாவில் இடம்பெற்றிருக்கும் தவறான செய்திகளை முன்வைத்தும் இவர் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

இவர் வழமையைப் போன்று ஷீஆக்களும் , அவர்களின் வழியை பின்பற்றும் பரேலவிகளும் நபியவர்கள் சாபமிட்ட மனிதர் என்று பல காலங்களாக கூறி இவரின் கண்ணியத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்துகின்றார்.

இவர் தந்தை ஹகம் பின் அபில் ஆஸ் நபியவர்களால் சபிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டார் என்பதாக கூறப்படும் அனைத்து நபிமொழிகளும் ஆதாரபூர்வமானவைகளாக இல்லை,

ஹாஃபிழ் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ் மர்வான் பின் ஹகம் ரஹிமஹுல்லாஹ் அவர்களை ஸஹாபாக்களில் ஒருவராக கருதுகிறார்,

மர்வான் பின் ஹகம் அவர்களைப் பற்றி கூறும் பொழுது மிகவும் கொடைத் தன்மை கொண்டவராக இருந்தார் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு ஷஹீத் ஆக்கப்பட்ட பின் அவர் மகனான அலி ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு ஆயிரம் தீனார்கள் கடனாக தருகிறார்கள், அதுவே தங்களது மாவுத்தன் தருவாயில் மகன் அப்துல் மலிகுக்கு திரும்பப் பெறக்கூடாது என்று வசியத் செய்து இருப்பது மர்வான் பின் ஹகமை பற்றி அஹ்லுல் பைத்கள் சிறந்த ஒரு அந்தஸ்தில் வைத்திருந்தார்கள் என்பது தெளிவாகிறது என்று நான்கு இமாம்களில் ஒருவரானஇமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.

இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் இவர்களைப் பற்றி கூறும் பொழுது மர்வான் பின் ஹகமுக்கு பின்னால்
ஹசன் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹும் தொழுது இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்

ஆக அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் இவர் நீதமானவர், சிறந்த நபித்தோழர்களின் மாணவர் என்று வரலாறுகளில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது.

பல அறிஞர்கள் இவர் தொடர்பாக வந்திருக்கும் நபியவர்களால் இவர் சபிக்கப்பட்டவர் என்ற அறிவிப்புகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று தெளிவாக கூறியிருந்தும்

இந்த சூப்பர் முஸ்லிம் என்று சொல்லக் கூடிய நபர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார், மர்வான் பின் ஹகம் அவர்களை தரக்குறைவாக அவன் இவன் என்று ஒருமையில் பேசுகிறார்.

ஆதாரமற்ற ஒரு செய்தியை கையில் வைத்துக்கொண்டு ஸலஃப் உலமாக்கள் சஹாபாக்களை மதிப்பதில்லை என்று குற்றம் வேறு சாட்டுகிறார்.

இந்த ஷீஆ சிந்தனை உடைய நபர்கள்தான் நபித்தோழர்களை இழிவு படுத்துவதும் அவர்களை திட்டுவதுமாக இருக்கிறார்கள் என்பது அனைவரும் தெரிந்த ஒரு உண்மை, ஷீஆ வழிமுறையை பின்பற்றி அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் போற்றப்படும் மதிக்கப்படும் ஒரு இமாமை இவர் கடுமையாக திட்டுகிறார் இதை சற்று கவனத்தில் கொள்ள வேண்டும்

பாமர மக்களே ஒரு சோற்று பானைக்கு ஒரு சோறு பதம் என்று கூறப்படுவது போல இவருடைய பல வீடியோக்களில் எந்த ஆதாரமும் இல்லாத செய்திகளை முன்வைத்து தனது அறிவை முன்னிலைப்படுத்தி இளம் இஸ்லாமிய சமுகத்தை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்,

இவரின் கருத்துக்கு ஆகா ஓகோ என்று நீங்கள் பதிலளித்து வழிகேட்டில் சென்று விடாதீர்கள்.

உஷார் எச்சரிக்கை!!

09/10/2021

தஜ்ஜால் வரும் நாட்களின் கால அளவு பற்றி கூறும் ஹதீஸின் உண்மை விளக்கம் என்ன?

மௌலவி ரஹ்மதுல்லாஹ்,தவ்ஹீத் ஜமாத்

28/09/2021

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (PART -2)

சூப்பர் முஸ்லிம் யுடியூப் சேனலின் முகப்பிலேயே இம்ரான் ஹுஸைனின் புகைப்படத்தை வைத்து அந்த சேனலின் கருத்துக்கள் அவரின் கருத்துக்கள்தான் என்று பறைசாற்றிவிட்ட நிலையில் இம்ரான் ஹுஸைனின் திரைப்படத்தின் டீஸரை பார்ப்போம்.

** ஜெருஸலம் எனும் புனித பூமியைப் பற்றி முஸ்லிம்கள் கவலை கொள்ளாமல் உள்ளனர்.

** யஃஜூஜ் மஃஜூஜ் வந்து விட்டனர்.

** தஜ்ஜால் என்பது நாம் நினைப்பதுபோல் மனிதன் அல்ல.

** மேற்கத்திய கலாச்சாரம் கிழக்கிற்கு வந்ததைத்தான் சூரியன் மேற்கே உதிக்கும் என்ற ஹதீஸ் குறிக்கிறது.

** நம்கதை முடிந்து விட்டது.

** ஈஸா(அலை) இதோ வரப்போகிறார்.

** நாம் வரலாற்றின் கடைசிகட்டத்திற்கு வந்துவிட்டோம்.

மேலே கண்டவைகள் எல்லாம் இம்ரான் ஹுஸைனின் வார்த்தைகள். இதைத்தான் சூப்பர் முஸ்லிம் சேனல் தமிழில் மொழிபெயர்த்து ஒளிபரப்புகிறது. இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் இந்த உலகம் அழிக்கப்பட்டுவிடும் என்று ஹதீஸ்களைக் கொண்டு கணித்து சொல்கிறது சூப்பர் முஸ்லிம் சேனல்.

இம்ரான் ஹுஸைன் தனது சிந்தனைகளை "குர்ஆனில் ஜெருஸலம்" (JERUSALEM IN THE QUR’AN) எனும் புத்தகத்தில் எழுதிவைத்துள்ளார்.

“ …. And We have sent down to thee (O Muhammad) the Book (i.e., the Qur’an) which explains all things...”
(Qur’an, al-Nahl, 16:89)

குர்ஆன் எனும் இந்த புத்தகத்தில் அனைத்தையும் விளக்கியுள்ளோம் என்று அல்லாஹ் குர்ஆன் 16:89 வசனத்தில் கூறுகிறான், அதனால் ஜெருஸலத்தைப்பற்றியும் அல்லாஹ் விளக்கியிருப்பான். அதைத்தேடி கண்டுபிடித்து விளக்கம் தரப்போகிறேன் என்று தனது கருத்தை துவக்குகிறார்.

சில வசனங்களுக்கு தனது
சுய கருத்துக்களைக் கொண்டு மொழிபெயர்த்திருப்பதாகவும், அந்த விளக்கங்கள் அல்லாஹ்வினாலோ அல்லது அவனது தூதரினாலோ நேரடியாக சொல்லப்பட்டவை அல்ல என்றும் கூறுகிறார். தான் கொடுப்பதுபோன்ற சுய விளக்கங்களை கொடுக்கக் கூடாது என்பவர்களும் பல வசனங்களுக்கு தங்களின் சுய கருத்துக்களை கூறுபவர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்.

அதனால், தன்னுடைய விளக்கத்தை மறுப்பவர்கள் புனித பூமியான ஜெருஸலத்திற்கு யூதர்கள் திரும்பியதை குர்ஆன் வசனங்களைக் கொண்டு விளக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறார்.

இதுபோன்ற சவால்கள் மார்க்க விஷயங்களில் நன்மை பயக்காது.

என் கேள்விக்கு உன்னிடம் பதில் இல்லையென்றால் நான் சொல்வதுதான் சரி என்று வாதிடும் தன்மை மார்க்கத்திற்கு உகந்தது அல்ல.

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிய முயல்வோம்.

குர்ஆனில் வெறும் எழுத்துக்களை மட்டும் கொண்டு தொடங்கும் அத்தியாயங்கள் இருக்கின்றன.

الم
அலிஃப், லாம், மீம். (2:1)

المص

அலிஃப், லாம், மீம், ஸாத். (7:1)

போன்ற வசனங்களின் அர்த்தம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க பல காலமாக பலரும் முயன்று வருகிறார்கள். இதற்கான விளக்கம் என்னவென்று அல்லாஹ்வும் அவனது தூதரும் விளக்கியிருக்காத நிலையில் நல்ல விளக்கமாக கருதும் ஒன்றை நாம் எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இந்நிலையில், பத்தொன்பது என்ற எண்ணைக் கொண்டு குர்ஆனின் கட்டமைப்பை கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிய ரசாது கலீபா தன்னுடைய முக்கியமான ஆதாரமாக வைத்தது மேற்கண்ட வசனங்களைத்தான். அர்த்தமே இல்லாத எழுத்துக்களை குர்ஆனில் வைக்க வேண்டிய அவசியம் அல்லாஹ்வுக்கு இல்லையென்றும், அந்த எழுத்துக்கள் பத்தொன்பது என்ற கட்டமைப்பில் குர்ஆன் இருப்பதை உறுதிபடுத்துகிறது என்றும் கூறி அந்த வசனங்களில் தன்னுடைய கருத்தை திணித்த ரசாது கலீபாவின் செயலுக்கு ஒத்ததாகவே இம்ரான் ஹுஸைனின் சவாலும் பார்க்கப்படும்.

அந்த எழுத்துக்களுக்கு நான் கூறும் சுய விளக்கத்தை மறுப்பவர்கள் சரியான விளக்கத்தை கூற வேண்டும் என்ற ரசாதுகலீபாவின் சவாலுக்கு நம்மிடம் பதிலில்லை. நம்மிடம் பதிலில்லாததால் ரசாது கலீபாவின் விளக்கம் சரியானது ஆகிவிடும் என்று கருதுவது எத்தகைய விளைவை ஏற்படுத்துமோ அத்தகைய விளைவைத்தான் இம்ரான் ஹுஸைனின் சவால் விளைவிக்கிறது.

இம்ரான் ஹுஸைன் விரிக்கும் சவால் வலையில் நாம் சிக்கினால் நம்மை நாமே கூட மீட்க இயலாது. அதனால், இம்ரான் ஹுஸைனின் கருத்துக்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கேயே சென்று அந்த வலையை அறுப்போம்.

இம்ரான் ஹுஸைன் தன்னுடைய சுய விளக்கம் என்று சொல்லும் கருத்துக்களை அவர் பிறப்பதற்கு முன்பே அந்த சிந்தனைக்கு விதை விதைத்தவர் கவிஞர் அல்லாமா முஹம்மது இக்பால் ஆவார்.

குர்ஆனின் வார்த்தைகளை கவிதைகளுக்கு இடையில் இணைத்து கவிதையை அழகுபடுத்துவதில் வல்லவரான கவிஞர் இக்பால், 1924 ஆம் ஆண்டு "பேங் இ தரா"(بان٘گِ دَرا) என்ற ஒரு கவிதைத் தொகுப்பை அவர் வெளியிட்டார்.

அதில் இடம்பெற்றிருந்த ஒரு கவிதைத்துண்டுதான் இந்த சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

"کھُل گئے، یاجوج اور ماجوج کے لشکر تمام
چشمِ مسلم دیکھ لے تفسیرِ حرفِ ’یَنْسِلُوْنْ‘"

"Khul gayay y’ajuj aur m’ajuj ka lashkar tamam, Chashmay Muslim dekhlay tafseer harf-e-yansiloon"

"யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் திறந்துவிடப்பட்டுவிட்டனர், யன்சிலூன் (یَنْسِلُوْنْ) என்ற வார்த்தையின் விளக்கத்தை முஸ்லிம்கள் காணட்டும்" என்பதுதான் இந்த கவிதைத்துண்டின் அர்த்தம்.

அது என்ன வார்த்தை யன்ஸிலூன் (یَنْسِلُوْنْ) ?

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Part -3

https://piraimeeran.blogspot.com/2020/07/SM3.html?m=1

கியாமத் நாளின் அடையாளமாக கூறப்படும் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் வெளிவந்து விட்டார்கள் என்று நெருப்பை பற்ற வைத்...

28/09/2021

சூப்பர் முஸ்லிம் - ஒரு பார்வை (PART -1)
இல்லுமினாட்டி தொடர்பாக சில பதிவுகள் எழுதியிருந்தேன். அதன் இறுதியில்,

இல்லுமினாட்டி இல்லை!
இல்லுமினாட்டியை நம்புபவன் முட்டாள்!!
இல்லுமினாட்டியை கற்பிப்பவன் அயோக்கியன்!!!

என்று முடித்திருந்தேன். ஒரு சகோதரர் ஒரு வீடியோ லிங்க் ஒன்றை அனுப்பி, குர்ஆன் இல்லுமினாட்டிகளைப் பற்றி பேசுவதாக இவர் கூறுகிறாரே! இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தார். அந்த வீடியோ லிங்க்கை கிளிக் செய்து வீடியோவை பார்த்தேன்.

முஸ்தபா எனும் சகோதரர் அந்த வீடியோவில் பேசுகிறார். வரலாற்றின் கடைசிகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பேரதிர்ச்சியுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. அவருடைய உரையை கேட்டு முடித்தேன்.

இல்லுமினாட்டியைப் பற்றி பேசும் மற்றவர்களைப் போல் அல்லாமல் முஸ்லிம்களை கடுமையாக சாடி அவர் பேசும் விதம் இல்லுமினாட்டி என்பது உண்மையாக இருக்குமோ என்ற எண்ணத்தை எவருக்கும் ஏற்படுத்தாமல் இருக்காது. அப்படி ஒரு ஆணித்தரமான பேச்சு. ஆனால், ஃப்ரீமேஸன் (Freemason) என்ற அமைப்போடு இல்லுமினாட்டியை முடிச்சுபோடும் ஒரு சாதாரண இல்லுமினாட்டி நம்பிக்கையாளர்தான் என்பதால் இவரும் இல்லுமினாட்டியை நம்பும் ஒரு அப்பாவியே.

இல்லுமினாட்டியைப் பொறுத்தவரைக்கும் இவர் படிக்க வேண்டியது நிறைய இருந்தாலும், எதற்காக இவர் இல்லுமினாட்டியை குர்ஆனில் இருந்து நிரூபிக்க முயல்கிறார் என்பதை அறிய முடிசெய்து, இவருடைய யுடியூப் சேனல் (Youtube channel) வீடியோக்களை பார்வையிட்டேன்.

சூப்பர் முஸ்லிம் (Super Muslim) என்ற அந்த வீடியோ சேனல் முழுவதும் அவருடைய பேச்சுக்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இவர் தன்னை எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் இல்லை என்று கூறுகிறார். ஆனால், தமிழகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் அச்சாரமாக இருக்கும் "அந்நஜாத்" இதழின் ஜமாத்துல் முஸ்லிமீன் எனும் அமைப்பில் இருந்தவர். அந்த அமைப்பின் அமீர் அபுஅப்துல்லாஹ் அவர்களின் மரணத்திற்குப் பிறகு புது அமீர் தேர்ந்தெடுக்கப்பட்டபின் அந்த அமைப்பில் பயணிப்பதை தவிர்த்துக்கொண்டவர். சுமார் ஒரு வருடத்திற்கு முன்புதான் இந்த சூப்பர் முஸ்லிம் யூடியூப் சேனலை தொடங்கியிருக்கிறார்.

இவர் பேசுவது தன்னுடைய சுய கருத்துக்கள் இல்லையென்றும், அல்லாமா இக்பால், மௌலானா மௌதூதி, இஸ்ரார் அஹ்மது மற்றும் இம்ரான் நாஸர் ஹுஸைன் போன்றவர்களின் உருது மொழி புத்தகங்களை படித்துவிட்டு அதைப் பற்றி மட்டும் பேசுவதற்காகத்தான் அந்த சேனலை ஆரம்பத்திருப்பதாக கூறுகிறார்.

ஆனால், நடிகர் விஜய் மற்றும் NRC போன்ற விஷயங்களைப்பேசி தன்னையும் சமகால இஸ்லாமியப் பிரமுகராக காட்ட முனைகிறார்.

இவருடைய கருத்துக்கள் இவருடைய சொந்த கருத்து இல்லை என்றாகிவிட்ட நிலையில்...

யஃஜூஜ் மஃஜூஜ், தஜ்ஜால், மஹ்தி மற்றும் மேஸியா என்ற மறுமை அடையாளங்களைப் பற்றின நம்பிக்கைகளை, தற்காலத்திற்கு மாற்றியமைத்து, ஜெருஸலம் எனும் புனித பூமியைச் சுற்றி அவற்றை திரைக்கதையாக அமைத்து அதை மிகப்பெரிய திரைப்படமாக மாற்றி வெற்றிபெறச் செய்திருக்கும் இம்ரான் நாஸர் ஹூஸைன் என்பவரின் திரைப்படத்தைதான் நாம் பார்த்து விமர்சிக்க வேண்டுமே தவிர, தமிழ் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் சூப்பர் முஸ்லிம் சேனலை நாம் விமர்சிக்க ஒன்றுமில்லை.

சூப்பர் முஸ்லிம் சேனலின் ஒரிஜினல் பதிப்பான இம்ரான் ஹுஸைன் என்பவரின் கருத்துக்களே ஆராயப்பட வேண்டும்.

"என்னுடைய கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லையென்றால் நான் சொல்வதுதான் சரியானது" என்று ஒருவர் கூறினால் அது எத்தகைய ஆபத்தை விளைவிக்குமோ அத்தகைய ஆபத்தை விளைவித்ததிருப்பவர்தான் இம்ரான் ஹுஸைன்.

ஜெருஸலம் என்ற பகுதிக்கு நம்மை அழைத்துச் சென்று யஃஜூஜ் மஃஜூஜ் என்ற பெயர்களைக் கொண்டு படத்தை தொடங்குகிறார் இம்ரான் ஹுஸைன். இந்த காட்சியை பார்க்க ஆரம்பித்தவர்கள் தங்களை அறியாமலேயே அந்த படத்தில் மூழ்க ஆரம்பத்துவிடுவர். நாமும் அதில் மூழ்கிவிட்டால் பிறகு நாமும் ஒரு சேனல் ஆரம்பித்து இம்ரான் ஹுஸைனின் கருத்துக்களை பரப்ப ஆரம்பித்துவிடுவோம். அந்த அளவிற்கு திரைப்படத்தை கச்சிதமாக கொண்டு செல்கிறார் இம்ரான் ஹுஸைன்.

அந்த படத்தின் டீஸரை மட்டும் முதலில் பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Part -2

https://piraimeeran.blogspot.com/2020/07/SM2.html?m=1

சூப்பர் முஸ்லிம் யுடியூப் சேனலின் முகப்பிலேயே இம்ரான் ஹுஸைனின் புகைப்படத்தை வைத்து அந்த சேனலின் கருத்துக்கள....

நவீன கொள்கைக் குழப்பங்களிலிருந்து எமது ஈமானைப் பாதுகாத்துக் கொள்வோம்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ..அன்பார்...
28/09/2021

நவீன கொள்கைக் குழப்பங்களிலிருந்து எமது ஈமானைப் பாதுகாத்துக் கொள்வோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ..

அன்பார்ந்த சகோதரர்களே..!

அல்லாஹ்வால் இறுதித் தூதராக இந்த பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்ட முஹம்மதுர் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவத்தை சரிவர நிறைவேற்றி எம்மை நேரான வெண்மையான பாதையில் விட்டுச் சென்றார்கள். அதன் இரவு கூட பகலைப் போன்றதாகும் . நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வபாத்திற்க்குப் பின்னர் நபித்தோழர்களின் காலத்திலேயே இஸ்லாத்தின் பெயரால் பல வழிகேடுகள் தோற்றம் பெற ஆரம்பித்து விட்டன. இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவுப்புச் செய்த செய்திகள் ஏராளமானது.

அவ்வாறு தோற்றம் பெற்ற வழிகேடர்கள் அனைவரும் தாங்கள் தான் சத்தியவான்கள் என்பதை நிறுவுவதற்குத் தங்களின் கொள்கைக்குச் சான்றாக அல் குர்ஆன் வசங்களையும் ஹதீஸ்களையும் மனோ இச்சைப்படி வளைத்து அதை சிறந்த விளக்கமாக முன்வைத்தார்கள். அது அன்றுடன் முற்றுப் பெறவில்லை. இன்றும் இஸ்லாத்தின் பெயரால் நவீனக் கொள்கைகளைத் தோற்றுவிக்கக் கூடியவர்கள் அல் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் தவறாக சித்தரித்து தங்களின் நவீன சிந்தனைகளை ஆய்வாகச் சமூகத்துக்கு முன்வைக்கின்றார்காள். இது கியாம நாள்வரை தொடரக்கூடிய ஒன்றாகும்.

எனவே நேரான பாதையை நாம் எப்படி அடையாளம் காண்பது? என்ற அறிவு எம்மிடமிருப்பது அவசியமாகும். இல்லையெனில் வழிகேடுகளை ஆதரிக்கும் நிலை எம்மிலும் ஏற்பட்டு விடலாம். அல்லாஹ் எம் அனைவருக்கும் நேரான பாதையை காட்டுவானாக.

நேரான பாதை என்பது நேற்று இன்று உருவான புதுப்பாதை கிடையாது. 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நபிகளாரும் நபித்தோழர்களும் எந்தக் கொள்கையில் இருந்தார்களோ அதுவே நேரான பாதையாகும். (அல் குர்ஆன் , அல் ஹதீஸ் ). அந்த நேரான பாதையைத்தான் சிறந்த மூன்று நூற்றாண்டில் வாழ்ந்து மரணித்த நல்லறிஞர்களும் வாழ்க்கை நெறியாகக் கொண்டார்கள். எனவே அதே வழியில் மறுமைவரை அவர்களைப் பின்தொடர்வோர் அஹ்லுஸ் ஸுன்னவைச் சார்ந்தோர்களாவார்கள்.

அஹ்லுஸ் ஸுன்னாக் கொள்கை சார்ந்த அறிஞர்கள் (ஸலபுகள்) எப்படி அல்குர்ஆன் ஹதீஸை விளங்கினார்களோ அவ்வாறு புரிவது தான் எம்மை நேரான பாதையில் நிலைக்கச் செய்யும் காரியமாகும். இதற்கு மாற்றமாக அல்குர்ஆன், ஹதீஸை யாரெல்லாம் மனோ இச்சைப்படி விளங்க முற்படுகின்றார்களோ அத்தகையோர் பல வழிகேடுகளைத் தோற்றுவிப்பார்கள்.

இன்று தமிழுலகில் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு இணையத்தினூடாக மெல்ல வளர்ந்து வரும் வழிகெட்ட கொள்கையாக சூப்பர் முஸ்லிம் (Super Muslim) என்ற பெயரில் இயங்குவோரால் முன்வைக்கப்படும் கொள்கையை அடையாளப்படுத்தலாம். இவர்களை ஆதரிக்கும் சிறு ரசிகர்கூட்டம் இன்று உருவாகியுள்ளது.

இவர்கள் கிஃலாபத்தை நபித்துவத்தின் பிரதான நோக்கமாக சித்தரிக்கக்கூடிய, அகீதாவில் வழிதவறிச் சென்று கொண்டுள்ள அமைப்புக்களின் கருத்துக்களைத் திருடி நவீன கால ஆய்வாக தாம் இணையத்தின் வாயிலாகத் திருடிய அந்த சிந்தனைகளைத் தமது ஆய்வைப்போல் இளைஞர்களைக் கவரும் விதத்தில் முன்வைத்து வருகின்றார்கள்.

குழப்பங்கள் நிறைந்து காணப்படும் இன்றைய காலகட்டத்தில் மக்கள் எதிர்பாக்கும் தலைப்புக்களை தெரிவு செய்து அந்த தலைப்புக்களில் அஹ்லுஸ் ஸுன்னாக் கொள்கையின் நிலைப்பாட்டுக்கு மாற்றாமான கருத்துக்களைக் குர்ஆன், ஹதீஸிலிருந்து பெறப்பட்ட துல்லியமான ஆய்வாக முன்வைப்பதே இவர்களின் தந்திரமாகும்.

ஈமானுக்கு வேட்டு வைக்க இவர்கள் தேர்ந்தெடுத்துள்ள தலைப்புக்கள்:

1)அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஹ் என்போர் பற்றி தவறான விளக்கம் (?)

2) 2050ற்குள் தஜ்ஜாலின் வருகை( ?)

3)யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் வெளிப்பட்டுவிட்டார்கள்.(?)

4) அடிமை தன் எஜமானியை பெற்றெடுப்பாள் என்பது டெஸ்ட் டியூப் பேபி முறை.(?)

5) நபிமார்களின் தஃவா கிலாபத்தை இலக்காக கொண்டது (?) நாமும் கிலாபத்தை நோக்கியே அழைப்புப்பணி செய்ய வேண்டும்.

6) ஷைத்தானின் கொம்பு என்பது ஸஊதியின் எழுச்சி.(.?)

7) கியாமநாள் பற்றிய முன்னறிவிப்புகளை நிதர்சனத்தை வைத்தே அணுக வேண்டும்(..?)

8) மார்க்கத்தை ஆய்வு செய்ய மௌலவியாக தேவையில்லை (?)

9) சூரியன் மேற்கில் உதித்துவிட்டது தௌபாக்கள் இனி ஏற்கப்படாது(?)

10) அதிசயப்பிராணி என்பது இஸ்ரேலின் ஆட்சி(.?)

11) நபி (ஸல்) அவர்கள் வந்தது கிலாபத்தை நிலைநாட்ட..(?)

12) முற்படுத்த வேண்டியது அகீதா இல்லை ஆட்சியே..(?)

13) ஸஊதியை ஸலபுகள் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள்..(?)

(மற்றும் பல வழிகேடுகள்... )

மேற் கூறப்பட்ட தலைப்புக்களில் குர்ஆன், ஹதீஸை தவறாகச் சித்தரித்து முற்று முழுதாக அஹ்லுஸ் ஸுன்னாக் கொள்கைக்கு மாற்றமான கருத்துக்களை மக்கள் மத்தியில் முன்வைத்துக் கொண்டிருக்கிறது இந்த சுப்பர் முஸ்லிம் எனும் வழிகெடுக்கும் குழு... மார்க்கத்தை சரிவரப் படிக்காத இளைஞர்கள் பலர் இவர்களின் ஷைத்தானிய வழியில் சிக்கும் பேராபத்தான நிலை இன்று உருவாகியுள்ளது என்பதை இவர்களின் யூடீயூப் செனலின் Subscribersஸைப் பார்போர் அறிந்து கொள்ள முடியும்.

எனவே இந்த நவீன வழிகேட்டைக் கண்டு கொள்ளாவிட்டால் இரத்தம் கொதிக்கும் நம் இளைஞர்களுக்கும், சமூகத்துக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய தீங்காகவே மாறிவிடும். சில வழிகேடுகள் வளர எமது புறக்கணிப்புக்களும் காரணமாக இருந்துள்ளமை நாம் மறுக்க முடியாத கடந்தகால வரலாற்றுண்மையாகும்.

அல்லாஹ்வின் உதவியால் இந்த நவீன வழிகேட்டை முளையிலேயே கிள்ளி எறிந்து இது போன்று இன்னுமுள்ள வழிகேடுகளை நோக்கி மக்களை அழைக்கும் அழைப்பாளர்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தைக் காக்க வேண்டும் என்ற தூய எண்ணத்தில் இஹ்லாஸுடன் இப்பணிக்காகச் செயற்பட திறமைமிக்க உலமாக்கள் ஒன்றிணைந்துள்ளார்கள்... இன்ஷா அல்லாஹ் ஸபீலுல் முஃமினீன் என்ற பெயரிலுள்ள எமது முகநூல் பேஜ் மற்றும் யூடியூப் செனல் , வாட்ஸப் குழுமம் போன்ற இன்னுமுள்ள இணையதளங்களினூடாகவும் அஹ்லுஸ்ஸுன்னாவுக்கு மாற்றமான கொள்கைச் செயற்பாடுகளைக் கொண்ட பிரிவினருக்குரிய மறுப்புக்களைத் தொடர்ந்தும் எதிர்பாருங்கள்.

رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ‌ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏

“எங்கள் எஜமானே.! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்திடாதே! மேலும், எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய் இருக்கின்றாய்.(அல்குர்ஆன் : 3:8)

28/09/2021

சூப்பரை் முஸ்லிம் வழிகேட்டு கும்பலை பற்றிய ACTJ வின் பத்வா !

FATWA


1442.02.20

2020.10.08



Ash Sheikh U.L.S Hameed Hami,

Secretary,

ACJU Kalmunai Branch,

462/A, Mosque Road,

Kalmunai.



அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹூ



பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!



உங்களது கடிதத்தில் தெளிவு கேட்டிருக்கும் விடயங்கள் மறுமைநாள் நெருங்கும் போது நடைபெறும் நிகழ்வுகளுடன் தொடர்புடையவையாக உள்ளன.



பொதுவாக அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் மறுமைநாளின் அடையாளங்களில், சில அடையாளங்கள் மிகத்தெளிவாகவும் மற்றும் சில அடையாளங்கள் சுருக்கமாகவும் கூறப்பட்டுள்ளன. அவை எவ்வாறு கூறப்பட்டுள்ளனவோ அவற்றை அவ்வாறே நம்பி, ஏற்றுக் கொள்வது போதுமானதாகும். நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் தோழமை கொண்டிருந்த சஹாபாக்கள், அவர்களைத் துயர்ந்தவர்கள் மற்றும் இமாம்கள் போன்றோர் அவற்றை அவ்வாறே நம்பி செயலாற்றியுள்ளதுடன், மற்றவர்களுக்கு போதனை செய்தும் வந்துள்ளனர். 1400 வருடங்களுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டு வந்த இந்த அடிப்படையை வெறுமனே பகுத்தறிவுக்கு உட்படுத்தி இஸ்லாமிய மூலாதாரங்களுக்கு அப்பால் ஒரு தனிநபரின் சிந்தனைக்கு தோன்றிய விடயங்களை மார்க்கமாக ஆக்கி, பிரசாரத்தில் ஈடுபட்டு இஸ்லாத்தில் சந்தேகங்களை ஏற்படுத்துவது பெரும்பாவமாகும்.



நீங்கள் குறிப்பிட்டுள்ள கேள்விகளை நோக்கும் போது, ஷைக் இம்ரான் ஹுஸைன் (வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர்) என்பவரது சிந்தனைப் போக்கைத் தழுவியவர்களது வினாக்களாகவே தென்படுகின்றன. இவரது கருத்துக்களை நோக்கும் போது அவை, பல தெளிவான குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கும் மாற்றமானவையாக இருப்பதுடன், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்துக்களுக்கும் மாற்றமாக உள்ளதையும் காணலாம்.



அவற்றிற் சில பின்வருமாறு :



தஜ்ஜாலுடைய வருகை சம்பந்தமாக ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள சரியான கருத்துக்களுக்கு மாற்றமாக, தஜ்ஜால் வெளியாகி உள்ளான் என்ற பொய்யான வீண் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றமை.


மறுமைநாளின் அடையாளமாக வெளிப்படும் புகை தொடர்பில் ஸஹீஹுல் புகாரியில் இடம்பெற்றிருக்கும் ஹதீஸ், உலக சுற்றாடல் மாசடைவதையே குறிக்கின்றது என்று தன்னிச்சையாக பிழையான விளக்கும் கூறுகின்றமை.


முஸ்லிம் உம்மத்தால் 1000 வருடங்களுக்கும் மேலாக மதித்து வருகின்ற அல்குர்ஆனுக்கு அடுத்து வைக்கப்படுகின்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸஹீஹுல் புகாரி போன்ற நம்பத் தகுந்த கிரந்தங்களில் வந்துள்ள ஸஹீஹான பல ஹதீஸ்கள், புனையப்பட்டவை எனக்கூறி அவற்றின் நம்பகத்தன்மையை சிதைக்கின்றமை.


நடைமுறையிலுள்ள அல்குர்ஆன் பரிபூரணமற்றது, அதில் கூடுதல் குறைவு செய்யப்பட்டுள்ளது எனக்கூறி அல்குர்ஆனை அவமதித்தல், நபித்தோழர்களில் ஒருசிலரைத் தவிர மற்ற எல்லா நபித்தோழர்களும் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறியவர்கள் என நம்புதல் போன்ற இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான சிந்தனைகளைக் கொண்ட “இஸ்னா அஷ்ரிய்யாக்கள்” சரியான கொள்கையில் உள்ளனர் என்று நியாயப்படுத்துகின்றமை.


மறுமை நாளின் 10 பெரும் அடையாளங்களில் ஒன்றாகிய தாப்பதுல் அர்ழ் என்ற (மனிதர்களுடன் பேசும்) மிருகம் தோன்றுவது பற்றிய ஸஹீஹான ஹதீஸுக்கு, இஸ்ரேலின் உருவாக்கத்தைக் குறிக்கின்றது என்று மிகப்பிழையாக வலிந்துரைக்கின்றமை.
மேற்கூறப்பட்ட இக்கருத்துக்களையே “சுபர் முஸ்லிம்” என்ற பிரிவினரும் பிரசாரம் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



பொதுவாக அல்லாஹ், சிந்திக்கும் திறனை மனிதனுக்கு வழங்கியுள்ளான். அத்திறனை பயன்படுத்தத் தேவையான இடத்தில் தேவையான முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு ஆர்வமூட்டியுமுள்ளான். மறைவான விடயங்களில் ஆய்வை விட நம்பிக்கையே அடிப்படையாகக் கொண்டதாகும். அவற்றில் சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தாது அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் கூறப்பட்டதை அவ்வாறே நம்புவது அவசியமாகும்.



தமக்கு தெளிவில்லாத விடயங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒழுக்க விழுமியங்களை பின்வரும் அல் குர்ஆன் வசனமும் ஹதீஸும் தெளிவுபடுத்துகின்றது.



عن مسروق عن عبد الله بن مسعود - رضي الله عنه - ، قال : يا أيها الناس ! من علم شيئا فليقل به ومن لم يعلم فليقل : الله أعلم ، فإن من العلم أن تقول لما لا تعلم : الله أعلم : قال الله تعالى لنبيه قل ما أسألكم عليه من أجر وما أنا من المتكلفين. (متفق عليه)



மஸ்ரூக் இப்னு அஜ்தஉ றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கின்றார்கள். நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களிடம் சென்றோம். அவர்கள், மக்களே! ஒரு விடயத்தை அறிந்தவர், அதைப் பற்றிக் கூறட்டும்! அறியாதவர், “அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று கூறட்டும், ஏனெனில், ஒருவர் தாம் அறியாத ஒரு விடயத்தை “அல்லாஹ்வே நன்கறிந்தவன்” (எனக்குத் தெரியாது) என்று சொல்வதும் அறிவில் நின்றும் உள்ளதாகும். அல்லாஹூ தஆலா நபியவர்களுக்குக் கட்டளையிடுகின்றான். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: (மனிதர்களே! இதனை ஓதிக் காண்பிப்பதற்காக) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. அன்றி, (நீங்கள் சுமக்கக்கூடாத யாதொரு சுமையை) நான் உங்கள் மீது சுமத்தவும் இல்லை. இவ்வேதத்தை நான் கற்பனையாக கட்டிக் கொள்ளவும் இல்லை. (திருக்குர்ஆன் 38:86) (நூல் : புகாரி, முஸ்லிம்)



ஷைக் இம்ரான் ஹூஸைன் என்பவர் அல்குர்ஆனிலும், அஸ்ஸுன்னாவிலும் வந்துள்ள இவ்வாறான பல விடயங்களுக்கு தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி சொந்த விளக்கம் கொடுத்ததனாலேயே இவ்வாறான தவறான வழியில் தான் சென்றது மாத்திரமல்லாது மற்றவர்களும் வழிகெட்டுப் போவதற்குக் காரணமாக இருக்கின்றார்.



இவ்வாறான விடயங்களை தகுதியான ஆலிம்களிடம் கேட்டுத் தெளிவுபெற வேண்டும். மாறாக இணையதளங்களில் வரும் விடயங்களைப் பார்த்து தாமாக மார்க்க விடயங்களில் ஒரு முடிவை எடுத்துச் செயற்படுவது, தமக்கும் முழு சமூகத்திற்கும் இம்மையிலும் மறுமையிலும் பெரும் கேடு விளைவிக்கக் காரணமாக அமையும்.



பிழையானதும் தீவிரவாத, பயங்கரவாதக் கருத்துக்களையும் மிதவாதிகளது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்த இணையங்கள் மிகப் பெரும் கரிசனை செய்கின்றன. ‘பயங்கரவாதக் குழுக்களுக்கு இணையம் மிகப் பெரும் வசதியானதொரு தொழில் நுட்பமாக அமைந்து விடுகிறது’. ‘உலகில் எங்கோ இருந்து இயங்கும் ஒரு குழு அல்லது எமக்கு அறிமுகமற்ற ஒரு நபரிடமிருந்து பெறும் அறிவை, நாம் முழுமையாக ஏற்பது ஆரோக்கியமானதல்ல’.



ஆகவே, நீங்கள் கேட்டிருக்கும் பல விடயங்கள் வஹிய்யுடன் சம்பந்தப்பட்டவையாகவும், எமது சிந்தனைக்கு அப்பாற்பட்ட விடயங்களாகவும் இருப்பதனால், அவை தொடர்காக சர்ச்சையில் ஈடுபடுவதைத் தவிர்த்து, அல்-குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் கூறப்பட்டவைகளை அவ்வாறே நம்புவதே மிக அவசியமானதாகும்.



மறுமைநாளின் அடையாளங்கள் மற்றும் அது போன்ற விடயங்களைப் பற்றிப் பேசும் ஷைக் இம்ரான் ஹூசைன் என்பவருடைய கொள்கையானது, அல்-குர்ஆன், ஹதீஸின் மற்றும் பெரும்பான்மையான ஆலிம்களின் தெளிவான வழிகாட்டல்களுக்கு முரணாக இருப்பதால், அவ்வாறான விடயங்களை விட்டும் சமூகம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவது அவசியமாகும்.



ஆகவே, இவ்வாறான விடயங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வதையும், அவற்றை பிரசாரம் செய்வதையும் முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.



மேலும், இவ்வாறான விடயங்களில் ஈடுபட்டிருப்பவர்கள், இதிலிருந்து முற்றாக விடுபட்டு தௌபா செய்து கொள்ள வேண்டும். அத்துடன் சமூகப் பொறுப்புதாரிகள் இவ்வாறான கொள்கையில் உள்ளவர்களை நேரான வழியின் பக்கம் நளினமாகவும், அன்பாகவும் நெறிப்படுத்த வேண்டும்.



எனவே, இதுபோன்ற மார்க்க விடயங்களில் இந்நாட்டு ஆலிம்களின் தெளிவுகளையும், வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை கூறுகின்றோம்



எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

19/09/2021

யூகங்களால் கட்டமைக்கப்படும் வழிகேட்டுக்கொள்கை!!

11/05/2021
11/05/2021

யஃஜுஜ் மஃஜுஜ் வெளிவந்து விட்டார்களா? - பகுதி 01 - முஸ்தபா என்ற Youtuber க்கு பதில்

11/05/2021

சூப்பர் முஸ்லிம் தர்கா ஆதரவாளரா? எதிர்ப்பாளரா?

அறியாமைகளின் தந்தை சூப்பர் முஸ்லிம் க்கு பதில்!

11/05/2021

யஃஜூஜ் ம ஃஜூஜ் கூட்டத்தினர் இஸ்ரேலில் குடியேறி விட்டனரா?

11/05/2021

குர்ஆன் மீது இட்டுக்கட்டிய முஸ்தபா?
சூப்பர் முஸ்லிமுக்கு பதிலடி!

11/05/2021

2050 ஆம் ஆண்டுக்குள் தஜ்ஜால் வருகை உண்டா?
ஜோசியக்காரரான சூப்பர் முஸ்லிம்!

11/05/2021

கால ரசூலுல்லாஹ் என்று வந்தால் ஹதீஸா?

அறியாமை பாவா சூப்பர் முஸ்லிம் க்கு பதில்!

11/05/2021

அல்லாமா இக்பால் இஸ்லாத்தை உயிர்பிக்க வந்தவரா?

11/05/2021

நான் ஆலிமல்ல, நான் மொத்தமாகவே காப்பியடித்தே பேசுகிறேன்! வழிகேடனின் வாக்குமூலம்!
இறைவா! இவனுக்கு நேர்வழி கொடுப்பானாக!

11/05/2021

இஸ்லாமிய வீடியோக்களை யூடியூப் நீக்குகிறதா?
சூப்பர் முஸ்லிமின் அறியாமை!

07/05/2021

அல்லாஹ் கலிஃபாவை படைக்க போகிறேன் என்று சொன்னதன் அர்த்தம் என்ன? | Mujahid Ibnu Razeen

07/05/2021

நபி(ஸல்) அனுப்பப்பட்டது ஆட்சிக்காகவா? ஹாக்கிமியத் பெயரால் வழிகேடுகள்! | Mujahid Ibnu Razeen

07/05/2021

இல்லுமினாட்டி பயமும், தடுமாறும் முஸ்லிம்களும்! | Mujahid Ibnu Razeen

07/05/2021

முஆவியா, அலி(ரலி) க்கு இடையில் யார் சரி, தவறு என்று பேசலாமா? | Super Muslim

Address

Chennai
Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when சூப்பர் முஸ்லிம் - நவீன வழிகேடர்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category