ESBN 24X7

ESBN 24X7 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ESBN 24X7, News & Media Website, Sri Lanka and, And.

🌐 ESBN 24X7 Express News – Your trusted source for breaking news, in-depth analysis, and updates from around the world.

📢 Stay Informed: Bringing you the latest in politics, business, sports, entertainment, and more—24 hours a day, 7 days a week.

புஷ்பா 2 சிறப்புக்காட்சி விவகாரத்தில் அல்லு அர்ஜூன் மீது தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சனங்களை முன்வைத்துள்ளார்...
22/12/2024

புஷ்பா 2 சிறப்புக்காட்சி விவகாரத்தில் அல்லு அர்ஜூன் மீது தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தன்னை பற்றி தவறாக சித்தரிக்கப்படுவதாக அல்லு அர்ஜூன் விளக்கம் கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது?

தெலங்கானா சட்டமன்றத்தில் சனிக்கிழமை பேசிய அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, புஷ்பா 2 சிறப்புக் காட்சியின் போது அல்லு அர்ஜூன் போலீஸார் பேச்சை கேட்கவில்லை என்றும் அனுமதி மறுத்த போதும் திரையரங்கிற்கு அல்லு அர்ஜூன் வந்ததாக கூறினார்.

தொடர்ந்து பேசிய ரேவந்த் ரெட்டி, "கூட்ட நெரிசல் ஏற்பட்டதும் ஏசிபி நடிகரிடம் சென்று கிளம்பும்படி கூறினார். ஆனால், படம் முடிந்த பிறகே செல்வேன் எனக் கூறி முதலில் அவர் மறுத்திருக்கிறார். பின்னர், டிசிபி தலையிட்டு ஏற்கனவே இரண்டு பேர் கீழே விழுந்துவிட்டதால் உடனடியாக கிளம்பவில்லை எனில் கைது செய்யப்படுவீர்கள் என கூறியுள்ளார். அவ்வாறு கிளம்பும்போதும் காரின் மேற்கூரை வழியாக எழுந்து ரோட் ஷோ நடத்துகிறார்" என கூறினார்.

சினிமா புஷ்பா-2 சிறப்புக் காட்சி: தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டிற்கு நடிகர் அல்லு அர்ஜூன் விளக்கம் admin December 22, 2024 ....

டிசம்பர் 19, மதியம், கானௌரி எல்லையில் மேடை நிகழ்ச்சிகள் திடீரென நிறுத்தப்பட்டன. சில நிமிடங்களில் மேடை காலியானது.சாகும்வர...
22/12/2024

டிசம்பர் 19, மதியம், கானௌரி எல்லையில் மேடை நிகழ்ச்சிகள் திடீரென நிறுத்தப்பட்டன. சில நிமிடங்களில் மேடை காலியானது.

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்த விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, மருத்துவர்கள் உட்பட ஒட்டுமொத்த மருத்துவப் பணியாளர் குழுவும் அங்குமிங்கும் ஓடியது.

சிலர் கோபமாகவும், சிலர் உணர்ச்சிவசப்பட்டவர்களாகவும் காணப்பட்டனர். சிறிது நேரம் கழித்து, குர்பானி மேடையில் இருந்து முழக்கமிடத் தொடங்குகிறது. தல்லேவால் குணமடைய, கூட்டத்தினர் பிரார்த்தனை செய்வதையும் காண முடிந்தது.

பிற்பகலில் பாரதீய கிசான் யூனியன் (சித்துப்பூர்) மாநில பொதுச் செயலாளர் காக்கா சிங் கோத்ரா, மேடையில் பேசும் போது, ஜக்ஜித் சிங் தல்லேவாலின் இரத்த அழுத்த அளவு மிகவும் குறைந்துவிட்டதாகவும், அவர் சிறிது நேரம் சுயநினைவு இழந்ததாகவும் கூறினார். ஆனால் தற்போது அவரின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் உள்ளது.

இந்தியா சாகும் வரை உண்ணாவிரதம்: டெல்லி நோக்கிய விவசாயிகள் போராட்டத்தின் முகமாக இவர் மாறியது எப்படி? admin December 22, 2024 ட....

இந்தியா மற்றும் சீனா இடையே சமீபத்தில் பல உயர்நிலை சந்திப்புகள் நடந்தன. இதன் மூலம் 2020-ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கு இ...
22/12/2024

இந்தியா மற்றும் சீனா இடையே சமீபத்தில் பல உயர்நிலை சந்திப்புகள் நடந்தன. இதன் மூலம் 2020-ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும், இந்தப் பதற்றம் எங்கிருந்து தொடங்கியதோ, அந்த எல்லைப் பிரச்னையின் தற்போதைய நிலை என்ன?

அதாவது, இரு நாடுகளுக்கு இடையிலான மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் இப்போது என்ன நடக்கிறது?

குறிப்பாக லடாக்கில் என்ன நடக்கிறது? அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டுவிட்டதா? இந்த சந்திப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இன்னும் தெளிவாகாத கேள்விகள் யாவை?

சீன வெளியுறவு அமைச்சருடன் தோவல் சந்திப்பு

டிசம்பர் 18 அன்று, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன தலைநகர் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யியை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. அவர்கள் இருவரும் இந்தியா மற்றும் சீனாவின் சிறப்புப் பிரதிநிதிகளாக சந்தித்தனர்.

இந்தியா உலகம் இந்தியா சீனா: எல்லையில் ராணுவ மோதலற்ற மண்டலத்தால் இந்தியாவுக்கு பாதிப்பா? – நிபுணர்களின் எச்சரி....

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நீண்டகாலமாக தாமதமாகி வந்த வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்த சில நாட்களுக்குப் ப...
22/12/2024

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நீண்டகாலமாக தாமதமாகி வந்த வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்த சில நாட்களுக்குப் பின்னர், எதிர்வரும் ஜனவரி மாதம் பேச்சுவார்த்தைக்காக மிகப்பெரிய இருதரப்புக் கடன் வழங்கும் சீனாவுக்குச் செல்லவுள்ளார்.

2022 ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியின் போது, ​​உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த அந்நிய செலாவணி இல்லாமற் போனபோது, ​​இலங்கையின் இருதரப்புக் கடனில் பாதிக்கும் மேலான தொகையை சீனா கொண்டிருந்தது.

ஆனாலும் சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்றுக் கொண்ட கடன் தொகையின் பின்னர் நாடு மீண்டெழுந்தது.

இந்நிலையில் அடுத்த மாத நடுப்பகுதியில் சீனாவுக்குச் செல்வுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
அறிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி அடுத்த மாதம் சீனாவுக்கு விஜயம் admin December 22, 2024 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நீண்டகாலமாக தாமதமாகி வ...

சென்னை: இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். கடை...
22/12/2024

சென்னை: இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். கடைசி போட்டி என்ற அறிவிப்பு இல்லை, சக வீரர்களிடம் இருந்து கார்ட் ஆஃப் ஹானர் மரியாதை இல்லை, எதிரணியில் வீரர்களின் மரியாதை இல்லை.. சர்வ சாதாரணமாக ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் வைத்து இந்திய அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னரான அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.

இப்படியொரு வீரர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடி இருந்தால், தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருப்பார்கள். ஆனால் பிசிசிஐ தரப்பில் இந்திய ஜாம்பவான்களுக்கு எப்போதும் கடைசி காலத்தில் உரிய மரியாதை அளிக்கப்பட்டதில்லை. சச்சின் டெண்டுல்கருக்கு மட்டுமே கடைசி டெஸ்ட் போட்டியை மும்பையில் நடத்தி உரிய மரியாதையுடன் வழியனுப்பி வைத்தது.

மற்ற எந்த இந்திய வீரருக்கும் ஃபேர்வெல் போட்டியில் விளையாடுவதற்கு கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்திய கிரிக்கெட் அணியை மீள் உருவாக்கம் செய்த கேப்டனான சவுரவ் கங்குலி தனது கடைசி டெஸ்ட் போட்டி நாக்பூரில் விளையாடி ஓய்வை அறிவித்தார்.

விளையாட்டு Ashwin: கங்குலி முதல் அஸ்வின் வரை.. ஃபேர்வெல் கிடைக்காத இந்திய ஜாம்பவான்கள்.. திருந்துமா பிசிசிஐ? admin December 22, 20...

மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்த...
22/12/2024

மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருந்த அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், அஸ்வினை வாழ்த்தி பிரதமர் மோடி கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் அஸ்வினின் கிரிக்கெட் வாழ்வில் நடந்த பல முக்கிய நிகழ்வுகளை குறிப்பிட்டு அவரை வாழ்த்தி இருக்கிறார். அஸ்வின் ஓய்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி எழுதிய வாழ்த்து கடிதம் -

நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் இருக்கும் நிலையில் இந்த கடிதம் உங்களை வந்து அடையும் என நம்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நீங்கள் வெளியிட்ட அறிவிப்பு இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இன்னும் பல ஆஃப்-பிரேக்குகளை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், நீங்கள் ஒரு கேரம் பந்தை வீசினீர்கள்.

இந்தியா விளையாட்டு “கேரம் பாலை போட்டு விட்டீர்கள்”.. அஸ்வினுக்கு உருக்கமான கடிதம் எழுதிய பிரதமர் நரேந்திர மோட....

மெல்போர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய ஊடகத்தினரால் புதிய சர்ச்சை வெடித்...
22/12/2024

மெல்போர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய ஊடகத்தினரால் புதிய சர்ச்சை வெடித்து இருக்கிறது. அதன் காரணமாக ஒரு கண்காட்சி கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்து இருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் ஒரு போட்டி டிராவில் முடிந்தது. மற்ற இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன.

இந்த நிலையில் நான்காவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் ஆல் - ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஊடகத்தினரை சந்தித்தார். அப்போது ஆஸ்திரேலிய ஊடகத்தினரில் சிலர் அந்த சந்திப்பை புறக்கணித்தனர்.

ஜடேஜா ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் புறக்கணித்ததால் தாங்கள் அந்த சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறியதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்.

விளையாட்டு ஜடேஜா சர்ச்சை.. ரத்து செய்யப்பட்ட போட்டி.. ஆஸ்திரேலிய மீடியாவுக்கு எதிராக பொங்கிய இந்திய ஊடகத்தினர்...

லண்டன்: 2025 ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாவது வாரத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி...
22/12/2024

லண்டன்: 2025 ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாவது வாரத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு அணிகளும் மோத உள்ளன. இந்த இரண்டு தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ள இங்கிலாந்து ஒருநாள் அணி -

ஜோஸ் பட்லர் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், ஜோ ரூட், சகிப் மஹ்மூத், ஃபில் சால்ட், மார்க் உட்.
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க உள்ள இங்கிலாந்து டி20 அணி -

ஜோஸ் பட்லர் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித் (விக்கெட்

விளையாட்டு இந்திய தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு.. பென் ஸ்டோக்ஸ் அதிரடி நீக்கம்.. ஜோ ரூட்டுக்கு வாய்ப்பு a...

22/12/2024

மும்பை: 2024 ஆம் ஆண்டு அர்ஷ்தீப் சிங்கிற்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்தது. இந்திய டி20 அணியின் நம்பர் 1 பந்து வீச்சாளராக அவர் மாறி இருக்கிறார். அவரது சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றதை மறக்க முடியாது.

2024 ஆம் ஆண்டில் மட்டும் அவர் 18 டி20 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இந்த ஆண்டு அவரது பவுலிங் சராசரி 13.5 ஆகும். இது மிகச்சிறந்த பந்துவீச்சு செயல்பாடாகும். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த வேகப் பந்துவீச்சாளர் என்ற பெயரையும் அர்ஷ்தீப் சிங் பெற்று இருக்கிறார்.

அவர் இதுவரை இந்திய அணிக்காக 60 டி20 போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். மிக விரைவாக இத்தனை விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளை பொறுத்தவரை அவர் பும்ராவுக்கு இணையாக சிறப்பாக செயல்பட்டு வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் இந்திய டி20 அணியின் சிறந்த வீரர் யார்?

13/12/2024

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் கடமையினை பொறுப்பேற்ற இராமலிங்கம் சந்திரசேகரன்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவினால் நியமிக்கப்பட்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை 08.45 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக உத்தியோகபூர்வமாகத் தமது கடமையினைப் பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் உடனிருந்தார்.

மேலும், கடமையேற்பு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உள்ளகக் கணக்காய்வாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களும் உத்தியோகத்தர்களும் பங்குபற்றினார்கள்.

https://youtu.be/UZG2myOMRTE
12/12/2024

https://youtu.be/UZG2myOMRTE

இலங்கை யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையின் பாதுகாப்பு கடமையில் இருந்த உத்தியோகத்தர்களுடன் பாராளுமன்ற உறுப்பின...

ஜப்பானில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜப்பா...
12/12/2024

ஜப்பானில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் குறைந்துவரும் பிறப்பு விகிதத்தை சரிக்கட்டும் வகையில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக டோக்கியோ பெருநகர அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற புதிய பணி அட்டவணை சார்ந்த கொள்கையை டோக்கியோ ஆளுநர் யூரிகோ கொய்கே அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அதேப் போன்று தொடக்க கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் முன்கூட்டியே வேலைநேரத்தில் இருந்து செல்லும் புதிய கொள்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் கடந்த 2023ஆம் ஆண்டில் 7.27 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்தன.

உலகம் ஜப்பான் | விரைவில் வரப்போகிறது வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை நடைமுறை! admin மார்கழி 11, 2024 ஜப்பானில் வாரத்த.....

Moscow:  Defence Minister Rajnath Singh, who is in Russia, met President Putin and spoke to him. Speaking afterwards, he...
11/12/2024

Moscow: Defence Minister Rajnath Singh, who is in Russia, met President Putin and spoke to him. Speaking afterwards, he said that the India-Russia friendship is higher than the highest mountain in the world and deeper than the deepest sea in the world.

Defence Minister Rajnath Singh is on a state visit to Russia. He participated in the India-Russia Military Cooperation Committee meeting. He met President Putin in Moscow. The two leaders discussed ways to further strengthen the relationship.

The two leaders said that the relationship between Russia and India has great potential. At that time, Rajnath Singh spoke:

India-Russia friendship is higher than the highest mountain in the world. Deeper than the deepest sea in the world. India will always stand by its Russian friends. We will continue to do so in the future as well. He said this.

உலகம் இந்தியா-ரஷ்யா நட்புறவு; ரஷ்யாவில் புடினை சந்தித்த ராஜ்நாத் சிங் பெருமிதம் admin மார்கழி 11, 2024 Moscow: Defence Minister Rajnath Singh, who i...

மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றியதைத் தொடர்ந்து ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் ...
11/12/2024

மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றியதைத் தொடர்ந்து ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு அளித்துள்ளதாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் க்ரெம்ளின் மாளிகை தகவலை சுட்டிக்காட்டி இத்தகவலை ரஷ்யாவின் இன்டர்ஃபேக்ஸ், டாஸ், ரியா நோவோஸ்டி பத்திரிகைகள் உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில் சிரியா விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். “ஜனாதிபதி ஆசாத்தின் வீழ்ச்சி நீதியின் வெற்றி. இது பல ஆண்டுகளாக துண்பப்பட்டுவரும் சிரிய மக்களுக்குக் கிடைத்துள்ள ஒரு வரலாற்று வாய்ப்பு. இந்த வாய்ப்பு அவர்கள் தங்கள் தேசத்தை வளமான எதிர்காலத்துக்காக கட்டமைக்க உதவும். அவர்கள் தங்கள் நாட்டை பெருமைமிகு அடையாளமாக மாற்ற உதவும்” என்று ஜனாதிபதி பைடன் வரவேற்றுள்ளார்.

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 1971-ல் ராணுவ மூத்த தளபதியாக இருந்த ஹபீஸ் அல் ஆசாத் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார்.

உலகம் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம்! admin மார்கழி 11, 2024 மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்...

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் “விடுதலை பாகம் 2” திரைப்படம் எதிர்வரும் டிசம்...
08/12/2024

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் “விடுதலை பாகம் 2” திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி (20.12.) திரைக்கு வர உள்ளது.

இத்திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று இரவு (26.11) வெளியாகியுள்ளது.

நடிகர் சூரி, நடிகை மஞ்சு வாரியார், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்க்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு இத்திரைப்படத்திலுருந்து “தினம் தினமும்” என்ற பாடல் வெளியாகி இரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில்தற்போது வெளியாகி இருக்கும் ட்ரைலர் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நடிகர் சூரி பிரதான காதாபாத்திரத்தில் நடித்து கடந்த வருடம் மார்ச் மாதம் (03.24) இத்திரைப்படத்தின் முதலாம் பாகம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த “விடுதலை பாகம் 2” திரைப்படமும் மாபெரும் வெற்றி பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

https://youtu.be/kGkUqfQMf3E

சினிமா விடுதலை பாகம் 2 – ட்ரைலர் வெளியானது admin மார்கழி 8, 2024 இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநா.....

அண்மையில் ஏற்றபட்ட சீரற்ற காலநிலையால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு இன...
08/12/2024

அண்மையில் ஏற்றபட்ட சீரற்ற காலநிலையால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு இன்றைய தினம் (07.12) சனிக்கிழமை, யாழ்,இந்திய துணைத் தூதுவரினால், நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில், தெரிவு செய்யப்பட்ட 1655 பயனாளர்களில், முதற்கட்டமாக,மன்னார் நகரப் பகுதிக்கு உட்பட்ட துள்ளுக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 8 கிராமங்களைச்ச சேர்ந்த 461 பயனாளர்களுக்கும், மாந்தை மேற்கு பிரதேசச் செயலகப் பிரிவிற்குட்பட்ட பாலியாறு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மூன்றாம்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த 255 பயனாளர்களுக்குமாக மொத்தம் 716 பயனாளர்களுக்கு முதற்கட்ட மாக, இன்று (7) இந்திய மக்களின் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத் தூதுதர் ஸ்ரீ சாய் முரளி, இந்திய துணை தூதரக அதிகாரி, மற்றும் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உட்பட குறித்த பகுதியைச் சேர்ந்த கிராம சேவையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அண்மையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர், காதர் மஸ்தான்,இந்திய.

இந்தியா இலங்கை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய நிவாரணம் admin மார்கழி 8, 2024 அண்மையில் ஏற்றபட்ட சீரற்...

Address

Sri Lanka And
And
43000

Alerts

Be the first to know and let us send you an email when ESBN 24X7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share